Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vimochanam
Vimochanam
Vimochanam
Ebook109 pages50 minutes

Vimochanam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803312
Vimochanam

Read more from Sivasankari

Related to Vimochanam

Related ebooks

Reviews for Vimochanam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vimochanam - Sivasankari

    http://www.pustaka.co.in

    விமோசனம்

    Vimoshanam

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. 1928

    2. 1929

    3. 1930

    4. 1936

    5. 1937

    6. 1940

    7. 1952

    8. 1956

    9. 1960

    10. 1961

    11. 1970

    12. 1971

    13. 1978

    14. 1979

    15. 1981

    1

    1928

    அம்புலூ... ஊ...

    திண்ணையில் நின்று சித்தி குரல் கொடுத்தது காதில் விழாத அளவுக்கு அம்புலுவின் கவனம் பாண்டியில் இருந்தது.

    ஏரோப்ளேன் பாண்டி. பழம் எடுக்கும் தருவாய்.

    சில்லியை எறிந்து, 'சரியா? சரியா' என்று கேட்டபடி கண் களை மூடிக்கொண்டு, கட்டக் கோடுகளில் கால்படாமல் குதித்து, கடந்து, திரும்பிப் பார்க்காமல் பக்குவமாய் சில்லியை ஒரு கட்டத்தில் விழும்படி தூக்கிப்போட்டுவிட்டால், அந்தக் கட்டம் அவளுடைய சொத்தாவிடும்.

    அப்புறம் லல்லியையும், ஜகதாவையும், 'ஏய்- தாண்டிப் போங்க... என் பழத்துலே கால் பட்டுதுன்னா ஆட்டம் போயிடும்ஆமா - சொல்லிட்டேன்' என்று உட்கார்ந்தபடி விரட்டலாம்.

    அம்புலூ... ஊ...

    சில்லியை எறிந்துவிட்டு, தலையை அண்ணாத்தியபடி அம்புலு 'சரியா, சரியா?' என்று கேட்க ஆரம்பிக்க, பொறுக்க முடியாமல் சித்தி இறங்கிவந்து பாண்டிக் கட்டத்தின் மேலேயே நின்று அவள் தோளைப் பற்றி, ஏண்டீ... ஒண்ணரை நாழியா கத்தறேனே, காதில் விழலை? என்று அதட்டினாள்.

    தலையைக் குனியாமலேயே அம்புலு பேசினாள் - தள்ளிக்கோ சித்தி- நா பழம் எடுக்கப்போறேன்- ஒரு நிமிஷத்துலே முடிச்சுடுவேன்.

    பழமும் ஆச்சு, காயும் ஆச்சு, உள்ள வாடி! உங்கப்பா உன்னை கூப்பிடறார். உனக்குக் கல்யாணமாகப் போறதுடீ... தேதி குறிச்சுட்டா...

    சித்தி சொன்ன சேதியைக் கேட்டு சின்னதாக அம்புலு கண்களை விரித்தாள்.

    கல்யாணமா?

    எனக்கா?

    போன மாசம் அம்மணிக்கு நடந்த மாதிரியே நாலு நாள் கல்யாணமா?

    ஹை-

    புதுப் பாவாடை-

    புதுசுபுதுசாய் நகை...

    கேட்டபோதெல்லாம் வகைவகையாய் பட்சணங்கள்...

    அப்புறம் - சாரட் வண்டியில் ஊர்வலம்கூட விடுவார்களே!

    அம்புலு சந்தோஷத்தோடு சினேகிதிகளைப் பார்த்தாள்.

    நா வரலைடீ... நீங்க வேணா விளையாடுங்கோ - பேசியவள் சித்தியின் கையைப் பற்றிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

    சிவப்பு சிமிண்ட் பூசி வழவழவென்று பக்கத்துக்கு ஒன்றாக திண்ணையுடன்கூடிய வாசக்கட்டைத் தாண்டினால் நடை. அதை ஒட்டி திறந்த முற்றம். நாலு பக்கமும் தாழ்வாரங்கள். உயரமும் பருமனுமாய் நிற்கும் தூண்கள். அந்தப் பக்கம் முன்னறை. அதில் நெல் பத்தாயம், அலமாரி, உயரமான ஒரு கட்டில் இத்தனையும் இருக்கும். தாழ்வாரத்திலிருந்து சமையல்கட்டுக்கு ஒரு கதவு; புழக்கடைக்கு ஒரு கதவு.

    சிறுத்து ஒடுங்கி இல்லாமல் பரந்து விரிந்திருந்த தாழ்வாரத்தின் ஒரு பகுதியில் உத்திரக்கட்டையிலிருந்து தொங்கிய ஊஞ்சலில் அப்பா உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் ஊர் ஜோஸியரான் ஸ்ரெளதிகள். எதிரில் சித்தப்பா, மாமா. தூணில் சாய்ந்து நின்று கொண்டு அத்தை, சித்தி, அம்மா...

    அப்ப, நாளைக்கு எட்டாம் நாளை விட்டா வேற முகூர்த்தம் இல்லேன்னு சொல்றேளா?

    இவ நட்சத்திரத்துக்குத் தோதுப்படறதா இல்லை வைத்திய நாதா- அப்பறம் மார்கழி பொறந்துடறது... வேணா தை மாசத்துலே பார்க்கலாம்...

    அத்தை அவசரமாகக் குறுக்கிட்டாள். தை மாசத்துக்குத் தள்ளிப்போடாதேண்ணா... வர்ற முகூர்த்தத்துலேயே முடிச்சுடலாம். இன்னும் எட்டு நாள் இருக்கே! அதுக் குள்ள வேண காரியம் ஆகாதா?

    அம்புலுவின் தகப்பனார் வைத்தியநாதனின் தங்கை ஞானம், ஏழு வருஷம் முன்னால் புருஷனை இழந்து, வேறு போக்கிடம் இல்லாமல் தன் ஒற்றைப்பிள்ளையுடன் அண்ணாவைச் சரணடைந்தவள். அவள் பிள்ளை கோபுவுக்கு இப்போது பதினெட்டு வயசு. எட்டாவது வரைக்கும் படித்துவிட்டு மாமாவுக்கு உபகாரமாய் நிலம் நீச்சைப் பார்த்துக்கொள்கிறான். வைத்தியநாதனின் மூத்த பெண் அம்புலு என்கிற அலமேலுவுக்கும், இந்த கோபுவுக்கும், இவனுக்கு இவள் என்று எப்போதோ பெரிய உறவு விட்டுப்போகாமல் இருக்க முடிச்சுப் போட்டு விட்டார்கள். அம்புலுவுக்கு எட்டு வயசுதானே ஆகிறது. இன்னும் இரண்டு வருஷம் போகட்டும் ஜாம் ஜாம்மென்று கல்யாணத்தை நடத்திவிடலாம் என்று சம்பந்தப்பட்ட முடிவு எடுத்திருந்ததில் நாலு நாட்களாய் ஒரு சின்ன மாற்றம்.

    அடுத்த தெரு சுந்தரேஸ்வர மாமாவும், சாவித்திரி மாமியும் காசிக்குப் போகத் தீர்மானம் செய்துவிட்டார்கள். வண்டி கட்டிக்கொண்டு தஞ்சாவூர் போய், அங்கிருந்து ரயில் ஏறி, மெட்றாஸுக்குச் சென்று, அப்புறம் காசியை நோக்கி பயணத்தைத் தொடரவேண்டும். சமாசாரத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து, ஞானத்துக்கு திடும்மென்று தானும் காசிக்குப் போய், கங்கையில் குளித்து தன்னை மோட்சத்துக்குத் தயார் பண்ணிக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.

    நாலு நாட்கள் முன் அண்ணா எதிரில் வந்து நின்று, "போன ஜென்மத்துல யாருக்கு என்ன பாவம் பண்ணினேனோ, இப்ப இப்படி நிக்கறேன்! காசிக்குப் போறதெல்லாம் லேசுல நடக்கற சமாசாரம் இல்லே... அதிருஷ்டவசமா மாமாவும் மாமியும் கிளம்பியிருக்கா. நல்ல துணை- இப்ப இவாளை விட்டா, அப்பறம் தோதா வேறே யார் கிடைப்பானு தெரியலை. காசிக்குப் போகணும்னு நெஞ்சுக்குள்ள ஆசை ஏகமா முட்டறது! கோபுவைப் பாத்துக்க நீ இருக்கேன்னாலும் அவன் எனக்கு ஒத்தைப் பிள்ளை... அவன் கல்யாணத்தை நடத்தி கண்குளிரப் பாத்துட்டுக் காசிக்குப் புறப்பட்டா தேவலையோனு தோணறது. காசிக்குப் போயிட்டு நா எப்ப திரும்புவேன்னு சொல்ல முடியாது. அதனால அவனுக்கும், அம்புலுவுக்கும் பேசி வெச்சிருக்கற

    Enjoying the preview?
    Page 1 of 1