Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinna Chinna Minnalgal
Chinna Chinna Minnalgal
Chinna Chinna Minnalgal
Ebook106 pages53 minutes

Chinna Chinna Minnalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703274
Chinna Chinna Minnalgal

Read more from Vidya Subramaniam

Related to Chinna Chinna Minnalgal

Related ebooks

Reviews for Chinna Chinna Minnalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinna Chinna Minnalgal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    சின்னச் சின்ன மின்னல்கள்

    Chinna Chinna Minnalgal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    நள்ளிரவில் சடசடவென்று மழை பெய்யவும், சட்டென்று விழிப்பு கண்டது மனோன்மணிக்கு. முரளி அருகில் இல்லை. கட்டில் வெறிச்சென்றிருந்தது. ராத்திரியே மிகவும் சிரமப்பட்டுத்தான் உறங்கினாள். அவன் இருந்தால் தோள்பட்டை, முதுகு, முழங்கால் என்று கணுக்கால் வரை இதமாய் உடம்பு பிடித்து விடுவான். அடித்தலையில் விரல் நுழைத்து இதமாய் முடியை பிடித்து இழுக்கும் போது அந்த சுகத்தில் கண் கிறங்கும். உடம்பு வலி இருக்கிறதோ இல்லையோ, இப்போதெல்லாம் அவன் பிடித்து விடா விட்டால் தூக்கம் வருவதில்லை. அப்படி ஒரு பழக்கமாகி விட்டது. கல்யாணமான இரண்டாம் மாதம் மூன்று நாள் காய்ச்சலில் பாடாய்ப்பட்டு விட்டாள். உடம்பெல்லாம் பூட்டு பூட்டாக வலி. மலையைத் தூக்கி வைத்துவிட்டு வந்தாற்போல் அப்படி ஒரு அசதி. அப்போது தனிக்குடித்தனம் கூட கிடையாது. முரளியின் அண்ணன் அண்ணி அவர்களது குழந்தைகள் இருவர், மாமனார் மாமியார் என்று அந்த வீடு நிறைந்திருக்கும். கல்யாணமான ஆறாம் மாதம் உங்களைத் தனிக்குடித்தனம் வெச்சிடுவோம். அதுவரை சேர்ந்திருந்து கத்துக்க வேண்டிய விஷயங்களை கத்துக்க புகுந்த வீடு வந்த அன்றே மாமியார் சொன்னது இது. ஆறு மாதத்தில் தனியாய்ப் போய்விடப் போகிறார்கள் என்பதால் எல்லோருமே எந்த பிரச்சனையுமின்றி அவளை நடத்தினர் என்றாலும் மூன்று நாள் ஜுரம் என்றதும் மாமியார் கவலையானாள்.

    "ஏண்டா முரளி பிறந்த வீட்டு நினைவோ என்னவோ உம் பொண்டாட்டிக்கு ஒரு வாரம் வேணா அவங்க வீட்டுக்கு அனுப்பி வையேன். உடம்பைத் தேத்தி அனுப்பட்டும்' பிள்ளையிடம் சொன்னாள்.

    அப்படியா மனோ? உங்க வீட்டுக்குப் போய் இருக்கணுமா? தனிமையில் கேட்டான் முரளி...

    அப்டின்னு இல்ல. ஆனா அம்மா வீட்டுக்கு போக மாட்டேன்னு சொல்ல மாட்டேன்.

    ரெண்டுங்கெட்டானாய் அவள் ஒரு பதில் சொல்ல முரளி சிரித்தான்.

    என்ன பதில் இது?

    "எனக்கே தெரியலே போணும் போலவும் இருக்கு. இங்கயும் பிடிச்சிருக்கு

    போணும்னு ஆசை வர என்ன காரணம்?

    போனா அம்மா மடில படுத்துக்குவேன். அந்த சுகம் சுகம்தானே?

    அப்படியா? அவன் ஒரு வினாடி அவளை இமைக்காமல் பார்த்தவன் அவளது தலைமாட்டில் வந்து அமர்ந்தான். அவளது தலையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.

    சௌகர்யமா படுத்துக்க. இந்த மடியை அம்மா மடியா நினைச்சுக்க.

    அவள் மலைத்துப் போனாள். அவன் கை விரல்கள் இதமாய் அவள் நெற்றியைப் பிடித்து விட்டன. அப்படியே பின் மண்டை, தோள்பட்டை, முதுகு என்று அழுத்திவிட, அப்படி ஒரு இதம் அதுவரை அவள் அனுபவித்ததில்லை. உடம்பின் வெப்பமும் கிடுகிடுவென்று இறங்கி விட்டாற்போல் ஒரு சில்லிப்பும் இதமும் உடலை லேசாக்க, தன்னை மறந்து அவள் உறங்க ஆரம்பித்தாள்.

    கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவன் அசையக் கூட இல்லை. அவள் கண் விழிக்கும் வரை அப்படியே அமர்ந்திருந்தான். விழித்து எழுந்தவள் வெட்கமும், வியப்புமாக அவனைப் பார்த்தாள்.

    நல்லா தூங்கினயா…?

    'நீங்க அப்படியேவா இருந்தீங்க. கட்டில்ல உருட்டி விட்ருக்கலாம் இல்ல. கால் மரத்தில்ல போயிருக்கும்!"

    அம்மா வீட்டுக்குப் போகணும்ங்கற ஆசை போய்டுச்சா மனோன்மணி! அவன் புன்னகையோடு கேட்க, அவள் நெகிழ்ந்து போய் அவன் தோளில் சாய்ந்தாள். கண்கள் நிறைந்து விட்டன. மாட்டேன், அங்க என்ன இருக்கு?

    அப்டி சொல்லக் கூடாது. அங்க தாராளமா போகலாம். நானும் நீயும் சேர்ந்து, என்னை விட்டுட்டு நீ மட்டும் போகக் கூடாது சரியா...?

    ம்...

    ஜூரம் போய்டுச்சா...?

    'எப்பவோ..."

    என்ன சாப்பிடறே...?

    பசியில்ல...

    கொஞ்சம் ஹார்லிக்ஸ் கொண்டு வரேன். சாப்டுட்டு மாத்திரை போட்டுக்க... அவன் எழுந்து சென்றான். எப்படிப்பட்ட புருஷன்! அவள் பிரம்மித்துப் போனாள்.

    என்னடா ஹார்லிக்ஸ் கரைக்கற? எங்கிட்ட சொல்லக் கூடாதா? நா கரைச்சுத் தர மாட்டேனா? இதெல்லாம் உனக்கெதுக்குடா...? அம்மா அவன் கையிலிருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை வாங்க முற்பட, அவன் தடுத்தான்.

    நானே கலக்கறேனே... எனக்கென்ன கஷ்டம்?

    நல்லார்க்குடா. ஆம்பளையா லட்சணமா இரு. அடுக்களை வேலைய எங்ககிட்ட விட்ரு புரிஞ்சுதா? அம்மாவின் குரலில் கோபம் இழையோடியது.

    'இப்பவே இந்த வேலையெல்லாம் ஆரம்பிச்சுடாதடா முரளி. நாளைக்கு அப்புறம் முழுக்க முழுக்க இங்கேயே நிக்க வெச்சுடுவா உன்னை..." அண்ணன் சரவணன் அம்மாவுக்கு சப்போர்ட்டாய் அவனைக் கிண்டலடித்தான். முரளி அசரவில்லை. அவன் கிண்டலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை. –

    இதோ பார் முரளி. நானும் பார்த்துட்டுதான் இருக்கேன். ரூம் கதவு திறந்திருக்கிறது கூடத் தெரியாம, உன் பெண்டாட்டியை மடில போட்டு அவ தலையைப் பிடிச்சு விட்டுட்ருக்க. நாலு பேர் நடமாடற வீடு இதுன்னு நினைப்பு வேண்டாம்? ஆனாலும் நீ இப்படி ஒரு தாசனாவன்னு நா நினைக்கலடா தம்பி. இப்பவே இப்டி கை கால் அமுக்கி விட்டன்னா நாளைக்கு அவ பின்னால கூஜா தூக்கிட்டுதான் அலையணும் சொல்லிட்டேன்.

    முரளி பொறுமையிழந்து விடாமல் அண்ணனைப் பார்த்தான்.

    "போன மாசம் உனக்கு ஜலதோஷம் சளி தலைவலின்னு ரெண்டு நாள் அவதிப்பட்டயே, அப்பொ அண்ணி நடுக் கூடத்துல

    Enjoying the preview?
    Page 1 of 1