Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidiyattum Vidaikidaikkum
Vidiyattum Vidaikidaikkum
Vidiyattum Vidaikidaikkum
Ebook314 pages1 hour

Vidiyattum Vidaikidaikkum

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vidiyattum Vidaikidaikkum

Read more from Rajeshkumar

Related to Vidiyattum Vidaikidaikkum

Related ebooks

Related categories

Reviews for Vidiyattum Vidaikidaikkum

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidiyattum Vidaikidaikkum - Rajeshkumar

    24

    1

    அந்த நீலவர்ண இண்டர்காம் டெலிபோன் ரிசீவர் ஓர் அழகான பெண்ணின் கொஞ்சலைப் போல் சிணுங்கிய போது — ராமராஜ் தன் கம்பெனி மானேஜரோடு — அந்த மாதத்திய கம்பெனி பாலன்ஸ் ஷீட்டைப் பற்றிக் கவலையாய்ப் பேசிக் கொண்டிருந்தான்.

    ராமராஜ் தீர்க்கமான உயரத்தில் — இருபத்தியேழு வயதில் - பவுடர் போடாத ஓர் இளம் சினிமா நடிகனைப் போல் இருந்தான். அந்த இளம் வயதிலேயே மானேஜிங் டைரக்டர் என்ற பதவி வலிய அவனைத் தேடி வந்ததற்குக் காரணம் அவனுடைய படிப்பு. அமெரிக்காவில் எம்.பி.ஏ.வை முடித்ததில் - அபாரமான கெட்டிக்காரத்தனத்தைக் காட்டியிருந்தான். ஆங்கிலம் அவனிடம் நாய்க்குட்டி மாதிரி பழகியிருந்தது. சொடுக்கு போட்டால் அது ஓடிவருகிற மாதிரி அவன் வாயைத் திறந்தால் - அந்த அந்நிய பாஷை அவனிடம் ஓடிவந்தது.

    எதிரே உட்கார்ந்திருந்த மானேஜரைப் பார்த்து சொன்னான் ராமராஜ், மிஸ்டர் நரசிம்மன்! போன் எனக்கு என்றால் யாருன்னு கேளுங்க. முக்கியமான நபர்களா இருந்தா மட்டும்... என்கிட்டே ரிசீவரைக் கொடுங்க.

    எஸ் ஸார்... - தலையாட்டி மானேஜர் இண்டர்காம் ரிசீவரை எடுத்து செவிமடுத்து - ராமராஜை ஏறிட்டார்.

    சார்... போன்ல உங்க மனைவி...

    ராமராஜ் அவரிடமிருந்து ரிசீவரை வாங்கி காதுக்குக் கொடுத்தபடி கேட்டான். என்ன ஜெயந்தி...?

    பிஸியா இருக்கீங்களா...?

    ஆமா...

    ரொம்ப முக்கியமான வேலையா...?

    அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை...

    கல்பனா கிளினிக் வரை வரமுடியுமா...

    என்ன விஷயம்...?

    வாங்களேன் சொல்றேன்...

    நீ இப்ப அங்கிருந்துதான் பேசிட்டிருக்கியா...?

    ஆமா...

    என்ன உடம்புக்கு...? காலையில் நான் ஆபீசுக்கு புறப்பட்டு வரும்போதுகூட நன்றாக இருந்தியே...

    ஏன்... திடீர்ன்னு உடம்புக்கு ஏதாவது வரக்கூடாதா... என்ன...? உங்களுக்கு ஆபீசுல வேலை முக்கியம்னா, அதைப் பாருங்க. பொண்டாட்டியைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா... கிளினிக்குக்கு வாங்க...

    இப்ப புறப்பட்டு வர்றேன்...

    வாங்க... வரவேற்பறையில் உங்களுக்காக காத்திட்டிருக்கிறேன். மறுமுனையில் ஜெயந்தி ரிசீவரை வைத்துவிட - ராமராஜும் ரிசீவரைச் சாத்திவிட்டு எழுந்தான்.

    மிஸ்டர் நரசிம்மன்! நான் கொஞ்சம் அவசரமா வெளியே போகணும். பாலன்ஸ் ஷீட்டைப் பத்தி சாயந்தரம் பேசிக்குவோம்...

    எஸ் சார்...

    ராமராஜ் மேஜையின் மேல் கிடந்த தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு யோசனையாய் கம்பெனி வராந்தாவில் நடந்து - போர்டிகோவுக்கு வந்து - தன் பியட் காருக்குள் நுழைந்து - அதன் தொண்டையில் சாவியை நுழைத்து - செரும வைத்து நகர்த்தினான்.

    ஜெயந்தியின் உடம்புக்கு என்ன...? திடீரென்று மருத்துவமனைக்குப் போகிற அளவுக்கு என்ன உடம்பு...?

    'காலையில் ஆபீசுக்கு புறப்பட்டு வரும்போது கூட நன்றாகத்தானே இருந்தாள்...?"

    மூளை விதவிதமாய் யோசித்துக் கொண்டிருக்க - கார் நகரப் போக்குவரத்து நெரிசலில் கசகசப்பாய் ஊர்ந்து - கல்பனா கிளினிக்கைத் தொட்டு அதன் விஸ்தாரமான போர்டிகோவுக்குள் நுழைந்து நின்றது.

    வரவேற்பறையில், ஆரஞ்சு நிற நாற்காலியில் சோர்வாய் உட்கார்ந்திருந்த ஜெயந்தி புன்னகையோடு எழுந்தாள். ராமராஜ் காரிலிருந்து இறங்கி அவளருகே போனான். பதற்றம் வழியும் குரலில் கேட்டான்.

    ஜெயந்தி! உன் உடம்புக்கு என்ன...?

    நீங்க டென்ஷன் படற அளவுக்கு ஒண்ணுமில்லை...

    "காய்ச்சலா...?'

    நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.

    அந்தப் பக்கமாய் போன - நர்ஸ் சிரித்தாள். பயப்படாதீங்க சார்... உங்க மனைவி கர்ப்பமா இல்லையான்னு தெரிஞ்சுக்கத்தான் வந்திருக்காங்க. சொன்ன நர்ஸ் நகர்ந்து போக - ராமராஜ் மலர்ந்தான்.

    "என்ன ஜெயந்தி... உண்மையாவா...?'

    ஜெயந்தியின் ரோஜா நிற முகம் - குங்குமம் பூசியது போல் சிவந்து போயிற்று. ஆமாங்க... காலையில எந்திரிச்சதிலிருந்து தலை சுற்றலா இருந்தது... நீங்க ஆபீஸ் புறப்பட்டுப் போகிற வரைக்கும் சமாளிச்சுட்டேன். அதுக்குப் பிறகு என்னால முடியலை. இரண்டு தடவை வாந்தி ஆனவுடனே சந்தேகம் வந்து, நாள் கணக்கு போட்டுப் பார்த்தேன். பத்து நாள் அதிகமாயிருந்தது. டாக்டர் கிட்டே உறுதி செய்துக்கலாம்னு - ஆட்டோ பிடிச்சு வந்தேன்...

    உறுதி செய்துட்டாங்களா?

    யூரின் டெஸ்டுக்கு போயிருக்கு. டாக்டர் இன்னும் பதினைஞ்சு நிமிடத்துல ரிசல்ட் சொல்றேன்னு சொல்லியிருக்கார்.... ரிசல்ட் என்னவாயிருக்குமோன்னு இதயம் படபடன்னு அடிச்சுக்குது. இந்த திரில்லிங்கான அனுபவத்தை நீங்களும் அனுபவிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதான் போன்ல கூப்பிட்டேன்...

    இருவரும் நாற்காலியில் சாய்ந்தார்கள்.

    ராமராஜ் ஆர்வமாய்க் கேட்டான்.

    பத்து நாள் தள்ளிப் போயிருக்கா...?

    ஆமா...

    அப்படீன்னா கர்ப்பம்தான்... இதுல சந்தேகம் வேறயா? தலைசுத்தலும் வாந்தியும் இருந்திருக்கு சந்தேகமே வேண்டாம். நீயும் நானும் அம்மா - அப்பா ஆகப்போறோம்...

    இருந்தாலும் எனக்கு...

    சந்தேகமே வேண்டாம்...

    கணவனின் கையைப் பற்றிக் கொண்டாள் ஜெயந்தி. நீங்க உடனே ஆபிசிலிருந்து வந்தது எனக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுங்களா... நான் நிஜமாகவே உண்டாயிருக்கேன்னு டாக்டர் சொல்லிட்டா, எனக்கு என்ன பரிசு தருவீங்க?

    சொல்லட்டுமா...? காதருகே கிசுகிசுத்தான் ராமராஜ்.

    ம்...

    சொன்ன பின்னாடி 'ச்சீ...! போங்க'ன்னு சொல்லக்கூடாது...?

    சொல்ல மாட்டேன்.

    என்ன பரிசு கொடுப்பேன் தெரியுமா...?

    என்னவாம்...?

    அடிவயித்துல 'பச், பச்'ன்னு நூத்தியொரு முத்தம்...

    ச்சீ போங்க...

    அவ்வளவு வேண்டாம்ன்னு சொல்றியா. வேணுமின்னா ஒரு பத்தைக் குறைச்சுக்கிறேன்....

    இந்தப் பரிசெல்லாம் எனக்கு வேண்டாம்....

    வேற என்ன வேணும்...? என் குழந்தையை சுமக்கப்போகிற இடுப்புக்கு ஒட்டியாணம் பண்ணிப் போடட்டுமா....?

    இந்த அளப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம்.

    அட... நிஜமாத்தான். டாக்டர் மட்டும் நீ கர்ப்பமாயிருக்கேன்னு சொல்லிடட்டும். ஒரு கிலோ தங்கம் வாங்கி உன்னோட முப்பத்திநாலு இஞ்ச் இடுப்புக்கு அழகா ஒட்டியாணம் செஞ்சு போடறேன்.

    நர்ஸ் எதிரே வந்து நின்றாள். ஜெயந்தியிடம் சொன்னாள்.

    டாக்டர் உங்களைக் கூப்பிட்டாங்க...

    இருவரும் எழுந்து டாக்டரம்மாவின் அறையை நோக்கிப் போனார்கள். என்னங்க... எனக்கு 'திக் திக்ன்னு இருக்கு. நமக்கு கல்யாணமான இந்த இரண்டு வருடத்துல இந்த மாசம் தான் பத்துநாள் தள்ளிப் போயிருக்கு. இது மட்டும் கர்ப்பம் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டா... இரண்டா உடைஞ்சு போயிடுவேன்.

    தைரியமா வா.

    என் கையைப் பிடிச்சிக்குங்க.

    இருவரும் டாக்டரம்மாவின் அறைக்குள் நுழைந்தார்கள். பிரிஸ்க்ரிப்சன் பேடில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த டாக்டர் மனோரஞ்சிதம் புன்னகையோடு நிமிர்ந்தார். என்ன ஜெயந்தி... அதுக்குள்ளே உன்னோட கணவருக்கும் போன் செய்து வரச் சொல்லிட்டியா?

    டாக்டர்! ரிசல்ட் என்ன?

    முதல்ல உட்காருங்க.

    உட்கார்ந்தார்கள். டாக்டரம்மா இரண்டு முழங்கைகளையும் மேசையின் மேல் ஊன்றிக்கொண்டு - பற்கள் அத்தனையும் காட்டி 'கர்ப்பம்தான்' என்றாள். ஜெயந்தி, பரவசமாக நன்றி... டாக்டர் என்றாள்.

    எனக்கு ஏம்மா நன்றி சொல்றே? உன்னோட கணவருக்குச் சொல்லு.

    போங்க டாக்டர்... வெட்கமாய் முறுவலித்துக் கொண்டே தன் கணவன் ராமராஜைப் பார்த்தாள். அவன் பர்சைப் பிரித்துக் கொண்டே சந்தோகக் குரலில் கேட்டான்.

    டாக்டர் உங்க பீஸ் என்ன?

    கன்சல்டேஷன், யூரின் டெஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து நூறு ரூபாய்.

    இந்தாங்க இருநூறு ரூபாய்! சந்தோஷமான செய்தியைச் சொன்னதுக்காக உங்களுக்கு நூறு ரூபாய் போனஸ்...

    பணத்தை வாங்கிக் கொண்டே டாக்டரம்மாள் சொன்னாள், ஜெயந்தியோட உடம்பு கொஞ்சம் அனிமிக்கா இருக்கு. காய்கறிகளையும், பழங்களையும் நிறைய சேர்த்துக்கணும். நான் எழுதித் தர்ற டானிக்கையும், மாத்திரைகளையும் ஒழுங்கா சாப்பிடணும்.

    சாப்பிட வைக்க நானாச்சு டாக்டர்.

    மாசத்துக்கு ஒரு தடவை செக்கப்புக்கு வரணும்.

    நான் கூட்டிட்டு வர்றேன் டாக்டர்.

    ஜெயந்தி மாடிப்படிகளில் வேகமா ஏர்றதோ, சட்டுன்னு உட்கார்றதோ, எழுந்திருக்கிறதோ நல்லதில்லை. நிறைய ஒய்வு வேணும்.

    என்ன ஜெயந்தி! டாக்டர் சொன்னதைக் கேட்டுக் கிட்டியா?

    ம்... ம்...

    என்ன ம்... ம்...? ஒழுங்கா நடந்து, ஒழுங்கா குழந்தையைப் பெத்துக் கொடுக்க வேண்டியது உன்னோட பொறுப்பு.

    சரிங்க வெட்கமாய் தலையாட்டி, உதடுகளைப் புன்னகையில் விரித்தாள் ஜெயந்தி.

    ***

    டாக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு - இருவரும் காருக்கு வந்தார்கள். ராம்ராஜ் காரை ஓட்ட, ஜெயந்தி அவனருகே உட்கார்ந்து தோளில் சாய்ந்து கொண்டாள்.

    என்னங்க உங்களுக்கு சந்தோசம்தானே?

    பின்னே?

    எனக்கு ஜாதிமல்லிப் பூவும் - லாலா கடையில் முந்திரி அல்வாவும் வேணும்.

    போகும்போது வாங்கிட்டு போயிடலாம். பத்து முழம் பூவும் ஒரு கிலோ அல்வாவும் போதுமா?

    உங்களுக்குத்தான் சந்தோசம் வந்தால், தலை கால் புரியாதே.

    காரை ஒரு வளைவில் திருப்பினான் ராம்ராஜ். ஜெயந்தி அவன் தோளோடு தன் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டு கேட்டாள்.

    நமக்கு என்ன குழந்தை பிறக்கும்னு நினைக்கிறீங்க? ஆணா.... பெண்ணா?

    காரின் வேகத்தை சட்டென்று குறைத்து - ஆள் நடமாட்டமற்ற அந்த ரோட்டில் - ஒரு மரத்துக்கு கீழே கொண்டுபோய் காரை நிறுத்தினான் ராம்ராஜ்.

    என்னங்க காரை நிறுத்திட்டீங்க?

    அவன் பதில் பேசாமல் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு ஜெயந்தியை ஏறிட்டான்.

    என்ன கேட்டே?

    காரை ஏன் நிறுத்திட்டீங்கன்னு கேட்டேன்.

    அதுக்கு முன்னாடி ஏதோ கேள்வி கேட்டியே?

    ஓ...! அதுவா? நமக்கு என்ன குழந்தை பிறக்கும்ன்னு கேட்டேன்...

    குழந்தை ஆணோ... பெண்ணோ எதுவோ பிறக்கட்டும். அதைப்பத்தி எனக்கு அக்கறையில்லை. ஆனால் அதுக்கு முன்னாடி எனக்கு ஓர் உண்மை தெரியணும்...

    உண்மையா....? என்ன உண்மை?"

    உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பன் யாரு?

    ராமராஜிடமிருந்து அக்கினி வீச்சாய்ப் புறப்பட்ட கேள்வியில் நிலை குலைந்து போனாள் ஜெயந்தி.

    2

    ஜெயந்தி துடித்துப் போய் நிமிர்ந்தாள். கண்கள் சிவப்பேற ராமராஜனை ஏறிட்டபடி கேட்டாள். என்ன சொன்னீங்க.

    ராமராஜ் புன்னகைத்தான். புரியலையா... இல்லை. புரியாத மாதிரி நடிக்கிறியா? உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பன் யாருன்னு கேட்டேன்.

    என் கழுத்துல தாலியைக் கட்டிட்டா மாத்திரம் ஒரு பெண்ணாலே குழந்தையைப் பெத்துக்க முடியாதே...

    நீங்க மனசுல எதையோ வைச்சுகிட்டு பேசறீங்கன்னு நினைக்கிறேன்.

    வெளிப்படையாகவே பேசிடட்டுமா?

    ம்...

    உன் வயித்துல இருக்கிற குழந்தைக்கு அப்பாவா நான் இருக்க வாய்ப்பேயில்லை....

    ஜெயந்தியின் உடம்பு நடுங்கியது. ராம்ராஜின் சட்டைக் காலரை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கத்தினாள். உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படியெல்லாம் மூளைகெட்டத்தனமா பேசறீங்க?

    அவளுடைய ஆவேசத்தை அலட்சியப்படுத்திய ராம்ராஜ் சிகரெட்டை காரின் சன்னலுக்கு வெளியே நீட்டி - சாம்பலை உதிர்த்துக் கொண்டே சொன்னான்.

    என்னோட மூளை என்னிக்குமே கெடாது. நீ உண்மையை ஓத்துக்கிட்டு பாவமன்னிப்பு கேட்டுட்டா, பிரச்சினையை நான் இங்கேயே மறந்துடறேன். உண்மையை ஒத்துக்காமே அடம்பிடிச்சா வீண் விவகாரம்தான்...

    ஜெயந்தி கண்கள் நிலைகுத்தி - ராம்ராஜையே சில விநாடிகள் வெறித்துப் பார்த்துவிட்டு - அழுகை வெடிக்கிற குரலில் கேட்டாள்.

    என் வயித்துல உருவாகியிருக்கிற கரு உங்களோடது இல்லைன்னு சொல்றீங்களா?

    ஆமா...

    எதை வைச்சு அப்படி சொல்றீங்க?

    சிகரெட்டை வெளியே சுண்டிவிட்டு சிரித்தான் ராமராஜ். என்னால உன்னை மட்டுமில்லை, எந்தப் பெண்ணையுமே தாயாக்க முடியாது...

    எ...எ... என்ன... சொ... சொல்றீங்க?

    "உண்மையைச் சொல்றேன்! ஆறு மாசத்துக்கு முன்னாடி - கம்பெனி விஷயமா நான் சுவிட்சர்லாந்து போனப்ப, எனக்கு கடுமையான இடுப்புவலி வந்தது. அங்கே இருக்கிற நோவா ஆஸ்பத்திரிக்குப் போய் - பிரபல டாக்டர் ஹாரிமான் கிட்டே என் உடம்பைக் காட்டினேன். இரண்டு நாள் சிகிச்சையில் என்னோட இடுப்பு வலி குணமாயிடுச்சு. ஆனால், என்னால ஒரு குழந்தைக்கு அப்பாவாக என்னிக்குமே வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டார். உங்க மனைவிக்கு தாம்பத்ய இன்பத்தைக் கொடுக்க உங்களாலே முடியும். ஆனால் ஒரு குழந்தையைக் கொடுக்க முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டார்.

    Enjoying the preview?
    Page 1 of 1