Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vellai Nirathil Oru Vaanavil and Matravai Neril
Vellai Nirathil Oru Vaanavil and Matravai Neril
Vellai Nirathil Oru Vaanavil and Matravai Neril
Ebook336 pages1 hour

Vellai Nirathil Oru Vaanavil and Matravai Neril

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vellai Nirathil Oru Vaanavil and Matravai Neril

Read more from Rajeshkumar

Related to Vellai Nirathil Oru Vaanavil and Matravai Neril

Related ebooks

Related categories

Reviews for Vellai Nirathil Oru Vaanavil and Matravai Neril

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vellai Nirathil Oru Vaanavil and Matravai Neril - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    "கங்கிராட்ஸ் மிஸ்டர் கிருஷ்ணகுமார்."

    அற்புதமான ஆர்க்யூமெண்ட்.

    ஆப்பனென்ட் லாயர் வேங்கடபதி கலகலத்துப் போயிட்டார்.

    நிச்சயமா ஜட்ஜ்மெண்ட் உங்களுக்கு சாதகம்தான்...

    லாயர் சேம்பர் ரூமை விட்டு வெளியே வருவதற்குள் — ஏகப்பட்ட கைகள் நீண்டு - கிருஷ்ணகுமாரின் கைதேடி குலுக்கின. உடம்பின் நாலா பக்கங்களிலும் பாராட்டு வார்த்தைகள் மொய்த்தன. அவனுடைய காது மடல்களில் பட்டுப்பட்டு நழுவின.

    தாங்க்யூ... தாங்க்யூ...உதடுகள் எந்திரத்தனமாய் உச்சரிக்க - கும்பலை நீந்தி வராந்தாவுக்கு வந்தான் கிருஷ்ணகுமார். கருப்புக் கோட்டுக்குளே வியர்வை ஆறாய் ஊற்றியது. மனசுக்குள் சந்தோஷம் ஹைட்ரஜன் வாயு அடைத்த பலூனாய் மிதந்தது.

    ஏறக்குறைய தோற்றுப் போகும் என்கிற நிலைமையில் இருந்த இந்த வழக்குக்கு இன்றைக்கு அவன் புரிந்த ஆர்க்யூமெண்டால் ஒரு யானை பலம் வந்திருந்தது. அதுவரை பாராமுகமாய் இருந்த வெற்றித் தேவதை - இந்த நிமிஷம் லேசாய் கடைக்கண் பார்வை பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

    வராந்தாவில் உற்சாக நடை போட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் சட்டென்று நின்றான். பார்வையைக் கீழே தாழ்த்தினான்.

    அந்தப் பெண் நெடுஞ்சாண்கிடையாக கிருஷ்ணகுமாரின் கால்களில் விழுந்திருந்தாள். லேசாய் அதிர்ந்து ஓரடி பின் வாங்கினான் கிருஷ்ணகுமார். பதட்டக் குரலில் சொன்னான்.

    இந்தாம்மா எழுந்திரு... என்ன இதெல்லாம்...?

    அந்தப் பெண் கை கூப்பிக் கொண்டே எழுந்தாள்.

    குரலில் தழுதழுப்பு தட்டச் சொன்னாள்.அய்யா, எனக்கு நம்பிக்கை வந்துருச்சய்யா. இனிமே நம்ம கேஸ் ஜெயிச்சுடும். என்னை ஏமாத்தி சொத்தைப் பறிச்சவங்க நிச்சயமா நடுத் தெருவுக்கு வந்து பிச்சை எடுக்கப் போறாங்கய்யா...

    கிருஷ்ணகுமார் புன்னகைத்தான்.

    இதோ... பார்... பொன்னம்மா, ஜட்ஜ் இன்னும் தீர்ப்பு சொல்லிடலை. இன்னும் பத்துநாள் கழிச்சுத்தான் தீர்ப்பு சொல்லப் போறார்...

    அந்த இளம் விதவை பொன்னம்மா பரவசித்தாள். தீர்ப்பு எனக்கு தெரிஞ்சு போச்சுய்யா. நீங்க பேசின பாஷை எனக்குப் புரியலைன்னாலும் அதுல இருந்த ஈரம் ஜட்ஜோட மனசைத் தொட்டுடுச்சய்யா...

    சரி,.. சரி... உணர்ச்சிவசப்படாமே வீட்டுக்குப் போ. இருபத்திமூணாந்தேதிதான் தீர்ப்பு. அன்னிக்கு நேரா கோர்ட்டுக்கே வந்துடு...

    சரிங்கய்யா...மறுபடியும் அவனைக் கும்பிட்டு கண்களில் பனிக்கிற நீரோடு நகர்ந்து போனாள் பொன்னம்மாள்.

    கிருஷ்ணகுமார் தன் வலது கையில் மடித்து வைத்திருந்த கருப்புக் கோட்டை இடது கைக்கு மாற்றிக் கொண்டே கோர்ட்டின் வாசற்படிகளில் இறங்க ஆரம்பித்தான்.

    ஆறடி உயரத்திற்கு ஒரு அங்குலம் குறைவாய் இருந்த கிருஷ்ணகுமாருக்கு பச்சை நரம்புகள் பளிச்சென்று தெரியும் சிவப்பு நிறம். வயது மூன்று பத்துகளை முழுசாய் விழுங்கியிருந்தான். அடர்த்தியான தலைமுடி போன மூன்று மாத காலமாய் கொட்ட ஆரம்பித்திருந்தது. அகல நெற்றிக்கு கீழே அதிகூர்மையான கண்கள். கொஞ்சம் கருடத்தனமான மூக்கு. அதற்குக் கீழே மீசை வளர்க்கப் பிரியப்படாத மேலுதட்டுப் பரப்பு. சிகரெட்டை ஸ்பரிசிக்காத லேசாய் லிப்ஸ்டிக் பூசினமாதிரி - உதடுகள். தினசரி ஷேவிங்கில் பச்சை நிறம் வாங்கியிருந்த மோவாய் பிரதேசம்.

    கோர்ட்டின் பின்புறம் வந்தான், கிருஷ்ணகுமார். டால்பின்களும், மாருதிகளும் நிறத்திற்கொன்றாய் முகங்களைத் திருப்பிக் கொண்டு நின்றிருக்க, அதற்கு மத்தியில் அம்பாசிஸ்ட்டரோடு காத்திருக்கும் தன் மனைவி லதிகாவைத் தேடினான்.

    லைப்ரரிக்குப் போனவள் இந்நேரம் திரும்பி வந்திருக்க வேண்டுமே! யோசித்தபடியே பார்வையைச் சுழற்றி சுற்றும் முற்றும் பார்த்தான் கிருஷ்ணகுமார்.

    ஊஹூம் அவள் வரவில்லை.

    இனிமேல் அவள் கையில் காரைத் தரக்கூடாது.’

    குட் ஆப்டர்நூன் லாயர் ஸார்...

    தன் முதுகுப் பக்கமாய் ஒலித்த வார்த்தைகளைக் கேட்டுத் திரும்பினான் கிருஷ்ணகுமார். மலர்ந்தான்.

    லதிகா - அவனுடைய அழகான மனைவி, மார்புக்கு குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டு உதட்டில் பொருத்திக்கொண்ட புன்னகையோடு நின்றிருந்தாள்.

    லைப்ரரிக்கு போனா இவ்வளவு நேரமா...?

    ஏன்? வந்து ரொம்ப நேரமாச்சா...?

    ஒரு மணி நேரமா காத்திட்டிருக்கேன்

    இந்த உடான்ஸ்தான் வேண்டாங்கிறது என் அருமையான வக்கீல் கணவரே! நீங்க கோர்ட்டிலிருந்து இறங்கி வரவே வரவே... உங்களுக்குத் தெரியாமே பின்னாடி வந்தேன். நீங்க இந்த ஸ்பாட்டுக்கு வந்து எவ்வளவு நேரமாச்சுன்னு கரெக்டா சொல்லட்டுமா...?

    சொல்லு பார்க்கலாம்...

    சரியா சொல்லட்டுமா...?

    ம்...

    சரியா... ஒண்ணே முக்கால் நிமிஷமாச்சு...லதிகா சொல்ல கிருஷ்ணகுமார் சிரித்தான்.

    காரை எங்கே நிறுத்தியிருக்கே....?

    வாங்க என் பின்னாடி. காரை இங்கே நிறுத்தலாம்ன்னு வந்தா கசகசன்னு ஒரே நெரிசல். அதான் கோர்ட்டுக்கு எதிர் சைட் ரோட்ல ஜவான் பவனுக்கு பக்கத்தில் நிறுத்தியிருக்கேன்...

    நீ கூட சில சமயம் புத்திசாலித்தனமா காரியங்களை பண்றே லதிகா...கிருஷ்ணகுமார் சொல்ல லதிகா சட்டென்று நின்று தன் பெரிய கண்களினால் முறைத்தாள்.நான் உங்களுக்கு மனைவியான பின்னாடிதான் முதல் கேஸே உங்களுக்குக் கிடைச்சுது. ஸ்கூட்டர்ல போயிட்டிருந்த நீங்க அம்பாஸிடர் காரை வாங்கினீங்க. நான் சொல்லிக் குடுத்த பாய்ண்ட்ஸை வைச்சுத்தான் ஒரு பெரிய கேஸ்ல ஜெயிச்சீங்க. எனக்கு புத்திசாலித்தனம் இருக்குன்னு எப்பவோ ப்ரூப் ஆயிடுச்சு...

    "மன்னிக்கணும் தாயே, தெரியாமே சொல்லிட்டேன்.

    அப்படி வாங்க வழிக்கு... பல் வரிசை ஒரு வெளிச்ச ஆரமாய்த் தெரிய லதிகா சிரித்து, கணவன் கிருஷ்ணகுமாரோடு நடந்தாள்.

    கோர்ட் காம்பௌண்ட் கேட்டைத் தொடுகையில் கௌரிசங்கர் ஹோட்டலில் ஒரு கட்சிக்காரனின் செலவில் இரண்டு பிளேட் தயிர் சேமியாவையும் - காபியையும் வயிற்றுக்குக் காண்பித்து ஒரு பெரிய ஏப்பத்தோட வந்து கொண்டிருந்த வக்கீல் நரசிம்மாச்சாரி லதிகாவை மறித்தார்

    கொஞ்சம் நில்லும்மா

    நின்றாள்.

    என்ன ஸார்?

    நீ உம் புருஷனை வீட்டுக்குள் கூட்டிட்டுப் போன உடனடியா ஒரு காரியம் பண்ணணும்...

    என்ன பண்ணனும் சொல்லுங்க ஸார்...

    "கை நிறைய மிளகாயும், உப்பும் எடுத்து, கிழக்குப் பார்த்து நிற்கவெச்சு சுத்திப்போடு. இன்னிக்கு உன் புருஷன் ஆர்க்யூமெண்ட் அற்புதம். ஜட்ஜே பிரமிச்சுப் போய் உட்கார்ந்துட்டார். எதிர் வக்கீல் நாலு நாளைக்குக் கோர்ட் பக்கமே வரமாட்டார்.

    ஈஸிட்...?

    ஆமாம்மா. ஏம்பா, கிருஷ்ணகுமார், விஷயத்தை நீ இன்னமும் லதிகாகிட்டே சொல்லலையா?

    இனிமேத்தான் ஸார் சொல்லணும்.

    சொல்லு... சொல்லு...நரசிம்மாச்சாரி மறுபடியும் பீறிட்டு வந்த ஓர் ஏப்பத்தோடு நகர்ந்து போக - லதிகா கிருஷ்ணகுமாரைப் பார்த்தாள்.

    இன்னிக்கு யார் கேஸ்...

    அந்த விடோ பொன்னம்மா கேஸ்.

    நல்ல ஆர்க்யூ பண்ணீங்களா?

    பிச்சு உதறிட்டேன்.

    கேஸ் ஜெயிச்சிடும்.

    கண்டிப்பா...

    ஜட்ஜ்மெண்ட் என்னிக்கு?

    வர்ற இருபத்தி மூணாந்தேதி.

    பொன்னம்மாவோட கேஸ் விபரம் என்ன, சொத்து தகராறுதானே?

    ஆமா... அண்ணன் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்ததும் அண்ணிக்கு சொத்து தராமே ஏய்க்கப் பார்த்தாங்க மூணு தம்பிங்க... சட்டம் சும்மா விடுமா... நார் நாரா கிழிச்சுட்டேன்.

    காரை நெருங்கினார்கள்.

    ட்ரைவ் நீங்க பண்றீங்களா... நான் பண்ணட்டுமா?

    நான் பண்றேன்.கிருஷ்ணகுமார் காரின் கதவைத் திறந்து கொண்டு டிரைவிங் சீட்டை ஆக்ரமிக்க - காரைச் சுற்றி வந்து அவனருகே உட்கார்ந்தாள் லதிகா. தோள் பட்டை மென்மையும், வெம்மையுமாய் அவன்மேல் இழைத்தது.

    காரைக் கிளப்பினான் கிருஷ்ணகுமார்.

    சாயந்திரம் ஆறு மணி.

    டென்னிஸ் கோர்ட்டிலிருந்து திரும்பியிருந்தான்

    நீண்ட நேரம் ஆடினதில் நிரம்பவும் களைத்துப்போய் உடம்பு முழுவதும் செம்மண் புழுதியோடு வியர்வையை வாங்கியிருந்தான். போர்டிகோவில் காரை நிறுத்தினபோது கொஞ்சம் தள்ளி நின்றிருந்த அந்த டாக்ஸி அவன் கண்ணில் பட்டது.

    ‘யார் வந்திருக்கிறார்கள்?’

    யோசித்துக் கொண்டே காரை நிறுத்திவிட்டு — போர்டிகோ படியேறி உள்ளே போனான். வரவேற்பறை சோபாவிலேயே லதிகா பார்வைக்கு சிக்க அவளுக்கு எதிரே அவளுடைய அப்பா சங்கநாராயணன் தன் வழுக்கையைத் தடவியபடி ஆசுவாசமாய் சாய்ந்திருந்தார். கிருஷ்ணகுமாரைப் பார்த்ததும் லதிகா உற்சாகமானாள்.அதோ அவரே வந்துட்டார் அப்பா.

    வாங்க மாமா.

    சங்கநாராயணன் தன் மாப்பிளையைப் பார்த்து நிறைவாய் சிரித்தார்.என்ன மாப்பிளே. காலை செஷன்ஸ் கோர்ட். சாயந்தரம் டென்னிஸ் கோர்ட்டா?

    எப்ப வந்தீங்க மாமா?

    பத்து நிமிஷமாச்சு.

    எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான் கிருஷ்ணகுமார். லதிகா அவனை உசுப்பினாள்.போய் மொதல்ல குளிச்சுட்டு வாங்க. அப்பா உங்ககிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம்.

    குளியலெல்லாம் அப்புறந்தான் - என்ன விஷயம் மாமா?

    எல்லாம் கதம்பாவோட கல்யாண விஷயந்தான் மாப்பிள்ளே.

    ஓ. ரெண்டாவது மாப்பிளை எடுக்கப் போறீங்களா. கங்கிராட்ஸ்.

    ஒரு நல்ல இடம் தகைஞ்சி வந்திருக்கு மாப்ளே பையன் டெலிபோன்ல டி.எம். போஸ்ட்ல இருக்கான் அந்தஸ்தான இடம்.

    பையனுக்கு சொந்த ஊரு?

    நம்ம ஊர்தான். மதுரை... கதம்பாவை நாளைக்கு பெண் பார்க்க வர்றாங்க. அவங்க வர்ற சமயத்துல நீங்களும், லதிகாவும் நம்ம வீட்ல இருக்கணும்...

    நான் எப்படி வர முடியும்? நாளைக்குக் கோர்ட்ல ஒரு முக்கியமான கேஸ் இருக்கே. லதிகாவை வேணுமின்னா கூட்டிட்டுப் போங்க மாமா...

    "பங்க்ஷன் நாளைக்கு சாயந்தரம்தான் மாப்ளே, நீங்க மத்தியானதுக்கு மேலே புறப்பட்டு வந்தாக்கூட போதும்.

    அதுக்கு மறுநாள் நான் பெங்களூர் போகணும் மாமா. எனக்கு சீனியரா இருந்த வக்கீல் ஒருத்தர் ஹாஸ்பிடல்ல படுத்துக்கிட்டிருக்கார்... நான் போய் பார்த்துட்டு வரணும். நீங்க லதிகாவை கூட்டிட்டுப் போங்க... அவ மாப்பிளையைப் பார்த்து ஓ.கே. சொன்னா... நானே சொன்னா மாதிரி. ஆமா டாக்ஸியை ஏன் நிறுத்தி வெச்சிருக்கங்க... அனுப்பிடலாமே?

    "நீங்களும், லதிகாவும் ரெடியா இருந்தா... அப்படியே மதுரைக்கு கூட்டிட்டுப் போயிடலாம்ன்’னு நினைச்சேன்.

    மதுரையிலிருந்து கோயமுத்தூருக்கு டாக்ஸியிலா வந்தீங்க?

    ஆமா... தெரிஞ்ச ஒருத்தரோட பிரைவேட் டாக்ஸி

    உங்க கார் என்னாச்சு அப்பா?

    சர்வீஸுக்கு விட்டிருக்கேன்மா

    நான் இப்பவே உங்ககூட புறப்படணுமாப்பா?

    ஆமாம்மா. வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ... நீயிருந்துதான் எல்லாத்தையும் கவனிக்கணும்... உங்கம்மா உயிரோட இருந்திருந்தா நான் உனக்கு இந்தக் கஷ்டத்தைக்கூட கொடுத்திருக்க மாட்டேன்.

    "லதிகா கிருஷ்ணகுமாரின் பக்கமாய் திரும்பினாள்.

    என்னங்க... நான் போகட்டுமா?

    ம்... புறப்படு... போயிட்டு என்னிக்குக் திரும்புவ.

    ரெண்டு நாள் இருந்துட்டு வர்றேன்...

    அப்போ... நான் பெங்களூர் போயிட்டு வர்றப்ப நீ வீட்ல இருப்பே...

    ஆமா...

    கிருஷ்ணகுமார் எழுந்தான். கையிலிருந்து டென்னிஸ் ராக்கெட்டை சுவரின் ஆணியில் மாட்டிக்கொண்டே சொன்னான். பத்தே நிமிஷம்! நான் குளிச்சிட்டு வந்துடறேன். நீங்களும், லதிகாவும் புறப்படறதுக்கான ஏற்பாடு பண்ணுங்க.

    புன்னகைத்தார் சங்கரநாராயணன்.

    கிருஷ்ணகுமார் பத்து நிமிஷங்களை செலவழித்து குளித்து விட்டு — குர்தாவில் நுழைந்து மறுபடியும் வரவேற்பறைக்கு வந்தபோது, லதிகா ஒரு சின்ன சூட்கேஸோடு தயாராக நின்றிருந்தாள். கட்டியிருந்த ஷிஃபானைக் கலைத்து விட்டு — சந்தன நிற ‘உல்லி உல்லி’ சேலையில் பொதிந்திருந்தாள் தலையை இருக்கமாய்ப் பின்னியிருந்தாள். சங்கரநாராயணன் குழைந்தார்.நீங்களும் வந்தா மாப்பிளையைப் பார்த்த மாதிரி இருக்கும்.

    லதிகாகிட்டே போட்டோவைக் குடுத்து அனுப்பிவிடுங்க போதும். மாப்பிளை பையனை எனக்கோ. லதிகாவுக்கோ பிடிக்கிறது முக்கியமில்லை. கல்யாணம் பண்ணிக்கப்போற கதம்பாவுக்குப் பிடிக்கணும். அதுதான் முக்கியம்.

    கிருஷ்ணகுமார் சொல்ல —

    சங்கரநாராயணன் சிரித்தார்.

    என்ன மாமா சிரிக்கறீங்க?

    கதம்பா மாப்பிள்ளைப் பையனை போட்டோவில் பார்த்து சம்மதம்ன்னு தலையாட்டிட்டா...

    அப்புறமென்ன. முகூர்த்த தேதியை ஃபிக்ஸ் பண்ணுங்க. ஒரு வாரம் மதுரையில் வந்து டேரா போட்டு கல்யாணத்தை அமர்க்களமா பண்ணிடுவோம்.

    லதிகா சூட்கேஸோடு சோபாவினின்று எழுந்தாள்வேளா வேளைக்கு வீட்ல வந்து சாப்பிடுங்க. உங்களுக்கு பிடிச்ச சமையல் அயிட்டங்களை கற்பகத்துக்கிட்டே சொல்லியிருக்கேன். பெங்களூர் போறப்ப... பீரோவையெல்லாம் நல்லாப் பூட்டி சாவிக்கொத்தை கையோடு எடுத்துட்டுப் போயிடுங்க...

    ம்...ம்...ம்...

    பெங்களூர்ல ஒருநாள் வேலைதானே?

    ஆமா...?

    உங்க ப்ரெண்ட் சிவாவையும், அவரோட ஓய்ஃபையும் பார்க்கப் போவீங்களா?

    கண்டிப்பா, பெங்களூர் போயிட்டு — அவன் வீட்டுக்குப் போகாம இருந்த அவன் என்னைக் குதறிடுவான்.

    உங்க ப்ரெண்ட் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்ன்னு சொன்னா நீங்க பாட்டுக்கு தங்கிடாதீங்க.

    மாட்டேன். மறுநாள் எனக்கு கோர்ட்ல வேலையிருக்கே?

    நாங்க புறப்படட்டுமா?

    ம்...

    வர்றேன் மாப்பிளை.

    தலை அசைத்தான் கிருஷ்ணகுமார்.

    அவர்கள் காரில் புறப்பட்டுப் போனதும் —

    வீட்டிற்குள் நுழைந்தான் கிருஷ்ணகுமார்.

    ஹாலின் சுவரோரமாய் இருந்த டீபாயின் மேல் டெலிபோன் கதறிக் கொண்டிருந்தது. வேக வேகமாய்ப் போய் ரிஸீவரைப் பற்றித் தூக்கினான். காதுக்குக் கொடுத்தான்.

    ஹலோ...

    பேசறது யார் கிருஷ்ணகுமாரா?

    ஆமா...

    கிருஷ்ணா, நான் சிவா பேசறேன்.

    அட, சிவா பெங்களூரிலிருந்து எப்படா வந்தே?

    அரைமணி நேரமாச்சு.

    எங்கிருந்து பேசறே?

    ஹோட்டல் ரஞ்சனி.

    என்னடா திடீர் விஜயம்?

    உன்னால எனக்கொரு காரியம் ஆகணும் கிருஷ்ணா.

    சொல்லுடா.

    எனக்கு டைவோர்ஸ் வேணும்.

    2

    கிருஷ்ணகுமார் ஒரு வினாடி ஸ்தம்பித்துப் போய்

    Enjoying the preview?
    Page 1 of 1