Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rojakkalum Thottakalum
Rojakkalum Thottakalum
Rojakkalum Thottakalum
Ebook146 pages48 minutes

Rojakkalum Thottakalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Rojakkalum Thottakalum

Read more from Rajeshkumar

Related to Rojakkalum Thottakalum

Related ebooks

Related categories

Reviews for Rojakkalum Thottakalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rojakkalum Thottakalum - Rajeshkumar

    18

    1

    காஷ்மீர் என்பது வெறும் மாநிலம் மட்டுமல்ல. அது இந்தியாவின் மணிமகுடம் போன்றது. அந்த மணிமகுடத்தைக் கைப்பற்ற நினைப்பவர்களுக்கு ஒரு இந்தியனின் பணிவான எச்சரிக்கை. எதிரிகளே! நீங்கள் காஷ்மீரத்து மண்ணுக்கு ஆசைப்பட்டால் அந்த மண்ணில் பூக்கும் ரோஜாக்களும் தோட்டாக்களாக மாறும். ஜாக்கிரதை!

    ஸ்ரீநகர் ஏர்போர்ட்டை ஏ.ஐ.117 விமானம் தொட்டபோது அது சாயந்தர நேரம்.

    பனி பாலாய் பொழிந்து கொண்டிருக்க, கனமான உல்லன் கோட்டுக்களில் குடி புகுந்திருந்த மௌரியாவும், வருணும் விமானத்தின் இடுப்போடு ஒட்டியிருந்த படிகளில் கட்டிப் பிடித்தபடி இறங்கினார்கள்.

    மௌரியா - வருண்?

    கரெக்ட். நீங்கள் ஊகித்தது சரிதான். புதுமணத்தம்பதிகள். முதல் இரவின் போது ஹனிமூனுக்கு எங்கே போகலாம் என்று பேச ஆரம்பித்ததில் காஷ்மீர் தேர்வாயிற்று. ‘துப்பாக்கித் தோட்டாக்களின் சத்தத்தில்போய் ஹனிமூனைக் கொண்டாட வேண்டுமா?’ என்று கேட்டவர்களுக்கு மௌரியா - வருண் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமோ...? ‘அந்த சத்தத்தில் எங்களுடைய ஹனிமூனைக் கொண்டாடினால்தான் எங்களுக்கு பிறக்கப்போகும் ஆணோ பெண்ணோ தைரியசாலியாக இருப்பார்கள்.’ இந்தியாவின் மேல் கொஞ்சம் அதிகப்படியாய் பாசம் வைத்து இருப்பவர்கள். காதலர்களாய் இருந்தபோது ஒன்றாய் உட்கார்ந்துதான் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பார்கள். இந்தியா ஜெயித்துவிட்டால் அவர்கள் எத்தனை ரன்கள் எடுத்தார்களோ அத்தனை ரூபாய்க்கு ஸ்வீட் வாங்கி ரோட்டில் போகிறவர்களுக்கு விநியோகிப்பார்கள். தோற்றுப் போனால் ஒரு வாரத்துக்கு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளாமல் துக்கம் அனுஷ்டிப்பார்கள். இவர்களுடைய தேசபக்திக்கு இன்னொரு சாம்பிள் சொன்னால் திகைத்துப் போவீர்கள். எந்த ஒரு ஆட்டோவின் பின்னாலாவது ’I LOVE MY INDIA’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தால் அந்த ஆட்டோவை நிறுத்தி டிரைவரின் கையைப் பிடித்து குலுக்கிப் பாராட்டிவிட்டு ஒரு நூறுரூபாய் நோட்டையும் டிரைவரின் பாக்கெட்டில் திணித்துவிடுவார்கள். இந்த இரண்டு பேர்களையும் பற்றி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் அவர்கள் ஏதோ பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

    மௌரி....

    சொல்லுடா... (தமிழ்நாட்டு மண்ணை மிதிக்கிற வரைக்கும் கணவனை ‘டா’ போட்டுப் பேச பர்மிஷன் வாங்கியிருக்கிறாள் மௌரியா.)

    ‘ரோஜா’ படத்துல வர்ற மாதிரி என்னை தீவிரவாதிகள் யாராவது கடத்திக்கிட்டு போய்ட்டா நீ என்ன பண்ணுவே...?

    ஏண்டா... இப்படி வந்ததும் வராததுமா அபசகுனம் பிடிச்சவன் மாதிரி பேசறே...?

    சும்மா... ஒரு பேச்சுக்குத்தான்...! நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடுமா என்ன...? நான் தீவிரவாதிகளால கடத்தப்பட்டா உன்னோட ரியாக்ஷன் எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்.

    அப்படியா...?

    ம்... சொல்லு...! நீ என்ன பண்ணுவே...?

    அது.. வந்து.. வந்து...

    ம். சொல்லு... நீ என்ன பண்ணுவே...?

    நீ அந்த தீவிரவாதிகள்கிட்டேயிருந்து தப்பிச்சுக்கிட்டு வர்ற வரைக்கும் ஹோட்டல் ரூம்ல உட்கார்ந்து டி.வி. பார்த்துக்கிட்டிருப்பேன்... சன் டி.வி. இங்கே தெரியுமா?

    என்ன மௌரி இது...! நான் எவ்வளவு சீரியஸான விஷயத்தைப் பத்தி சொல்லிட்டிருக்கேன். நீ என்னடான்னா ஹோட்டல் ரூம்ல உட்கார்ந்து டி.வி பார்த்துக்கிட்டிருப்பேன்னு சொல்றே...?

    நீதானே... ‘இது சும்மா ஒரு பேச்சுக்கு’ன்னு சொன்னே? அதனால்தான் அதை நான் சீரியஸா எடுத்துக்கலை...

    சரி... ஒரு முத்தம் கொடு...

    எதுக்குடா...?

    குளிர்க்கு இதமா எல்லாரும் சூடா ஒரு டீ குடிப்பாங்க... புதுப்பொண்டாட்டி பக்கத்துல நீ இருக்கும்போது எதுக்காக ஒரு டீக்கு அஞ்சுரூபாய் செலவு பண்ணணும்...?

    வருண்! அப்படி ஓரமா உட்கார்ந்து ஒரு காரியம் பண்றியா?

    என்ன மௌரி...?

    நீ மனப்பாடம் பண்ணி வெச்சிருக்கிற பாடாவதி தமிழ் டயலாக்குகளையெல்லாம் மூட்டை கட்டு...! நீ தமிழ் படங்களைப் பார்த்து பார்த்து மரத்தை சுத்தி பாடற ஹீரோ மாதிரி ஆயிட்டே.

    ரொம்பவும் ஆச்சரியமாயிருக்கு மௌரி...

    எது...?

    நான் ஏதாவது ‘பஞ்ச்’சிங்கா பேசினா உடனே அது தமிழ் டயலாக்தான்னு எப்படி கண்டுபிடிக்கிறே...?

    உனக்கு எவ்வளவு ஐ.க்யூ. இருக்குன்னு எனக்குத்தான் மனப்பாடமா தெரியுமே? மௌரியா சிரித்து சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளுடைய வானிடி பேக்கில் தூங்கிக் கொண்டிருந்த செல்போன் ‘வந்தே மாதரம்’ ரிங்டோனை வெளியிட்டது. செல்போனை எடுத்து பொன்வளையம் ஆடும் காது மடலுக்கு கொடுத்தாள்.

    ஹலோ...

    மறுமுனையில் மௌரியின் அப்பா மோகனரங்கத்தின் குரல்.

    என்னம்மா மௌரி...! ஸ்ரீநகர் போய் சேர்ந்துட்டீங்களா? இல்லை... இன்னும் ஃப்ளைட்லதான் இருக்கீங்களா....?

    இப்போ ஏர்போர்ட்ல இருக்கோம்பா... ஃப்ளைட் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் லேண்ட் ஆச்சு.

    மாப்பிள்ளைக்கிட்டே கொஞ்சம் செல்போனைக் கொடும்மா... அவர்கிட்டே கொஞ்சம் பேசணும்.

    மௌரியா தன் கையில் இருந்த செல்போனை வருணிடம் கொடுத்தபடி சொன்னாள்.

    உங்க மாமனார்... உங்ககிட்டே பேசணுமாம்.

    வருண் செல்போனை வாங்கி வலது காதுக்கு ஒற்றினான்.

    ஹலோ மாமா...

    என்ன மாப்பிள்ளை... ஸ்ரீநகர் எப்படியிருக்கு...? ‘ஸ்நோ ஃபாலிங்’ அதிகமா...?

    ஸ்நோ ஃபாலிங் இல்ல மாமா... குளிர் மட்டும் அடி எலும்பு வரைக்கும் பாயுது...

    "மாப்பிள்ளை! ஹனிமூனுக்காக நீங்க தேர்ந்து எடுத்த ஊர் விஷயத்தில எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் பிடிவாதமா இருந்ததால என்னால மறுத்துப்பேச முடியலை. இன்னிக்கு உலகத்தில் இருக்கிற பதட்டம் நிறைந்த பத்து பகுதிகளில் காஷ்மீர் பகுதியும் ஒண்ணு. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலைமை... இந்த நிலைமையிலே நீங்க ஸ்ரீநகரிலும் சரி காஷ்மீரிலும் சரி அதிக நாட்கள் இருக்கிறது சரியில்லை. உடனடியாய் டூர் ட்ரிப்பை முடிச்சுக்கிட்டு சென்னை

    Enjoying the preview?
    Page 1 of 1