Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

9-vathu Thisai
9-vathu Thisai
9-vathu Thisai
Ebook149 pages51 minutes

9-vathu Thisai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
9-vathu Thisai

Read more from Rajeshkumar

Related to 9-vathu Thisai

Related ebooks

Related categories

Reviews for 9-vathu Thisai

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    9-vathu Thisai - Rajeshkumar

    19

    1

    திருக்கருகாவூர் ரயில்வே ஸ்டேஷனில் அந்த பாஸஞ்சர் ரயில் நின்ற பொழுது ராத்திரியும் சாயந்தரவேளையும் கை கோர்த்துக் கொண்டிருந்த ஏழு மணி. ரயிலின் கடைசி கம்பார்ட்மெண்டான லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டிலிருந்து கையில் ஒரு சின்ன சூட்கேஸோடு அந்த செம்மண் பிளாட்பாரத்தில் உதிர்ந்தாள் பூவிழி. ஸ்டேஷன் ஏதோ ஒரு ஹைதர் காலத்து சமாச்சாரம் போல் அரதப் பழசாய் தெரிய, அஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஒரு சிறிய ஷெட்டுக்குள் புகை படிந்த ட்யூப்லைட் ஒன்று மங்கிப்போன வெளிச்சத்தோடு எரிந்து கொண்டிருந்தது.

    பூவிழி ஸ்டேஷனின் நுழைவு வாயிலை நோக்கி மெல்ல நடைபோட்டாள். இருபத்திமூன்று வயது பூவிழி பத்து மணி நேர ரயில் பயணத்திலும் அழகாய் தெரிந்தாள். உடுத்தியிருந்த வெளிர் மஞ்சள் புடவையும் அதே வண்ண ஜாக்கெட்டும் அவளுடைய உடம்பின் சந்தன நிறத்துக்கு ஒத்துப் போயிருந்தது.

    அஸ்பெஸ்டாஸ் ஷெட்டுக்கு கீழே நின்றிருந்த அந்த வயதான ஸ்டேஷன் மாஸ்டர் பச்சை விளக்கைக் காட்டி ரயிலை அனுப்பிவிட்டு அவரே டிக்கெட் கலெக்டராகவும் மாறி பூவிழியின் கையில் இருந்த டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டார். தன்னுடைய அறையை நோக்கி நகர முயன்றவரை ஸார் என்று குரல் கொடுக்க அவர் நின்றார்.

    என்னம்மா...?

    சித்தர்காடு இங்கிருந்து எவ்வளவு தூரம்?

    ஏழு... கிலோ மீட்டர்.

    பஸ் இருக்குமா...?

    ஸ்டேஷன் மாஸ்டர் தன் மணிக்கட்டை உயர்த்தி வாட்ச்சைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.

    ரயில் லேட்டா வந்ததாலே ஆறே முக்கால் மணி பஸ் புறப்பட்டு போயிடுச்சு... இனி அடுத்த பஸ் எட்டே முக்கால் மணிக்குத்தான். அதுதான் கடைசி பஸ். இன்னும் ஒண்ணே முக்கால் மணி நேரம் வெயிட் பண்ணணுமே...? சொன்னவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கேட்டார்.

    உன்கூட வேற யாரும் வரலையாம்மா...?

    இல்ல... நான் மட்டுந்தான் வந்திருக்கேன்...

    என்னம்மா... நீ... இப்படியா ஒரு பொண்ணு புறப்பட்டு வர்றது. துணைக்கு யாரையாவது கூட்டிகிட்டு வரவேண்டாம்?

    ‘அப்படியாராவது இருந்திருந்தா கூட்டிட்டு வராமே இருந்து இருப்பேனா ஸார்...?’ ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்ல நினைத்து மௌனமானாள் பூவிழி.

    உனக்கு எந்த ஊரம்மா...?

    சுந்தரபாண்டியம்.

    சித்தர் காட்டில் யார் இருக்காங்க...?

    எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்.

    பேரு...?

    சம்பத்...

    சம்பத்தா... அவர் என்ன தொழில் பண்றார்?

    பழங்கால ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி பண்றதுக்காக சித்தர் காட்டில் ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கார்.

    சரியான அட்ரஸ் இருக்கா...?

    இருக்கு... குடலூர் மாரியம்மன் கோயில் தெப்பக் குளத்துக்குப் பக்கத்துல வீடு.

    ஸ்டேஷன் மாஸ்டர் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு பூவிழியை ஏறிட்டார்.

    இதோ பாரம்மா...! ஊர் முன்ன மாதிரி கிடையாது. எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு யாரையும் ஜட்ஜ் பண்ண முடியலை. சித்தர் காட்டுக்கு நீ போகணும்ன்னா எட்டே முக்கால் மணி பஸ் வர்ற வரைக்கும் காத்துட்டிருக்கணும்.

    ஆட்டோ எதுவும் கிடைக்காதா ஸார்?

    இந்த ஊர்ல ஆட்டோ கிடையாது. குதிரை வண்டிதான்.

    அது போதும் ஸார்...

    வண்டிக்காரனுக யாரும் இந்த நேரத்துல கிடைக்க மாட்டாங்களேம்மா! சூரியன் மறைஞ்சுட்டா போதும் எல்லாரும் சாராயக் கடைக்கு போயிடுவானுக. காலையில் எட்டு மணி பாஸஞ்சர் ட்ரெயினுக்குத்தான் வண்டி கட்டிட்டு வருவானுக...

    அப்படீன்னா எட்டேமுக்கால் மணி பஸ் வர்றவரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டியதுதானா...?

    நீ அந்த பெஞ்ச்ல போய் உட்காரம்மா. நான் வண்டி ஏதாவது ஏற்பாடு பண்றேன்...

    பூவிழி ஒரு வேப்பமரத்துக்கு கீழே இருந்த சிமெண்ட் பெஞ்சில் போய் உட்கார்ந்து கொள்ள, ஸ்டேஷன் மாஸ்டர் ஆள் இல்லாத ப்ளாட் பாரத்தை பார்வையால் கழுவிப் பார்த்துவிட்டு தொலைவில் குழாயடியில் குளித்துக் கொண்டிருந்த ஒருவனை நோக்கி குரல் கொடுத்தார்.

    டோய்... காளிச்சாமி...

    அந்த காளிச்சாமி பதிலுக்கு குரல் கொடுத்தான்.

    அய்யா...

    இந்நேரத்துக்கு என்னடா குளியலு...?

    காத்தால குளிக்கலைங்கய்யா...

    சரி... சீக்கிரமா குளிச்சுட்டு வா... ஒரு வேலை இருக்கு...

    ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன்ய்யா...

    ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளைக் கோட்டைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு பூவிழிக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

    என்னோட பொண்ணுக்கும் உன்னோட வயசுதாம்மா இருக்கும்... பெங்களூர்ல கட்டிக் கொடுத்திருக்கு. மாப்பிள்ளைக்கு ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை.

    ஸார்! உங்க பேரை தெரிஞ்சுக்கலாமா?

    லட்சுமி நாராயணன்... இந்த எஸ்.எம்.போஸ்டில் முப்பது வருஷம் குப்பைக் கொட்டியாச்சு... இன்னும் ரிடையர்மெண்ட்டுக்கு நாலு வருஷம் இருக்கு...

    இந்த ஸ்டேஷன்ல எத்தனை வருஷமா இருக்கீங்க ஸார்?

    ரெண்டரை வருஷமா...

    உங்ககிட்டே ஒரு கேள்வி கேட்கலாமா ஸார்?

    கேளும்மா...

    சித்தர்காடு கிராமத்தில் ஏடு பார்த்து அதாவது பழங்கால ஓலைச்சுவடிகளை படிச்சு ஒருத்தர்க்கு பலன் சொல்றது ரொம்பவும் பிரசித்தம் இல்லையா...?

    ஆமா... அந்த கிராமத்தில் இருக்கிற பலபேர்க்கு அதுதான் தொழில். சிவகாசிக்கு தீப்பெட்டி மாதிரி சித்தர்காட்டுக்கு ஓலைச்சுவடி.

    ஸார்... இதெல்லாம் உண்மையா...?

    எது...?

    இந்த பழங்கால ஓலைச்சுவடிகளைப் பார்த்து ஒருத்தர்க்கு பலன் சொல்றது?

    ஸ்டேஷன் மாஸ்டர் புன்னகைத்தார். "கணக்கு வாத்தியார் சரியானவராக இருந்தால் அவர் சொல்லிக் கொடுக்கிற கணக்கும் சரியாயிருக்கும். இந்த ஏடு பார்க்கிற தொழிலில் சரியான கணக்கு வாத்தியார் யாரு... தப்பான கணக்கு வாத்தியார் யாருன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1