Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vensangu
Vensangu
Vensangu
Ebook97 pages32 minutes

Vensangu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803261
Vensangu

Read more from Maharishi

Related to Vensangu

Related ebooks

Reviews for Vensangu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vensangu - Maharishi

    http://www.pustaka.co.in

    வெண்சங்கு

    Vensangu

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    நான் வாங்கிக் கொடுத்த வேலை அது. என் மேல் உள்ள ஒரு நல்ல அபிப்பிராயத்தால் அந்த வேலையை உனக்குச் சுலபமாக வாங்கித் தர முடிந்தது. அப்படிப்பட்ட வேலையை நீ என் சம்மதம் இன்றி விட முடியாது -சாரங்கன், தங்கை திலகத்திடம் சப்தமிட்டுக் கொண்டிருந்தான்.

    சாதாரண சிறிய ஓட்டு வீடு அது. வாசலில் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய திண்ணைகள். அதை ஓலைச் சார்புகள் மறைத்துக் கொண்டிருந்தன.

    சுவரில் சாய்ந்தபடி சகோதரன் முன்னால் தலை குனிந்து நின்றுகொண்டிருந்தாள். அவள் புடவைத் தலைப்பைப் பறறியபடி நின்ற சிறுவன், தன் வாயில் விரலை வைத்து ருசித்த வண்ணம்... முன்கூடத்தில் சினத்துடன் உலாவும் மாமா சாரங்கனைப் பீதியுடன் பார்த்தபடி இருந்தான்.

    அங்கே என்னால் வேலை செய்ய முடியவில்லை. அந்த டிரில் மாஸ்டர் கடங்காரன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறான்.

    அரைக்கை சட்டையும் வேஷ்டியும் அணிந்து கூடத்தில் உலாவிக் கொண்டிருந்த சாரங்கன், வேலை செய்கிற இடத்தில் நீயும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். எல்லாரிடத்திலும் வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் பல்லை இளித்துக்கொண்டு ரொம்ப மேலே விழுந்துபழகினா பார்க்கிறவங்களுக்கும் ரொம்ப சல்லீசாதோணும் என்றான்.

    நான் ஒண்ணும் அப்படியெல்லாம் இல்லை.

    நீ எந்த மாதிரி லட்சணம் என்பதுதான் இதோ... போகம் ஐந்து வயது... இவனைப் பார்த்தாலே தெரியுமே...

    சாரங்கா...! என்று கண்கலங்க அழைத்தாள் திலகம்.

    உன்னிடம் மருந்துக்கு வந்தேன். - சாதாரண, புண்ணே ரணமாக்கிக் கொள்ள வரவில்லை. பழைய குப்பைகளைக் கிளறி என்னைப் புண்படுத்தாதே...

    பழைய குப்பையா? எதுடி பழைய குப்பை...? தங்கவிக்ரஹம் மாதிரி பெத்து... நாலஞ்சு வயது வரையிலே வளர்த்தும் வைத்துக் கொண்டிருக்கிறாயே இது உனக்குப் பழைய குப்பை ஆகிவிடுமா...?

    இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்...

    "நிறைய இருக்கு... எங்கே போனாலும் உன்னால் கங்கை ஓரிடத்தில் நிரந்தரமாக வேலை செய்ய முடிகிறதா? நிரந்தரமாக வேலை செய்வது ஒருபுறம் இருக்கட்டும்... அமைதியுடன் செய்ய முடிகிறதா? இதோடு நான்கு இடங்களில்வேலைக்குச் சேர்ந்தாகிவிட்டது. ஓரிடம்கூட உனக்குப் பொருத்தமாக இல்லை. எல்லா இடத்திலும் எது பிரச்சினையாக உருவாகி நீ வெளியேறுகிறாயோ அதுவேதான், இங்கேயும் உருவாகி உன்னை வெளியே தள்ளப்போகிறது;, அல்லது நீயாக வெளியேறப் போகிறாய்...

    "முதலில் நாகராஜ் ரெடிமேட் ஸ்டோர்ஸில் அவனிட வேலைக்குச் சேர்ந்தாய். அங்கே உன்னால் ஒரு ஆறுமாதம் மறைந்து கூடக் குப்பை கொட்ட முடியவில்லை. பிறகு அவரே உன்னை நாகராஜ் மெடிகல் ஸ்டோர்ஸில் சேர்த்துவிட்டார். அங்கேயும் அப்படித்தான். அங்கே வேலை செய்து கொணடிருந்த பார்மஸிஸ்ட் உன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றான். 'இந்தப் பையனுக்கு நான் அப்பாவாக இருக்கேன், என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னுசொன்னான்' என்று ஒருநாள் அழுதுகொண்டு வேலைக்குப் போகமாட்டேன் என்று கூறிவிட்டாய். பிறகு இதுவேதான் அந்த பிஸ்கட் பாக்டரியில்...

    அப்பன் பேரு தெரியாமப் பிள்ளையை பெத்து வச்சுகிட்டு இவ்வளவு தைரியமா வெளியே வேலைக்கு தாரண, வராளே '-என்று ஜாடையாகப் பேசியதைக் கூறி அங்கே போவதையும் நிறுத்திக் கொண்டாய். கடைசியில்... இந்தஊர் எம். எல். ஏ.வைப் பிடித்து. இந்தப் பள்ளிக்கூடத்தில்உபாத்தியை உத்தியோகம் வாங்கிக் கொடுத்திருக்கேன். முகம் சிவக்கப் பேசினான் அண்ணன் சாரங்கன்.

    அவன் அங்குள்ள மிகப் பெரிய 'டிம்பர் மார்ட்'டில்வேலை செய்கிறான். குறைந்த வருவாயில் பெற்றோரையும், தங்கை திலகத்தையும் வைத்துப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்ததால் அவனுக்குத் தன் கல்யாண எண்ணமே இல்லாமல் போய்விட்டது. நூற்றைம்பது ரூபாய், இரு நூறு ரூபாய் என்று மாத வருமானத்தில் தன்னால் ஒரு தனிக்குடும்ப விருட்சத்தைச்

    Enjoying the preview?
    Page 1 of 1