Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhndhu Kattuvom Vaa!
Vazhndhu Kattuvom Vaa!
Vazhndhu Kattuvom Vaa!
Ebook102 pages37 minutes

Vazhndhu Kattuvom Vaa!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803253
Vazhndhu Kattuvom Vaa!

Read more from Maharishi

Related to Vazhndhu Kattuvom Vaa!

Related ebooks

Reviews for Vazhndhu Kattuvom Vaa!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhndhu Kattuvom Vaa! - Maharishi

    http://www.pustaka.co.in

    வாழ்ந்து காட்டுவோம் வா!

    Vazhndhu Kattuvom Vaa!

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அர்ச்சனா கதவைத் தட்டிவிட்டு சுந்தரத்தின் ஓட்டுவீட்டின் முன்னால் வந்து நின்றபோது...

    சுந்தரம் துண்டு ஒன்றினால் உடம்பை போர்த்திக் கொண்டு கதவை வேகமாகத் திறந்து எட்டிப்பார்த்தான்.

    அர்ச்சனா நான் வர கொஞ்சநேரமாகும் நீ வேணா முன்னால் போயேன்.

    அப்படி என்ன வேலை தலைபோகிற வேலை? உள்ளே வந்தபடியே கேட்டாள் அவள்.

    தலைபோகிற வேலையில்லைதான் என்றாலும் முக்கியமான வேலையொன்று இருக்கிறது அதை முடித்துவிட்டுத்தான் உன்னுடன் வரமுடியும்.

    நீ இல்லாம நான் என்றாவது தனியே போயிருக்கேனா சுந்தர்? இதென்ன அப்படியொரு வார்த்தையை சாதாரணமாக சொல்லிவிட்டாய். ஒரு அரைமணிநேரம் இரு.வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன்

    அர்ச்சனா பேசிக்கொண்டே படியேறி உள்ளே வந்தாள். சந்து போன்ற நடைபாதை வராண்டா... அதைத் தாண்டியவுடன் ஹால்- எதிரும் எதிருமாக இரண்டு அறைகள். நடுவே சின்னதான முற்றம். மேலே கம்பி போடப்பட்டிருந்தது.

    நடைபாதையைக் கடந்து ஹாலுக்கு வந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.

    கையில் கரண்டியுடன் நின்ற சுந்தரம், சமையல் அறையில் அரிசிக்கஞ்சி அடிபிடிக்கும் வாசனை வரவே வேகமாக உள்ளே ஓடினான்.

    ஹாலில் உடல்நலமின்றி படுத்திருந்த சுந்தரத்தின் தாயார் அருகில் வந்து உட்கார்ந்தான்.

    அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அர்ச்சனா... நேற்று வரை நல்லா இருந்தாங்க ராத்திரிலேயிருந்து ஒரே குளிர் ஜுரம். டாக்டரிடம் அழைத்துபோய் காட்டினேன். டைஃபாய்ட் மாதிரி இருக்கு. நிச்சயமா சொல்ல முடியாது. எதுக்கும் லிக்விட் டயட்டே கொடுங்க... சூடா எதுவும் கொடுக்க வேண்டாம் - என்று சொல்லியிருக்கிறார்.

    சுந்தரத்தின் தாயாரைப் பார்த்து விசாரித்து விட்டு எழுந்த அர்ச்சனா சமையல் அறைக்கு வந்தாள்...

    அந்த ஏழ்மையில் சூழல் அவள் மனதை வேதனைப்படுத்தியது.

    எனக்கு ஒரு வார்த்தை சொல்லி அனுப்பக்கூடாதா சுந்தர்? நான் வந்து உதவமாட்டேனா...

    தெரியும் அர்ச்சனா... உன்னுடைய நல்ல உள்ளம் எனக்குத் தெரியும். உன்னை ஒரு குடைபோல பயன்படுத்திக் கொள்ளவே நான் விரும்புகிறேன் - ஒரு படகுபோல அல்ல. உன்னுடைய சினேகம் என்பது எனக்கு நிழலாக இருந்தாலே போதும். அதுவே எனக்கு மாபெரும் பலம்.

    கஞ்சியை சூடுபோக ஆற்றிக்கொண்டிருந்தான்.

    பால் இருக்கா...

    பால் இல்லே... தான் காரில் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் ட்ரேயை எடுத்து வந்து அவன் முன்னால் வைத்தாள்.

    ஃபிளாஸ்கில் நிறைய பால் இருக்கு எத்தனை வேணுமோ எடுத்துக்கோ...

    ஃபிளாஸ்கை எடுத்து அவன் முன்னால் வைத்தாள்.

    இதிலே குளூகோஸ் போட்டு கரைத்த ஆரஞ்சு ஜூஸ் நிறைய இருக்கு இதை அப்படியே அம்மாவிடம் கொடு.

    அர்ச்சனா!

    நோ... மோர்... ஆர்க்யூமெண்ட்... கிளாஸ் முடிஞ்சு நீ குடிக்க வச்சிருக்கிறதையெல்லாம் கொடுக்கறயே.

    அவன் மறுபடியும் தயங்கினான்.

    என்ன தயக்கம் சுந்தர்...? இந்த சாதாரண விஷயத்துக்காக இவ்வளவு தயக்கம் காட்டறயே.

    வந்து...

    சுந்தரம் ஏதோ சொல்ல வந்தான்… அவற்றை காதில் வாங்கிக்கொள்ளாத அர்ச்சனா எவர்சில்வர் கூஜாவில் இருந்து ஆரஞ்சு ஜூஸை ஒரு கண்ணாடி தம்பளரில் நிறைய ஊற்றி எடுத்துக்கொண்டு ஹாலில் படுத்திருக்கும் சுந்தரின் தாயார் ஹம்சாவிடம் வந்து உட்கார்ந்தாள் - கைத்தாங்கலாக ஹம்சாவை எழுப்பி சுவற்றில் சாய்த்து உட்காரவைத்தாள்.

    அம்மா முன்னால இந்த ஜூஸை குடிங்க கஞ்சி வேணும்னா குடிக்கலாம்...

    இதெல்லாம் எதுக்கும்மா அர்ச்சனா? நீ டான்ஸ் கிளாஸ் முடிச்சவுடனே களைப்பா இருப்பே அப்போ குடிக்க இதைக்கொண்டு போறே இதை எனக்குக் கொடுத்துட்டு நீ களைப்போட காயப்போறயா...

    டான்ஸ் இருக்கட்டும்மா எனக்கு வேணும்னா நான் வேற எடுத்துக்கறேன். ஒரு பத்து நிமிஷம் வீட்டுக்குப் போனா வேலைக்காரங்களிடம் சொல்லி பிழிஞ்சு எடுத்துண்டு போறேன். இதென்ன பெரிய விஷயமா...

    நிலைவாயிற்படியில் வந்து நின்ற மகன் சுந்தரத்தைப் பார்த்தாள் தாயார்.

    அம்மா பொதுவா சொல்லப்போனா அர்ச்சனாவின் அன்புக்கு முன்னால நாம ஓர் அடிமை. அர்ச்சனா கொடுக்கிற எதைத்தான் நம்மால் தடுக்க முடிகிறது? தடுக்க முடிந்திருக்கிறது?

    சாதாரண விஷயத்தையெல்லாம் பெரிசு பண்ணி பேசக்கூடாது - அர்ச்சனா செல்லமாகச் சினந்தாள்.

    பரஸ்பரம் உதவிகள் செய்வதற்கெல்லாம் பெரிய அர்த்தங்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கக்கூடாது. அம்மா... நீங்க முதலில் ஜூஸை சாப்பிடுங்கள்.

    அவள் கண்ணாடி கிளாஸை ஹம்சாவின் உதட்டில் வைத்துப் பிடித்துக்கொண்டாள்.

    அர்ச்சனாவின் செய்கையில் ஒரு செவிலிப் பெண்ணின் கண்டிப்பு இருந்தது

    ஜுஸை குடித்து முடித்தாள் ஹம்சா...

    இன்னும் கொஞ்சம் தரட்டுமா?

    போதும்மா

    ஜுஸ் உள்ள எவர்சில்வர் கூஜாவை திருகி மூடி அங்கே வைத்தாள். ஹம்சா

    Enjoying the preview?
    Page 1 of 1