Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amanushya Aranmanai
Amanushya Aranmanai
Amanushya Aranmanai
Ebook121 pages1 hour

Amanushya Aranmanai

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580102602995
Amanushya Aranmanai

Read more from Lakshmi Praba

Related to Amanushya Aranmanai

Related ebooks

Reviews for Amanushya Aranmanai

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amanushya Aranmanai - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    அமானுஷ்ய அரண்மனை

    Amanushya Aranmanai

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    என்னுரை

    வாசக நெஞ்சங்களுக்கு,

    வணக்கம்! வானதி பதிப்பகத்தின் மூலமாக மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்த அழகான தொகுப்பில் இரு நாவல்கள் அடங்கியுள்ளன.

    'அமானுஷ்ய அரண்மனை' நாவல்... சித்தர் - அமானுஷ்யம் கலந்தது. அழகான தீவு...! பார்த்திபன், பூர்ணா, மீனலோசனி கதாபாத்திரங்களுடன் பாம்பாட்டி சித்தரின் திருவிளையாடல்...! இதை வாசிக்கும் போது முழுநீளத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தி உங்களுக்குக் கிடைக்கும்.

    'என் சொர்க்கம் நீ பெண்ணே...! நாவலும் சித்தர் அமானுஷ்யம் கலந்தது தான். அழகான சில்லென்ற எஸ்டேட் கதைக்களம்....!

    அவந்திகா, அரவிந்தாட்சன், சகுந்தலா கதாபாத்திரங்களுடன் வினோதமான உருவில் கோரக்கர் சித்தர். சற்றேனும் ஊகிக்க முடியாத திருப்புமுனை...! மயிர்கூச்செறிய வைக்கும் காட்சி என்று இக்கதை பசுமரத்தாணி போல் பதிந்து காலத்திற்கும் மனதை விட்டு அகலாமல் நிற்கும் என்பது திண்ணம்!

    இப்புத்தகத்தை அழகா வடிவமைத்து அச்சிட்டு வெளியிட்ட திருவரசு புத்தக நிலையத்திற்கும், டாக்டர் திரு. வானதி இராமநாதன் அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

    மிக்க நன்றி.

    அன்புடன்

    லட்சுமி பிரபா

    lakshmiprabarovelsreview@gmail.com.

    அமானுஷ்ய அரண்மனை!

    1

    அழகான வனாந்தரம்....!

    காட்டாறு அதிவேகமாய் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.

    காட்டுப் புஷ்பங்கள் சிலீரென்று கொத்துக் கொத்தாய் பூத்திருந்த மரக்கிளையொன்றில் ஒரு பஞ்சவர்ணக்கிளி அமர்ந்து.... தன் சிறகுகளை சடசடத்தது.

    சிவப்பு வண்ண அலகைத் திருப்பி... கீழே குனிந்து நோக்கியது.

    தேவதை போன்ற பேரழகுடன் இளவரசி நின்றிருந்தாள்.

    உரிமையுடன் பஞ்சவர்ணக்கிளி கீழே பறந்து வந்து.... இளவரசியின் அழகிய தோளில் உட்கார்ந்து கீ... கீக்கீ... என்று கொஞ்சியது.

    பார்த்தாயா...? அவர் இன்னமும் வரவில்லை. இனி அவர் வந்தால் நான் பேசப் போவதில்லை... என்றாள் இளவரசி.

    மீனலோசனி...!

    காய்ந்த சருகுகள் பலமாய் மிதிபடும் சப்தம் கேட்டது.

    "இப்போது அவர் என்னை அழைப்பதுபோல் இருக்கிறது. சதா சர்வகாலமும் அவரது குரல்தான் காதில் ஒலிக்கிறது...

    ஆனால் அவருக்கோ துளியளவு கூட என் நினைவு வராது போலிருக்கிறது..."

    பஞ்சவர்ணக்கிளியிடம் தனது உள்ளக்கிடக்கையைப் பற்றி செல்லமாய் புலம்பினாள் இளவரசி.

    இளவரசியின் முகத்தைப் பரிதாபமாய் உற்று நோக்கிய கிளி... மறுகணம் குதூகலமாய் சிறகுகளைப் படபடத்தது.

    பார்த்திபன்... பார்த்திபன்...! என்று கிளி மிழற்றியது.

    நீ அவரது பெயரை உச்சரிக்கும் போது... எனது செவிகளில் தேன் வந்து பாய்கிறது... இளவரசி மேற்கொண்டு பேசி முடிப்பதற்குள்... பஞ்சவர்ணக்கிளி சட்டென்று பறந்தது.

    நீயும் என்னைத் தனிமையில் தவிக்க விட்டு.... எங்கே செல்கிறாய்....? நில்...!

    கோபத்துடன் அண்ணாந்து பார்த்தாள்.

    'கீ... கீக்கீ... கீ..." உற்சாகமாய் வட்டமிட்டுப் பறந்துவிட்டு... பின் சற்று தூரமாய் பறந்து போனது.

    'என்ன இது? இளவரசி திகைத்து நின்ற தருணத்தில்... அவளது முதுகுப் பக்கமாய் ஆஜானுபாகுவாய் வந்து நின்ற பார்த்திபன்... உரிமையுடன் அவள் மீது சாய்ந்து இறுகக் கட்டிக் கொண்டான்.'

    ஓ... நிஜமாகவே வந்து விட்டீர்களா? அவளது குரல் யாழை மீட்டினாற் போல்... மிக இனிமையாய் இருந்தது.

    உனது குரலில் கோபம் தொனித்திருக்கிறதே கண்ணே?

    கேட்டபடி இளவரசியின் தோள்பட்டையில் முகம் புதைத்து... அழுத்தமாய் முத்தமிட்டான்.

    உங்களுடன் நான் பேசப் போவதில்லை... கோபம் தணிந்து குரல் கிசுகிசுப்பாய் வெளிப்பட்டது.

    நீ பேசாவிடில் உன் இனிய குரலை நான் எப்படி கேட்பதாம்? கானகத்தில் கானம் பாடும் குயில்... உன் குரலுக்கு முன் தோற்றுப் போகும் தேவி.

    இளவரசியின் காது மடலில்... பார்த்திபன் தன் இதழ்களால் ஒற்றியெடுத்தான்.

    அவ்வளவுதான்...! இவளது கோபம் எல்லாம் பஞ்சாய் பறந்து விட்டது.

    பிடி இடை துவண்டது.

    அதீத காதலுடன் சட்டென்று திரும்பினாள்.

    நான்கு விழிகளும் நேசமாய் மோதிக் கொண்டன.

    குறும்பு கூத்தாடும் கண்களால் பார்த்திபன் இளவரசியை ஊடுருவினான்.

    கடலாய் விரிந்த கண்கள்... பிறை நெற்றி... கண்ணாடியாய் பளபளத்த கன்னங்கள்..... பன்னீர் மொட்டைப் போன்ற மூக்கு... ரோஜா இதழ்களைப் பிய்த்து ஒட்ட வைத்தாற் போன்ற அதரங்கள்...

    மோவாயின் நடுவில் குழி வெட்டினாற் போன்ற பள்ளம்... சங்கு கழுத்து... மூங்கில் தோள்கள்...

    பிரம்மன் தனது படைப்புத் திறனை எல்லாம் ஒன்று சேர்த்து ரசனையுடன் உன்னைப் படைத்து இருக்கிறார் மீனலோசனி...!

    ஆண்களுக்கு வர்ணிக்க சொல்லியா தரவேண்டும்? அதிலும் உங்களுக்கு வர்ணிக்கும் திறன் சற்று அதிகமாகவே உள்ளது...

    ஊகூம்... அப்படியல்ல... உனது அதீத அழகு என்னை அப்படி வர்ணிக்க வைக்கிறது...

    அதீத அழகா?

    ஆம்... அதீத அழகு என்று சொல்வதை விட 'பேரழகு' என்று சொன்னால்... அது சாலப் பொருந்தும்.

    இளவரசிக்கு இதைக் கேட்டதும்... உள்ளூர மகிழ்ச்சி நீரூற்று பொங்கியது.

    தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்... அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

    நீங்கள் ஒரு கவிஞர் என்பதை என்னிடம் மறைத்து விட்டீர்களே? என்ன திகைக்கிறீர்கள்? அழகாய் பொய் கூறுகிறீரே?

    "நான் கவிஞன் அல்ல.... அழகையும் கலையையும் ரசிக்கத் தெரிந்தவன்... நான் கூறியது பொய் அல்ல கண்ணே...! மெய்தான்...!

    உன்னைப் போன்ற பேரழகியை... அகிலத்தில் நான் எங்கும் கண்டதில்லை..."

    இளவரசியின் செவிகளில் தேனோடை

    Enjoying the preview?
    Page 1 of 1