Kondraal Kondraan Kondren
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5
Related to Kondraal Kondraan Kondren
Related ebooks
Minnalaai vaa vivek Rating: 4 out of 5 stars4/5Muththam Thedum Mugam! Rating: 4 out of 5 stars4/5Vivek! Un Ethiril Oor Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsKutramum Katru Mara Rating: 4 out of 5 stars4/5Poruthathu Pothum Vivek Rating: 5 out of 5 stars5/5Oru Melliya Sikappu Kodu Rating: 5 out of 5 stars5/5Evan Avan and Poovil Seitha Aayutham! Rating: 4 out of 5 stars4/5Karuppu Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi and Karuppu Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Thadai Seiyapatta Paguthi Rating: 4 out of 5 stars4/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Athirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pakalum Rating: 0 out of 5 stars0 ratingsKolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsThirakkaatha Kathavugal! Rating: 5 out of 5 stars5/5Vida Maattan Vivek Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsThalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/51+1=0 Rating: 5 out of 5 stars5/5Vivekum 41 Nimishangalum Rating: 3 out of 5 stars3/5Poruthathu Pothum Vivek! Rating: 5 out of 5 stars5/5Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Virainthu Vaa, Vivek! Rating: 5 out of 5 stars5/5Manjal Diary Rating: 0 out of 5 stars0 ratingsAvenue Marangal Rating: 5 out of 5 stars5/5Athiradi Aattam! Rating: 4 out of 5 stars4/5Monday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsRatthathil Oru Kelvikuri! Rating: 4 out of 5 stars4/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Kondraal Kondraan Kondren
2 ratings0 reviews
Book preview
Kondraal Kondraan Kondren - Rajeshkumar
பொருளடக்கம்
ஏடு இட்டோர் இயல்
அன்புடன் ராஜேஷ்குமார்
விளக்கம் ப்ளீஸ் விவேக்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
ஜோதிடர்: டாக்டர் எல்.பிரகாஷ்
ஏடு இட்டோர் இயல்
வருடா வருடம் கத்ரி வெயில் ஒரு இருபது நாட்கள் இருக்கும். இந்த வருடம் ஏப்ரல் 17ஆம் தேதி வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். பகல் 12மணி முதல் மதியம் மூன்று மணி வரை வெளியே வராதீங்க - என்று அறிவிப்புகூட செய்தார்கள். நான் கூட கொஞ்சம் பயந்தேன்.
ஆனால் இந்த வெயில் சாதாரணமாகத்தான் தெரிந்தது. (வயதானவர்களுக்கு வேண்டுமானால் முடியாமல் இருந்திருக்கலாம்.) இயற்கையின் வெப்ப சலனத்தை விட அரசியல் சலனம் ரொம்பவே சூடா.. தவறு... சூடு சுரணை இல்லாமலே போனது.
அ.தி.மு.க.வின் ஆதிக்க சக்தி சசிகலா சிறையில் இருப்பதால் சசியை சார்ந்தவர்களின் அரசியல் ஆதிக்கம் எடுபடவில்லை. அ.தி.மு.க.வை ஏதோ ஒரு அந்நிய சதி ஆட்டுவிக்கின்றது எனத் தெரிகிறது. அண்மையில் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை மீட்க 50 கோடிக்கு பேரம் பேசியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை சில கோடிகளுடன் பிடித்ததாக சொல்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் யாருக்குமே தெரியாமல் சின்னத்தைக் காப்பாற்றி வைக்க வேண்டியது அவசியமா? அந்த இடைத்தரகர் யாரிடம் இதுபற்றிப் பேசினார்? தேர்தல் ஆணைய சிப்பந்தி யார்? அவரையும் கைது செய்யுங்கள்.
இப்ப எல்லாக் கதவுகளும் மூடிக்கொண்டிருப்பதைப் பார்த்த தினகரன், இது சரி வராது என்பதையுணர்ந்து ஒதுங்கி விட்டதாக அறிவித்தவர் - அதோடு அமைதி காத்திருக்க வேண்டும். ஆனால் மறுநாள் ‘நான் துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்’ என்கிறார்.
எடப்பாடி அணி, ஓ.பி.எஸ்.அணி ஏழு பேர் கொண்ட அணிகளை நியமித்துள்ளது - இரு அணிகளின் இணைப்பு பற்றி ஆலோசிப்பதற்காக.
வெள்ளைக்காரன் நமக்கு சுதந்திரம் தந்து விட்டுப் போகும் போது, இவர்கள் நிம்மதியாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சில வேலைகளை செய்து விட்டுப் போனான். அதுமாதிரி சசிகலா சிறைக்குச் செல்லும் முன்... எடப்பாடியை முதல்வராக்கி ஓ.பி.எஸ்.க்கு ஒரு செக் மாதிரி வைத்து விட்டுப் போனார்.
இரண்டு அணிகளும் எதை வேண்டுமானாலும் பேசி முடிவெடுக்கட்டும். முதல்வர் யார் என்பதுதான் முக்கிய பிரச்சனையே...!
பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்புடன்,
ஜி.அசோகன்.
கோயமுத்தூரிலிருந்து ஃபேக்ஸ்
அன்பான வாசக உள்ளங்களே!
வணக்கம்!
அண்மையில் என்னுடைய முகநூல் பக்கத்தில் இரண்டு பதிவுகள் போட்டிருந்தேன். அதில் முதல் பதிவு இது:
நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு காரணம் வாகன ஓட்டிகள் மது அருந்துவதுதான் என்கிற ஊர் அறிந்த உண்மையை ஊர்ஜிதம் செய்து மதுபானக்கடைகள் மார்ச் 31-ம் தேதி இரவு பத்து மணிக்குள் மூடப்பட வேண்டும் என்கிற துணிச்சலான முடிவை அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது. எல்.கே.ஜி. படிக்கிற குழந்தையிலிருந்து எல்லோர்க்கும் தெரிந்த ‘மது வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு’ என்கிற நிஜம் புரிந்து நாடு முழுவதும் ‘நாளை முதல் பூரண மதுவிலக்கு உடனடியாய் அமல்படுத்தப்பட வேண்டும்’ என்கிற அதிரடியான தீர்ப்பு வர நாம் எத்தனை வருடங்கள் காத்து இருக்க வேண்டுமோ?
இது முதல் பதிவு.
இனி இரண்டாவது பதிவு:
கோவை வடவள்ளியில் நான் குடியிருக்கும் பகுதி நேற்றுவரை வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாத - அமைதியின் மடியில் இளைப்பாறிக் கொண்டிருந்த - ஓர் அழகான அவென்யூ. ஆனால் இன்று காலைமுதல் இருசக்கர வாகனங்கள் ஏதோ ஓர் ஊர்வலம் மாதிரி போய்க் கொண்டிருக்க, அந்தத் தார்ச்சாலையில் வெய்யிலோடு சேர்ந்து புழுதியும் தகித்தது. இந்த திடீர் போக்குவரத்துக்கு என்ன காரணம் என்று தெரிய டூ வீலரில் சென்ற ஓர் இளைஞனை நிறுத்திக் காரணம் கேட்டேன். அந்த இளைஞன் சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல் மெள்ளச் சிரித்துக் கொண்டே சொன்ன பதில் இது:
மெயின் ரோட்ல நேத்து ராத்திரியிலிருந்து டாஸ்மாக்கை மூடிட்டான் ஸார். நல்லவேளை... பக்கத்துல ஒரு கடை இருக்கு, அங்கதான் போய்ட்டு இருக்கோம்...!
இன்று மதியம் எனக்குப் பசிக்கலை.
முகநூலில் நான் போட்டிருந்த இந்த இரண்டு பதிவுகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. பதில் பதிவு போட்டவர்களுக்கு சமுதாய அக்கறையும், வருங்கால தமிழக இளைஞர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி தங்களுடைய மதிப்பு மிக்க வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாதே என்கிற கவலையும் இருந்தது. ஆனால் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அதைப்பற்றிய அக்கறை சிறிதும் இருந்ததாகத் தெரியவில்லை. பல தொலைக்காட்சி சானல்கள் தங்களுடைய செய்தியாளர்களை நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி அங்கே பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்த நிலைமையை நேரடியாக ஒளிபரப்பிப் பெருமை அடித்துக் கொண்டன. காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், குடிமகன்கள் வரிசையாக நின்று மது வாங்கிச் செல்ல பாதுகாப்பும் ஒத்துழைப்பும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் நேரலையில் வந்து பேட்டி கொடுத்த அமைச்சர் ஒருவர் தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை. அரசு மதுவிலக்கை அமல்படுத்தினால் பத்தாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும்.
என்று சொன்னார்.
டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று சொன்னால் அந்த பத்தாயிரம் கோடி ரூபாய், மக்களின் சேமிப்பாக அல்லவா மாறும். மக்கள் மதுவைக் குடித்து உடம்பின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் அந்தப் பணத்தை சேமிக்க ஆரம்பிப்பது நல்ல விஷயம்தானே! மக்களின் உயிர்க்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் கொடுத்து ஆட்சியை நடத்தும் அரசைத்தானே மக்கள் விரும்புவார்கள்!
குஜராத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியம் என்றால் தமிழ் நாட்டிலும் அது சாத்தியம்தான்! அரசு பணம் சம்பாதிக்க எத்தனையோ நல்ல வழிகள்,