Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Kadhal Kaalam
Ithu Kadhal Kaalam
Ithu Kadhal Kaalam
Ebook144 pages33 minutes

Ithu Kadhal Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465551
Ithu Kadhal Kaalam

Read more from Rajeshkumar

Related to Ithu Kadhal Kaalam

Related ebooks

Reviews for Ithu Kadhal Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Kadhal Kaalam - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    விடியற்காலை மூன்றுமணி.

    நகர எல்லையைத் தாண்டியிருந்த அந்த வாசவி கல்யாண மண்டபம் ஜுரவேகத்தில் இருந்தது. நான்கு மணியிலிருந்து ஐந்து மணி வரைக்கும் முகூர்த்தம். மண்டப வாசலில் நின்று - வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் குருமூர்த்தியும், பங்கஜமும்.

    வாங்க சந்தானம். வாங்க...

    என்ன குரு... கல்யாணத்தை... ஊர்க்கு வெளியே தள்ளியிருக்கிற இந்த மண்டபத்துல வெச்சுட்டே...?

    என்ன பண்றது...? வேற மண்டபம் கிடைக்கலையே...?

    சரி. மண்டபம்தான்... ஊர்க்கு வெளியே கிடைச்சுது. இந்த முகூர்த்த நேரத்தையாவது இவ்வளவு விடிகாலையில் இல்லாமல் கொஞ்சம் விடிஞ்சு வெச்சிருக்கலாமே...

    எம்பொண்ணு கோபிகாவோட ராசிக்கும் நட்சத்திரத்துக்கும் நாலுமணியிலிருந்து அஞ்சு மணிக்குள்ளேதான் முகூர்த்தம் வெக்கணும்ன்னு ஜோசியர் சொல்லிட்டாரு. நான் என்ன பண்ணட்டும்...?

    பரவாயில்ல... இவ்வளவு காலையிலும்... மண்டபத்துக்குள்ளே கும்பல் இருக்கு...

    நமக்கு வேண்டியவங்க வந்துதானே ஆகணும். சந்தானம்.

    குருமூர்த்தி அவரை உள்ளே அனுப்பி வைத்த விநாடி- - மண்டபத்தின் மேல் மாடியிலிருந்து அந்தப் பெண் இறங்கி வந்து பங்கஜத்தின் பக்கமாய் நின்றாள்.

    அம்மா...!

    பங்கஜம் ஏறிட்டாள்.

    என்ன சித்ரா...?

    கோபிகாவுக்கு தலைவலியாம்... ஏதாவது ஒரு மாத்திரை வாங்கிட்டு வரச்சொல்லிச்சு...

    "சூட்கேஸ் உறைக்குள்ளே எல்லா மாத்திரையும் இருக்குமே?

    "தேடிப் பார்த்தோம். கிடைக்கலை...

    பங்கஜம்! நீ ஒரு நடை மாடிக்குப் போய் - கோபிகாவுக்கு மாத்திரை எடுத்து குடுத்துட்டு வந்துடு... கொஞ்ச நேரத்துல மணவறையில் உட்காரப் போறவளாச்சே...?, தலைவலியோடு எப்படி உட்காருவா...?

    அப்பாவை விட்டு பிரியப் - போகிற துக்கத்துல... ராத்திரி பூராவும் அழுதிருப்பா... உங்க அருமந்தப் பொண்ணு. தலையில் நீர் கோர்த்துகிட்டு... தலைவலி வந்திருக்கும். பாசம்... பொல்லாத பாசம்...

    சரி... சரி... வாயாடாமே... போய் கோபிகாவுக்கு மாத்திரை எடுத்து குடுத்திட்டு வந்துடு... குழந்தை தலைவலியாலே துடிச்சிட்ருப்பா...

    குழந்தை...? மடியில போட்டு பால் குடுங்களேன்... யார் வேண்டாம்ன்னு சொன்னாங்க...

    பங்கஜம் தோள்பட்டையில் மோவாயை இடித்துக் கொண்டவள் வேகவேகமாய் மாடியை நோக்கிப் போனாள். மணமகள் - என்று எழுதப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தவள் - கோபிகா சர்வ அலங்காரத்தோடும் - நெற்றியில் கட்டிக் கொண்ட கர்ச்சீப்போடும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் பொங்கினாள்.

    என்ன தலைவலியா...?

    ஆமாம்மா...

    ராத்திரி பூராவும் உங்கப்பாவை நினைச்சு அழுதிட்டிருந்தியா...?

    இ...இல்லேம்மா...

    எனக்கு தெரியும்டி...! உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா என்ன? பொண்ணாப் பொறந்தவ என்னிக்கிருந்தாலும் ஒரு நாளைக்கு... ஒருத்தன் கைய பிடிச்சுகிட்டு அவன் பின்னாடியே போக வேண்டியதுதான். உங்கப்பாவுக்காக ரொம்பவும் உருகி வழியாதே...! புருஷன் வீட்டுக்கு போய் ரெண்டு நாள் இருந்தியானா... அப்புறம் இந்த அப்பா உனக்கு துச்சமாயிடுவார்.

    கோபிகா புன்னகைத்தாள்.

    "மொதல்ல மாத்திரை எடுத்து குடும்மா. தலைவலி உயிர்போகுது... இந்த தலைவலி இப்படியே இருந்தா... என்னால மணவறைக்கு வரமுடியாது.

    சூட்கேஸ்ல பார்த்தியா...?

    பார்த்தேன்...?

    பிளாஸ்டிக் உறைக்குள்ளே பார்த்தியா?

    பார்த்தேன்...?

    நீ ஒழுங்கா பார்த்திருக்கமாட்டே - கடு கடுத்தவள் சுவர் ஆணியில் மாட்டப்பட்டிருந்த மலர்மாலைகளுக்கு கீழே இருந்த சூட்கேஸைத் திறந்து குடைந்தாள்... இரண்டு நிமிஷ நேரம் தேடிவிட்டு –

    வெச்ச மாத்திரை எங்கே போச்சு...? - என்று சொல்லி தாடையில் கை வைத்தாள்.

    அம்மா! எனக்கு தலைவலி உயிர்போகுது... போதாக்குறைக்கு இந்த வாத்திய சத்தம் வேற ‘டொம் டொம்’ன்னு... நடு மண்டையில இடி இறங்கிற மாதிரி இறங்குது...

    சரி... இரு. யாரையாவது வெளியே அனுப்பி மாத்திரை வாங்கிட்டு வரச்சொல்றேன்...

    அம்மா! நீ மாத்திரை வாங்கிட்டு வர்ற வரைக்கும் என்னால இந்த ரூம்ல இருக்க முடியாது. தவில் சத்தம் காதுக்குள்ளேயே... இருக்கு...

    உன்னோட தலைவலிக்காக தவுல் வாசிக்க வேண்டாம்ன்னு சொல்றியா...?

    நான் அப்படி சொல்லலை...

    பின்னே...?

    மண்டபத்துக்குப் பின்னாடி ஒரு ரூம் காலியா இருக்கே. அந்த ரூமுக்குப் போய் - கொஞ்ச நேரம் கண்ணை சாய்க்கிறேன்...

    ஏண்டி... நாலு மணிக்கு நீ மணையில உட்காரணும்... இப்ப போய் தூங்கறேன்னு சொல்றியே...? உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்.

    அய்யோ அம்மா! நான் தூங்கப் போறதாவா சொன்னேன்... இந்த சத்தத்திலிருந்து தப்பிக்கிறதுக்காக - கொஞ்ச நேரம் அந்த ரூம்ல ரெஸ்ட் எடுக்கப்போறதா சொன்னேன். எனக்கு மாத்திரை கூட வேண்டாம். சூடா ஒரு டம்ளர் காப்பி சாப்டுட்டு தலையை அசைக்காமே கொஞ்ச நேரம் படுத்திட்டிருந்தா போதும்...

    அப்படீன்னா மாத்திரை வேண்டாமா?

    வேண்டாம்...

    சரி! சித்ரா. இவளைக் கூட்டிகிட்டு அந்த ரூமுக்கு போ. சமையல் ஆள்கிட்டே சொல்லி சூடா காப்பி வாங்கி குடு. கொஞ்ச நேரம் அவ தலையைச் சாய்க்கட்டும். நான் மூணே முக்கால் மணிக்கு வந்து எழுப்பறேன்.

    பங்கஜம் சொல்லிவிட்டு நகர

    கோபிகாவும் சித்ராவும் - ஒருத்தரை யொருத்தர் பார்த்து - புன்னகைத்துக் கொண்டார்கள்.

    எப்படி நம்ம திட்டம்? - காதருகே கிசு கிசுத்தாள் சித்ரா.

    ஃபெண்டாஸ்டிக்...

    பின்னாடி இருக்கிற ரூமுக்கு போயிடலாமா?

    Enjoying the preview?
    Page 1 of 1