Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uchi Nila
Uchi Nila
Uchi Nila
Ebook135 pages46 minutes

Uchi Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Uchi Nila

Read more from Rajeshkumar

Related to Uchi Nila

Related ebooks

Related categories

Reviews for Uchi Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uchi Nila - Rajeshkumar

    21

    ஒரு தத்துவம்

    காதலித்துப் பார்!

    உன் கையெழுத்து அழகாகும்.

    காதலிப்பதை விட்டுப் பார்!

    உன் தலையெழுத்து அழகாகும்.

    1

    அமைச்சர் தாமரைக் கண்ணன் ஷிவாஸ் ரீகல் ஸ்காட்ச்சையும், நெய்யில் பொரித்த பெப்பர் சிக்கனையும் வயிற்றுக்கு அனுப்பிவிட்டு தன் மெகா சைஸ் தொப்பையைத் தடவியபடி எதிரில் நின்றிருந்த பி.ஏ.வைப் பார்த்தார்.

    கிருஷ்ணன்...!

    ஸார்...

    மணி என்ன...?

    பத்தே முக்கால் ஸார்...

    நான் இனி தூங்கப் போகலாமா...?

    ஸ... ஸார்... அது வந்து...

    என்னய்யா...?

    பதினோரு மணிக்கு மிஸ்டர் அனந்த ராமனுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்து இருக்கீங்க...!

    அனந்த ராமனா... யாரய்யா அது...?

    ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் ரிடையர்ட் டெப்டி டைரக்டர்!

    ஓ...! அந்த ஆளா... அவன் எதுக்கய்யா என்னைப் பார்க்க வர்றான்...?

    தெரியலை ஸார்...! ஒரு வாரமாய் உங்களைப் பார்க்க டைம் கேட்டுகிட்டேயிருந்தார். இன்னிக்கு ராத்திரி பதினோரு மணிக்குத்தான் அவர்க்கு நான் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தேன்.

    என்ன விபரம்ன்னு அந்த ஆள்கிட்டேயே கேட்டு இருக்க வேண்டியதுதானே...?

    கேட்டேன் ஸார்...! ‘இது அமைச்சர் கிட்டே மட்டும் சொல்ல வேண்டிய விஷயம்... உங்களுக்கு இஷ்டம் இருந்தா அப்பாய்ண்ட்மெண்ட் கொடுங்க... இல்லேன்னா வேண்டாம்’ன்னு சொன்னார்.

    அந்த ஆள் எந்த டிபார்ட்மெண்ட்ன்னு சொன்னே?

    ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் ஸார்.!

    அப்படீன்னா புதை பொருள் ஆராய்ச்சி துறைதானே?

    ஆமா ஸார்...! பி.ஏ. கிருஷ்ணன் தலையாட்டிக் கொண்டிருக்கும் போதே அவருடை செல்போன் ‘பல்லேலக்கா’ என்று ரிங்டோனை வெளியிட்டு கூப்பிட்டது. எடுத்து காதுக்கு ஒற்றினார். மறுமுனையில் குரல் கேட்டது.

    நான் அனந்தராமன்...!

    ஓ...! நீங்களா... உங்களைப்பற்றித்தான் இப்போ மினிஸ்டர்கிட்டே பேசிட்டிருக்கேன்...

    அப்பாயிண்ட்மெண்ட் கன்ஃபர்ம்தானே?

    கன்ஃபர்ம்தான்...! புறப்பட்டு வாங்க... மினிஸ்டர் உங்களுக்காகத்தான் தூங்கக்கூட போகாமே வெயிட் பண்ணிட்டிருக்கார்.

    நான் வந்து பேசும் போது அவர்க்குப் பக்கத்துல வேறுயாரும் இருக்கக்கூடாது...

    யாரும் இருக்க மாட்டாங்க... வாங்க...!

    பி.ஏ.கிருஷ்ணன் செல்போனை அணைத்துவிட்டு அமைச்சரை ஏறிட்டார்.

    அந்த அனந்தராமன்தான் ஸார்

    டி.வி.யைப் போடய்யா... அந்த ஆள் வர்ற வரைக்கும் எதையாவது பார்த்துட்டு இருக்கலாம்...

    கிருஷ்ணன் ரிமோட் கண்ட்ரோலை எடுத்து பட்டனைத் தட்டமுயன்ற விநாடி அமைச்சரின் செல்போன் அழைத்தது. எடுத்து நெம்பர் யாரு டையது என்று பார்த்தார். சக அமைச்சர் துரை பாண்டியன்.

    என்ன துரை...?

    தாமரை! நீ இப்ப போதையில் இருக்கியா... இல்ல நார்மலா இருக்கியா...?

    போதைதான்...! பட் ஸ்டெடி...! சொல்லு... என்ன விஷயம்...?

    ஒண்ணுமில்லை... என்னோட ஈச்சம்பாக்கம் கெஸ்ட் ஹவுஸ்ல சின்னதா ஒரு பார்ட்டி வெச்சுருக்கேன். வந்துட்டு போயேன்.

    என்ன திடீர்ன்னு...?

    காண்ட்ராக்ட் பேசி முடிச்சதுல ஒரு லம்ப் அமவுண்ட் கிடைச்சுது... அதைக் கொண்டாடத்தான்...!

    இதை ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாமே...?

    "தாமரை! இந்த அமைச்சர் பதவிக்கு நீ புதுசு. அதான் சில விபரங்கள் உனக்குத் தெரியறது இல்லை... இது மாதிரியான பார்ட்டிகளை யெல்லாம் ரெண்டு நாளைக்கு முன்னாடியே அரேன்ஞ் பண்ணினால் மீடியாவோட காது களுக்குப் போய்ச் சேர்ந்துடும்... அதான் திடீர் ஏற்பாடு. பார்ட்டி சரியாய் பனிரெண்டு மணிக்கு ஆரம்பமாகும். விடியற்காலை நாலுமணி வரைக்கும் நடக்கும். ‘அஜால் குஜால்’ எல்லாம் உண்டு. சினிமாவில் கனவுக்கன்னியாய் இருக்கிற ஒரு நடிகையும் பார்ட்டியில் கலந்துக்கறா...!

    அட... யாரது...?

    சொல்லமாட்டேன்... வந்து பாரு... அசந்து போவே...! அந்த கனவுக்கன்னி உன்னோட மடியிலேயே வந்து உட்கார்வா... போதுமா?

    துரை...!

    என்ன தயங்கறே? இப்ப மணி பத்து அம்பது. உடனே காரை எடுத்துகிட்டு புறப்படு... உன்னோட பி.ஏ.வை கார் ஓட்டச் சொல்லு. சரியா பனிரெண்டு மணிக்கெல்லாம் ஈச்சம்பாக்கம் வந்துடலாம்...!

    அது வந்து துரை... சரியா பதினோரு மணிக்கு ஒருத்தர்க்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்கேன்...

    என்னது! பதினோரு மணிக்கு அப்பாயிண்ட் மெண்ட்டா? ஏதாவது ‘பலான ’ பார்ட்டியா...?

    இல்ல துரை...! ஆர்க்கியாலஜி டிபார்ட் மெண்ட்டைச் சேர்ந்த ரிடையர்ட் டெப்டி டைரக்டர் ஒருத்தர் என்னைப் பார்த்து பேசணும்ன்னு ஒரு வாரமாய் நச்சரிப்பு. என்னோட பி.ஏ. கிருஷ்ணன் இன்னிக்கு அப்பாய்ண்ட் மெண்ட் கொடுத்துட்டார்.

    என்ன தாமரை... நேரங்கெட்ட நேரத்துல போய் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்து இருக்கே... எவனாவது அரிவாளையோ, துப்பாக்கி யையோ தூக்கிட்டு வந்து போட்டுத் தள்ளிடப் போறான். அப்புறம் காலையில நீ கண்ணாடி பெட்டிக்குள்ளே படுத்துட்டு மலர்வளையங்களை வாங்கிக்க வேண்டியதுதான்!

    அப்படியெல்லாம் யாரும் என்னைப் போட்டுத் தள்ளிட முடியாது துரை. வரப்போறவர் ஒரு ரிடையர்ட் பார்ட்டி. ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்.

    "மூணு வருஷத்துக்கு முந்தி நான் பொதுப் பணித்துறை அமைச்சராய் இருத்தப்ப என்னோட ஃபோர்ட் போலியோவுக்குள்ளே அந்த ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் இருந்தது. அதில் இருக்கிற சில அதிகாரிகளையும் எனக்குத் தெரியும். உன்னைப்

    Enjoying the preview?
    Page 1 of 1