Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vellai Nizhal!
Vellai Nizhal!
Vellai Nizhal!
Ebook117 pages36 minutes

Vellai Nizhal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vellai Nizhal!

Read more from Rajeshkumar

Related to Vellai Nizhal!

Related ebooks

Related categories

Reviews for Vellai Nizhal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vellai Nizhal! - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அந்த மண்டபம் நிறையச் சிதிலமடைந்திருந்தது. விரிசல் விட்டிருந்த, மேற்கூரை வழியாகச் சூர்ய கிரணங்கள் கோடு கோடாய்த் தரையை வந்து தொட்டன. மண்டபத்தின் முதல் படிக்கட்டின் மேல் கிரிதரும், ஈஸ்வரியும் உட்கார்ந்திருந்தார்கள்.

    அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்கு நேர் எதிரே - எந்தக் காலத்திலோ யாரோ ஒரு சோழன் இனாகுரேஷன் செய்து வைத்த கோயிலின் பின் பக்கம் பழமை வாசனை மாறாமல் கண்ணிலடித்தது.

    மிகச் சன்னமான அர்ச்சனைக் குரலையும், மணிச் சத்தத்தையும் சுமந்து செல்கிற காற்று, போகிற போக்கில் அந்த மண்டபத்தையும் தொட்டு, அவர்களுடைய காதுகளில் விழுந்து கொண்டிருந்தது.

    ஈஸ்வரி! நீ சொன்னது நிஜமா?

    ஆச்சர்யத்தில் கண்களை விரித்தான் கிரிதர்.

    ஆமா கிரிதர். அப்பா உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்...

    அவர்கிட்டே எப்படி விஷயத்தைச் சொன்னே?

    என்னிக்கிருந்தாலும் ஒரு நாள் சொல்லித்தானே ஆகணும் எப்படியோ தைரியத்தை வரவழைத்துச் சொல்லிட்டேன்.

    உங்கப்பா எகிறியிருப்பாரே?

    பின்னே! மூஞ்சியெல்லாம் சிவந்து போய்த் தாட் பூட்னு சத்தம் போட்டார். நான் ஸ்ட்ராங்கா அடிச்சு சொன்னேன், அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. அப்புறம் இறங்கி வந்தார். ஸாஃப்டா அட்வைஸ் பண்ணி பார்த்தார். நான் அசைஞ்சு கொடுக்கலை. என்னோட பிடிவாதம் அவருக்குத் தெரியும். கடைசியில் தலையை ஆட்டிட்டார்.

    நான் எப்ப அவரை வந்து பார்க்கணும்...?

    இதுக்கு ராகுகாலம் எம கண்டமெல்லாம் வேற பார்க்கணுமா என்ன? இப்பவே புறப்பட்டுப் போய்ச் சேர வேண்டியதுதான்.

    இ... இப்பவேவா? குரல் குழறியது கிரிதர்க்கு.

    ஆமா கிரிதர்! அப்பா கொஞ்சம் சத்தமா பேசுவார். அதைப் பார்த்துப் பயந்துடாதீங்க. அவர் கேக்கறதுக்கெல்லாம் தைரியமா பதில் சொல்லுங்க.

    என்ன கேட்பார்?

    "உங்களைப் பத்தி கேப்பார். அவ்வளவுதான்.'

    நீ கொஞ்சம் அவசரப்பட்டுட்டே ஈஸ்வரி.

    அவசரப்பட்டுட்டேனா?

    ஆமா நான் ஓரளவுக்குச் சம்பாதிக்கற நிலைமைக்கு வந்தபிறகு, அவர்கிட்டே விஷயத்தை உடைச்சிருக்கலாம்...

    என்ன விளையாடறீங்களா? மகாகனம் பொருந்திய பாபாலகிருஷ்ணனின் மருமகன் சம்பாதிச்சுத்தான் வாழ்க்கை ஆகணும் நடத்தணும்ங்கற அவசியம் கிடையாது!

    அப்படியில்லே ஈஸ்வரி.

    இல்லையாவது, இருக்காவது... மொதல்ல எந்திரிங்க!

    அவன் கையைப் பற்றி எழுப்பினாள்.

    எழுந்த கிரிதர் மண்டபத்துக்கு வெளியே போய் எட்டிப் பார்த்து விட்டு வந்தான்.

    ஈஸ்வரி! யாரையும் காணோம். நீ மொதல்ல போ. நான் பின்னாடியே வர்றேன்...

    ஈஸ்வரி புன்னகை கொட்டினாள்.

    இதெல்லாம் ஒளிவு மறைவா காதலிக்கற வரைக்கும் தான் யாருக்குப் பயப்படணுமோ அவர்கிட்டே விஷயத்தை உடைசாச்சு. இனி என்ன?

    உன்னோட துணிச்சலைப் பார்த்தா எனக்குப் பிரமிப்பா இருக்கு!

    இருவரும் வெளியே வந்தார்கள்.

    கோயிலின் பின்பக்க மதில் சுவரைச் சுற்றி வந்தபோது, கோயிலுக்குள் நுழைகிற வெளியூர் நபர்களின் பார்வைகள் இருவரையும் மேய்ந்தபடியே சென்றன. கோயிலுக்கு வெளியே வந்து சூடம் ஊதுபத்திக் கடையைக் கடந்தபோது - முதுகுகளில் குரல்கள் மோதின.

    பார்த்தியா, பொன்னுச்சாமி?

    ஆமாண்ணே! சரியான எடமாப் பார்த்துத்தான் கொக்கி போட்டிருக்கான்.

    அவர்களுடைய பேச்சைப் பொருட்படுத்தாமல் ஈஸ்வரியிடம் திரும்பினான் கிரிதர்.

    உங்க அப்பாகிட்டே இப்ப என்ன சொல்லிட்டு வந்தே? என்னைக் கூட்டிட்டு வரப் போறதாவா சொல்லிட்டு வந்தே...?

    இல்லை! சாயந்தரம் உங்க வீட்டுக்கு ஆள் அனுப்பிச் சொல்றதா இருக்கார். நான் இப்போ புறப்பட்டு வந்ததே அவருக்குத் தெரியாது!

    அப்படின்னா நான் இப்ப அவரைப் பார்க்கப் போறது கூடத் தெரியாது?

    தெரியாது.

    வேண்டாம். திடுதிப்னு நான் போய் அவர் முன்னால நிக்க வேண்டாம். சாயந்திரம் அவரே ஆள் அனுப்பட்டும்.

    ஓ! மாப்பிள்ளை இப்பவே ப்ரெஸ்டீஜ் பார்க்க ஆரம்பிச்சாச்சா? நீங்க இப்ப தாராளமா வரலாம். ஒண்ணும் தப்பில்லை!

    நடந்தார்கள்.

    பத்து நிமிஷம் கழித்து ஊருக்கு நடுவேயிருந்த மினி சைஸ் அரண்மனை மாதிரியிருந்த ஈஸ்வரியின் பங்களாவைத் தொட்டார்கள்.

    காம்பௌண்ட் கேட்டை நெருங்கியதும் கிரிதர்க்குச் சகலமும் உதறியது.

    ஈஸ்வரி எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு."

    ஐயோ! வாங்க! தலையில் அடித்துக் கொண்டாள். வியர்வை முகமாய் போர்டிகோவின் படிகளேறினான் மொசைக், வராந்தாவைக் கடந்து செல்ல, ஆயிரம்

    Enjoying the preview?
    Page 1 of 1