Kaaladi Mann
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Amma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Charumma Rating: 0 out of 5 stars0 ratingsSeetha Rating: 0 out of 5 stars0 ratingsAssai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Azhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsSu(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsVeliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Sokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Vizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Seerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Un Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Oru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Indru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaaladi Mann
Related ebooks
Ennai Thedathey! Rating: 0 out of 5 stars0 ratingsPeraasai Rating: 0 out of 5 stars0 ratingsMela Satham! Rating: 0 out of 5 stars0 ratingsIchai Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Iru Vizhi Kavithai! Rating: 0 out of 5 stars0 ratingsAvathum Pennaley...! Rating: 0 out of 5 stars0 ratingsNaanal Rating: 0 out of 5 stars0 ratingsPadma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsPuli Vaal Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsGayathri Manthiram Rating: 0 out of 5 stars0 ratingsThoppil Thani Maram Rating: 0 out of 5 stars0 ratingsSu(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsVetri... 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKetten Thanthaai Rating: 5 out of 5 stars5/5Kurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsNathikkaraiyoram Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Vaa Rating: 0 out of 5 stars0 ratingsThalattuthe Vaanam! Rating: 0 out of 5 stars0 ratingsதான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsThapicha Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsNee Eppa Varuvey? Rating: 0 out of 5 stars0 ratingsKedayam Rating: 1 out of 5 stars1/5பின்னர் அறிவிக்கப்படும்! Rating: 0 out of 5 stars0 ratingsUlkuthu Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaaladi Mann
0 ratings0 reviews
Book preview
Kaaladi Mann - Devibala
14
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு, பொதுவாக மக்களை மட்டும் பாதிக்கவில்லை! ஒரு அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பத்தையே சுக்கு நூறாக உடைத்து விட்ட நிஜம்தான் இந்தக் கதை.
1
சிவநேசன் தன் உழைப்பால் முன்னுக்கு வந்தவர்! ஆரம்பம் முதலே கஷ்டங்களை நிறைய அனுபவித்த காரணமாக காசில் கஞ்சத்தனம் நிறைய உண்டு! சுலபமாக யாருக்கும் தந்துவிட மாட்டார். அதே நேரம் மற்றவர் பணத்துக்கு ஆசையும் படமாட்டார். தன் கடமைகளை நிறைவேற்றிய மனிதர்!
ரயில்வேயில் உத்யோகம். ஆரம்ப காலத்தில் சொற்ப சம்பளம்! அவருக்கு மனைவியாக வந்தவள் மீனாட்சி!
இவரைவிட வசதி குறைந்த குடும்பம். பெரிதாக செலவழிக்காமல் ரொம்ப சுமாரான கல்யாணம்.
இவருடன் வாழத் தொடங்கி மூன்று குழந்தைகளுக்கு மீனாட்சி தாயானாள்.
இரண்டு பெண்கள் - கடைசியாய் ஒரு பையன்!
மூன்று பேரையும் படிக்க வைத்து, இரண்டு பெண்களையும் கட்டிக் கொடுத்து, நாலு பிரசவம் பார்த்து, சம்சார சாகரத்தைக் கடப்பதற்குள் மூச்சுத் திணறி விட்டது.
அதனால் சிவநேசனுக்கு சொந்த வீடு கட்டும் வாய்ப்பே இல்லை! அதற்கான வசதிகளும் இல்லை!
மகன் பிரசாத்தை இன்ஜினீயரிங் படிக்க வைத்து விட்டார்.
அவனுக்கொரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து, பெரிய சம்பளமும் வாய்க்க, கடந்த நாலு வருடங்களில் கடன் எல்லாம் அடைபட்டு குடும்பத்தில் நல்ல காற்று வீசத் தொடங்கி விட்டது!
சொந்த வீடு கட்டலாம் என்ற ஆசை பெரிதாக தலைதூக்கத் தொடங்கி விட்டது.
சிவநேசனுக்கு இன்னும் ஒரு வருஷம் சர்வீஸ்!
வீட்டு வசதிகள் பெருகி விட்டது!
பிரசாத்துக்கு இருபத்தி ஏழு வயசு! கல்யாணம் முடித்து விடலாம் என சீரியஸாக மீனாட்சி வரன் தேடத் தொடங்கி விட்டாள்.
உறவுக்காரர்கள் போட்டி போடத் தொடங்க... ஜாதகங்களை மீனாட்சி அலசும் நேரம், பிரசாத் அதற்கு அவசியமில்லை என்று தன்னுடன் வேலை பார்க்கும் அர்ச்சனாவை வீட்டுக்கே அழைத்து வந்து விட்டான்.
கடந்த ஆறு மாதங்களாக அவளுடன் பழகி, அதைக் காதலாக மாற்றி, இருவரும் நிறைய பேசி, இனி வெளியே சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.
அழைத்தே வந்து விட்டான்!
அர்ச்சனா, பார்த்தவுடன் பழகத் தொடங்கும் கலகலப்பான பெண்! பெற்றோரிடம் அறிமுகப் படுத்தினான்.
பிரசாத்! எதற்கும் தயங்காத குணாதிசயம். மனதில் பட்டதை யோசிக்காமல் படக்கென சொல்லி விடுவான்!
அழைத்து வந்து அறிமுகம் செய்ததுமே காதலை சொல்லி விட்டான்!
ஜாதி, உட்பிரிவு போன்றவற்றை மீனாட்சி கேட்க, அவள் வேறு ஜாதிப் பெண் எனத் தெரிய வர மீனாட்சி முகம் மாறிவிட்டது. அர்ச்சனா காபி குடித்தாள்; புறப்பட்டு விட்டாள்.
பிரசாத் அவளை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான்.
எப்படீடா இந்த முடிவுக்கு வந்தே? நம்மோட இந்தக் குடும்பத்துல ஜாதி தாண்டி யாருக்கும் கல்யாணம் நடக்கலையே!
- அம்மா புலம்ப,
இப்பிடி திடீர்னு வந்து அறிமுகப்படுத்தினா எப்படி! முன்கூட்டியே சொல்லிட்டு கூட்டிட்டு வந்திருக்கலாமே!
- இது அப்பா!
விவாதம் தொடங்கி விட்டது!
அவ குடும்பம் எப்படி?
அப்பா பேங்க்ல உத்யோகம்! அம்மா பள்ளிக்கூட டீச்சர்! இவளும், இவ தங்கச்சியும். தங்கச்சி படிக்கறா! வசதிக்குக் குறைச்சல் இல்லை! அப்பாவுக்கு சொந்த வீடு! இவளும் என்னை மாதிரி பி.ஏ. கம்ப்யூட்டர் சயின்ஸ்! எனக்கு சரி நிகரா மாசம் அறுபதாயிரம் சம்பளம் வாங்கறா! கார் ஓட்டுவா! பாட்டுப் பாடுவா! தைரியமான பெண்! புத்திசாலி!
அடுக்கிக் கொண்டே போனான்!
எல்லாம் சரியா இருக்குடா! ஜாதி உதைக்குதே!
நெத்தில எழுதி ஒட்டிக்கப் போறியா? ஜாதி தாண்டி கல்யாணங்கள் நடக்கலையா? நாங்க பழகறோம்! என் மனசுக்குப் புடிச்சிருக்கு! வேற பாக்க வேண்டாம். இது என் வாழ்க்கை! நான்தான் முடிவெடுக்கணும்!
முகத்தில் அடித்த மாதிரி சொல்லி விட்டான்.
சிவநேசன், மீனாட்சி - இருவருமே ஆடிப் போனார்கள்.
இரண்டு பேருக்குமே அது பிடிக்கவில்லை!
சிவநேசன் அதிகம் பேச மாட்டார்!
மீனாட்சியால் அடக்கிக் கொள்ள முடியாது! உடைத்து விடுவாள். அவளது குணம்தான் பிரசாத்துக்கும்!
பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம்? நீயே முடிவெடுத்தா எங்களுக்கென்ன மரியாதை?
அம்மா! நான் படிச்சவன்! பெரிய வேலைல இருக்கேன். பச்சக் குழந்தை இல்லை! என் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கற உரிமைகூட எனக்கு இல்லையா?
இருக்குடா! அப்ப எங்களுக்கு உன்கிட்ட எந்த ஒரு உரிமையும் இல்லையா?
நீங்க பெத்தபிள்ளை நான் சந்தோஷமா, மனசுக்குப் புடிச்ச வாழ்க்கையை வாழணும்னு நீங்க நெனைச்சா, என் பேச்சுக்கு மரியாதை இருக்கும்! உங்க விருப்பத்துக்கு என்னை நீங்க கட்டாயப்படுத்தினா, கசப்புதான் மிஞ்சும்! இனி நான் பேச எதுவும் இல்லை!
உள்ளே போய் விட்டான்!
என்னங்க இப்படி பேசறான்!
மீனாட்சி! உன் பிள்ளை முடிவெடுத்துட்டா மாத்திக்க மாட்டான். குழந்தைங்க காலம் தொட்டே அவனோட குணம்தான் நமக்குத் தெரியுமே!
அதனால?
நாம மறுத்தாலும் அவன் கல்யாணம் நடக்கும்! நம்ம மரியாதை சரியும்! தனியாப் போவான்! அவனைப் பிரிஞ்சு வாழ உனக்கு சம்மதமா?
ஏன் இப்பிடி பேசறீங்க?
வேற வழி? அதுதானே நிஜம்? வளர்ந்த பிள்ளைகளை ரொம்பக் கட்டுப்படுத்தறது சரியில்லை! நாமும் விவேகமா யோசிக்கணும் மீனாட்சி!
நம்ம பொண்ணுங்ககிட்ட பேச வேண்டாமா! மாப்பிள்ளைங்க என்ன நினைப்பாங்க?
பொண்ணுங்களுக்கு தெரியணும்னா நியாயம். மாப்பிள்ளைங்க இதுல நினைக்க என்ன இருக்கு?
நம்ம ஜாதியா இருந்தா பிரச்னை இல்லீங்க! அது இல்லைனு தெரிஞ்சா, சம்பந்திங்க, நம்ம உறவுக்காரங்க எல்லாரும் கேள்வி கேப்பாங்களே!
"அவங்க யாருடி நம்மைக் கேள்வி