Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatraluththa Mandalam
Kaatraluththa Mandalam
Kaatraluththa Mandalam
Ebook137 pages52 minutes

Kaatraluththa Mandalam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465438
Kaatraluththa Mandalam

Read more from Devibala

Related to Kaatraluththa Mandalam

Related ebooks

Reviews for Kaatraluththa Mandalam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatraluththa Mandalam - Devibala

    13

    1

    குளித்து முடிந்து அலுவலகம் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தாள் திவ்யா!

    அம்மா! டிபன் ரெடியா?

    அம்மா பானுமதி உள்ளே வந்தாள்!

    நீ எங்கே போறே?

    இதென்ன கேள்வி? வழக்கம் போல ஆபீசுக்குத்தான்! தூங்கிப் போயிட்டதால லேட்டு!

    பைத்தியமா ஒனக்கு? நேத்திக்கு நான் என்ன சொன்னேன் உங்கிட்ட?

    என்ன சொன்னே?

    திவ்யா! உனக்கு ஞாபக மறதியா? இல்லை, வேணும்னே செய்யறியா? உன்னை இன்னிக்கு பெண் பார்க்க வர்றாங்க, லீவு போடுனு சொன்னேனா இல்லையா?

    நான்தான் அதை வேண்டாம்னு நேத்திக்கே சொல்லிட்டேனே!

    அப்பா கிரிதர் உள்ளே வந்தார்.

    என்ன பிரச்னை?

    இல்லீங்க! இது எங்களுக்குள்ளே வர்ற வழக்கமான மோதல்! -- பானுமதி மழுப்ப,

    இல்லைப்பா! பெண் பார்க்க யாரும் வர வேண்டாம்! எனக்கு ஆபீஸ்ல முக்கிய வேலை இருக்கு!

    விளையாடறியா திவ்யா? அவங்க பெரிய இடம்! பையன் சகல தகுதிகளும் உள்ளவர்! பயங்கர பிஸி! காலைல 10 மணிக்கு வர்றாங்க. அவங்க நேரத்தை வீணடிச்சு, என்னையும் அவமானப்படச் சொல்றியா? நீ இங்கே இருந்தாகணும்! இல்லைனா நடக்கறதே வேற!

    அவர் குரல் உயர்ந்தது!

    அப்பா! வாழப் போறவ நான்! என் மனசுக்குப் புடிக்கணும்! இந்த மாதிரி கட்டாயப்படுத்தறது சரியில்லை!

    பானு! எடுத்துச் சொல்லி, அவளை தயார்படுத்து! நோ மோர் ஆர்க்யூமெண்ட்ஸ்!

    கிரிதர் வெளியேற,

    இதப்பாரு! உங்கப்பா கோபம் உனக்குத் தெரியுமில்லையா? ஜாதகம் பத்துப் பொருத்தமும் பிரமாதம்! பையனுக்கு வேலை லண்டன்ல. ஏகப்பட்ட சொத்துகள். ஒரே பையன்! பாக்கவும் களையா இருக்கான். எந்த ஒரு குறையும் இல்லை! புரியுதா?

    நான் ஒப்புக்க வேண்டாமா? நான் அடிமையா உங்களுக்கு?

    உளறிட்டு நிக்காதே! அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கணும். புரியுதா? எங்க கடமை அது! வாயை மூடிட்டு ட்ரஸ் பண்ணிக்கோ பளிச்சுனு! எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு!

    அம்மா உள்ளே போய் விட,

    திவ்யாவுக்கு உடம்பெல்லாம் சூடானது!

    ‘என்ன நினைப்பு இவர்கள் மனதில? சகலத்துக்கும் நான் தலையாட்ட வேண்டுமா? எனக்குனு சொந்தக் கருத்தே இருக்கக் கூடாதா? இவங்க ஆட்டி வச்சு கூத்து பாக்க நான் பொம்மையா?’

    ஆவேசம் பொங்கியது!

    உடனே செல்போனை எடுத்து நம்பர்களை ஒற்றினாள்.

    அடுத்த நொடியில் எதிர்முனை உயிர்த்தது!

    சொல்லும்மா திவ்யா!

    அத்தே! நான் உடனே உங்களைப் பாக்கணும்!

    வாயேன்! நான் ஆபீசுக்கு புறப்பட்டாச்சு! நீ நேரா எங்க ஆபீசுக்கு வந்துர்றியா? என்ன பிரச்னை?

    திவ்யா அழத் தொடங்கினாள்.

    ஏண்டீ அழற? என்னம்மா ஆச்சு?

    அத்தே! காலைல பத்து மணிக்கு என்னைப் பொண்ணு பாக்க வர்றாங்க! எனக்கு சுத்தமா இஷ்டமில்லை. வெளிநாட்டு வரன் வேற! அப்பாவோட மூர்க்க சுபாவம் உனக்குத் தெரியுமே! வேண்டாம்னு நேத்து சொல்லியும், இன்னிக்கு அதையே செய்யறாங்க அத்தே! நான் என்ன செய்யட்டும்?

    நான் சொல்றபடி செய்யறியா?

    சொல்லு அத்தே!

    அவங்க வரட்டும்! உன்னைப் பாக்கட்டும். நீ அவனைப் பிடிக்கலைனு சொல்லிடு!

    அது கஷ்டம் அத்தே! அப்பா ஆடற ஆட்டத்துக்கு அந்த நேரத்துல ஈடு குடுக்க முடியாது!

    இல்லைம்மா! அவன் உன்கூட தனியாப் பேசணும்னு நிச்சயமா சொல்லுவான். அப்ப, அவன்கிட்ட சொல்லிடு!

    அவன் தனியாப் பேசலைனா?

    நீ பேசணும்னு சொல்லு!

    அது நல்லாருக்குமா அத்தே?

    வேற என்ன செய்யலாம்னு சொல்ற?

    பெண் பாக்க அவங்க வரும்போது, நான் இங்கே இருக்கக்கூடாது அத்தே!

    சரி செய்! உங்கப்பாவை சமாளிக்க உன்னால முடியுமா?

    முடியும் அத்தே!

    நான் அங்கே வரணுமா?

    தேவைப்பட்டா, கூப்பிடறேன் அத்தே! எனக்கு உன்னைவிட்டா யாரத்தே இருக்காங்க?

    ரிசீவரை வைத்தாள்! ஒரு நொடி யோசித்தாள்!

    திடீரென ‘அம்மா’ என்று திவ்யா அலற, அந்தக் கூச்சலில் இருவரும் ஓடி வந்தார்கள்.

    வயித்துவலி தாங்கலை எனக்கு!

    வயிற்றைப் பிடித்துக்கொண்டு திவ்யா துடிக்க,

    திடீர்னு என்னடீ ஆச்சு? கொஞ்சம் முன்னால நல்லாத்தானே இருந்தே?

    பானு! அவ ட்ராமா பண்றாளா?

    கண்ணீருடன் நிமிர்ந்தாள் திவ்யா!

    நான் செத்தாக்கூட நீங்க கவலைப்படமாட்டீங்களாப்பா? உங்களுக்கு உங்க பிடிவாதம் முக்கியமா? அம்மா! தாங்க முடியலியே! அய்யோ! சரி! அவங்க வரட்டும். வலி தாங்காம நான் கூச்சல் போட்டா, கோவப்படாதீ....ங்....க...! கண்கள் செருக திவ்யா கீழே விழ,

    என்னங்க! அந்த மூணு நாட்கள் நெருங்கும்போது, இந்தக் கஷ்டம் வரும்!

    இதை நீ முன்னாலயே சொல்லித் தொலைக்க மாட்டியா? அவங்க வேற வர்றாங்க!

    குழந்தை மயங்கிட்டா. உடனே டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும். ஆட்டோவைக் கூப்பிடுங்க!

    அப்பா கிரிதர் வாசலுக்கு ஓடினார்!

    ஆட்டோ வந்தது! கதவைப் பூட்டிக்கொண்டு மூவரும் ஆட்டோவில் ஏற, அது புறப்பட்டது!

    இருபது நிமிடங்களில் லேடி டாக்டரின் முன்பு இருந்தார்கள்.

    திவ்யா துடித்தாள்!

    உள்ளே லேடி டாக்டர் அழைத்துச் செல்ல,

    டாக்டரை கும்பிட்டாள். விவரம் சொன்னாள்!

    நீங்கதான் உதவணும் டாக்டர். மன்னிச்சிடுங்க!

    சரி... பாத்துக்கறேன்!

    வெளியே வந்தாள்!

    இன்னிக்கு ஒரு நாள் இங்கே இருக்கட்டும்! வலி அதிகமா இருக்கு! டெஸ்ட் எடுக்கணும்!

    சரி டாக்டர்!

    கிரிதர், பானுமதி வெளியே வந்தார்கள்.

    ஏதாவது சொல்லி, தள்ளிப் போடுங்க!

    "பெரிய இடம்! நடுவுல ஒரு மணி நேரம்கூட இல்லை. என் மானம்

    Enjoying the preview?
    Page 1 of 1