Sorkkam En Kaiyil
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Oru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sorkkam En Kaiyil
Related ebooks
Nenjellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsIrakka Piranthaval Sindhu Rating: 0 out of 5 stars0 ratingsSumathi Engira Sumai Rating: 0 out of 5 stars0 ratingsEn Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathivelai Rating: 5 out of 5 stars5/5Mohanaa Muppathu Naal Rating: 0 out of 5 stars0 ratingsUlagai Vilai Kel! Rating: 1 out of 5 stars1/5Nenjamellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsVellai Iruttu Rating: 0 out of 5 stars0 ratingsIrandil Ontru Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Seithi and Kannilladikuthu Minnal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum Kili Rating: 0 out of 5 stars0 ratingsKollamal Varathey Rating: 5 out of 5 stars5/5Antha Sandhirane Saatchi Rating: 4 out of 5 stars4/519 vayathu Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal and Vidinthal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru Rating: 0 out of 5 stars0 ratingsSaththamillatha Nayaakara Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Pommai Nanum Pommai Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Naal and Aaagaiyal Naan Kolai Seithen Rating: 0 out of 5 stars0 ratingsKarupu Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi sottu Iraththam Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Oru Thadavai Rating: 0 out of 5 stars0 ratingsVaa Arugil Vaa and Kagitha Ayuthangal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Saththam Intha Neram Rating: 0 out of 5 stars0 ratingsKannukkulle Unnai vaithen Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Sorkkam En Kaiyil
0 ratings0 reviews
Book preview
Sorkkam En Kaiyil - Rajeshkumar
19
1
சந்திரிகாவின் கையிலிருந்த அட்ரஸ் காகிதம் அந்த பங்களாதான் என்று சத்தியம் செய்தது.
‘திவான் பகதூர் ரோட்டுக்கு இடது கைப்பக்கமாய் பிரியும் சம்பந்தம் முதலியார் ரோட்டில் ஏழாவது கிரா ஸிங்கில் இரண் டாவது பங்களா...’ - கான்ஸ்டபிள் ஒருவ ரிடம் ‘பாண்டியராஜ் பங்களாவுக்கு எப்படிப் போகணும்?’ என்று வழி கேட்ட பொழுது அவர் சொன்ன வார்த்தை களுக்கு ஏற்ப அந்த பங்களா நின்றது.
கோவைக்கே உரித்தான குளிர்காற்று வீசும் அந்த காலை நேரத்திலும் சந்திரிகாவின் ஒன்றரை அங்குலப் பரப்புள்ள சிறிய நெற்றிப் பிரதேசத்தில் வியர்வை அரும்புகள் பிரசவமாயின. இரவு முழுவதும் ரயிலில் தூங்காமல் வந்த களைப்பு - அவளுடைய அழகிய விழிகளில் விஸ்தாரமாய் பரவி சிவப்பைப் பூசியிருந்தது. அக்குள் பிரதேசத்தில் வியர்வை கசகசவென்று பிளவுஸைத் தெப்பலாய் நனைக்க ஆரம்பித்தது. நேற்றைக்கு இரவு ரயிலில் வந்தபொழுது எதிரே உட்கார்ந்து வந்த ஒரு லுங்கி ஆசாமி, கூட்ட நெரிசலை சாக்காய் வைத்துக் கொண்டு, அவளுடைய தொடைகளை உரசிக் கொண்டே வந்ததை நினைத்த பொழுது அழுக்குத் தண்ணீரை குடித்துவிட்டாற்போல் ஒரு அருவெறுப்பு அவளுள் பரவியது. குளித்துவிட்டு பளிச்சென்று வேறு சேலை உடுத்திக் கொண்டு பாண்டியராஜைப் பார்க்கத்தான் அவள் முதலில் நினைத்திருந்தாள். ஆனால் முன்பின் தெரியாத ஊரில் எந்த லாட்ஜில் போய்த் தங்குவது? ஒரே துணையான அண்ணன் ரத்தினம் உடன் வந்திருக்கலாம். கடைசி நேரத்தில் அவன் வேலை பார்த்து வந்த மில்லில் லீவு இல்லையென்று கை விரித்து விடவே இவள் மட்டும் ஒரு சின்ன சூட்கேஸில் வேண்டியதை அடைத்துக் கொண்டு - பாண்டியராஜ் கொடுத்திருந்த விளம்பரக் கட்டிங்கை எடுத்துக் கொண்டு ஒரு அசட்டுத் துணிச்சலோடு நீலகிரி எக்ஸ்பிரஸ் பிடித்து - ஏழுமணி சூரியன் கோவை நகரை உசுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் இறங்கி, ஆட்டோவில் ஏற மனமின்றி பஸ் பிடித்து ஆர்.எஸ்.புரம், காந்தி பார்க் ஸ்டாப்பிங்கில் இறங்கி - கான்ஸ்டபிளிடம் வழிகேட்டு ஒரு வழியாய் பாண்டியராஜின் பங்களாவை அடைந்துவிட்டிருந்தாள்.
பங்களா காம்பௌண்ட் சுவரின் முகப்பில் பதிக்கப் பெற்றிருந்த ஒரு அடி சதுர பரப்புள்ள சலவைக் கல்லில் அந்த வார்த்தை தெரிந்தது. ‘சொர்க்கம்.’
பங்களாவுக்கு ஏற்ற பெயர்தான்! சந்திரிகா பிரம்மாண்டமாய் நின்ற பங்களாவைப் பிரமிப்போடு பார்த்தாள்.
காம்பௌண்ட் வாசலில் நின்றிருந்த காவலாள் கூர்க்கா இல்லை. சுத்தமான தமிழ் ஆள். சந்திரிகாவைப் பார்த்ததும் புகைத்துக் கொண்டிருந்த பீடியை அவசர அவசரமாய் இழுத்துவிட்டு அவளை நெருங்கினான்.
என்னம்மா, யார் வேணும்...?
சந்திரிகா கையிலிருந்த சூட்கேஸை கீழே வைத்தபடி மெல்லிய குரலில் சொன்னாள். எம் பேரு சந்திரிகா; மெட்ராஸிலிருந்து வர்றேன். பாண்டியராஜ்ன்னு ஒருத்தர். வேலை விஷயமா அவரைப் பார்க்க வந்தேன். அவரோட பங்களா இதுதானே...?
உம்... உம்
என்றவன், இப்ப இந்த நேரத்தில் முதலாளியை யாரும் பார்க்க முடியாது. அவர் குளிச்சிட்டு பூஜை பண்ணிட்டிருக்கிற நேரம் இது.
என்றான் அலட்சியமாய். ‘இவளுக்காக பீடியை அவ்வளவு சீக்கிரத்தில் அணைத்திருக்க வேண்டாம்’ - மனசுக்குள் சபித்துக் கொண்டான். வேலை தேடி வந்த பெண் என்று தெரிந்ததும் அவனைக் கேட்காமலேயே அலட்சியம் டன் டன்னாய் முகத்தில் ஏறிக் கொண்டது.
முகத்தில் சட்டென்று ஏமாற்றம் கப்பிக் கொள்ள, அந்தக் காவலாளியை மௌனமாய்ப் பார்த்தாள். நான் வெளியூரிலிருந்து வந்திருக்கேன்... அதுவும் வேலை விஷயமா வந்திருக்கேன். எனக்கு முன்னாடி வேற யாரும் வந்து அந்த வேலைக்கு முயற்சி செஞ்சிடக் கூடாதேங்கிற பதை பதைப்புல ஓடி வந்திருக்கேன். தயவு செஞ்சு என்னை உள்ளே போக விடுங்க.
உன்னை இப்ப உள்ளாற விட்டா என்னோட முதலாளி என்னைக் கன்னாபின்னான்னு பேசி நார்நாரா கிழிச்சிடுவார். இருந்தாலும் உன்னைப் பார்த்தா மனசுக்கு என்னமோ போல இருக்கு... உள்ளாற விடறேன். ஆனா ஒரு கண்டிஷன்.
என்ன?
ஒரு பீடி கட்டுக்கும் ஒரு டீக்கும் ஆகிற காசைத் தரணும்.
சந்திரிகாவுக்கு மனசுக்குள் சிரிப்பு பொங்கியது. அதை உதடுகளில் வழிய விடாமல் அடக்கிக் கொண்டவளாய் அவனைப் பார்த்தாள். கேட்டாள்.
எவ்வளவு வேணும்?
ஐம்பது காசு.
போதுமா? இந்தா ஒரு ரூபாயாவே வெச்சுக்க...
பிளவுஸுக்குள் கையை விட்டு அந்தச் சிறிய பர்ஸை எடுத்து - ஜிப்பைப் பிரித்து கசங்கிப் போய் சுருண்டிருந்த ஒற்றை ரூபாய் தாளொன்றை எடுத்து நீட்டினாள்.
காவலாளியின் மொத்த பற்களும் வெளியுலகை வேடிக்கை பார்த்தது. பேச்சில், பார்வையில், நடத்தையில் ஒரு போலித்தனமான மரியாதை ஒட்டிக் கொள்ள - சொன்னான்.
போங்கம்மா... உள்ளாற போங்க... போர்டிகோவைத் தாண்டிப் போனீங்கன்னா முன்னாடி வர்ற ரூம்ல கறுப்பு கோட்டு போட்டுக்கிட்டு சிவப்பா ஒருத்தர் மேஜைக்கு பின்னாடி உட்கார்ந்து எதையாச்சும் எழுதிட்டிருப்பார். அவர்கிட்டே முதலாளியைப் பார்க்கணும்னு சொல்லுங்க. அவர் ஏற்பாடு செய்வார். அவர்தான் முதலாளி ஐயாவுக்கு பி.ஏ.
கேட்டைத் திறந்துவிட்டான்.
சந்திரிகா உள்ளே நுழைந்தாள். அயர்ந்து போனாள்.
போர்டிகோவின் முன்புறம் இளம் பச்சை வண்ணப் பெயிண்ட்டை ஒரே சீராய் தடவின மாதிரி ஒரு பெரிய புல்தரை. நடுவில் குழலூதும் கண்ணன் சிலை. இடுப்பில் குடத்தோடு வரும் ருக்மிணி. புல்தரையைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த தொட்டிகளில் சிரிக்கும் ரோஜா பதியன்கள். அவற்றில் சிவப்பு வண்ணக் காகிதங்களை கிழித்து ஒட்ட வைத்தாற்போல சிரிக்கும் ரோஜாக்கள்!
மனசில் காட்சிகள் வேகமாய்ப் பதிய - அவைகளின் அழகில் சிலிர்த்தாள் சந்திரிகா. தூய வெண்ணிறத்தில் நின்றிருந்த அந்த பங்களா அவளை வியப்போடு பார்ப்பதுபோல் ஓர் உணர்வு. மெல்ல நடை போட்டாள்.
‘இந்தப் புல்தரையைப் பார்த்துக் கொண்டே ஆயுசு பூராவும் இங்கேயே உட்கார்ந்து விடலாம் போலிருக்கிறதே...! என்ன அழகான - இதமான - கண்களை வருடிக் கொடுக்கிற பச்சை! ஆண்டவன் இந்தப் பச்சையை உண்டாக்க எதை, எந்த விகிதத்தோடு சேர்க்கிறான்?’
சந்திரிகா யோசித்துக் கொண்டே நடந்தாள்.
போர்டிகோவில் நின்றிருந்த அந்த சாக்லேட் வண்ண செவர்லே காரும் - சாம்பல் வண்ண பியட்டும் அப்போதுதான் குளித்திருந்தன. மஞ்சள் வண்ணப் பாலீஷ் துணியில் காரின் உடம்பைத் தேய்த்துக் கொண்டிருந்த காக்கிச் சட்டை டிரைவர் சில விநாடிகள் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
அவன் கேட்காமலேயே சந்திரிகா சொன்னாள்.
முதலாளியைப் பார்க்கணும்...
அப்போதும் அவன் பதிலொன்றும் பேசாமல் - பங்களாவின் உள்ளே கையைக் காட்டினான். ‘முதலாளியைப் பார்க்கணும்’ என்று தான் சொன்ன வார்த்தைகளை ஒரு கணம் நினைத்த சந்திரிகா அவளையும் அறியாமல் பிறந்துவிட்ட புன்னகையை உதடுகளில் நிறுத்தினாள்.
முகம் தெரியாத அந்த பாண்டியராஜையே இன்னமும் அவள் பார்க்கவில்லை. அவரும் அவளைப் பார்க்கவில்லை. இருவருமே இன்னமும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாதபோது அவர் எப்படி முதலாளியாக முடியும்?
‘இந்த வேலை எனக்குக் கிடைத்துவிடும் என்பதற்கு உத்திரவாதமாய் அந்த வார்த்தைகள் என் நாக்கில் புரண்டதா?’
சந்திரிகா திறந்திருந்த கண்ணாடிக் கதவின் வழியாக உள்ளே நுழைந்தாள். காவலாளி சொன்ன மாதிரியே கறுப்புக் கோட்டில் சிவப்பாய் ஒருவர் தெரிந்தார். மேஜையின் மேல் கற்றை கற்றையாய் பைல்களை வைத்துக் கொண்டு எதையோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தார். உச்சந்தலையில் வழுக்கை பரவியிருந்தது. கறுப்புக் கோட்டின் காலர் பாகம் நைந்திருந்தது. கூரிய மூக்கிற்குக் கீழே - மேலுதட்டில் நரை மயிர் கசமுசாவென்று மீசை என்று பெயர் சொல்லிக் கொண்டு வளர்ந்திருந்தது. தாடியும் அதே அடர்த்தியில் தெரிந்தது. முகத்தில் குறைந்தபட்சம் முந்நூறு சுருக்கங்களாவது இருக்கும். வயசு? ஐம்பதும் மதிக்கலாம் - எண்பதும் மதிக்கலாம் என்பதுபோல் ஒரு ரெண்டுங்கெட்டான் தோற்றம். ஆனால் பெரியவர் முகத்தில் நிச்சயம் கண்ணியம் இருந்தது. நெற்றியில் நாமம் சிரித்தது.
வணக்கம் சார்...
- சந்திரிகா மெல்லிய குரலில் சொன்னாள்.
பட்டென்று தலைநிமிர்ந்தார் பெரியவர்.
மேஜையின்மேல் இரண்டு கால்களால் நின்றபடி தவம்