Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaira Kammal
Vaira Kammal
Vaira Kammal
Ebook143 pages43 minutes

Vaira Kammal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465452
Vaira Kammal

Read more from Devibala

Related to Vaira Kammal

Related ebooks

Reviews for Vaira Kammal

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaira Kammal - Devibala

    17

    1

    பிள்ளை வீட்டாருக்கு நந்தினியைப் பிடித்து விட்டது! நந்தினி வந்து காபி கொடுத்து நமஸ்கரித்தது அவர்களது பார்வையில் ஒரு சந்தோஷம் தெரிந்தது!

    சரத் அம்மாவைப் பார்த்தான்! அம்மாவின் கண்களில் ஒரு மலர்ச்சி!

    நந்தினி அழகான பெண்! நல்ல கலர்! அளவான உடம்பு! பெரிய கண்கள்! களையான முகம். இத்தனைக்கும் சாதுவான பெண் என்பது பார்க்கும் போதே தெரிந்து விடும்!

    நன்றாக சமையல் செய்வாள்! வீட்டு வேலைகளை கச்சிதமாக செய்வாள்! உழைக்கத் தயங்க மாட்டாள்!

    பள்ளிக்கூட படிப்புக்கு மேல் போகவில்லை! அதனால் உத்யோகம் பார்க்கும் தகுதியை இழந்து விட்டாள்! ஒரு நல்ல குடும்பத் தலைவிக்குள்ள சகல தகுதிகளும் உண்டு!

    சிறுவயதில் அம்மாவை இழந்து விட்டதால் அந்தக் குடும்பத்தின் பொறுப்பு முழுக்க நந்தினிக்கு வந்து விட்டது!

    அப்பா சந்திரன் தனியாரில் வேலை! பிரச்சனையில்லாத மனிதர்! இரண்டே பெண்கள்! மூத்தவள் நந்தினி! இப்போது வயது இருப்பத்திஏழு! அடுத்தவள் சாந்தினி! துடுதுடுப்பான பெண்! கம்ப்யூட்டர் கற்று, இன்று கம்பெனி ஒன்றில் இருபதாயிரம் சம்பளத்துக்கு வேலை. நந்தினி அளவுக்கு அழகோ, நிறமோ இல்லாத பெண்! சுமாரான அழகுதான்! ஆனால் அசாத்திய புத்தி! அப்பாவுக்கு பண விஷயங்களில் சரிசமமாக கை கொடுப்பவள்!

    இரண்டு வருடங்களாக உத்யோகம் பார்த்து அந்தக் குடும்பத்தை நிமிர்த்தி நிறுத்தியவள்!

    இதோ நந்தினிக்கு வரன் வந்து விட்டது!

    பார்க்க வந்திருக்கும் சரத்துக்கு ரயில்வேயில் உத்யோகம்! நல்ல சம்பளம்! அப்பா பள்ளிக்கூட ஆசிரியர்! அம்மாவுக்கு தனியார் வங்கியில் வேலை! சரத்தின் அண்ணன் டெல்லியில் குடும்பத்தோடு! தம்பி உள்ளூர் கல்லூரியில் கடைசி வருஷம் படிக்கும் மாணவன்!

    வசதியான குடும்பம். சொந்த வீடு - கார் என எல்லாம் உண்டு! ஜாதகம் பார்த்துப் பொருந்த இதோ பெண் பார்க்க வந்து விட்டார்கள்!

    சரத்துக்கு பட்டதாரியாக, சம்பாதிக்கும் பெண் மனைவியாக வேண்டும் என்ற எண்ணம்!

    அங்கே அம்மா இந்திரா வைத்ததுதான் சட்டம்!

    வேண்டாம்! நானும் வேலைக்குப் போறேன்! வந்தவளும் போயிட்டா, வீட்டை யாரு கவனிக்கறது?

    அப்பா சுப்ரமணி குறுக்கிட்டு, ஏண்டீ, இது அவனோட வாழ்க்கை! அவனோட விருப்பத்தை முதல்ல கேளு!

    சரிங்க! வீட்டு நிர்வாகம்னு ஒண்ணு இருக்கே! அதை யாரு பாக்கறது?

    இத்தனை நாளைக்கு அது நடக்கலையா?

    இல்லைனு நான் சொல்லலை. ஆனா வீட்டையும் கவனிச்சிட்டு, வேலைக்கும் போக நான் படற கஷ்டம் கொஞ்சமில்லை! புரியுதா உங்களுக்கு?

    சரி! நீ வேலையை ராஜினாமா பண்ணிட்டு வீட்ல இரு! மருமகள் வேலைக்குப் போகட்டும்!

    எதுக்கு? எனக்கு இன்னும் எட்டு வருஷங்கள் சர்வீஸ் இருக்கு! கை நிறைய சம்பளம். ஏன் விடணும்? நான் ஒருக்காலும் ராஜினாமா பண்ணமாட்டேன்!

    அம்மா, அப்பாவை விட்டாலும் விடுவாங்க! வேலையை விடமாட்டாங்க!

    சின்னவன் பரத் விமர்சிக்க,

    ஆமாண்டா! இப்பல்லாம் பொம்பளைக்கு புருஷனை விட உத்யோகம் தான் முக்கியம் - பாதுகாப்பும் கூட!

    அப்படீன்னா வரப் போற அண்ணிக்கு மட்டும் அது வேண்டாமா?

    அப்படி கேளுடா!

    இதப்பாருடா! வேலைக்குப் போய் பழகின பொண்களால விட முடியாது! அந்தப் பணமும் குடும்பத்துல கமிட் ஆயிடும்! ஆனா ஆரம்பம் முதலே அந்தப் பெண் வேலைக்குப் போகாம இருந்தா, அதுவும் பழகிடும் புரியுதா?

    சரிம்மா! இது அண்ணனோட வாழ்க்கை! அவன் முடிவெடுக்கட்டும்!

    அவனுக்கு எது நல்லது, எது கெட்டதுனு எனக்குத் தெரியும்டா! நான் பெத்த மூணு புள்ளைங்கள்ள என் பேச்சை தட்டாம கேக்கறவன் சரத் ஒருத்தன்தான்! மூத்தவன் பொண்டாட்டி தாசன்! நீ அடங்கமாட்டே!

    ஆம்! அது நிஜம்தான்!

    சரத் அப்பாவிதான். யாரையும் புண்படுத்தமாட்டான்! ஓங்கிப் பேசமாட்டான்! சண்டை சச்சரவு அறவே பிடிக்காது! அதிகம் பேசமாட்டான்! தானுண்டு தன் வேலையுண்டு என்ற ரகம்!

    அம்மாவிடம் அதிக பட்ச பாசம்!

    அம்மா கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்!

    ‘அம்மாக் கோண்டு’ என்ற பட்டப் பெயருக்கு சொந்தக்காரன்! சொந்தக் கருத்துகள் இருந்தாலும், இந்திரா அதை எதிர்த்தால், மறுபேச்சு பேசமாட்டான்!

    இதோ கல்யாண சங்கதியிலும் அதுதான்!

    பரத்துக்கு கடுப்பு!

    அண்ணே! வாழப் போறவன் நீ! என்னிக்கும் பெரியவங்க கூடத்தான் இருக்கப் போறமா? இது நம்ம குடும்பம்! படிச்சு, கை நிறைய சம்பாதிச்சா, உனக்குத் தானே நல்லது? டெல்லில அண்ணி வேலைக்குப் போகலையா? அண்ணன் குடும்பம் செழிப்பா இல்லையா? உனக்கும் அதெல்லாம் வேண்டாமா? சொல்லு!

    சரத்துக்கும் அந்த ஆசைகள் எல்லாம் உண்டு! எதிர்க்கத் தெம்பில்லை!

    இந்திரா கை வழக்கம் போல ஓங்கி விட்டது!

    இதோ வரன் பார்த்து பெண் பார்க்கும் நிலைக்கு வந்தாகிவிட்டது! இங்கும் இந்திராவின் முடிவுதான்!

    சரத்திடம் தனியாக இந்திரா பொண்ணு லட்சணமா, குடும்ப பாங்கா அடக்கமா இருக்கா! தரகரும் இந்தக் குடும்பத்தைப் பற்றி நிறையச் சொன்னார்! எனக்குப் புடிச்சிருக்கு!

    சரத் பேசவில்லை!

    உனக்கும் புடிச்சிருக்கும்னு நினைக்கறேன்! நந்தினியை வேண்டாம்ன்னு எந்த ஒரு ஆண் மகனும் சொல்ல மாட்டான்!

    புடிச்சிருக்கும்மா!

    இந்திரா திரும்பினாள்!

    இதப்பாருங்க! நாங்க மூடி மறைக்க மாட்டோம்! எதையும் தள்ளியும் போட மாட்டோம்! எங்களுக்கு நந்தினியை ரொம்ப பிடிச்சிருக்கு!

    அப்பா சுப்ரமணி குறுக்கிட்டார்.

    உங்க மகளையும் கேட்டுக்குங்க!

    நந்தினி வெட்கத்துடன் சிரித்து மெள்ளத்

    Enjoying the preview?
    Page 1 of 1