Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velvet Kutram
Velvet Kutram
Velvet Kutram
Ebook124 pages21 minutes

Velvet Kutram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Velvet Kutram

Read more from Rajeshkumar

Related to Velvet Kutram

Related ebooks

Related categories

Reviews for Velvet Kutram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velvet Kutram - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    கேள்வி : மோனலிஸா ஓவியம் வரைந்து முடிக்க எத்தனை வருட காலமாயிற்று...?

    பதில் : ஆறு வருடம். (ஒரு பெண்ணை சிரிக்க வைப்பது இவ்வளவு கஷ்டமா?)

    உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிவிட்டு வெளியே வந்த மாவட்ட கலெக்டர் பங்கஜாட்சனை வெளிவராந்தாவில் காத்திருந்த பத்திரிகை நிருபர்களும் சூழ்ந்து கொண்டார்கள்.

    ஸார்... கூட்டத்துல என்ன முடிவு எடுத்தீங்க...?

    இரண்டு முக்கியமான முடிவுகள்

    சொல்லுங்கள் ஸார்...

    இந்தியாவில் நடக்கிற எல்லா நாச காரியங்களுக்கும் காரணகர்த்தாவான மொஹிந்தர்கான் இப்போது வட்டப்பாறை காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பது ஊர்ஜிதமாகிவிட்டது. அவனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்தேயாக வேண்டும் என்று மாநில அரசும் மத்திய அரசும் கட்டளையிட்டுவிட்டது. எல்லா உயர் போலீஸ் அதிகாரிகளையும் கலந்து பேசியதில் இரண்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன...

    என்ன முடிவுகள் ஸார்...?

    மொஹிந்தர்கானை பிடிப்பது என்பது காட்டுப் பகுதியில் அவ்வளவு சுலபம் கிடையாது. காட்டுப் பகுதிகளில் வாழும் ஆதிவாசிகளில்ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு காட்டுப் பகுதியின் ஒவ்வொரு மில்லி மீட்டரும் தெரியும். அவர்களுக்குத் தெரியாமல் அந்தக் காட்டுப் பகுதியில் யாரும் இருந்துவிட முடியாது.

    அவர்களின் உதவியோடு மொஹிந்தர்கானைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா ஸார்...?

    ஒருநம்பிக்கைதான்...

    "சரி... இரண்டாவது முடிவு...?'

    மொஹிந்தர்கானின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்திருக்கிறோம். அவனை உயிரோடோ அல்லது பிணமாகவோ யார் கொண்டு வந்து ஒப்படைத்தாலும் சரி கோடி ரூபாய் பணமும் அரசு வேலையும் கிடைக்கும். அவனைப் பிடித்துக் கொடுப்பவர்கள் பெயர் மற்றும் அவரைப் பற்றிய விபரங்கள் ரகசியமாய் பாதுகாத்து வைக்கப்படும்...

    பத்திரிகை நிருபர்களில் ஒருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வந்தார்.

    "ஸார்... நான் ஒரு கேள்வியைக் கேட்டா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே...?'

    கலெக்டர் பங்கஜாட்சன் சிரித்தார்.

    ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் நீங்க எந்தக் கேள்வியையும் தாராளமா கேட்கலாம்...

    ராணுவத் துணைப்படையிலிருந்து ரெண்டாயிரம் பேர் நவீன ஆயுதங்களோடும், நவீன கருவிகளோடும் வட்டப்பாறை காட்டுப் பகுதிக்குள்ளே நுழைஞ்சு சல்லடை போட்டுத் தேடியும் கிடைக்காத மொஹிந்தர்கானை ஆதிவாசி இளைஞர்களால் பிடிக்க முடியுமா...?

    ஆதிவாசிகளின் தேடுதல் முறை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ராணுவத்தின் பார்வைக்கு கிடைக்காத காட்டுப் பகுதிகள் இவர்களின் பார்வைக்கு கிடைக்கும்.

    "மொஹிந்தர்கானின் தலைக்கு ஒரு கோடி ரூபாயும் அரசு வேலையும் என்பது அதிகம் போல் தெரிகிறதே?'

    மிக மிக அதிகம்தான்... வேறு வழியில்லை. மொஹிந்தர்கான் கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாத ஒரு பயங்கரவாதி. கடந்த பத்து வருட காலத்தில் அவன் செய்த கொலைகள் 134. இதில் உயர் அரசு அதிகாரிகள் எட்டு பேர். சென்ற வருடம் கொல்கத்தாவில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் முன்னூறு பேர்களுக்கு மேல் இறந்து போனதுக்கு இவன்தான் காரணம். இவன் கள்ளக் கடத்தல் செய்த வகையில் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரைக்கும் நம் நாட்டுக்கு இழப்பு. போதை மருந்துகளும், ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துகளும் இந்தியாவில் பெருகக் காரணமே இந்த மொஹிந்தர்கான்தான். இவன் ஒரு விஷச்செடி. இந்த விஷச் செடியைப் பிடுங்கி எரிக்காவிட்டால் இதன் விதைகள் நாடு பூராவும் பரவிவிடும்.

    இந்த இரண்டு முக்கியமான முடிவுகள் எப்போதிருந்து அமலுக்கு வருகின்றன...?

    உடனே அமலுக்கு வந்துவிட்டன. நாளைக்கு எல்லா பத்திரிகைகளிலும் டி.வி. சானல்களிலும் இதைப்பற்றி விரிவாக விளம்பரப் படுத்தப்படும்.

    மொஹிந்தர்கானை பிடிக்கவே முடியாது என்று முன்னாள் டி.ஜி.பி. பொன்னம்பலம் கூறியிருக்கிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன...?

    கலெக்டர் பங்கஜாட்சன் சிரித்தார். சென்ற வருடம் வரை டி.ஜி.பி. யாகப் பணிபுரிந்த பொன்னம்பலம் காக்கி யூனிஃபார்ம் போட்டுக் கொண்ட ஒரு கோழை. இப்போதுள்ள காவல்துறை டி.ஜி.பி. யாக இருக்கிற ஹம்ஸவர்த்தன் எதையும் சாதித்துக் காட்டக்கூடிய வல்லமை பெற்றவர். அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே டி.ஜி.பி. ஹம்ஸவர்த்தன் ஒரு புன்னகையோடு பக்கத்தில் வந்தார்.

    என்ன... என் பெயர் இங்கே அடிபடுகிறது?

    கலெக்டர் சிரித்தார். உங்களால் மொஹிந்தர்கானைப் பிடிக்க முடியுமா என்று கேட்கிறார்கள்!

    ஹம்ஸவர்த்தன் பத்திரிகை, டி.வி. நிருபர்களை ஏறிட்டார்.

    இன்றைக்கு என்ன கிழமை...

    சனிக்கிழமை...

    அடுத்த சனிக்கிழமை இதே நேரம் இதே ஹாலில் மொஹிந்தர்கானின் கைகளில் விலங்கு ஏறியிருக்கும். உங்களுக்கு முன்னால் தலை குனிந்து நின்றிருப்பான்.

    இதை நம்பலாமா...?

    "எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1