Nandhavanthil Sila Manitha Pookal
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 3 out of 5 stars3/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsKundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Vetti Vergal Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsMann Bommai Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5
Related to Nandhavanthil Sila Manitha Pookal
Related ebooks
Meendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Oru Kappal Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsNaankadi Savukku Rating: 5 out of 5 stars5/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Vetkathile Oru Venpura Rating: 5 out of 5 stars5/5Kabaddi... Kabaddi! Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Amutherdru Per Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Bothai Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Tamil Selvi Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Kalanthavale...! Rating: 0 out of 5 stars0 ratingsஉன் தோள் சேர ஆசைதான்! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thol Sera Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsThanneer Nila Rating: 0 out of 5 stars0 ratingsNagulanin Maathangi Rating: 0 out of 5 stars0 ratingsThanthuvitten Ennai Rating: 4 out of 5 stars4/5நகுலனின் மாதங்கி..! Rating: 0 out of 5 stars0 ratingsThanimara Thoppu Rating: 0 out of 5 stars0 ratingsKamadenuvin Mutham Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Vidava, Ramya Rating: 0 out of 5 stars0 ratingsMaari Varum Thalaimuraigal Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsIni Nitham Yutham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Sudaatha Sooriyan Rating: 5 out of 5 stars5/5Thottu Vidum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratings'Nesippaya Nenjamey...!' Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nandhavanthil Sila Manitha Pookal
1 rating0 reviews
Book preview
Nandhavanthil Sila Manitha Pookal - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
நந்தவனத்தில் சில மனிதப் பூக்கள்
Nandhavanthil Sila Manitha Pookal
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
1
மூன்று மணிக்கே யாரோ லொட்டு லொட் டென்று தண்ணீர் அடித்த சப்தம் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு நாராசமாய் கேட்க, மொட்டை மாடியில் படுத்திருந்த சிவராம் எரிச்சலோடு போர்வையை இழுத்து முகத்தையும் மூடிக் கொண்டு ஒருக்களித்து படுத்துக் கொண்டான். அப்படியும் சத்தம் தூக்கத்தை கெடுக்க போர்வையை வீசிவிட்டு எழுந்தான். மதில் சுவரோரம் வந்து கீழே குனிந்து பார்த்துக் கத்தினான்.
அர்த்த ராத்திரில யாரது இப்டி தூக்கத்தைக் கெடுக்கறது? மனுஷன் அசந்து தூங்க விடமாட்டீங்களா...?
அது சரி எங்க செளகர்யத்துக்கு நாங்க அடிச்சுக்கறோம்! விடிஞ்சா பம்ப்படிவ கடிகாரத்தை வெச்சுண்டு எல்லாரோடயும் மன்னாட யாரால முடியும்? நாலு குடித்தனம் இருக்கற வீட்ல சத்தம் இருக்கத்தான் செய்யும். பிடிக்காட்டி வேற இடம் பார்த்துண்டு போக வேண்டியதுதானே...?
கீழிருந்து பதிலுக்கு இருளைக் கிழித்துக் கொண்டு குரல் வர சிவராம் சட்டென்று வாய் பொத்திக் கொண்டு வந்து படுத்தான், கீழிருந்து வந்த குரல் கோதண்டம் மனைவி ரங்கத்தினுடையது, கோதண்டம் குடும்பத்தோடு பேசுவதற்கு பொதுவாக அங்கே எல்லோருமே யோசிப்பார்கள். அந்தக் குடும்பத்திடம் வாய் கொடுத்து மீள முடியாது. குள்ளக் குடும்பம் என்றால் அந்த ஏரியாவுக்கே தெரியும்.
முதல் போர்ஷன் காமாட்சியைக் கேட்டால் பிரும்ம ராட்சசி கள் என்பாள். அதென்னமோ அந்த வீட்டில் அனைவருக்குமே சொல்லி வைத்தாற் போல் ஒரே மாதிரி குணம்தான், கோதண் டத்தில் ஆரம்பித்து நேற்று பிறந்த அவர் மகன் வயிற்றுப் பேரன் வரை குசும்பும் குதர்க்கமும், சுயநலமும், சந்தேகமும் அவர்கள் ரத்தத்தில் ஊறி வம்சாவளியாய் வந்து கொண்டிருக்கிறது, குணம் மட்டும் அல்ல முகமும் ரூபமும் கூட அப்படித்தான். அத்தனைபேரும் கறுப்புதான், நெற்றி முன் தள்ளி, உச்ச மண்டை சப்பையாய் முன் மண்டை மேடாய் மூக்கு ஒரு மாதிரி நீளமாய் வளைந்து, குள்ள உடலோடு லேசான வளைந்த கால்களோடு, பார்த்தால் ஏதோ பரிதாபமான சாதுத் தோற்றம்தான், ஆனால் வாயைத் திறந்து விட்டால் தெருவே நாறிவிடும்.
அப்பா, அம்மா, மூன்று பிள்ளைகள், இரண்டு பெண்கள் என்று எல்லோருமே வரிந்து கட்டிக் கொண்டு கீச்சுக் குரலில் கத்த ஆரம்பித்தால் எப்பேர்ப்பட்டவனுக்கும் வியர்த்து விடும். அந்த வீட்டுக்குள் அவர்களைக் குடி வைத்த நாயுடுவைத்தான் திட்டத் தோன்றும். ஒருமுறை குழாயடித் தகராறு உச்சக் கட்டத்தை அடைந்தபோது, அத்தனை குடித்தனமும் ஒன்றாய்ச் சேர்ந்து போய் நாயுடுவிடம் கோதண்டம் குடும்பம் தங்கள் அத்தனை பேரையும் படுத்தும் பாட்டை விலாவாரியாய்ச் சொல்லி, உடனடியாக அவர்களை காலி செய்ய வைக்க வேண்டுமென்று மன்றாடியது. நாயுடுவும் சரி என்று தலையாட்டினார்.
இத்தனை குடித்தனமும் சேர்ந்து வந்து சொல்கிறதென்றால் நிச்சயம் ஏதோ அந்த குடும்பத்திடம் குறையிருக்கத்தான் வேண்டும். குடி வந்தபோதே நாயுடுவுக்கு அந்தக் குடும்பத்தின் மீது நல்ல அபிப்ராயமில்லை, ஆனாலும் அட்வான்ஸ் பணம் பைசா குறைக்காமல் அவர்கள் நீட்ட, சாவியை இவரும் நீட்டி விட்டார். அதன் பிறகும் கூட மாசா மாசம் வாடகைப் பணம் கரெக்டாக வந்து விடவே அவர், குடித்தன சண்டைகள் எதிலும் தலையிடாமல் ஒதுங்கி விட்டார், கோதண்டம் குடும்பத்தைப் பற்றி மாற்றி மாற்றி யாராவது ஒருவர் புகார் சொல்வது வழக்கம்தான்.
ரொம்ப சுயநலக்காரங்க நாயுடு, ஆளுக்குப் பத்து நாள் முறவாசல் செய்தா, இவங்க முறை வரும்போது ஆறு அல்லது ஏழு நாள்தான் செய்வாங்க. வேணும்னே மூணு நாள் வெளிய போயிடுவாங்க. இல்லாட்டி ரெண்டு பொண்ணுங்களும் வீட்டுக்கு விலக்குன்னு கழண்டுக்கும் அம்மாக்காரி உடம்பு சுகமில்லன்னு இழுத்து போர்த்திக்குவா. மருமக சமையக் கட்டை விட்டு நகர நேரமில்லாதது போல் நடிப்பா, ஏதாவது கேட்டா இப்ப என்னான்னீங்க, எங்களால் செய்ய முடியாது. என்ன பண்ணுவ நன்னு புடவைய முழங்கால் வரைக்கும் வழிச்சுக்கிட்டு சண்டைக்கு வரா. அந்த மூதேவிகிட்ட எவ வாய் கொடுக்கற துன்னு பயந்துகிட்டு அவங்கவங்க பேசாம போயிடறாங்க. ஏங்க நாயுடு தெரியாமதான் கேக்கறேன். நீங்க ஓனரா இல்ல அந்த கோதண்டம் ஓனரா?
நாலு மாதத்திற்கு முன்பு மூன்றாவது போர்ஷன் மகேஷ்வரன் இப்படிப் புலம்பி விட்டுப் போனார். அதற்கடுத்த மாதம் மாடி போர்ஷன் ரகுபதி மனைவியோடு வந்து அழாக் குறையாக சொன்னார்.
வரவர் கோதண்டம் பெண்டாட்டி அட்டகாசம் தாங்க முடியல நாயுடு. மாடிவ தண்ணி சரியா ஏற மாட்டேங்குதுன்னு கீழ வந்து எடுத்துக்கலாம்னு வந்தா எங்க தலையைப் பார்த்ததும் குழாய்க்கடில் வரிசையா அவங்க வீட்டுல எல்லாரும் நின்னுக்கிட்டு தண்ணி பிடிக்கறதும், துணி துவைக்கறதும், பல்லு தேய்ச்சுத் துப்பறதுமா, ஒரு குடம் தண்ணிகூட விட மாட்டேங்கறாங்க. மாடில தண்ணி வராட்டி போய் வீட்டுக்காரன் சட்டையைப் பிடிக்காம் எங்களை ஏன்யா வம்புக்கு இழுக்கறன்னு கத்தறார் கோதண்டம். அதுக்காக மாடி பம்ப்பு சரி செய்யறவரை நாங்க குளிக்காம் சமைக்காம இருக்க முடியுமா? போய் ரோடு பம்ப்புல தண்ணியடிச்சுக்கிட்டு வந்து லொங்கு வொங்குன்னு மாடிக்குக் கொண்டு போய் கொட்டி விலாவெல் லாம் நோகறது. நீங்கதான் நாயுடு அந்த சண்டாளக் குடும்பத்தைத் தட்டிக் கேக்கணும்.
இப்படி ஒவ்வொருவராக ஒவ்வொரு குறை சொன்னது போக இப்போது மொத்தமாகத் திரண்டு வந்து சொன்னதும் நாயுடுவுக்கே பரிதாபமாக இருந்தது. கோதண்டம் குடும்பத்தின் மீது ஆத்திரம் வந்தது.
அன்று மாலையே அங்கு சென்றார். முதலில் வீட்டை நிதானமாகச் சுற்றிப் பார்த்தார். அவர் தாத்தா காலத்து சொத்து அது. தாத்தாவுக்கு அப்பா ஒரே பிள்ளை. அப்பாவுக்கு நாயுடு ஒரே பிள்ளை என்று பரம்பரையாய் வெந்திருக்கும் சொத்து. தாத்தா வைத்த வீட்டோடு அப்பா சுயமாய் சம்பாதித்த காசில் இன்னொரு வீடும் சேர்த்து பிள்ளைக்கு வைத்து விட்டு போய்ச் சேர்ந்தார். தாத்தா வீடு மிகப் பெரியது. ரெண்டு கிரவுண்டு நிலத்தில் குடக்சுடவிக்காகவே திட்டமிட்டு பன்னிரண்டு போர் ஷென்கள் கொண்டதாய் கட்டிய வீடு. கீழே ஆறு போர்ஷன். மாடியில் ஆறு போர்ஷன். ஒவ்வொரு போர்ஷனும் ஒரு முன் வராண்டா, ஒரு சின்ன கூடம், ஒரு சுமாரான அறை, ஓரளவு வசதியான சமையலறை எனக் கொண்டது. ஒவ்வொரு போர்ஷனுக்கும் பெயருண்டு. எல்லாம் பூக்களின் பெயர். கீழே முதல் போர்ஷன் பெயர் மல்லிகை. காமாட்சி மாமி குடியிருக்கும் இடம். அடுத்தது சம்பங்கி. மூன்றாவது ரோஜா, நான்காவதுதான் கோதண்டம் குடியிருக்கும் தாழம்பூ. ஐந்தாவது மரிக்கொழுந்து, ஆறாவது இருவாட்சி, மாடியில் செண்பகம், முல்லை, தாமரை, சாமந்தி, பாரிஜாதம், பவழமல்லி என்று ஒவ்வொரு போர்ஷனுக்கும் முன்னால் நிலைப்படிக்கு மேலே சற்று நீளமான கடப்பா கல்லில் பெயர் பொறித்திருக்கும்.
எல்லாருமே நடுத்தட்டு மனிதர்கள், படித்தவர்கள், உத்யோகத்தில் இருப்பவர்கள், மடிப்பு கலையாமல் உடுத்திச் செல்பவர்கள், அடுத்த தலைமுறையை கம்ப்யூட்டரும், இன்ஜினியரும், டாக்டருக்கும் படிக்க வைக்க பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். சத்தமாய் பேசி சண்டை போட சுடச்சப்படுபவர்கள். கோதண்டம், குடும்பம் மட்டும் ஏன் இப்படி தந்திரமாய் சுயநலமிகளாய், மனசு குறுகினவர்களாய் அமைந்தார்கள் என்று வியந்தார் நாயுடு.
அவர் வந்த நேரம் ஆண்கள் யாரும் வேலையிலிருந்து திரும்பியிருக்கவில்லை. ஒன்றிரண்டு போர்ஷன்களில் பெண் மணிகள் மட்டுமே இருந்தனர். நாயுடு கோதண்டம் வீட்டிற்கு முன் நின்றார். மருமகள் அவர் தலையைக் கண்டதும் உள்ளே விசுக் விசுக்கென்று நடந்து சென்று மாமியாரை அழைத்து வந்தது.
அடடே நாயுடுவா... எப்ப வந்தீங்க...? மோர் கீர் சாப்பிட நீங்களா...?
கோதண்டம் மனைவியின் உபசரிப்பில் நிறைய பாசாங்கு இருப்பதாகத் தோன்றியது நாயுடுவுக்கு.
அதெல்லாம் வேணாம்மா. வீட்டுல ஆம்பளைங்க யாராவது இருக்காங்களா?
இன்னும் யாரும் வரலையே. ஏன்...?
அப்படியா? வரட்டும்
- நாயுடு நகர. ரங்கம் மறுபடியும்எதுக்குங்க?
என்றாள்,
கொஞ்சம் பேசணும்மா,
என்ற நாயுடு வீட்டை மறுபடியும் சுற்றி வந்தார். சுவரில் நிறைய இடங்களில் ஒட்டடை படிந்திருந்தது. காரை பெயர்ந்திருந்தது. முற்றத்தில் சில இடங்களில் பாசி படிந்து வழுக்கியது. சாக்கடையில் நிறைய குப்பை இருந்தது. இரண்டு பேருக்கு ஒரு பாத்ரூம், ஒரு டாய்லட் என்ற ரீதியில் முற்றத்து மூலையில் இருந்த மூன்று பாத்ரூமிலும் டாய்லட்டிலும், இரண்டு மட்டும் சுத்தமாயிருக்க ஒன்று நாறியது. நாயுடு முகத்தைச் சுளித்துக் கொண்டார்.
வீட்டைச் செப்பனிட வருடத்திற்கு ஆறாயிரம் ஏழாயிரம் வைத்தால்தான் காரை பெயர்ந்த இடங்களில் சிமெண்ட் பூசி, ஒட்டடை அடித்து வெள்ளையடிக்க முடியும். ஆனால் நாயுடுவுக்கு அப்பா தாத்தாவைப் போல் இல்லாமல் இரண்டு பிள்ளை பிறந்து விட்டது. இரண்டுக்கும் படிப்பு செலவே ஆளை முழுங்கியது.
ஒருவன் கம்ப்யூட்டர் என்ஜினியரிங், மற்றவன் முதல் வருடம் டாக்டருக்குப் படிக்கிறான். அதுவும் சிதம்பரத்தில். ஹாஸ்டல் செலவு படிப்பு செலவு என்று முழி பிதுங்குகிறது. தவிர தாத்தா சொத்தோடு சேர்த்து தன் பங்குக்கு அப்பா ஒரு வீடு வாங்கியது போல், தன் பிள்ளைகளுக்கு அவர் ஆளுக்கொரு வீடு கட்டி வைத்தால்தான் மரியாதை.
முன்பு போல் சிட்டியில் வீடோ நிலமோ வாங்குவது இப்போது எட்டா கொம்புதான், எனவே வேளச்சேரியில் ஆளுக்கு இரண்டு கிரவுண்டு நிலம் எப்போதோ வாங்கிப் போட்டு விட்டார். வீடு கட்ட பணமும் சேர்த்துக் கொண்டிருக்கிறார். வியாபாரத்தில் வந்த பணம் முழுக்க படிப்புச் செலவுக்கே சரியாகிறது. அரிசி பருப்பு மொத்த வியாபாரம்தான் மிக நன்றாகவே நடந்தது.
தாத்தா காலத்திலிருந்து அதுதான் வியாபாரம். நான்காவது தலைமுறைக்கு அது வேண்டாம் என அவர் நினைத்தார். அவர்களுக்கும் படிப்பு நன்றாகவே வர உற்சாகமாகப் படிக்க வைத்தார். மெடிக்கல் சேர்ந்ததுமே சின்ன பையன் தன் பங்கு நிலத்தில் ஒரு சின்ன நர்சிங் ஹோம்தான் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து விட்டான். பெரியவன் விடுவானா…? என் பங்கு நிலத்தில் நானும் ஒரு கம்ப்யூட்டர் சென்டர்தான் நடத்துவேன் என்றான். எனவே வீடு கட்டும் எண்ணத்தை விட்டு விட்டார் அவர்.
நர்ஸிங்ஹோமுக்கும், கம்ப்யூட்டர் சென்டருக்கும் இன்னும் நிறைய பணம் தேவைப்படும் என்பது புரிந்தபோது கவலை கூடியது. எனவே உடனடியாக தாத்தா வழி வீட்டில் வாடகையை இரண்டு மடங்காக உயர்த்தினார்.என்னங்க நாயுடு அறுநூறு லேர்ந்து திடீர்னு ஆயிரத்தி இருநூறுன்னா எப்படி….?
குடித்தனங்கள் புலம்பின. நாயுடு இரக்கப்படவில்லை.
நீங்க காலி பண்ணினா எனக்கு தாராளமா ஆயிரத்தி ஐநூறுக்கு ஆள் இருக்கு. முடியறவங்க இருங்க. மூடியாதவங்க தயவு செய்து காலி செய்துடுங்க. நான் யாரையும் வற்புறுத்தல.
நாயுடு கறாராகச் சொன்னதும் பாதி பேர் தங்கள் சக்தியைக் கணக்குப் போட்டு பார்த்து, ஊருக்கு வெளியில் வீடு பார்த்து குடித்தனம் போனார்கள். மீதி பேருக்கு அவ்வளவு தொலைவிலிருந்து பஸ்ஸிலும் ரயிலிலும் பிதுங்கிக் கொண்டு நகருக்குள் வந்து செல்வது இயலாதென்று தோன்ற பக்கத்திலேயே நிறைய வீடுகள் பார்த்தார்கள். ஒன்றும் திருப்தியாயில்லை. அதோடு நாயுடுவின் வீட்டை விட வசதி குறைவாகவும் வாடகை அதிகமாகவும் இருந்ததால் அதற்கு நாயுடுவின் வீடே மேல் என்று தோன்ற வேறு வழியின்றி அவர் ஏற்றிய வாடகைக்கு ஒப்புக் கொண்டார்கள்.
மாடியில் இரண்டு போர்ஷன்களும், கீழே மூன்று போர்ஷன்களும் மட்டுமே காலியாயின. அந்த இடத்தில் புதுசாக வேறு குடித்தனம் வைத்தார் நாயுடு. அப்படி வந்தவர்களில் கோதண்டத்தின் குடும்பமும் ஒன்று. வந்த புதிதில் எல்லோரையும் சந்தேகப் பார்வை. கதவைத் திறக்கவே யோசனை. டம்ளர் டபராவில் கூட வழிய வழிய தண்ணீர் பிடித்த பிறகுதான் பம்ப்படியை விட்டு நகர்வார்கள். யாராவது ஏதாவது கேட்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு பதில் சொல்லாமல் அலட்சியப் படுத்துவார்கள். என்னமோ எல்லோரும் தங்களுக்கு துச்சம் என்பதாய் பார்ப்பார்கள்.
ஒரு நாள் கிழமை என்றால் மற்ற குடித்தனங்கள் எல்லாம் இனிப்பும், சர்க்கரைப் பொங்கலும் வடையுமாய் பரிமாறிக் கொள்ளும். பக்கத்து போர்ஷன் என்பதாலும் கோதண்டத்தைப் பற்றி அதிகம் தெரியாமலும், புதுசாய் குடி வந்திருந்த ரோஜா போர்ஷன் சாரதா டீச்சர் தமிழ் வருடப்பிறப்பன்று ஒரு டம்ளர் நிறைய சக்கை பிரதமனும் நாலு வடையும் கொஞ்சம் நேந்திரங்காய் வறுவலும் எடுத்துக் கொண்டு தாழம்பூவில்நுழைந்தாள். கோதண்டத்தின் பெண் ஒருத்திஎன்ன?
என்றாள் முகத்தில் சிறிதும் சிரிப்பின்றி.
சாரதா டீச்சர் தட்டையும் பாயச டம்ளரையும் நீட்டி விட்டு சிநேகமாக சிரிக்க, அந்தப் பெண் விசுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போயிற்று. அம்மாவிடம் குசுகுசு வென்று ஏதோ சொல்லிற்று. அடுத்த நிமிடம் ரங்கம் வெளியில் வந்தாள்.
என்னது பாயசமா...? வேண்டாமே. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. எல்லார்கிட்டயும் வாங்கிண்டா பதிலுக்கு பன்னண்டு தட்டு நானும் கொடுக்கணும். எதுக்கு கொடுக்கணும், எதுக்கு வாங்கணும்? அவர் வரதுக்குள்ள எடுத்துண்டு போய்டுங்கோ...
இத்தனை மோசமான ஒரு அவமானத்தை இதுவரை சந்தித்ததில்லை என்பது போல் சாரதா டீச்சரின் முகம் சுண்டிப் போயிற்று. துணி அலசிக் கொண்டிருந்த காமாட்சி எல்லா வற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ரங்கம் உள்ளே போனதும் சார்தாவை தரதரவென்று இழுத்துக் கொண்டு போனாள்."அந்த முசுட்டு மூதேவிக்கு போய் யாரானம் ஏதானம் கொடுக்கப் போவாளோ...? போறதுக்கு முந்தி ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானே வேண்டான்னிருப்பேனே... நாளுங்கிழமையுமா என்னத்துக்கு அந்த பிரும்மராட்சசிகள் கிட்ட போய் வாங்கிக் கட்டிக்கணும்?'
இப்டி பண்ணுவான்னு நா கண்டேனா மாமி...? அக்கம் பக்கம் சௌஜன்யமா இருக்கணும்னுதானே இப்படி பரிமாறிக்கிறோம்! இது தப்பா சொல்லுங்கோ?
சாரதாவின் கண்கள் கலங்கி விட்டது.
தப்பில்லதான். ஆனா அதுக்குன்னு நரியோடயும் பரி யோடயும் பரிமாறிக்கலாமோ...? போனா போகட்டும், இனிமேயானம் ஜாக்ரதையாரு. அதுகள் யாரோடயும் ஒட்டாத கோணங்கி ஜன்மங்கள். ரூபம் மட்டுமில்ல குணத்துலயும் கூட எல்லாம் அஷ்டவக்ரம்தான். அதெப்டித்தான் அப்டி தலே லேர்ந்து வால் வரைக்கும் வக்ரமா வந்து வாய்ச்சிருக்கோ. பிறந்ததுகள்தான் அப்டின்னா வந்தது அதுக்கு மேலன்னா இருக்கு துஷ்ட வக்ரமா!
காமாட்சி மாமி அவளைச் சமாதானப்படுத்தினாள்.
கோதண்டம் குடும்பத்தின் குசும்புத்தனங்களுக்கு இதெல்லாம் ஒரு சாம்பிள்தான்.
மாலை ஆறு மணிக்கு கோதண்டமும் ரெண்டு பிள்ளைகளும் ஒவ்வொருவராய் வீடு திரும்ப நாயுடு மறுபடியும் அவர்கள் வீட்டு முன் போய் நின்று கோதண்டத்தை அழைத்தார்.
2
வாங்க நாயுடு
கோதண்டம் காப்பி குடித்தபடி வெளியில் வந்தார். ஒப்புக்குக் கூட ஒரு வார்த்தை காப்பி குடிக்கிறீர்களா என்று கேட்காமல் அவர் பாட்டுக்கு சர் சர்ரென்று காப்பியை உறிஞ்சியபடி என்ன விஷயம் என்பது போல் நாயுடுவைப் பார்த்தார். எல்லா குடித்தனமும் ஒளிந்து நின்று நாயுடுவை அவரோடு பேசப் போவதைப் பார்க்கத் தயாராயினர். தங்களுக்கெல்லாம் நல்ல காலம் பிறந்து விடும், காலி செய் என்று வீட்டுக்காரரே சொல்லிவிட்டால் யாரால் மறுக்க முடியும்...? கோதண்டம் குடும்பம் அங்கிருந்து இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ நிச்சயம் ஒழிந்து விடும் என்று நினைத்து மனசுக்குள் மகிழ்ந்தபடி வேடிக்கை பார்த்தார்கள். நாயுடுதன் சோடா புட்டி கண்ணாடியை துடைத்துப் போட்டுக் கொண்டு கோதண்டத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
ஏங்க கோதண்டம், இங்க யாரோடயும் நீங்க ஒத்துப் போறதில்லையாமே? என்னமோ நீர்தான் வீட்டுக்காரன் மாதிரி அதிகாரம் பண்றீராம்... என்ன விஷயம்...?
நாயுடு கேட்ட நொடியில் கோதண்டத்தின் முகம் சிவந்தது. பல்லைக் கடித்தபடி நாயுடுவைப் பார்த்தார்.அப்டின்னு எல்லா தடிமாட்டு பசங்களும் உம்மகிட்ட வந்து சொன்னானுங்களா?
யோவ் யாரை தடிமாடுன்ற...? நீதான்யா தடிமாடு உம்ம குடும்பம்தான் கோணக் குடும்பம்...!
வீட்டுக்காரர் இருந்த தைரியத்தில் மாடி போர்ஷன் வெங்கடாசலம் கத்த அடுத்த நிமிடம் கோதண்டம் குடும்பம் மொத்தமும் வரிந்து கட்டிக் கொண்டு முற்றத்திற்கு வந்து கீச்சு கீச்சென்று கத்த யார் என்ன கத்துகிறார்கள் என்றே புரியாமல் அந்த இடம் மீன் கடையாயிற்று.
அடச்சே.. நிறுத்துங்க..!
நாயுடு அதைவிட பெருங்குரலில் கத்த ஒரு நிமிடத்தில் சத்தம் அடங்கியது.
த பாரும் கோதண்டம் நமக்கு இந்த சண்டைகிண்டை எல்லாம் அறவே பிடிக்காது. மெஜாரிட்டி என்ன சொல்லுதோ அதைத்தான் நா செய்தாகணும். ஒருத்தர் ரெண்டு பேர் குத்தம் சொன்னா பரவால்ல, பதினோரு குடித்தனமும் குத்தம் சொல்லுதுன்னா, அதுல நிச்சயம் ஏதோ உண்மை இருக்கும்னு நம்பறேன். உமக்கு மூணு மாசம் டைம் தரேன். நீர் வேற இடம் பார்த்துக்கிட்டுப் போற வழியைப் பாரும்
நாயுடு தீர்மானமாகச் சொன்னார்."
ஓஹோ... இதைச் சொல்லத்தான் வந்தீரா...?
கோதண்டம் கண்கள் புடைக்கக் கேட்டார்.
ஆமா... மூணு மாச அட்வான்ஸ் இருக்கு உம்முது. அதை வர மாசத்துலேர்ந்து கழிச்சுக்கிட்டு காலி பண்ற வழியைப் பாருங்க.
பண்ணாட்டி என்ன செய்வீங்க..?
என்ன...? செய்வேனா.. இது என் வீடுய்யா… அந்த மரியாதையோட பேசு. நம்ம பசங்ககிட்ட சொன்னா இந்த நிமிஷம் படை திரட்டிகிட்டு வந்து பந்தாடிடுவாங்க ஜாக்ரதை...?
கோதண்டம் எந்த பதிலும் பேச முடியாது அவரையே முறைத்தாலும் அவர் மூளை மட்டும் இந்த பிரச்சனைக்கு என்ன வழி என்று குதர்க்கமாய் யோசித்தது. ஒளிந்து பார்த்தவர்களுக்கு அவர் சட்டென்று அடங்கி விட்டது கண்டு உற்சாகம் பொங்கியது. சினிமாவிலும் சரி நிஜ வாழ்விலும் சரி வில்லன்கள் அடக்கப்படும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.
ஒரு நிமிடம் தான். கோதண்டத்தின் அமைதி கலைந்தது. வீட்டுக்காரரை முறைத்துப் பார்த்தார்.
'சரி போயிடறேன். நான் கொடுத்த அட்வான்ஸ் பணம் பதினஞ்சாயிரத்தை எண்ணி கீழவையும், பத்தே நாள்ளே போயிடறேன்"என்றார்.
நாயுடு சிரித்தார்.என்னய்யா விளையாடறீரா. பதினஞ்சுல மூணு மாசம்தானே நிறுத்தி வெச்சுக்கிட்டேன். மிச்சத்தையெல்லாம்தான் கழிச்சாச்சே, மறந்துட்டீரா...?
எங்கய்யா கழிச்சோம். முழு வாடகையும்தானே கொடுத்தோம்.
நாயுடு அதிர்ந்து போனார். கோதண்டம் வேறு ஏதோ திட்டம் போடுகிறார் என்பது புரிய தன் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் பேசினார்.
ஓஹோ… என்னை ஏமாத்த உம்மால் முடியாது கோதண்டம். நீர் பதினைஞ்சு கொடுக்கவேயில்லன்றேன் நான்! இதுக்கென்ன சொல்றீர். நான் என்ன பத்திரமா எழுதிக் கொடுத்தேன் உம்ம பணத்துக்கு...?
அப்டி வாங்க நாயுடு...!
கோதண்டம் அசராமல் பேசினார்.எழுதி வாங்கல்ல? நா இருபது கொடுத்தேங்கறேன். என்ன செய்வீர்? நா ஜாஸ்தி சொன்னாலும் சாட்சியில்ல. நீர் கம்மியா சொன்னாலும் சாட்சியில்ல. நீர் எந்த கோர்ட்டுக்கு வேணா போய்ப்பாரும். உம்மை எப்டி கிழிக்கணும்னு எனக்குத் தெரியும்!
கோதண்டம் நிதானமாக சொல்லு நாயுடு மட்டுமல்ல பதினோரு குடித்தனமும் பலமாய் அதிர்ந்தது. இப்படியும் ஒரு அழிசாட்டிய பேர்வழி இருப்பானா...? என்று மலைத்துப் போனார்கள். நாயுடு இதுவரை யாரிடமுமே