Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aahaya Gangai
Aahaya Gangai
Aahaya Gangai
Ebook102 pages49 minutes

Aahaya Gangai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703318
Aahaya Gangai

Read more from Vidya Subramaniam

Related to Aahaya Gangai

Related ebooks

Reviews for Aahaya Gangai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aahaya Gangai - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆகாய கங்கை

    Aahaya Gangai

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    யாரு பயணம் கிராமம் கேட்டது? இங்கதான் இறங்கணும்…

    கண்டக்டர் சொல்ல, நீலகண்டன் சட்டென்று எழுந்தான். அவசரமாய் தன் சூட்கேஸையும் ஏர்பேகையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.

    சுற்று முற்றும் பார்த்தான். தூரத்து மலைகளும் பசுமை போர்த்திய வயல்களும், காற்றில் ஆடிய தென்னை மரங்களுமாய் அடேயப்பா என்ன அழகான கிராமம் என்று வியந்தான்.

    அம்மா இவ்வளவு அழகான கிராமத்திலா பிறந்தாள்?

    அம்மாவைப் பார்த்தால் கிராமத்துப் பெண் என்று நம்பவே முடியாது. சிங்கப்பூர் வாசம். அழகான பங்களா. அங்கே தென்னிந்திய ரெஸ்டாரண்ட், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என்று பல தொழில்கள். அப்பாவும் அம்மாவும் அங்கே முக்கிய புள்ளிகள். அவனுக்கு மூன்று வயதில் அவர்கள் சிங்கப்பூருக்கு வந்ததாக அம்மா சொல்லுவாள்.

    அப்போ நம்ம ஊர் இது இல்லையா?

    இல்லை இந்தியாவில் இருக்கு.

    இந்தியாவிலா! எங்கே?

    சௌத் இந்தியாவில் நாகர்கோயில்கிட்ட பயணம்னு ஒரு கிராமம்.

    கிராமமா…? அப்டின்னா நீ எப்டி படிச்ச கிராமம்னா வயல் வேலை இல்ல செய்யணும்! நீ எப்படி இங்க வந்த…?

    அம்மா சிரித்தாள்.கிராமம்னா படிக்க முடியாதுன்னு யார் சொன்னது?

    எனக்கு நீ பிறந்த ஊரைப் பார்க்கணும்மா. அங்க யாரெல்லாம் இருக்காங்க?

    எல்லாரும் இருக்காங்க. உங்க தாத்தா, பாட்டி, மாமா, மாமி, பெரியம்மா, அவங்க பசங்கன்னு நிறைய பேர் இருக்காங்க.

    இவ்ளோ பேர் இருக்கும் போது நீ ஒரு முறை கூட என்னை அங்க கூட்டிட்டு போனதில்லையே…. உங்கப்பா அம்மாவை எல்லாம் பார்க்கணும்னே தோணாதா உனக்கு?

    நீதான் பார்க்கற இல்ல… இருபத்தி நாலு மணி நேரம் பத்தல நமக்கு. பிஸினஸை விட்டுட்டு எங்கேர்ந்து போறது!

    சரி… லெட்டர் போடறது…! நீயும் போடறா மாதிரி தெரியல. அங்கேர்ந்தும் வர்ற மாதிரி தெரியல…

    அதெல்லாம் இல்ல… போடக் கூடாதுன்னு ஒண்ணுமில்ல. சோம்பேறித்தனம். நேரமில்லை, எல்லாரும் நல்லார்க்கணும்னு நினைச்சுக்கறதோட சரி. அது சரி…

    இன்னிக்கு என்னடா ஆச்சு உனக்கு… ஒரே விசாரணை! திடீர்னு என் ஊரைப் பத்தி கேக்கற…!

    காரணமிருக்கு. இந்திய கிராமங்கள்ங்கற தலைப்புல ரிஸர்ச் பேப்பர்ஸ் சப்மிட் பண்ண வேண்டியிருக்கு. அஞ்சு பேரை செலக்ட் பண்ணி எங்க மேலிடம் இந்தியாவுக்கு அனுப்புறாங்க… அஞ்சு மாசம் இந்திய கிராமத்துல தங்கியிருந்து டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணி எழுதணும். அந்த அஞ்சு பேர்ல நானும் ஒருத்தன். எனக்கு தென்னிந்திய கிராமங்கள் அலாட் ஆகியிருக்கு. ஸோ… நா உன்னோட அந்த பயணம் கிராமத்துக்கு போகப் போறேன். எங்க தாத்தா, பாட்டி, மாமா, மாமி… என் கஸின்ஸ்…. எல்லாரையும் பார்க்கப் போறேன். அஞ்சு மாசத்துல ஒரு மாசம்மாவது அவங்களோட இருக்கப் போறேன்.

    அம்மா திகைப்போடு அவனைப் பார்த்தாள். என்ன சொல்வதென்று புரியாதது போல் நின்றாள்.

    என்னம்மா உனக்கு சந்தோஷமில்லையா…?

    ம்… என்ன…. அப்படியெல்லாம் இல்ல…

    இன்னும் பதினஞ்சு நாள்ள நான் கிளம்பணும். அங்க எல்லாருக்கும் கிஃப்ட் வாங்கணும். உனக்கு என்னெல்லாம் கொடுக்கணுமோ பேக் பண்ணிக்கொடு உங்கப்பா, அம்மாவுக்கு. சரியா...?

    நீலகண்டன் துள்ளிக் கொண்டு செல்ல அம்மா அவன் போவதையே வெறித்துப் பார்த்தாள்.

    கடைவாசல் ஒன்றில் நின்றான். ஷர்ட் பாக்கெட்டிலிருந்து விலாசம் எழுதிய அட்டை ஒன்றை எடுத்து நீட்டினான்.

    இந்த இடத்துக்கு வழி சொல்ல முடியுமா?

    கடைக்காரர் அவனை ஏற இறங்க பார்த்தார்….விஸ்வநாதய்யர் வீடா… எங்கேர்ந்து வரிங்க நீங்க?

    சிங்கப்பூர்லேர்ந்து.

    சிங்கப்பூரா…? அவன் வாய் பிளந்தான்.

    அய்யர்க்கு சிங்கப்பூர்ல யாரைத் தெரியும்?

    வழி சொல்றீங்களா…?

    இப்டியே நேரா ரைட்ல திரும்புங்க அங்க கற்பாறை கோயிலுக்கு போற வழின்னு யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க. கோயிலை ஒட்டி அக்ரஹாரத்துலயே இருக்கு அய்யர் வீடு. ஏன் தம்பி ஒருவேளை கற்பாறை பகவதி உங்க குலதெய்வமோ…?

    ம்… அப்படித்தான்.

    அதானே பார்த்தேன், போங்க தம்பி அழகான கோயில். ஒரு பக்கம் மலை, ஒரு பக்கம் நதி. சிங்கப்பூர்ல இப்டியெல்லாம் பார்க்க முடியாது.

    நீலகண்டன் நடந்தான். பாதி பேர் அங்கே மலையாளம் பேசிக்கொண்டு சென்றார்கள். பெண்கள் நீளத் தலைமுடியும் பைப்பின்னலும் நெற்றியில் சந்தனக்கீற்றுமாய் இருந்தார்கள். லேசான எண்ணை பளபளப்போடு கூடிய முகங்களில் ஒருவித அழகு தெரிந்தது பெரியவர் முதல் சிறுவர்கள் வரை குடை வைத்திருந்தார்கள்.

    நல்ல உயரமும், நிறமும், உயர்தர பேண்ட் ஷர்ட்டுமாய் கம்பீரத் தோற்றத்தோடு நடந்தவனை நிறைய பேர் திரும்பிப் பார்த்தார்கள்.

    அக்ரஹாரத்தில் வரிசையாய் வீடுகள் இருந்தன. கேரளத்து பாணியில் ஓட்டு வீடுகள், சில வீடுகள் நவீனமாகவும் இருந்தது.

    யாரு வேணும்…? பெரியவர் ஒருவர் கேட்டார்.

    விஸ்வநாதய்யர்…

    ஓ… அந்த நாலாவது வீடு. பச்சக் கலர் கேட்.

    நீலகண்டன் அந்த வீட்டு வாசலுக்கு வந்து நின்று ஆவலோடு உள்ளே பார்த்தான். நல்ல தேக்கு மரத்தால் இழைக்கப்பட்ட கனமான கதவு திறந்திருந்தது. நீளவாக்கில் நாலைந்து கட்டுகளாய் இருந்தது வீடு. உள்ளே சளசளவென்று பேச்சு சத்தம் கேட்டாலும் ஆட்கள் தென்படவில்லை.

    யாரு வேணும்?

    பின்னால் குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினான்.

    கிட்டத்தட்ட இவன் வயது இளைஞன் ஒருவன் கையில் கோயில் பிரசாதத்தோடு வேட்டியும். மேலே போர்த்திய டவலுமாக நின்றிருந்தான்.

    விஸ்வநாதய்யர்….

    எங்க தாத்தா தான். நீங்க யாரு…?

    தாத்தா இல்லையா…?

    கோயில்ல இருக்கார் இப்ப வந்துடுவார். நீங்க யாருன்னு சொல்லலையே. உள்ளே வந்து உட்காருங்கோ நேர்த்திக் கடன் செலுத்த வந்திருக்கேளா?

    Enjoying the preview?
    Page 1 of 1