Thirakkaatha Kathavugal!
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsAthiradi Aattam! Rating: 4 out of 5 stars4/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Un Naanum En Neeyum Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5
Related to Thirakkaatha Kathavugal!
Related ebooks
Ularaatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Divya Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsKuttrangal Kuraivathillai Rating: 4 out of 5 stars4/5Poruthathu Pothum Vivek Rating: 5 out of 5 stars5/5Ondru Irandu Iranthu Vidu Rating: 3 out of 5 stars3/5Manjal Diary Rating: 0 out of 5 stars0 ratingsKaatrin Niram Karuppu Rating: 5 out of 5 stars5/5Manam Iranthu Pesugiran Rating: 0 out of 5 stars0 ratingsVirpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Vivek Irukka Payamen-II Rating: 4 out of 5 stars4/5Miss. Preethi, 545, Beach Road, Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsAdvance Anjali Rating: 0 out of 5 stars0 ratings1+1=0 Rating: 5 out of 5 stars5/5Vivek Ashok Rajesh Rating: 0 out of 5 stars0 ratingsDinamite - 98 Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kutrangal... Rating: 5 out of 5 stars5/5Athirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsJeeva Jeeva Jeeva Rating: 0 out of 5 stars0 ratingsIrul Porul Inbam and Jeeva. Jeeva.. Jeeva...! Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Kadalorak Kolaikal Rating: 0 out of 5 stars0 ratingsSatthamillatha Samuthiram and Soorya Thagam Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Karuppu Pournamigal Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Kolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsUllur Sathigal Thani Rating: 0 out of 5 stars0 ratingsVidindhal Iravu Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Thirakkaatha Kathavugal!
2 ratings0 reviews
Book preview
Thirakkaatha Kathavugal! - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
வழக்கம்போல் காலை ஐந்து மணிக்கெல்லாம் மாதுரிக்கு தூக்கம் அறுபட்டுவிட, கண் மலர்ந்து போர்வைக்குள்ளிருந்து தலையை நீட்டினாள். கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே அந்த விடியற்காலை அவிழ்வதற்கான அறிகுறிகள் அரங்கேறியிருக்க - மாதுரி தனக்குப் பக்கத்தில் ஒருக்களித்துப் படுத்திருந்த கணவன் பிரேமைப் பார்த்தாள்.
அவன் மெல்லிய குறட்டையில் இருந்தான்.
மாதுரி புரண்டு தன் வெல்வெட் உடம்பால் கணவனை மோதி வலது கையால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவன் காதோரம் மெல்ல உஷ்ணமான மூச்சுக் காற்றோடு கிசுகிசுத்தாள்.
என்னங்க?
.........
பிரேம் தன்குறட்டையை நிறுத்தினான்.
உங்களைத்தானே?
ம்...
இன்னிக்கு நீங்க சீக்கிரமா எழுந்திருக்கணும். ஏழு மணி வரைக்கும் தூங்கக் கூடாது...
ம்...
என்ன ம்...?
கணவனின் காது மடலை தன் ஸ்பான்ஞ் உதடுகளால் பற்றி நுனிப்பற்களால் மெல்லக் கடித்தாள்.
ஹா...
என்ன... ஹா...? சொன்னது காதுல விழுந்ததா இல்லையா?
தூக்கக்கலக்கம் தெளியாமல் பிரேம் கேட்டான்.
என்ன சொன்னே மாதுரி?
இன்னிக்கு நீங்க சீக்கிரமா எழுந்திருக்கணும்...
எதுக்கு...?
இன்னிக்கு வரலட்சுமி நோன்பு...?
சரி... அதுக்கென்ன?
நான் ஆறு மணிக்குள்ளே குளிச்சு கோயிலுக்கு போயிட்டு வந்துடணும்...
போயிட்டு வா...
நான் கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்குள்ளே வரும்போது நீங்க தூங்கிட்டிருக்கக்கூடாது...
என்ன பண்ணணும்?
குளிச்சு ரெடியாகி சுத்தமா இருக்கணும். உங்க கால்கள்ல விழுந்து நமஸ்கரிக்கும் போது நீங்க எனக்கு குங்குமம் கொடுத்து வாழ்த்தணும்...
பிரேம் போர்வையை உதறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.
போச்சுடா...! இன்னிக்கு இப்படியொரு எக்ஸ்ட்ராஃபிட்டிங் வேலையா? இன்னிக்கு ஆபீஸ் லீவு, எட்டு மணி வரைக்கும் தூக்கம் போடலாம்னு நினைச்சிட்டிருந்தேன்...
ப்ளீஸ்...! இன்னிக்கு ஒருநாள் மட்டும்... சீக்கிரமாவே எந்திரிச்சு குளிச்சுருங்க...! எனக்காக... உங்க மாதுரிக்காக!
அந்த அழகான முப்பது வயது ப்ரேம் தன் அழகான இருபத்து மூன்று வயது மனைவி மாதுரியை தலைசாய்த்து புன்னகைத்தபடி கேட்டான்.
மாதுரி! இதெல்லாம் தேவையா?
எது...?
இந்த விஞ்ஞானயுகத்துல நோன்பு, விரதம், புருஷன் கால்கள்ல விழுந்து வணங்கறது... இதெல்லாம் தேவையா?"
மாதுரி தன் அழகான பல்வரிசையைக் காட்டி சிரித்தாள்
இன்னும் ஐயாயிரம் வருஷமானாலும் சரி. இந்த நோன்பும் விரதமும், கணவனை கண்கண்ட தெய்வம் நினைக்கிற பாலிஸியும் என்னிக்குமே இந்தியாவை விட்டுப்போகாது.
எனக்கு இதெல்லாம் பிடிக்கலை மாதுரி.
"எனக்குப் பிடிச்சிருக்கு...! நமக்கு கல்யாணமாகி இப்போ ரெண்டு வருஷமாச்சு... போன வருஷ வரலட்சுமி நோன்பு அன்னிக்கு உங்க கால்ல விழுந்தப்ப நீங்க எனக்கு என்ன ப்ரஸன்ட் பண்ணீங்க தெரியுமா?
தெரியலையே... என்ன பண்ணினேன்?
எல்லாத்தையும் மறந்துடுங்க... ஒண்ணையும் ஞாபகம் வெச்சுக்காதீங்க. போன வருஷம் நீங்க எனக்கு பிரஸன்ட் பண்ணினது ஒரு வெள்ளி குங்குமச்சிமிழ். இந்த வருஷம் நீங்க எனக்கு என்ன ப்ரஸன்ட் பண்ண போறீங்க?
வெயிட் அண்ட் ஸீ மை டார்லிங்...
நான் கெஸ் பண்ணிச் சொல்லட்டுமா?
சொல்லு பார்க்கலாம்...
மூக்குத்தி...
நோ...
கொலுசு...
ஸாரி கண்ணே...
மோதிரம்...
இல்லை...
ஒரு சின்ன க்ளு கொடுங்களேன்...
க்ளு கொடுத்தா நீ கெஸ் பண்ணிடுவே! வெரி வெரி ஸாரி...
சரி... அந்தப் பொருளோட முதல் எழுத்தை மட்டு சொல்லுங்க... போதும்...
இங்கிலீஷ்ல சொல்லட்டுமா? தமிழ் சொல்லட்டுமா?
பிரேம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே - கட்டிலின் தலைமாட்டில் இருந்த டெலிபோன் எலெக்ட்ரானிக் இசையோடு முணுமுணுத்துக் கூப்பிட்டது..
இந்த நேரத்துக்கு யார்ன்னு தெரியலையே...?
போர்வையிலிருந்து தன் உடம்பை உருவிக் கொண்டு பின்னுக்குச் சாய்ந்த பிரேம் அந்த ஆகாய நிற மொபைல் போனை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.
ஹலோ...
மறுமுனையில் பிரேம் பணிபுரியும் கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் பட்டாபிராமன் மூக்கடைப்போடு தொண்டை கட்டிக்கொண்ட தினுசில் வழக்கமான டெஸிபலில் பேசினார்.
யாரு...! பிரேம்தானே...?
ஆமா... ஸார்... குட்மார்னிங் ஸார்...
வெரி... வெரி... குட்மார்னிங் இவ்வளவு சீக்கிரத்துல நீ டெலிபோன்ல கிடைப்பேன்னு நினைக்கவே இல்லை...
என்ன விஷயம் ஸார்...?
டெல்லியிலிருந்து போர்டு சேர்மன் தேவாம்சம் ஃப்ளைட்ல புறப்பட்டு இப்போ வந்துட்டிருக்கார். ஃப்ளைட் சரியா ஆறரை மணிக்கு மெட்ராஸ்க்கு வந்துடும். அவரை ஏர்போர்ட்ல ரிஸீவ் பண்ணி அவர் தங்கறதுக்கு வேண்டிய வசதிகளை செஞ்சு கொடுக்க வேண்டியது உன்னோட வேலை.
ஸார்... வ... வந்து...
என்ன...?
ஒண்ணுமில்லை ஸார்...! அவரை எந்த ஹோட்ட லுக்கு கூட்டிப்போய் ஸ்டே பண்ண வைக்கறது...?
ஹோட்டல் 'கோல்டன் கேட்ஸ்’ல ஏற்கனவே ரூம் போட்டாச்சு. ஸ்பெஷல் சூட், சேர்மன் தேவாம்சத்தை ரிஸீவ் பண்ணி அவர் மெட்ராஸ்ல இருக்கப்போகிற நாலு நாட்களும் அவரை கவனிச்சுக்க வேண்டிய பொறுப்பு உன்னோடதுதான். எப்பவுமே அவர் மெட்ராஸ் வந்தா அவரோடவே இருக்கிற அசிஸ்டண்ட் மேனேஜர் கமலக்கண்ணனுக்கு ஜாண்டீஸ் அட்டாக் ஆகி வீட்ல பெட் ரெஸ்ட்ல இருக்கார். ஸோ... இந்த தடவை அந்தப் பொறுப்பு உனக்கு அலாட்டாகியிருக்கு. காலையில் பத்து - மணியிலிருந்து ராத்திரி எட்டு மணி வரைக்கும் நீ அவர் கூட இருந்துட்டு வீட்டுக்குப் போயிடலாம்... ஆபீஸுக்கு நீ வர வேண்டியதே இல்லை... சேர்மன் தங்கியிருக்கிற நாலு நாட்களும் நீ வீட்டிலிருந்து ஹோட்டலுக்கே போயிடலாம்...
எஸ்... ஸார்...
உனக்கு சேர்மன்கிட்ட பேசி பழக்கம் இருக்கா?
இல்ல... சார்... ஆபீசுக்கு வர்ற சமயங்கள்ல விஷ் பண்றதோடு சரி...
அவர் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். 'வளவள'ன்னு யாராவது பேசினா அவருக்குப் பிடிக்காது. அவர் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் நீ பதிலைச் சொன்னா போதும்.
எஸ் ஸார்...
இப்ப மணி அஞ்சே கால். நீ குளிச்சுட்டு ஏர்போர்ட் போறதுக்கும் ஃப்ளைட் வர்றதுக்கும் சரியா இருக்கும். – கம்பெனி கார் அஞ்சேமுக்காலுக்கு உன் வீட்டு வாசலுக்கு வந்துரும்.
நான் பதினஞ்சு நிமிஷத்துல ரெடியாயிடுவேன் ஸார்
குட்! சேர்மனை ரிஸீவ் பண்ணினதும் எனக்கு போன்ல தகவல் கொடு...
எஸ் ஸார்...
பிரேம் போனை ஊமையாக்கி விட்டு திரும்பி, மாதுரியைப் பார்த்தான். அவள் கேட்டாள்.
போன்ல யாருங்க?
விபரம் சொன்னான்.
மாதுரியின் குங்குமப்பூ நிற முகம் கோபத்துக்குப் போயிற்று.
நீங்க அந்த கம்பெனியில் சீஃப் அக்கௌண்ட் ஆபீஸர். இந்த அட்டெண்டர் வேலையெல்லாம் பார்க்க எதுக்காக ஒத்துக்கறீங்க? ஏதாவது ஒரு காரணத்தை மென்ஷன் பண்ணி முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?
அப்படியெல்லாம் சொல்ல முடியாது மாதுரி. வரப் போறது போர்டு சேர்மன்.
சொல்லிக் கொண்டே கட்டிலை விட்டு கீழே இறங்கினான்.
உனக்கு முன்னாடி நான் குளிச்சுட்டு கிளம்பணும்...
என்னங்க... நல்ல நாளும் அதுவுமா வீட்ல இருக்காமே காலங்கார்த்தால கிளம்பறீங்க?
என்ன செய்யறது? பிரைவேட் கம்பெனி உத்தியோகம். இப்படித்தான்... டாய்லட்ல இருக்கும்போது போன் வரும். எல்லாத்தையும் வாரிச் சுருட்டிக்கிட்டு ஓடணும்...
நானும் ஒரு பிரைவேட் கம்பெனியில் தான் ‘வொர்க்' பண்றேன். எவ்வளவு லிபரலா இருக்காங்க தெரியுமா? தலைவலின்னு சொன்னா போதும். மாத்திரையையும் கையில கொடுத்து லீவையும் சாங்க்ஷன் பண்ணிடுவாங்க
சரி... மாதுரி... இப்போ உன்கிட்ட பேசிட்டிருக்க நேரமில்லை. அரைமணி நேரத்துக்குள்ளே நான் குளிச்சு ரெடியாகணும்...
. பிரேம் சொல்லிக் கொண்டே நகர முயல, மாதுரி அவனுடைய தோளைப் பற்றி நிறுத்தினாள்.
என்னங்க... நீங்க எனக்காக வாங்கி வெச்சிருக்கிற அந்த ப்ரஸன்டேஷனைப் பத்தி 'க்ளூ' எதுவும் கொடுக்காமே போறீங்களே...?
க்ளுதானே?
ஆமா...
முதல் எழுத்து 'K' நான் குளிச்சுட்டு வர்றவரைக்கும் யோசனை பண்ணு...
குளியலறைக்குள் நுழைந்துவிட்டான் பிரேம். இருபது நிமிஷம் கழித்து குளியலறையிலிருந்து வெளிப்பட்டு சாக்லேட் நிற சஃபாரிக்கு மாறி கண்ணாடி முன் நின்ற போது மாதுரி காபி டம்ளரோடு வந்தாள்.
அது என்ன ‘K’ எழுத்தில் ஆரம்பிக்கிற ப்ரஸண்டேஷன்...?
தெரியலையா?
ஊ... ஹ...ம்...
இன்னொரு க்ளு கொடுக்கட்டுமா?
ம்...
அது ரெடிமேட் மாதிரி! நினைச்ச நேரம் வாங்கலாம், கொடுக்கலாம்...
விலை?
நாம சொல்ற விலைதான்
எங்கே கிடைக்கும்?
உதட்டைக் காட்டினான் பிரேம்.
ச்ச்சீய்...கிஸ்ஸா?
அதே... அதே...! ப்ரஸன்ட் பண்ண இப்பவே ரெடி. வாங்கிக்கிறியா?
இன்னிக்கு வரலட்சுமி விரதம். உங்க மேல பட்ட காத்துகூட என்மேல்படக்கூடாது. ரெண்டடி தள்ளியே நில்லுங்க...
கணவனையும் மனைவியையும் பிரிக்கிற இந்த விரதம் நமக்குத் தேவையா...?
இது பவர்ஃபுல் விரதம். தாலிக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி கொடுக்கக்கூடிய விரதம். இருபத்தி நாலு மணி நேரத்துக்கு உங்களுக்கு 144 தடை...
சரி...! இன்னிக்கு நீ ஆபீஸுக்குப் போறியா? இல்லே லீவா...?
லீவெல்லாம் கிடையாது. ஆபீஸுக்குப் போறேன். ஆனா சாயந்தரம் சீக்கிரமாவே வந்துடுவேன். இதே தெரு கல்யாணி மாமி வீட்ல இன்னிக்கு சுமங்கலி பூஜை வெச்சிருக்காங்க. கட்டாயமா வரச்சொல்லிட்டு போயிருக்கா மாமி...
மாதுரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே - வீட்டுவாசலில் கார்ஹார்ன் பிளிறியது.
கார் வந்தாச்சு...! நான் கிளம்பறேன்...
சாயந்தரம் எத்தனை மணிக்கு வருவீங்க...?
சொல்ல முடியாது... சேர்மன் எத்தனை மணிக்கு தலையாட்டறாரோ அப்பத்தான் கிளம்பமுடியும்.
பிரேம் வாசலில் நின்றிருந்த காரை நோக்கிப் போனான்.
போர்டு சேர்மன் தேவாம்சத்தைப் ஏர்போர்ட்டில் ரிஸீவ் செய்து கொண்டு கிண்டியின் கோடியில் முளைத்திருந்த ‘கோல்டன் கேட்ஸ்' ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்தபோது காலை எட்டு மணி. டெல்லி ஃப்ளைட் ஒரு மணி நேரம் லேட். அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த தேவாம்சம். தன் வயதைக் காட்டிக் கொள்ளப் பிரியப்படாமல் தலைக்குத் துல்லியமாய் 'டை' அடித்து ஒரு கட்டாய இளமைக்குத் திரும்பியிருந்தார். முன்வரிசைப் பற்களில் இரண்டு தங்கம், பராமரிக்கப்பட்ட கிருதா. பெல்ட்டுக்கு பணிய மறுக்கும் தொப்பை. ஹோட்டலின் ஸ்பெஷல் சூட் ஏர்கண்டிஷனின் ஜில்லிப்பில் இருக்க, தேவாம்சம் கட்டிலுக்குச் சாய்ந்து உட்கார்ந்தபடி எதிரே நின்றிருந்த பிரேமை ஏறிட்டார்.
இந்த ஹோட்டலுக்கு நீங்க வர்றது இதுதான் முதல் தடவைன்னு நினைக்கிறேன்.
ஆமா...ஸார்...
மிஸ்டர் பிரேம்... நான் கொஞ்சம் ஜாலி டைப் பேர் - மெட்ராஸுக்கு வர்றதே நாலுநாள் சந்தோஷமா இருந்துட்டு போறதுக்காகத்தான். லிக்கர், கேர்ள்ஸ் எல்லாம் உண்டு. அந்த இண்டர்காம் போனை எடுத்து ரிசப்ஷனைக் கூப்பிட்டு பேரர் பாலுவை வரச் சொல்லுங்க.
"பிரேம் சில வினாடிகள் திகைத்து விட்டு இண்டர்காமில் தொடர்பு கொள்ள அடுத்த ஐந்தாவது நிமிஷம் பேரர் பாலு தேவாம்சத்துக்கு முன்பாய் பவ்யமாய் நின்றிருந்தான். உதட்டில் பழக்கதோஷ சிரிப்பு.
என்ன பாலு நல்லாயிருக்கியா?
இருக்கேன் ஸார்...
போன தடவை மாதிரியே இந்த தடவையும் நாலஞ்சு நாள் தங்கப் போறேன்...
பாலு பழுதான பல்வரிசையில் சிரித்தான்.
ஏற்பாடு பண்ணிடறேன் ஸார்...! கையில்ஃப்ரஷ்ஷா பார்ட்டி இருக்கு ஸார்...
போட்டோ வெச்சிருக்கியா...?
இதோ...
சட்டைப் பாக்கெட்டில் இருந்து போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோ ஒன்றை எடுத்து நீட்டினான்.
பாருங்க ஸார்...
அவர் வாங்கி பார்த்துக் கொண்டிருக்கும் போதே – பாலு சொன்னான்.
"பேரு மாதுரி ஸார். கல்யாணமாயிருச்சு ஆபீஸுக்கு போயிட்டிருக்கா. நைட்ல