Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaar Intha Kalyani?
Yaar Intha Kalyani?
Yaar Intha Kalyani?
Ebook97 pages56 minutes

Yaar Intha Kalyani?

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603157
Yaar Intha Kalyani?

Read more from Devibala

Related to Yaar Intha Kalyani?

Related ebooks

Reviews for Yaar Intha Kalyani?

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaar Intha Kalyani? - Devibala

    http://www.pustaka.co.in

    யார் இந்தக் கல்யாணி?

    Yaar Intha Kalyani?

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    பல குரல்களில், பல மாடுலேஷன்களில், மாறுபட்ட சூழ்நிலைகளில், வேறுபட்ட மனிதர்களால், நெகிழ்ந்து, கோபமாக, உணர்ச்சி வசப்பட்டு, சந்தேகத்துடன், பாசத்துடன் கேட்கப்பட்ட ஒரு கேள்வி,

    யார் இந்தக் கல்யாணி?

    அது தான் இந்தக் கதை!

    அந்தக் குடும்பத்துக்கு கல்யாணி அறிமுகமானதே ஒரு எதிர்பாராத தருணத்தில்!

    கல்யாணி - இளமை ததும்பும் 20 வயதுப் பெண்ணல்ல! ஐம்பத்தி ஆறைக் கடந்த, முதுமையின் தலைவாசலில் காலடி பதித்தவள்! ஆனாலும் லட்சணமாக, நல்ல நிறத்துடன், எப்போதும் உதட்டில் புன்னகையை நிரந்தரமாகக் குடிவைத்திருக்கும் பெண்!

    விசுவநாதன் - ரிடையர்ட் ரயில்வே அதிகாரி - அறுபத்தி மூன்று - இப்போதும் ஓரளவுக்கு ஆரோக்யமாக இருப்பவர் - தன் பென்ஷன் பணத்தைப் பெற, வங்கிக்கு புறப்பட்டு, கதவைப் பூட்டும் நேரம் செல்போன் ஒலித்தது! எடுத்தார்.

    விசுவநாதன் சார் இருக்காரா? பெண் குரல்.

    பேசறேன். நீங்க யாரு?

    சார்! உங்க சம்சாரம் கோயில்ல மயக்கமாக விழுந்துட்டாங்க. பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருக்கேன். என் பேர் கல்யாணி!

    இப்பவே வர்றேன்!

    கதவைப் பூட்டிக் கொண்டு அவசரமாக புறப்பட்டார். தன் ஸ்கூட்டரை வெளியே உருவி, இயக்கி, வேகம் பிடித்தார்.

    நாலு தெரு தள்ளி ஒரு அம்மன் கோயில் உண்டு.

    அவர் மனைவி அமிர்தா தினசரி காலை நடந்தே அந்தக் கோயிலுக்கு போய் விடுவாள்!

    அந்தக் கோயில் இருக்கும் தெருமுனையில் ஒரு 24 மணிநேர க்ளினிக் உண்டு!

    விசுவநாதன் ஸ்கூட்டரை நிறுத்தி வேகமாக உள்ளே நுழைந்தார். ரிசப்ஷனை அவர் நெருங்கி,

    இங்கே அமிர்தானு இப்ப அட்மிட்...!

    முடிப்பதற்குள், சார்! இங்கே வாங்க! முதுகில் குரல் மோத திரும்பினார்.

    கல்யாணி நின்றாள். பளிச்சென்ற குங்குமம் - லேசான நரையோடிய தலை - இரட்டை நாடி உடம்பு. வசீகரமான தோற்றம்! விசுவநாதன் பின்பற்ற அந்த அறைக்குள் அமிர்தாவுக்கு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது! கண்களை விழித்திருந்தாள்.

    என்னாச்சு?

    டாக்டர் திரும்பினார்.

    லோ ஷுகர் - ஹை பி.பி... அதான் மயக்கம். இந்தம்மா கொண்டு வந்து சேர்த்தாங்க! ரெண்டு பாட்டில் சலைன் ஏத்தினா, சரியாகும்! ப்ளட் எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பியிருக்கோம்! பயப்பட எதுவும் இல்லை!

    அவர் போனதும், ஒரு நர்ஸ் வந்து பில் தந்தாள்.

    இந்தப் பணத்தைக் கட்டிடுங்க!

    போய் எடுத்துட்டு வந்திர்றேன்!

    அமிர்தாவை நெருங்கினார்.

    நேத்திக்கு ராத்திரியே ஒரு கிடினஸ் இருந்திருக்கு! நான் டாக்டர்கிட்ட போகலாம்னு சொன்னேன். கேக்கலை. அப்படி என்ன பக்தி? ஒரு நாள் கோயிலுக்குப் போகலைன்னா அம்மன் கோச்சுப்பாளா? நான் சொன்னா ஒரு வார்த்தையாவது நீ கேக்கறியா?

    அமிர்தா சிரித்தாள்!

    முதல்ல கல்யாணிக்கு நன்றி சொல்லுங்க! திரும்பினார்.

    ஸாரிமா! அதை மறந்துட்டேன். ரொம்ப நன்றி!

    இதெல்லாம் பெரிசா? மனுஷனுக்கு மனுஷன் உதவலைனா எப்படி?

    கொஞ்சம் அமிர்தாகூட இருக்க முடியுமா! பேங்க்ல போய் பணத்தை எடுத்துட்டு வந்திர்றேன்!

    கண்டிப்பா!

    ஒரு மணி நேரத்தில் பணத்துடன் வந்து அதைக் கட்டிவிட்டு உள்ளே வர, கல்யாணி, அமிர்தாவுக்கு குடிக்க ஜூஸ் ஏதோ தந்து கொண்டிருந்தாள்!

    கல்யாணிதான் வாங்கிட்டு வந்தாங்க!

    இதுக்கு எவ்ளோ ஆச்சும்மா?

    என்ன சார்? இருபது ரூபாய் சாத்துக்குடி ஜூஸுக்கு கணக்கா? விடுங்க!

    எப்படி போன் பண்ணினீங்க?

    கோயில்ல அடிப் பிரதட்சணம் செய்யும்போது தலைசுற்றி விழுந்தாங்க. தண்ணி தெளிச்சு, நான்தான் ஒரு ஆட்டோ வச்சு இங்கே கூட்டிட்டு வந்தேன். ஒண்ணும் புரியலை. இவங்க பர்ஸை ஆபத்துக்கு பாவமில்லைனு திறந்தேன். விசிட்டிங் கார்டு இருந்தது! அந்த நம்பருக்கு போன் பண்ணினேன்!

    மனிதாபிமானம், வேகம், விவேகம் எல்லாம் உங்ககிட்ட இருக்கு! உங்க வீடு பக்கத்துலயா?

    கோயிலுக்கு அடுத்த தெருவுல!

    நான் கண் முழிச்சதும் டாக்டர் சொல்லி தெரிஞ்சுகிட்டேன். பேர் கேட்டேன். அறிமுகம் ஆனோம். சில நொடிகள் கூட ஆகலை. கல்யாணியோட சிரிப்பும், அன்பும், எனக்குப் புடிச்சுப்போச்சு! கோயில்ல தினசரி சந்திப்போம். ஆனா பேசினது இன்னிக்குத்தான்!

    சரி! நான் வெளில இருக்கேன்!

    நீங்க புறப்படுங்க! உங்க வீட்ல தேடப் போறாங்க!

    நான் போயிட்டு, இந்த ட்ரிப்ஸ் முடியும்போது வர்றேன். வரட்டுமா அமிர்தா?

    Enjoying the preview?
    Page 1 of 1