Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannadi Thirai
Kannadi Thirai
Kannadi Thirai
Ebook186 pages1 hour

Kannadi Thirai

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109903280
Kannadi Thirai

Read more from Kanchana Jeyathilagar

Related to Kannadi Thirai

Related ebooks

Reviews for Kannadi Thirai

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannadi Thirai - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    கண்ணாடித் திரை

    Kannadi Thirai

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    காலைச் சூரியனின் ஒளியில் வரிசையாய் விளைந்து நின்ற கரும்பும் வாழைகளும் பளபளத்தன. முன்தினம் மழை பெய்திருந்தது, ஆக மரங்களின் பச்சை பளீரிட்டது.

    'இருண்ட கண்டம்' என்று போன நூற்றாண்டு வரை சொல்லப்பட்டதின் சாயல்கூட இன்றில்லை.

    'யுகான்டாவின் குடிமக்களின் சருமம் இன்றும் சற்று இருண்டிருந்தாலும் அவர்கள் சிரிப்பு, உற்சாகத்தின் பிரஹாசம் அலாதி!

    ஒரு மாதம் முன்பு 'என்டெபி' நகரின் விமான நிலையம் வந்திறங்கியபோது கண்ணைக் கட்டியது போலவும் அதையும் விட நெஞ்சம் இறுகக் கட்டியது போன்ற அவஸ்தையில் இருந்தாள் ஸ்ரீயந்தி!

    அவள் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரைக்கு அப்பாலுள்ள ஒரு தோப்பு வீட்டில். ஓரளவு வசதியான குடும்பம் என்பதால் ஒரு வார சுற்றுலா என்று அவள் சிங்கப்பூர், மலேசியா போனதுண்டு. தாய் தந்தையுடன் போன அந்த விடுமுறையின் ஞாபகங்கள் இன்னும் தித்திப்பு தான்.

    மற்றபடி தங்களின் பண்ணையைச் சுற்றி வருவதே கூட ஸ்ரீயந்திக்கு இனியதுதான். கரும்பு, வாழை, தென்னைகள் மண்டியிருக்கும் தோட்டங்கள் - நீர் வளம் இருந்ததால் அவற்றின் லாபம் குறைவதேயில்லை.

    ஒருமுறை இந்தியாவின் கரும்பு வளத்தைக் கணிக்க வந்த ஆப்ரிக்கர் சொன்னபடி, கரும்பு வயல்களை இரட்டிப்பாக்கிய அப்பா, அதை ஏற்றுமதியும் செய்ய ஆரம்பிக்க, காசு மட்டுமல்ல அவரது கெளரவமும் உயர்ந்தது.

    மூன்றாம் வருஷம் யுகான்டாவில் நடந்த ஒரு கருத்தரங்கிற்குப் போனவர் அங்கிருந்து வெகு உற்சாகமாய் அம்மாவிடம் போனில் பேசினார். '

    கஸ்தூரி, ரொம்ப இனிப்பான சேதி. என் சிறு வயது சிநேகிதன் மணி பற்றி தெரியுமில்ல? அவன் அக்கா - அவுக பேரு கிருபாவதி - அவுக இந்த நாட்டுலதான் வாழ்க்கப்பட்டு இருக்காக. நம்மைக் காட்டிலும் பெரிய பண்ணை - ஆனா அதே கரும்பு, வாழை, தென்னை தான். அவுக வீட்டாளு பேரு தனசேகரன்...

    அம்மா அனைவரிடமும் பாசமாய் பழகி, ஞாபகமும் வைத்திருப்பவர்கள்.

    ஆனா அந்தண்ணனுக்கு உங்களை எப்படி அடையாளம் புரிஞ்சுச்சு? ஆச்சரியப்பட்டார்கள்.

    தோப்பூர்... எம் பேரு குமரகுருன்னதுமே பிடிச்சிட்டாக.

    மணியோட படிச்சவரா நீங்க? நா அவரோட அக்காப் புருஷன்'னு தன்னை அறிமுகப்படுத்திட்டாக. அயல் தேசத்துல நம்மவகளைக் கண்டா.... ம்ப்ச்... அலாதி சந்தோஸம் போ!

    அவுக வீட்டுக்குப் போவீகல்ல? நா தந்துவிட்ட சுங்குடிப் புடவையோட, அதிரசமும் அந்த அக்காவுக்கு கொண்டு போய் கொடுங்க...

    அப்பாவின் சிரிப்பு இவளையும் தாண்டிப் போனது - எதுக்குப் புடவையச் சுமக்கணும்னு கிளம்பறப்ப சடைச்சுக்கிட்டேதான் - பாரு இப்ப கிருபாக்காக்குத் தரலாம் நானு... ம்ம்?

    ஊரு, குளிரு எல்லாம் அங்க எப்படிங்க?

    முரட்டு பூமி - ஆக விளைச்சலும் அமோகம். அவனவன் நம்ம விட ஒரு முழம் கூடுதல் உயரம், பருமன்... ஆனா நல்ல மனுஸங்கதான். இருந்தும் மொத்தத்துல வறுமை விலகல... ஆனா என்னா ஆட்டம், பாட்டம் சிரிப்புங்கற? சனி, ஞாயிறெல்லாம் தண்ணி தான்... குஷிதான்...

    அதெல்லாம் குடிக்க, நல்லாத்தான் வரும் அம்மா நொடிக்க, தானும் தந்தையுடன் இணைந்து சிரித்தது ஸ்ரீயந்திக்கு நினைவிருந்தது.

    குடிச்சே அழிச்சா, வறுமைத்தானே துணை நிக்கும்? என்று அம்மா இவளிடமும் அலுத்துவிட்டு,

    நீங்க மறுபடி அந்தக் கருமத்தத் தொட்டுராதீங்க என்று கணவனை எச்சரித்ததும் கூட!

    இனி வருஷா வருஷம் இங்க வரணும் கஸ்தூரி - உன்னோடயும், யதியோடயும் என்று அன்று அப்பா ஆசைப்பட்டது நடக்கவில்லை. - அம்மா, தொடர்ந்த இரண்டாம் வருஷத்தில் இறந்து விட, அப்பா சுருண்டு விட்டார்.

    அவர் கனவுகளும் கூட சுருங்கி விட்டன. அச்சமயம் தனசேகரன் இந்தியா வந்து சொன்ன ஆறுதல் அப்பாவிற்கு பெரிய தெம்பு.

    'இங்குள்ளவனே பேருக்கு வந்து நின்னுட்டு போக, தனா ஸார், வேறு வேலை இங்க இருந்தாலும், நம்மத் தேடி வந்து தங்கி, இதமாப் பேசிட்டு போறாக பாத்தியா? நான் நினைச்ச மாதிரியே பெருந்தன்மை...' சிலாகித்தார்.

    'நீயும் ஆப்ரிக்காவுக்கு அப்பாவோடு வரணும்டா தங்கம். உன்னைப் பார்த்தா கிருபாவதி விடவே மாட்டா' என்று தனசேகரன் கனிவாய் சொன்னதில் ஸ்ரீயந்தியின் மனமும் இளகியிருந்தது..

    தனசேகரனின் உதவியில் இவர்களது சர்க்கரை, தனியே கெட்டி வில்லைகளாகி முழுக்க ஏற்றுமதி ஆயின.

    'தேங்காயைத் துருவி, உலர்த்தி அதையும் ஏற்றுமதி செய்யலாம்.'

    'அப்படியாண்ணா? காய் விளைச்சல் கூடினா காய் ஒன்னு நாலு ரூவாய்க்கு விலை குறைய வயித்தெரிச்சலாப் போகுது. அது அமிர்தம்ல?'

    'என் அண்ணன் மகன்தான் அதை எங்க விளைச்சலுக்கு இப்ப அறிமுகப்படுத்தி இருக்கான். அதுக்கான எந்திரமெல்லாம் வந்து பாருங்க.... அவனே உங்களுக்கு வாங்கி அனுப்பிருவான்' என்று தனசேகரன் சொல்ல, அப்பா சற்று உள்ளம் தேறினார்.

    'வெயில் காலம் யுகான்டா வர வேணாம். யதிக்கு செப்டம்பரு லீவுதான? - அப்ப வாங்கன்றாரு அண்ணாச்சி' என்று அப்பா உற்சாகமாய் திட்டமிட்ட நேரம் 'ஸார்' நிலையிலிருந்து உறவாய் நெருங்கியிருந்த தனசேகரன், நோயில் விழுந்தார். ஆக குமரகுருவின் அடுத்த வெளிநாட்டுப் பயணம் தனசேகரன் இறப்பிற்கு 'துக்க விசாரிப்பு' போலானது!

    'என்னம்மா வாழ்க்க...?' உங்கம்மாவப் போல இந்த அண்ணனும் 'பொசுக்குனு போயாச்சு... உனக்கு சீக்கிரமாக கல்யாணத்த முடிச்சிரணும். ஒத்த பிள்ள உன்னைய ஒரு நல்ல குடும்பத்துக்கிட்ட ஒப்டைச்சாத்தான் எனக்கு. நிம்மதி' என்று புலம்பியவர், கால் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிந்து படுத்து விட்டார்.

    விதவிதமான கட்டுக்கள் போடப்பட்டும் அவைக் கூடவில்லை.

    'பேசாமல் ஆபரேஷன் செய்துடுங்கப்பா...'

    'நட்டு, போல்ட் போடுவாங்களாம்... எலும்பு இணைஞ்சாலும், இணங்குமா? அப்பப்ப நறநறங்காது?'

    அந்த பயம் அவரை எழ விடவில்லை. அதைத் தொடர்ந்து உடலில் வேறு சில சிக்கல்கள், புகுந்தன.

    முக்கியமாய் அவர் மனப் பதட்டம் அதிகரித்திருந்தது.

    'உடம்போட மனசிலும் வேதனையடா யதி. பாவம் பெத்தவனோட சேர்ந்து நீயும் இதை அனுபவிக்கற... கிருபாக்கா உன்னைப் பார்க்க ஆசைப்படறாங்க... ஒரு எட்டு போயிட்டு வந்துடறியா?"

    மகள் சிரித்தாள்..

    'சென்னை போறதுக்கே நாம நாலு தரம் யோசிப்போம்... நான் பார்த்திராத அந்த அத்தை இருக்கது ஆப்பிரிக்கா கண்டத்தில்!'

    'நடந்தாடா போகப் போற? மதுரையிலேருந்து ஆல்பர்ட் என்ஜினியர், தம் பொண்டாட்டியோட அங்கப் போறதாத் தகவல் - நீயும் அவகளோட சேர்ந்து கிளம்பிடு.'

    அப்பா தள்ளியதைப் போலவே அயல் மண்ணிலிருந்து கிருபாவதி அன்பாய் இழுக்க, ஸ்ரீயந்தி படிப்பு முடிந்ததும் கிளம்பியே விட்டாள்!

    உடன் அப்பா வந்திருந்தால் இப்புதிய பூமியை பூரணமாய் ரசித்திருக்கலாம்.

    கிளம்புவதற்கு முந்திய வாரம் கூட ஸ்ரீயந்தி புலம்பியிருந்தாள்.

    'ஆல்பர்ட் ஆன்ட்டி, அங்கிள் அவங்க மகளின் பேறுகாலத்திற்காய் போறாங்க... நான் எதற்கு..?'

    'அப்பாவோட கடைசி ஆசைன்னு வைடா மகளே!'

    முதலில், 'உங்களோடு இங்க பொறுப்பாய் யாருமில்லயேப்பா' என்று தவித்தவளை அப்பா, கோயில்பட்டியிலிருந்த தன் ஒன்றுவிட்ட தங்கையை கண்டெடுத்து அடக்கி விட்டார்.

    மகன் வீட்டில் குன்றி குறுகி வாழ்ந்த அத்தையும், "தப்பினேன் - பிழைத்தேன்' என்று வந்து தோப்பூரில் உட்கார்ந்து கொண்டவள் -

    'கொக்கைத் தேடி குளம் வராது; குருவியத் தேடி பழம் வராது'ம்பாங்க. என்னையத் தேடி அண்ணன் ஆளனுப்ப, ஓடியாந்துட்டேன்டா. உனக்கு உலகம் பாக்க கிடைச்ச வாய்ப்பயும் நீ நழுவ விட்டுடாதடா. போ பார்த்துட்டுத் தான் வாவேன்' என்றதை இளையவளால் மறுக்க முடியவில்லை.

    அப்பா தேர்ந்தெடுப்பவனைத்தான் அவருக்கு மருமகனாக்குவது என்ற முடிவு மகளில்!

    வெறுமே கிருபாவதி அத்தையை மட்டும் பார்த்து வர, அப்பா தன்னை இப்படி நெட்டித் தள்ளவில்லை...!

    அந்த அத்தைக்கு ஒரு மகன் இருப்பது தெரியும். பெயர் தாமோதர்!

    யுகான்டாவில் இந்தக் குடும்பத்தைக் கண்ட நாள் முதலாய் தன்னை அங்கே வாழ வைத்துவிடும் ஆசையை அப்பா அவருள் விதைத்து விட்டார். இத்தனை வருஷங்களில் அது ஊன்றி வேர் பிடித்துவிட்டது. இனி அதை வெட்டுவதையோ வளர்ப்பதையோ தான் இங்கிருந்து செய்ய முடியாது. போய் பார்த்த பின் முடிவு செய்வது தான் முறை.

    ஒரு பெண் வீட்டிற்கு வந்தது அப்பாவிற்கும் வசதியாய் போனது. வந்த அத்தையிடம் தனசேகரனின் குடும்பப் படம் ஒன்றைத் தந்து, மகளிடம் கல்யாணத் தணலை விசிறி விட முயன்றார்!

    அதை ஸ்ரீயந்தியிடம் காட்டிய அத்தை-

    'இந்த மாதிரி குடும்பம் அரிது யதி. அந்தம்மா குணவதின்னு முகத்துல ஒட்டி வச்சிருக்கு... மகனும் சிவப்பா, மிடுக்காத் தெரியறான். உனக்கு அப்பா மனசு புரியுதுல்ல? போய்... மாசக்கணக்கெல்லாம் வேணாம்... நாலே வாரம் இரு - அது போதாது ஒரு முடிவுக்கு வர? அதுக்குள்ள அண்ணன் உடம்பையும் இங்க தேத்திடறேன் நானு.'

    'சரி... அங்குள்ளவரைக் கல்யாணம் செய்தால், நான் அங்கேல்ல போகணும்? அப்பாதான் யோசிக்கலைன்னா...'

    'ஒத்த வியாபாரம், ஒரேப் பிள்ளை - ஆக வருஷத்தில் பாதி நாளு இங்கன இருந்துக்கோடா.... பொண்ணுகளுக்கு மசக்கை, பிள்ளைப் பேறுன்னு எத்தனை வாய்ப்பு? பிறகு பிள்ளைய இந்தப் பக்க, ஸ்கூல்ல சேத்திருவோம். அதுக தமிழெல்லாம் கத்துக்கணும்ல?'

    விஸ்தாரமாய் இழுத்தாள் மல்லி அத்தை.

    'எனக்குப் பிடிக்கலைன்னா?'

    'போனதும் வந்ததும் ஒரு அனுபவமாய் இருக்கட்டுமே? இப்ப நா அனுபவிக்கலை...? பெத்ததுகளை நம்பி எஞ்சொத்தெல்லாம் அதுக பேருக்கும் பொறுப்பிலேயும் விட்டா என்னாகும்னு நாய் போல நாதியத்து போன பிறவுதானே புரியுது..?'

    'நானும் கஷ்டப்படணும்னு நினைக்கறீங்களா அத்தை? பேசாம அப்பாவோட இருந்து நம்ப பண்ணைய நடத்தறேனே?'

    "கொக்கும், பழமும் உன்னையத் தேடி வந்திருக்குது - நின்னு

    Enjoying the preview?
    Page 1 of 1