Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irul Porul Inbam and Jeeva. Jeeva.. Jeeva...!
Irul Porul Inbam and Jeeva. Jeeva.. Jeeva...!
Irul Porul Inbam and Jeeva. Jeeva.. Jeeva...!
Ebook277 pages1 hour

Irul Porul Inbam and Jeeva. Jeeva.. Jeeva...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Irul Porul Inbam and Jeeva. Jeeva.. Jeeva...!

Read more from Rajeshkumar

Related to Irul Porul Inbam and Jeeva. Jeeva.. Jeeva...!

Related ebooks

Related categories

Reviews for Irul Porul Inbam and Jeeva. Jeeva.. Jeeva...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irul Porul Inbam and Jeeva. Jeeva.. Jeeva...! - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    இருள் பொருள் இன்பம்

    1

    அந்த வெள்ளிக் கிழமையின் விடியற்காலை, மேக மூட்டத்தின் காரணமாக கொஞ்சம் அழுக்காய் விடிந்து கொண்டிருந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ரன்வேயில் பயணிகளை உதிர்த்துக் கொண்டிருக்க, லௌன்ஞ்சில் ஒரு கூட்டம் அவர்களை வரவேற்கக் காத்திருந்தது. அதில் இரண்டு பேர் இந்த இ.பொ.இ. கதைக்கு வேண்டியவர்கள். இரண்டு பேருமே ஆண்கள். 25 வயதிலிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள். முகங்களில் நேர்மை ஒரு பர்சண்ட் கூட இல்லை. கொஞ்சம் பதட்டமாய் இருந்தார்கள். இரண்டு பேரில் ஒருவன் பதினைந்து விநாடிகளுக்கு ஒரு முறை நகம் கடித்துத் துப்பினான். மற்றவன் நெற்றியில் வியர்த்த வியர்வைத் துளிகளைக் கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டான். இரண்டு பேரின் பார்வையும் விமானத்திலிருந்து இறங்கி வரும் பயணிகளின் முகங்கள் மீது ஆணியடித்த மாதிரி பதிந்து இருந்தது.

    திடீரென்று ஒருவன் மற்றவனின் இடுப்பை சுரண்டினான்.

    லால்...

    ம்...

    நந்திதா வர்றா...

    எங்கே?

    அதோ...! அந்த பர்தா போட்ட பொண்ணுக்கு பின்னாடி ப்ளூ கலர் சுடிதார்...

    அட... ஆமாம்... அமர்க்களமாயிருக்காள்ல?

    சிங்கப்பூர்ல ஒரு மாசமா இருந்துட்டு வர்றா! உடம்போட மினுமினுப்புக்கு கேட்கணுமா என்ன...?

    அவர்களால் நந்திதா என்று சொல்லப்பட்ட அந்தப் பெண், ஐம்பது கிலோ வென்னிலா ஐஸ்க்ரமைப்போல தோளில் தொங்கவிட்ட ஹேண்ட் பேகோடும் இடது கையில் பிடித்த ப்ரீஃப்கேஸோடும் அலட்சியமாய் நடை போட்டுக் கொண்டு வந்தாள்.

    இரண்டு நிமிஷ நடையில் லெளன்ஞ்சுக்கு வந்தவள், இரண்டு பேரையும் பார்த்து சிக்கனமாய் புன்னகைத்து தோள்பட்டையை ‘ஜெர்க்’ செய்தாள்.

    ஹாய் லால்... ஹாய்... தாமு... எப்படியிருக்கீங்க...?

    ஃபைன்! நீ எப்படியிருக்கே நந்திதா?

    வெரி ஃபைன்...! சிங்கப்பூர்ல ஒரு மாசமா இருந்துட்டு சென்னையில் காலடி எடுத்து வெச்சதும் ஏதோ குடோனுக்குள்ளே நுழைஞ்சுட்ட மாதிரியிருக்கு...

    பழிக்காதே...!

    ஸாரி...! தாய் மண்ணே வணக்கம்!

    போய் கஸ்டம்ஸை முடிச்சுக்கிட்டு வா. கார்கிட்ட வெயிட் பண்றோம்...

    சொல்லிவிட்டு இரண்டு பேரும் நகர முயல, நந்திதா இடைமறித்தாள்.

    லால்...

    என்ன...?

    கிஷோர் எனக்கு ரெண்டு நாளா போன் பண்ணலை. நம்ம பாஸ் அவரை எங்கேயாவது அனுப்பியிருக்காரா?

    ஆமா...

    எங்கே...?

    கொல்கத்தா...

    கொல்கத்தாவுக்குப் போனாலும் கிஷோர் எனக்குப் போன் பண்ணாமே இருக்கமாட்டாரே...?

    கிஷோர் கொல்கத்தாவுக்கு புறப்பட்டு போயிருக்கிறது ஒரு இன்-கேமரா விசிட். அதனால அவன் கொல்கத்தாவிலிருந்து யார்க்கும் போன் பண்ணி பேசக்கூடாதுங்கிறது பாஸோட கட்டளை.

    நான் பாஸ்கூட பேசணும்...

    நீ மொதல்ல கஸ்டம்ஸை முடிச்சுக்கிட்டு வா. ஹோட்டலுக்குப் போகிற வழியில் கார்ல பேசிக்கலாம் சொல்லிவிட்டு லாலும் தாமுவும் ஏர்ப்போர்ட்டின் நுழைவு வாயிலை நோக்கிப் போக, நந்திதா சில விநாடிகள் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கஸ்டம்ஸ் இருந்த திசை நோக்கிப் போனாள்.

    இருபது நிமிஷங்களை கஸ்டம்ஸில் செலவழித்துவிட்டு ஏர்ப்போர்ட்டுக்கு வெளியே இருந்த கார்பார்க்கிங்கிற்கு நந்திதா வந்தபோது லாலும் தாமுவும் சிகரெட் புகைகளோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். காரின் பின் சீட்டுக்குப் போனாள் அவள்.

    என்ன போலாமா...?

    ம்...

    கஸ்டம்ஸில் ஏதாவது பிரச்னையா?

    ஒரு பிரச்னையும் இல்லை. மூன்று பேரில் ரெண்டு பேர் ஜொள்ளு பார்ட்டி. கேட்கணுமா... கோயில் கட்டி கும்பிடாததுதான் குறை...

    லால் சிகரெட்டை வீசி விட்டு டிரைவிங் சீட்டுக்குப் போக, கார் கிளம்பியது.

    போக்குவரத்தற்ற விடியற்காலை ரோடில், கார் சீறிப் பாய்ந்து கொண்டிருக்க நந்திதா தன் ஹேண்ட் பேகிலிருந்து செல்போனை எடுத்தாள்.

    தாமு...! பாஸோட புது செல்போன் நம்பர் என்ன...?

    அது... வந்து... வந்து...

    ஏன் இழுக்கறே...?

    அவரோட புது செல்போன் நம்பரை யார்க்கும் கொடுக்க வேண்டாம்ன்னு சொல்லியிருக்கார்.

    எனக்குக் கூடவா...?

    ஒரு நிமிஷம்... என்ற தாமு தன் செல்போனை எடுத்து சில எண்களைத் தட்டி விட்டு பவ்யமாய் பேசினான்.

    பாஸ்...! நந்திதா உங்ககிட்டே பேசணுமாம்.

    போனை அவகிட்டே குடு...

    தாமு தன்னுடைய செல்போனை நந்திதாவிடம், நீட்டினான். பாஸ் லைன்ல இருக்கார்..., பேசு...

    நந்திதா வாங்கிப் பேசினாள்.

    குட்மார்னிங் பாஸ்...

    குட்மார்னிங்... ஜர்னி எப்படியிருந்தது நந்திதா?

    ஃபைன் ஸார்...

    நீ கொண்டு வந்திருக்கிற ஜாக்குவார் ப்ளூ டைமண்ட்ஸை உள்ளங்கையில் ஏந்திப் பார்க்கிறதுக்காக துடிச்சுக்கிட்டிருக்கேன். நீ போய் ஹோட்டல்ல ரெண்டு மணி நேரம் ரெஸ்ட் எடு. சரியா எட்டு மணிக்கு நம்ம டெண்ட்டிஸ்ட் நீ தங்கியிருக்கிற ஹோட்டல் ரூமுக்கு வருவார். அவர்கிட்டயே அந்த டைமண்ட்ஸை கொடுத்து விட்டுடு.

    எஸ். பாஸ்...

    வேறென்ன...?

    பாஸ்! எனக்கு கிஷோர்கிட்டே பேசணும்...

    கிஷோரை கொல்கத்தாவுக்கு ஒரு முக்கியமான விஷயமா அனுப்பியிருக்கேன்.

    கொல்கத்தாவில் அவர் எங்கே தங்கியிருக்கார்? காண்டாக்ட் போன் நம்பர் என்ன?

    ஸாரி நந்திதா...! அதையெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டிருக்க முடியாது. உன்னோட வேலை முடிஞ்சதும் மறுபடியும் நீ சிங்கப்பூர் புறப்பட்டுப் போயிடு. கிஷார் ஒரு வாரம் கழிச்சு உன்னை காண்டாக்ட் பண்ணுவான்.

    பாஸ்! நானும் கிஷோரும் காதலர்கள் என்கிற விஷயம் நம்ம இயக்கத்தில் இருக்கிற எல்லார்க்கும் தெரியும். நான் ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி கிஷோர்கிட்டே பேச வேண்டியிருக்கு. எனக்கு கொல்கத்தா நம்பர் வேணும்...

    சரி... நீ மொதல்ல... ஹோட்டலுக்குப் போ. உன்னோட செல் நம்பர்க்கு கிஷோரையே போன் பண்ணச் சொல்றேன்...

    நிஜமாவா பாஸ்...?

    நிஜம்தான்... இதில் என்ன பொய் வேண்டியிருக்கு... இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே கிஷோர் கொல்கத்தாவிலிருந்து உனக்குப் போன் பண்ணுவான்...

    தேங்க்யூ பாஸ்...

    செல்போனை தாமுகிட்டே கொடு.

    கொடுத்தாள். தாமு வாங்கி வலது காதுக்கு செல்போனை பொருத்திக் கொள்ள, பாஸ் ஹஸ்கி வாய்ஸில் பேசினார்.

    தாமு...! நந்திதா கிஷோர்கிட்டே பேசணும்ன்னு பிடிவாதம் பிடிக்கிறா. அவனை ரெண்டு நாளைக்கு முன்னாடி நாம தீர்த்துக்கட்டி நெருப்புக்குக் கொடுத்து சாம்பலாக்கின விஷயம் அவளுக்குத் தெரியவே கூடாது.

    எஸ்... பாஸ்...

    டெண்ட்டிஸ்ட் நிரஞ்சன் குமாரை ஒரு அரைமணி நேரத்துக்குள்ள ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைக்கிறேன். நந்திதாகிட்ட இருக்கிற டைமண்ட்ஸை எடுத்து அனுப்ப வேண்டியது உன்னோட வேலை...

    எஸ்… பாஸ்...

    லால்கிட்டேயும் சொல்லி வெச்சுடு. காரியம் முடிகிற வரைக்கும் கிஷோர் விவகாரம் நந்திதாவுக்கு தெரியவே கூடாது.

    ஓ.கே. பாஸ்... சொன்ன தாமு செல்போனை அணைத்து தன் சர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். லால் காரை ஓட்டிக்கொண்டே கேட்டான்.

    நந்திதா...! உனக்கு கிஷோர்கிட்டே அப்படி என்ன முக்கியமான விஷயம் பேசணும்...?

    அதை உன்கிட்ட மட்டும் இல்லை பாஸ்கிட்டயே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை லால்...! எதிர்ல வேன் வருது. காரைப் பார்த்து ஓட்டு... இப்போ உனக்கு இருக்கிற முக்கியமான வேலையே காரை ஒழுங்கா ஓட்டறதுதான்.

    லால் காரின் ரியர் வ்யூ கண்ணாடியில் முறைப்பதை லட்சியம் செய்யாமல் பின் சீட்டுக்கு சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் நந்திதா.

    கார் இப்போது வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டு கிண்டியின் கோடியிலிருந்த ஹோட்டல் ரிட்ஜ் இன்டர்நேஷனலை நோக்கிப் போயிற்று.

    ஹோட்டல் ரிட்ஜ் இன்டர்நேஷனல்.

    அறை எண் 508.

    குளியலை முடித்துக் கொள்ள எண்ணி பாத்ரூமை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நந்திதா, அழைப்புமணி ஒலித்த சத்தம் கேட்டு வாசல் கதவுக்கு வந்து தாழ்ப்பாளை விலக்கினாள்.

    வெளியே –

    தாமு, லால், அவர்களுக்குப் பின்னால் டெண்ட்டிஸ்ட் நிரஞ்சன்குமார். நந்திதா முகம் நிறைய வியப்பு காட்டினாள்.

    என்ன... ஹோட்டலுக்கு வந்து ரூம் எடுத்து இன்னும் அரைமணி நேரம்கூட ஆகலை. அதுக்குள்ளே வந்துட்டீங்க? பாஸ் ரெண்டு மணி நேரம் எனக்கு ஓய்வு கொடுத்திருக்கார்.

    மூன்று பேரும் உள்ளே வந்தார்கள். இயல்பாய் சோபாக்களுக்கு சாய்ந்து கொண்டார்கள்.

    லால் சொன்னான், அது எங்களுக்கும் தெரியும் நந்திதா... பட் டெண்ட்டிஸ்ட் நிரஞ்சன் குமாருக்கு இன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல ஒரு முக்கியமான ஆப்ரேஷன். ஏழு மணிக்கெல்லாம் அவர் ஆபரேஷன் தியேட்டர்ல இருக்கணுமாம். அதுதான் இப்பவே புறப்பட்டு வந்துட்டார்...

    நிரஞ்சன் குமார் புன்னகைத்தார். ஒரு பத்து நிமிஷம் ஒத்துழைப்பு கொடுத்தா போதும். உன்னோட கடைவாய்ப் பற்களில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிற டைமண்ட்ஸை எடுத்துக் கொடுத்துட்டு நான் பாட்டுக்கு என்னோட வேலையைப் பார்க்கப் போயிடுவேன்.

    ஸாரி டாக்டர்...

    எதுக்கு ஸாரி...

    ரெண்டு மணி நேரம் கழிச்சுதான் என்கிட்டயிருந்து அந்த டைமண்ட்ஸை எடுக்க முடியும்...

    ஏன்...?

    மொதல்ல கிஷோர் கொல்கத்தாவிலிருந்து என்கிட்ட பேசணும். அவர் பேசின பின்னாடிதான் எல்லாம்.

    லால் கோபமாய் குறுக்கிட்டான். நந்திதா! நீ பேசறது சரியில்லை. கிஷோர் கண்டிப்பா உன்கிட்டே பேசுவான்.

    மொதல்ல அவர் பேசட்டும்.

    கிஷோர் பேசினாத்தான் டைமண்ட்ஸைத் தருவியா?

    ஆமா...

    இதோபார்...! இப்படியெல்லாம் நீ பேசிட்டிருந்தா பாஸுக்கு கோபம் வரும்...

    அவரோட கோபத்தைப் பத்தி எனக்குக் கவலையில்லை. கிஷோர் கொல்கத்தாவில் இருந்தாலும் சரி... கோலாலம்பூரில் இருந்தாலும் சரி... இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே என்கிட்டே பேசியாகணும். இல்லேன்னா டாக்டர் நிரஞ்சன்குமார் என் பக்கத்துலகூட வர முடியாது...

    நீ இப்போ பேசினதை பாஸ்கிட்டே அப்படியே சொல்லட்டுமா...?

    சொல்லு... நான் என்ன அவரோட சொத்துல பங்கா கேட்டேன்... என்னோட கிஷோர்கிட்டே நான் பேசணும். அவ்வளவுதான். ம்... போன் பண்ணு...

    லால் தன் சர்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு மறைவாய் போய் பேசிவிட்டு வந்து, நந்திதாவிடம்,

    பாஸ்கிட்டே பேசிட்டேன் என்றான்.

    என்ன சொன்னார்?

    உன்னோட கோரிக்கைக்கு ஒத்துக்கிட்டார். கிஷோர்கிட்டே நீ செல்போன்ல பேசறதைவிட கிஷோர் இருக்கிற இடத்துக்கே உன்னை அனுப்பி வைக்கச் சொன்னார்.

    லால் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தாமுவின் கையில் க்ரே நிற உடம்போடு ஒரு துப்பாக்கி பூத்தது.

    2

    தாமுவின் கையில் க்ரே நிற உடம்போடு துப்பாக்கி முளைத்ததும் அதைப் பார்வையில் வாங்கிய நந்திதா தன்னுடைய கரிய பெரிய கண்களில் அதிர்ந்தாள்.

    தாமு...! என்ன இது...?

    "தெரியலையா நந்திதா...! நீ போக வேண்டிய

    Enjoying the preview?
    Page 1 of 1