Veebareethaththirku Oru Visa!
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratings
Related to Veebareethaththirku Oru Visa!
Related ebooks
Oru Sanikizhamai Iravu Rating: 0 out of 5 stars0 ratingsPachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Sudatha Sooryan Rating: 0 out of 5 stars0 ratingsTheemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsSila Thavarugal Rating: 4 out of 5 stars4/5Thoonkatha Kan Ondru Rating: 0 out of 5 stars0 ratingsArai Milli Meettaril Oru Aabathu Rating: 5 out of 5 stars5/5Vivek Ashok Rajesh Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maarum Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 2 out of 5 stars2/5Bombay Panthayam Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsIndia Naadu En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Saavi Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Oru Thigil Rating: 0 out of 5 stars0 ratingsApple Penne Nee Yaro Rating: 0 out of 5 stars0 ratingsHaritha Oru AchariyaKuri! Rating: 0 out of 5 stars0 ratingsAluminiya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsYamunavin 48 mani neram Rating: 0 out of 5 stars0 ratingsThanithiru Vizhithiru Rating: 0 out of 5 stars0 ratingsUyir Mattum Unmai Rating: 5 out of 5 stars5/5Karuppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5Thappattam Rating: 0 out of 5 stars0 ratingsVarnam Izhantha Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathivelai Rating: 5 out of 5 stars5/5Aduththa Ilakku Rating: 0 out of 5 stars0 ratingsPaarkathey! Patharathey! Rating: 5 out of 5 stars5/5Karkandu Ayutham Rating: 0 out of 5 stars0 ratingsPuthudelhi 5.45 AM Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Veebareethaththirku Oru Visa!
1 rating0 reviews
Book preview
Veebareethaththirku Oru Visa! - Rajeshkumar
10
உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் 1892ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கட்டிடம் இந்திய முகலாயக் கட்டிட வடிவமைப்பு கொண்டதாக அமைந்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய நீதிமன்றம் இது. இந்நீதிமன்ற வளாகத்துடன் சென்னை சட்டக்கல்லூரி, ஒரு பகுதியாக இணைந்துள்ளது.
1
அற்புதராஜ் தன் அறையினின்றும் வெளிப்பட்டார். நிச்சயமாய் ஆறடி இருந்தார். சதை பூசின உடம்பை சாம்பல் நிற சபாரி கச்சிதமாய் கவ்வியிருக்க ஐம்பது வயதைக் காட்டித் தர முயன்ற நரை ரோமங்களுக்கு ‘டை’யை பூசியிருந்தார். முன் மண்டை வழுக்கை காலைச் சூரியனின் வெளிச்சத்தைக் கண்ணாடி ஜன்னலினின்றும் வாங்கி பாதரஸம் தடவிக்கொண்ட மாதிரி மினுமினுத்தது.
குட்மார்னிங் ஸார்.
ஹாலில் ஃபோம் நாற்காலிகளில் சாய்ந்திருந்த பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டார்கள். காமிராக்கள் வெளிச்சமாய்க் கண் சிமிட்டின.
குட்மார்னிங்...
சொல்லியபடியே அற்புதராஜ் நகர்ந்து கொண்டிருக்க - நிருபர்கள் பின் தொடர்ந்தார்கள். ஒரு நிருபர் கேட்டார்.
ஸார்... உங்களுக்கு ‘சேவா ரத்னா’ அவார்டு மத்திய அரசு குடுத்திருக்கு. இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
ஒண்ணும் நினைக்கலை.
என்ன ஸார் இப்படிச் சொல்றீங்க? ‘சேவா ரத்னா’ எவ்வளவு பெரிய விருது! இதுவரைக்கும் யாரும் தமிழ்நாட்டில் - இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. முதன் முதலா உங்களுக்குத்தான் இந்த விருது கிடைச்சிருக்கு.
நடந்து கொண்டிருந்த அற்புதராஜ் நின்றார். இதோ பாருங்க. இந்த ‘சேவா ரத்னா’ விருதை எதிர்பார்த்து ஏழை ஜனங்களுக்கு நான் உதவி பண்ணலை. என்னோட மனத் திருப்திக்காக மாதத்துக்கு ஒரு தடவை - ஏழை ஜனங்களுக்கு அஞ்சு இலட்சம் ரூபாய் வரைக்கும் பண உதவி பண்றேன். இந்த அஞ்சு இலட்ச ரூபாயும் பாங்க்லிருந்து எனக்கு வட்டியா வர்ற பணம்தான்... என்னோட கைப் பணத்தை நான் செலவு பண்ணலை.
வட்டியா வந்தாலும் அந்தப் பணம் உங்களுடையது தானே? அதைச் செலவழிக்க எத்தனை பேருக்கு இந்த மாதிரியான தாராள மனசு வரும்? அதுவும் மாதம் தவறாமே யார் வந்து கேட்டாலும் தந்துடறீங்களே?
யார் வந்து கேட்டாலும் தந்துடமாட்டேன். பாதிக்கப்பட்டவர்களை வரவழைச்சுப் பேசறேன். அவங்க சொல்றது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க என்கிட்டே வேலை செய்யற ஆட்களை அனுப்பி விசாரிக்கச் சொல்றேன். தகவல்கள் உண்மையாய் இருக்கிற பட்சத்தில்தான் உதவி.
இதுவரைக்கும் எத்தனை பேருக்கு உதவி பண்ணியிருப்பீங்க?
கணக்கு வெச்சுக்கலை. எனக்கு விளம்பரம் பிடிக்காது. நான் ஜனங்களுக்குப் பண்ற உதவிகளைப் பத்திரிகைகள்ல வெளியிட்டு அதைப் பெரிசு பண்ண வேண்டாம்.
- சொல்லிவிட்டு தன்னுடைய அறையை நோக்கி நடந்தார் அற்புதராஜ். வராந்தா நாற்காலிகளில் உதவி கேட்டு வந்திருந்த ஜனம் மொத்தமும் கும்பிட்டபடி எழுந்து நின்றது. அற்புதராஜும் அவர்களைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டே தன் செக்ரட்டரி பின் தொடர அறைக்குள் நுழைந்தார்.
ராம்...!
ஸார்.
இன்னிக்கு எத்தனை பேர் வந்திருக்காங்க?
கிட்டத்தட்ட எழுபது பேர் ஸார்.
கோயில் நன்கொடை கேட்டு வந்திருக்கிற ஆசாமிகளை உள்ளே விட்டுடாதே.
தெரியும் ஸார்.
செக்ரட்டரி ராம் வெளியே போனார். அற்புதராஜ் தன் இருக்கையில் புதைந்து சாய்ந்து உட்கார்ந்தார். மேஜையின் மேல் கிடந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று முதல் பக்கத்தின் எட்டாவது பத்தியில் அவருடைய புகைப் படத்தை வெளியிட்டு - ‘சேவாரத்னா’ விருது பெற்றமைக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தது.
அறைக் கதவு தட்டப்பட்டு அந்த நடுத்தர வயதுப் பெண் கண்களில் கண்ணீர்க் கரையோடு உள்ளே வந்தாள்.
ஐயா! சாகக் கிடக்கிற எம்புள்ளையை நீங்கதான் காப்பாத்தணும்.
கதறிக் கொண்டே காலில் விழ முற்பட்டவளைத் தடுத்தார் அற்புதராஜ்.
உன்னோட பிரச்சனையைச் சொல்லும்மா.
அய்யா... எனக்கு இருக்கிறது ஒரு புள்ளைங்க. அவனுக்கு பத்து வயசாவுது. அவனுக்கு இருதய நோவுங்க. டாக்டர் ஆப்ரேஷன் பண்ணணும்ன்னு சொல்லிட்டாருங்க.
உம் பையனை கூட்டிட்டு வந்திருக்கியா?
இல்லிங்க... அவன் ஆஸ்பத்தரியில இருக்கான்.
எந்த ஆஸ்பத்திரி?
சேட்டுமாரு நடத்தற மஸானி ஆஸ்பத்திரியில. என் வீட்டுக்காரரைப் பையனுக்கு பக்கத்துல விட்டுட்டு... உங்க கிட்டே ஓடியாந்தேன். அய்யா... நீங்கதான் பெரிய மனசு பண்ணி...
ஆப்ரேஷனுக்கு எவ்வளவு பணம் செலவாகும்?
அம்பதாயிரம் வேணும்ன்னு டாக்டர் சொன்னாருங்க.
அற்புதராஜ் மேஜையின் மேலிருந்த அழைப்பு மணியைத் தட்டினார். செக்ரட்டரி ராம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்.
ஸார்.
ராம்! இந்த அம்மாவோட பத்து வயசுப் பையனுக்கு இருதயத்துல ஏதோ ஆப்ரேஷன் பண்ணனுமாம். ஆப்ரேஷன் பண்ற டாக்டர் பேர் என்னான்னு கேட்டுப் போன் பண்ணி தகவல் உண்மையாயிருந்தா ஹாஸ்பிட்டலுக்கு நீயே போய்ப் பணத்தைக் கட்டிட்டு வந்துடு. அவர் கூடப் போம்மா...
அந்தப் பெண் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி அற்புதராஜைக் கும்பிட்டுவிட்டு ராமைப் பின் தொடர்ந்தாள்.
ராம்...
அற்புதராஜ் கூப்பிட்டார்.
ஸார்...
ரொம்பவும் மோசமான நிலைமையில் இருக்கிறவங்களை மொதல்ல உள்ளே அனுப்பு. வெளியூர்க்காரங்க யாராவது இருக்காங்களா?
இருக்காங்க ஸார்... மதுரையிலிருந்து ஒரு கணவனும் மனைவியும் வந்திருக்காங்க. கணவனுக்குக் கால் ஊனம்.
அவங்களை மொதல்ல உள்ளே அனுப்பு.
எஸ் ஸார்.