Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nagaratha Nizhal Ondru!
Nagaratha Nizhal Ondru!
Nagaratha Nizhal Ondru!
Ebook88 pages30 minutes

Nagaratha Nizhal Ondru!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403296
Nagaratha Nizhal Ondru!

Read more from Rajesh Kumar

Related to Nagaratha Nizhal Ondru!

Related ebooks

Related categories

Reviews for Nagaratha Nizhal Ondru!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nagaratha Nizhal Ondru! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    நகராத நிழல் ஒன்று

    Nagaratha Nizhal Ondru

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ஆட்டோ பின்னால் எழுதப்பட்ட வாசகம்.

    ஜாதிக்கு ஒரு கொடி பறந்ததால் நம் தேசியக் கொடியின் நிறங்கள் மறந்தே போயிற்று!

    காஞ்சனாவின் கன்னத்தை இடது கை விரல்களால் மெல்ல தட்டி விட்டு சூட்கேஸை எடுத்துக் கொண்டான் பீட்டர்.

    நான் கிளம்பட்டுமா... காஞ்சனா...? காஞ்சனாவின் ரோஜா நிற முகம் லேசாய் வாடியிருக்க கண்கள் கலங்கியிருந்தன.

    ட்ரெய்ன் எத்தனை மணிக்கு?

    சரியா ரெண்டு மணிக்கு.

    பகல்ல ட்ரெய்ன் கிடையாதா...? ஒவ்வொரு தடவை வெளியூர் போகும்போதும் இந்த மிட் நைட் ட்ரெய்ன்ல தானே போறீங்க...?

    "என்ன செய்யறது காஞ்சனா...! இந்த ஒரு ட்ரெய்ன்தான் ஸ்ட்ரெய்ட் ட்ரெய்ன். பகல் நேரத்து 'ரெய்ன்ல போனா திருவனந்தபுரம் போய் இன்னொரு ட்ரெய்ன் மாறணும்.

    எத்தனை நாள் டூர்? ஒரு வாரம் தானே.

    சொல்ல முடியாது. வேலை முடியலைன்னா டூரை கண்டினியூ பண்ண வேண்டியிருக்கும்.

    என்னங்க... கொஞ்சலாய் பீட்டரின் சட்டைக் காலரைப் பிடித்து அவன் தலையை இழுத்து தன் நெற்றியோடு அவனுடைய நெற்றியை மோதவிட்டாள்.

    ம்...

    இந்த மெடிக்கல் ரெப் வேலையை விட்டுட்டு நீங்க வேற வேலையைத் தேடிக்க முடியாதா...?

    ஏன்...? இந்த வேலைக்கு என்ன?

    மாசத்துல இருபதுநாள் வெளியூர் போயிடறீங்க...! என்னால வீட்ல தனியா இருக்க முடியலை.

    பீட்டர் அவளுடைய கன்னத்தைத் தட்டினான். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. வேற ஒரு கம்பெனியில் வேலைக்கு சொல்லி வெச்சிருக்கேன். அந்த வேலை கிடைச்சுட்டா வெளியூர் பயணமே கிடையாது.

    நிஜமா...?

    நிஜமோ நிஜம்... பீட்டர் சொல்லிக் கொண்டே வாசலில் நின்றிருந்த ஆட்டோவை நோக்கிப் போனான்.

    டூரிலிருந்து திரும்பும்போது உனக்கு என்ன வாங்கி வரட்டும்?

    நீங்க சீக்கிரமே வந்தா போதும்.

    வந்துடறேன்... எனக்கு மட்டும் உன்னைப் பிரிஞ்ச இருக்க ஆசையா என்ன...?

    ஆட்டோவில் ஏறி பீட்டர் கையசைக்க ஆட்டோ புறப்பட்டது.

    ஆட்டோ தெருமுனையில் சென்று மறையும் வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்த காஞ்சனா கதவைச் சாத்தி தாழிட்டுக் கொண்டு உள்ளே போனாள்.

    சுவர் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.

    மணி12.35.

    சமையலறைக்குப் பக்கத்தில் ஒரு போர்வைக்குள் சுருண்டு படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரி பூங்காவனம் சத்தம் கேட்டு கொட்டாவியோடு எழுந்து உட்கார்ந்தாள்.

    அய்யா ரயிலுக்கு கிளம்பிட்டாராம்மா?

    ம்...

    மணி என்னம்மா?

    பனிரெண்டரை...

    பூங்காவனம் மறுபடியும் ஒரு நீளமான கொட்டாவியோடு போர்வைக்குள் நுழைந்துவிட காஞ்சனா தன்னுடைய படுக்கையறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள். மின் விசிறியைச் சுழல வைத்துவிட்டு படுக்கைக்குச் சாய்ந்தாள்.

    டெலிபோன் கூப்பிட்டது.

    'இந்நேரத்துக்கு யார்...?’

    ரிஸீவரை எடுத்தாள்.

    ஹலோ...

    மிஸ்டர் பீட்டர் வீடு தானே...?

    ஆமா...

    அவர் வீட்ல இருக்காரா...?

    இல்லை... நீங்கயாரு...?

    நான் பாலச்சந்திரன். அவரோட ஆபீஸ் கொலிக்.

    ஓ...! நீங்களா...? உங்களைப் பத்தி அவர் நிறைய சொல்லியிருக்கார். அவர் இப்பத்தான் ஆபீஸ் விஷயமா டூர் கிளம்பிப் போனார்.

    ரயில்வே ஸ்டேஷனுக்குத்தானே?

    ஆமா...

    ட்ரெய்ன் எத்தனை மணிக்கு?

    ரெண்டு மணிக்கு.

    மும்பை- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் தானே?

    ஆமாம்...

    சரி... நான் ஸ்டேஷன்ல போய் பார்த்துக்கிறேன்.

    ஏதாவது முக்கியமான விஷயமா?

    ஆமா... ஆபீஸ் விஷயமா அவர்கிட்ட கொஞ்சம் பேசவேண்டியிருக்கு. ஸ்டேஷனுக்கு அவர் கிளம்பிப்போய் எவ்வளவு நேரம் இருக்கும்?

    "இப்பத்தான் ஆட்டோவில் புறப்பட்டுப் போனார். இன்னும் ஸ்டேஷன்கூட போய்

    Enjoying the preview?
    Page 1 of 1