Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vithi Pichai
Vithi Pichai
Vithi Pichai
Ebook196 pages1 hour

Vithi Pichai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465452
Vithi Pichai

Read more from Devibala

Related to Vithi Pichai

Related ebooks

Reviews for Vithi Pichai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vithi Pichai - Devibala

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    ஆசிரியர் அறை

    வாங்க, பேசலாம்!

    கடந்த ‘குடும்ப நாவ’லில் வெளிவந்த ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ நாவலுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பாமர வாசகன் முதல் அறிவுசார் இலக்கிய நேசர்கள் வரை வரவேற்பை வாரி வழங்கிவிட்டார்கள்.

    தரமான தமிழ் ‘இந்து’ நாளிதழில் இதைப் பற்றிய தகவலை பெட்டிச் செய்தியாக வெளியிட்டதோடு என் படத்தையும் இடம் பெறச் செய்து என் செயலுக்கு சேதாரம் இல்லாத ஆதாரத்தைத் தந்தார்கள்.

    தீபாவளி தினத்தில் என் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவரான பாலகுமாரன் அவர்களுக்கு ஃபோன் செய்து தீபாவளி வாழ்த்து சொன்ன போது, அசோகா..! மாத நாவல் உலகத்தில் நீ ஒருத்தன்தான்டா வெற்றிகரமா நிக்கற. வாழ்த்துக்கள். அதோட, நீ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்த என் நாவலை தீபாவளி பரிசா தர்றேன். வேணுமா?

    இதைக் கேட்ட நான் திக்குக்காடி, அண்ணா... உங்க நாவலை வாசகர்கள் எப்படி ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களோ அதைப்போல் நானும் தவமிருக்கேன். இப்பவே வரட்டுமா?

    அசோகா.. இப்பத்தான் நாவலுக்கான கதைக் கருவை, மாவா உருவாக்கியிருக்கேன். ஒரு வாரம் காத்திரு. சூடா... அம்மா தர்ற இட்லி மாதிரி நானும் என் நாவலை டச்சுடத் தர்றேன். சந்தோஷமா...?"

    அண்ணா! இது என் பாக்கியம். நீங்க எனக்குப் பக்கத்தில் வயது மாற்றம் கருதாது தோழனாய் தோளில் கரம் போடும் உரிமையிருந்தாலும், நீங்க உங்க வாசகர்களுக்கு மிக உயர்ந்த கோபுரம் - அதை நான் புரிந்து கொள்ளாமல் இருப்பேனா...?

    இதுதான் பரவச பாராசாரி எழுத்தாளன் பாலகுமாரன் அவர்களுடன் பேசிய சம்பாசணை.

    1985 -ல் நான் முதன் முதலாக சந்தித்த போது கேட்ட அதே கணீர் சாரீரம். அதே எழுத்து வெறி.

    என்ன... அப்பா ‘வாடா ஒண்டிக்கு ஒண்டி’ என முஷ்டிய தூக்கிட்டு வருவார். இப்ப ‘டேய்... ஒண்டிக்கு ஒண்டி .. ஒத்தும வேணுன்டா. ஆடாத. காணாமப் போய்டுவ.’ என்று பரிந்துரை செய்கிறார். அப்ப அடங்காத புள்ளிமானாகத் தெரிந்தார். இப்ப அழகிய பக்திமானாகத் தெரிகிறார்.

    சார், நான் எழுத்தாளர் மணிமாலா.

    சொல்லுங்கம்மா.. உங்க பெயரைச் சொன்னாலே நீங்க எழுத்தாளர் என்று தெரியுமே. ஆமா... நான் பத்து வருஷத்துக்கு முன்பு கேட்ட நாவலை இப்பதான் அனுப்பியிருக்கீங்க. மகிழ்ச்சி.

    சார்...! என் நாவலை நீங்க பாத்துக்குவீங்க. இப்ப நான் கூப்பிட்டது, என் இனிய பாலகுமாரன் அய்யா உங்களுக்கு நாவல் தர்ற தகவலுக்கு நன்றி சொல்லத்தான். சீக்கிரம் அய்யா நாவலைத் தாங்க. படிக்க நானும் ஆவலாக இருக்கேன்.

    மகிழ்ச்சி.. மணிமாலா. உங்களை - நீங்க கல்லூரியில் படிக்கும் போது நேரில் பார்த்தது தான். அதன் பின் நம் தொடர்புகள் எல்லாமே தொலைபேசியில் தான். எப்படி இருக்கீங்க...?

    சார்...! நான் - என் கணவர் - குழந்தைகள் எல்லாரும் நலம்.. விரைவில் நானும் என் கணவரும் உங்களை சந்திக்க அலுவலகம் வர்றோம்.

    கண்டிப்பா வாங்க.. வாழ்த்துக்கள்...

    வாசகர்களே..! உங்களுக்கு வணக்கங்கள்.

    அன்புடன்,

    ஜி.அசோகன்.

    சிலசமயங்களில் எதிர்பாராத மனிதர் ஒருவர், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத ஆச்சரியங்களை நம் வாழ்க்கையில் நிகழ்த்திவிட்டுப் போய்விடுவார். அந்த ஆச்சரியங்கள் மட்டும் நம் மனதைவிட்டு நீங்கவே நீங்காது.

    அப்படித்தான் ராஜன் பி.தேவ்.

    ஒரு வில்லன் நடிகர். மலையாளத்தில் கீர்த்தி பெற்றவர். கிட்டத்தட்ட நூறு படங்கள் நடித்தவர் என எண்ணுகிறேன். இவரைச் சட்டென்று நினைவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றால் ‘சூரியன்’ படத்தில் வெத்தலைப் பெட்டியைக் கையில் வைத்துக் கொண்டு, எந்நேரமும் ‘நாசமாய்ப் போக’ எனப் பேசிக்கொண்டு, கூப்புக் கவுண்டராக நடித்திருப்பார். இவர், நான் உதவிஇயக்குநராக ‘வசந்தகாலப் பறவை’ படத்தில் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமானார்.

    இல்லை, நான் அவருக்கு அறிமுகமானேன். அந்தப் படத்தில்தான் தமிழ்ப்பட உலகுக்கு வில்லனாக அறிமுகமாகிறார் ராஜன் பி.தேவ். ‘பிராம்ட்டிங்’ (வசனத்தை ஸைடில் உள்ள நடிகர்களுக்கு எடுத்துக் கொடுத்துப் பே"தல்) தெரியாமல் நடிப்பதில் வல்லுநர்.

    இவர், நான் இயக்குநராக அறிமுகமான ‘மகாபிரபு’ படத்தில் மெயின் வில்லன். ஏற்கனவே படம் பல பிரச்னைகளில் வளர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு வந்துவிட்டது. ஆனால், மெயின் வில்லன் ராஜன் பி.தேவ் தேதிதான் இல்லை. அவரது தேதிகள் இல்லையென்றால் படம் முடியாது.

    அப்போது, கேரளாவில் ஆலப்புழா பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் ஒரு மலையாளப் பட ஷூட்டிங்கில் அவர் இருந்தார். நானும் அப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஜெயசீலனும், கிடைத்த ரெயிலில் ஏறி, பெர்த் கிடைக்காததால் தூங்கியும், தூங்காமலும் காலையில் ராஜன் பி.தேவ் அவர்கள் இருந்த கேரள கிராமத்தை அடைந்தோம்.

    ஏற்கனவே, நாங்கள் வருகிறோம் எனக் கூறியிருந்ததால், அவர் தங்கியிருந்த ஓட்டலில், ரூம் ஏற்பாடு செய்திருந்தார். அங்கே குளித்து முடித்து, அவர் நடித்துக் கொண்டிருந்த சூட்டிங் ஸ்பாட் போனோம். அவ்வளவு பிசியான நடிகர், அன்று முழுக்க எங்கள் படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக, அவர் தேதி ஒதுக்கியிருந்த அத்தனை கம்பெனிகளுக்கும் போனில் பேசிப்பேசி, தேதிகளை எங்களுக்காக ஒதுக்கி வைத்திருந்தார்.

    நான் தொண்டை கம்ம, நன்றி சார். உங்களுக்குச் சேரவேண்டிய பணம்கூட இன்னும் தரல. ஆனால், எனக்காக டேட்ஸ் ஒதுக்கிச் சிரமப்பட்டீங்களே என்றேன்.

    இல்ல சார். இவ்வளவு தூரம் என்னை நம்பி அங்கிருந்து வந்திருக்கீங்க. ஏன்? முதல் படம் உங்களுக்கு. உங்க மன எந்த நிலையில் இருக்கும்னு எனக்குத் தெரியும். போய் ஷூட்டிங்கை முடிங்க" எனக்கூறி, ரயில் நிலையம் வரை அவர் காரிலேயே வந்து இறக்கி விட்டுச் சென்றார்.

    அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரிடம் அன்று நான் கற்றுக்கொண்ட இந்த நல்ல விஷயத்தை இன்றும் நான் நடிகனாகிய மாறிய படங்களில் பின்பற்றுகிறேன். இவர் இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும், இவரைப்போன்ற ஆட்களால்தான் சினிமா இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

    சாப்பாட்டு விஷயத்தில் நான் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை.

    அந்தக் கடையில் அதை வாங்கு, இந்தக் கடையில் இதை வாங்கு என, தயாரிப்பு உதவியாளர்களிடம் உணவுக்கு ஆர்டர் பண்ணி தொந்தரவு கொடுப்பதில்லை. ஒரு இயக்குநராகவோ, நடிகராகவோ நான் கேட்டால் கிடைக்கும். ஆனால் சொல்வதில்லை. அதற்கும் ராஜன் பி.தேவ்தான் காரணம்.

    இன்றும் அப்பெரும் மனிதர் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறார். அவரிடம் ஒரு தனி சிறப்பம்சம் கண்டேன். அவர் பரபரப்பான வில்லனாக வலம்வரும் சமயம். எனது படமான ‘மகா பிரபு’-வில் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு இரவில் படப்பிடிப்பில் யாவரும் மும்முரமாயிருந்த வேளை. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தபோது

    Enjoying the preview?
    Page 1 of 1