Uravu Ondru Vendum
5/5
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Iruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Puthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Vettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsPournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Anna Rating: 5 out of 5 stars5/5Vera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Salanam Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Kaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsNila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Kaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsSumai Rating: 0 out of 5 stars0 ratingsUnnaruge Ullaval Rating: 0 out of 5 stars0 ratingsPoo Manasu Rating: 5 out of 5 stars5/5Nee En Poonchiragu Rating: 5 out of 5 stars5/5
Related to Uravu Ondru Vendum
Related ebooks
Tholaintha Devathai Rating: 0 out of 5 stars0 ratingsArali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Veli Rating: 3 out of 5 stars3/5Manase Manase Rating: 5 out of 5 stars5/5Paruva Vayasum... Paal Manasum... Rating: 5 out of 5 stars5/5Nee Enathu Innuyir Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsAnantham Vilaiyadum Veedu Rating: 4 out of 5 stars4/5Ulley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsMouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Kalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsGangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Kalyaana Varam Rating: 5 out of 5 stars5/5Uruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsNettruvarai Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Idhayam Idam Maarumaa...? Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Part - 2 Rating: 5 out of 5 stars5/5Un Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsEppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5Kadhal Vedham Rating: 5 out of 5 stars5/5Ninnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Puthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Ullam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsManam Virumbuthe Unnai Rating: 5 out of 5 stars5/5Ilamaiyil Koll Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Uravu Ondru Vendum
1 rating0 reviews
Book preview
Uravu Ondru Vendum - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
உறவு ஒன்று வேண்டும்
Uravu Ondru Vendum
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
1
எல்லாம் கூடி வந்தா, உனக்கு நிலைமாலை வாங்கி சாத்தறேன்...
அரசடிப் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து கற்பூரம் காட்டியபோது லட்சுமி மனமுருக வேண்டிக் கொள்கிறாள்.
பக்கத்திலே கண்களை மூடி, கூப்பிய கரத்துடன் அவள் பெண் சத்யா.
என் குழந்தை நல்லா இருக்கணும்
- இப்படி எந்த தாய் தான் பிரார்த்திக்க மாட்டாள்? சத்யா விஷயத்தில் - லட்சுமி அதீத கவலைப்படுகிறாள் என்றால் அதற்கு நிறைய காரணங்கள் உண்டு.
ஒன்று - பத்தொன்பது வயசுக்கும், மாநிறமாயிருந்தாலும் அவள் அழகுக்கும் மாப்பிள்ளைகள் கொத்திக் கொண்டு போகத் தயாராக இருப்பார்கள் என்று லட்சுமி நினைத்த நினைப்பை ஆறு வரன்கள் ஏமாற்றிவிட்டது!
வீட்டுக்கு ஏற்றவளாய், அடக்கமாய், குடும்பப் பாங்காய், வம்புதும்புக்குப் போகாதவளாய், புருஷனின் மனம் அறிந்து நடக்கக் கூடியவளாய் பெண் வேண்டும் என எதிர்பார்த்த காலங்கள் போக -
இப்பொழுது பெண் நிறைய படித்திருக்க வேண்டும் என்கிறார்கள். வேலைக்குப் போக வேண்டும் என்கிறார்கள். நாகரீக சமுதாயத்துக்கு ஏற்றவாறு உடை உடுத்தி பார்ட்டிகளுக்கு முகம் சுளிக்காமல் வரவேண்டும் என்கிறார்கள், கல்யாணமாகி குறைந்தது ஐந்து வருஷங்களுக்கு குழந்தை குட்டி என்கிற பேச்சையே எடுக்கக் கூடாது என்கிறார்கள்,
மாறிவரும் சமுதாயம் லட்சுமிக்கு புரியாத ஒன்று.
இன்றைக்கு இருபத்தியொரு வயசாகிறது சத்யாவுக்கு.
இரண்டாவது பயம் - தன் ஒரே மகனான ஜனார்த் தனமும், மருமகள் ரோகிணியும் - சத்யாவின் விஷயத்தில் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்ளாதது.
லட்சுமியின் அதிர்ஷ்டம் பிள்ளையையும், மருமகளையும் விட்டால் - மகள் கல்யாணத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு செய்ய, வேறு ஆள் இல்லை.
இத்தனைக்கும் லட்சுமியின் கணவர் பணத்துக்கு தட்டுப்பாடு வைக்காதது மகளின் திருமணத்துக்காக கணிசமான தொகையை சேர்த்து வைத்து விட்டுத்தான் இறந்து போனார்.
சத்யா - பள்ளிப்படிப்பு முடிந்தவுடனேயே கல்லூரியில் சேரவேண்டுமென விரும்பியபோது - முதல் தடங்கல் போட்டவளே அண்ணி ரோகிணிதான்.
"ஆமா, இப்ப இங்கே டிகிரி வாங்கினவங்க எல்லாம் என்ன பண்ணறாங்க? குழந்தை துணியத்தான் அலசிட்டு உட்கார்ந்திருக்கோம். பேசாம வீட்டுல இருந்து உடம்பை தேத்திக்க. நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றவங்க முன்னாடி எலும்பும் தோலுமா நிற்கவேண்டாம்.
ரோகிணிக்கு - படித்து பட்டம் வாங்கியவளான தான் வேலைக்குப் போக முடியவில்லையே என்கிற குறை நிறைய,
அவளை, யாரும் வேலைக்குப் போகக்கூடாது என்று கையைப்பிடித்துத் தடுக்கவில்லை. ஒரு பிள்ளை பிறக்கும் வரையில் அவளும் வேலைக்குப்போய் வந்து கொண்டு தான் இருந்தாள்.
பிள்ளை பெற்றபின் - என்னவோ - தான் பெற்று பிழைத்ததே உலக மகா அதிசயம் என்பது போன்ற எண்ணம் வந்துவிட்டது அவளுக்கு. போதாகுறைக்கு - வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த பெருமை வேறு.
குனிய மாட்டாள். நிமிரமாட்டாள்
வெகுநாள் வரையில் பெற்ற குழந்தையைக்கூட தூக்கமாட்டாள்.
ஐயோ, என்னமோ தலைகாணி உறையத் தைக்கிற மாதிரி இல்லே வயித்தைக்கிழிச்சு மூடியிருக்கார் டாக்டர். இழுத்து மூச்சுவிடக் கூட.ப்பயமா இருக்குதே. ஒவ்வொருத்தி என்னமோ - சர்க்கரை மூட்டைய இடுப்பை விட்டு இறக்கி வைக்கிறமாதிரி இல்லே பிள்ளை பெத்துக்கறா...
அவள் உட்கார்ந்து உடம்பை பெருக்க வைத்துக் கொள்வதற்கு தகுந்தாற்போல் - குழந்தையை தூக்கி வைத்துக்கொள்ள சத்யா. சமைத்து வைக்க லட்சுமி.
இந்த நிலையில் என்னமோ நாத்திக்கு கல்யாணத்தை முடித்து விட்டுதான் மறுவேலை என்பதுபோல ரோகிணி. கல்லூரிப் படிப்புக்கும் முட்டுக்கட்டை போட.
தன் மருமகளுக்குத்தான் மகளின் போஷாக்கில் எத்தனை அக்கறை என்று அகமகிழ்ந்திருந்த லட்சுமிக்கு - நாளடைவில் - தன் மகள் இளைத்து துரும்பாவது கண்டு சொல்லமுடியாத வேதனை.
அவள், யாரைப்போய் கேட்பாள்?
ஜனார்த்தனத்திடம் தான் பொருமுவாள்.
ஏண்டா, உன் தங்கைக்கு நல்ல இடமாப் பார்க்க கூடாதா...?
இப்ப அவ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?
நல்லாயிருக்குடா நீ சொல்றது. ஒண்ணு அவ மேல படிப்பை தொடர்ந்திருக்கணும். இல்லே, கல்யாணத்தையாவது முடிக்கணும். ரெண்டுமில்லாம, வீட்டோட வயசுக்கு வந்த பொண்ணை வச்சிட்டிருக்கறது நியாயமா?
அம்மா...நான் காலையில ஆபீசுக்குப் போனா சாயந்திரம் ஏழு மணிக்குத்தான் வீட்டுக்கு வர்றேன்
என்னை டாக்டர் கிட்ட அழைச்சிட்டுப் போகவே உங்க பிள்ளையாலே முடியலை.
ரோகிணி சொல்றாப்பல பெண்டாட்டி உடம்பை கவனிக்கவே என்னாலே முடியலே. சுவர் இருந்தாத் தானே சித்திரம் எழுத முடியும்? அவளானா தினமும் புதுசு புதுசா என்னென்னவோ வியாதி சொல்றா"
அப்ப சத்யா கல்யாணத்தை - நீ பொறுப்பேத்துட்டு செய்ய மாட்டே. அப்படித்தானே?
லட்சுமி, கொதித்துப் போய் கேட்டாள்.
"பார்த்தீங்களா, பார்த்தீங்களா, நான் சொன்னப்ப என்னமோ - எங்க அம்மாவுக்கு பேசவே தெரியாது. நீயா எதையாவது சொல்லாதேயின்னு வரிஞ்சு கட்டிட்டு என் கிட்ட சண்டைக்கு வந்தீங்களே... இப்ப நீங்களே கேட்டுக்குங்க
அம்மா, சத்யா கல்யாணத்தை நான் நடத்த மாட்டேன்னு சொன்னேனா? அவ பேருல - அப்பா கொடுத்த பணம் அப்படியே இருக்கு. என்னாலே ஜாதகம் பார்த்து, மாப்பிள்ளை தேடி இதெல்லாம் முடியாது. தினமும் பத்திரிகையப் போட்டு அலசி தீர்க்கறீங்க இல்லே அம்மாவும் பொண்ணும்? நமக்கு ஏத்த இடமா இருந்தா, ஜாதகத்தை வச்சி, எழுதிப் போடுங்க. எல்லாம் சேர்ந்து வந்ததுன்னா சொல்லு. ஒரு வாரம் லீவு போட்டுட்டு கல்யாணத்தை முடிச்சுத் தர்றேன்
அவன் இவ்வளவு சொன்னதே பெரிசு. அதுவும் தன் மனைவியிடம் அனுமதி - பெறாமல் கடைசியாக அவன், 'ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு கல்யாணத்தை முடித்து தருவதாக' சொன்னது மிகப் பெரிய விஷயம்!
ஜனார்த்தனம் தன் மனைவியைக் கலந்தாலோசிக்கா மல் சொன்ன வார்த்தை - ஆயுசிலேயே இதுவாகத்தான் இருக்கும்!
அவன் உலகம் ரொம்பவும் சின்னது. அதில் அவன், ரோகிணி, அவன் குழந்தை - இந்த மூன்று பேர்களுக்குத் தான் இடம்,
ரோகிணியை மணப்பதற்கு முன்பும், தங்கையிடம் அப்படியொன்றும் பாசம் வைத்ததில்லை.
லட்சுமியுமே - தனக்கு வாய்த்தது இவ்வளவுதான் என்பது போல தனது எதிர்பார்ப்புகளை எல்லாம் குறைத்து கொண்டு விட்டாள். இப்பொழுது அவளது லட்சியமே - சத்யாவின் கல்யாணம் தான்.
அது என்னவோ ஒவ்வொரு வரனும் தட்டிக் கொண்டே போயிற்று, பலவற்றை ரோகிணியே வேண்டாம் என்று ஒதுக்கி விடுவாள்.
கொஞ்சம் மேல்மட்டத்து பையனாக இருந்தால் ரோகிணிக்கு அன்று முழுக்க வயிற்றுக்குள் சுழன்று சுழன்று நெருப்பு எரியும்.
இந்த இடம் நம்ம சத்யாவுக்கு வேணாம்
"ஏன்?'
உங்களுக்கு ஒண்ணுமே தெரியலைங்க. பிள்ளையோட அம்மாவைப் பார்த்தீங்க இல்லே. நகைக்கடையையே சுமந்துட்டு வந்திருந்தா
அதனால என்ன? நம்மை இத்தனை நகை போடணும்னு வற்புறுத்தலையே
- லட்சுமி, ஈனசுரத்தில் கூறுவான்.
அதெல்லாம் இப்ப சொல்லமாட்டாங்க, பின்னாலே போகப் போக ஒவ்வொண்ணையும் சொல்லிக் குத்திக் காட்டுவாங்க. அந்த அம்மா மகாராங்கிக்காரியா இருப்பா போல இருக்கு. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்!
இப்படி எதுவுமே இல்லாதிருந்தால் வேறு எதையாவது சொல்லுவாள்.
மாப்பிள்ளைப் பையனுக்கு லேசா, ஒண்ணரைக் கண் போல இல்லே..ஏன் அத்தை, நீங்க கவனிக்கலையா..? அவனோட ஒரு கண்ணு - நம்ம சத்யாவைப் பார்க்கற அதே நேரத்துல இன்னொரு கண்ணு உங்க பிள்ளை கையில் இருந்த மைசூர்பாகையே பார்த்துட்டிருந்தது
பெரிய இடமென்றால் நமக்கு எட்டாதது; சுமாரான இடமாக இருந்தால் சோற்றுக்கு லாட்டரி அடிக்கணும். மாப்பிள்ளை சிவப்பாயிருந்தால் நாளைக்கு சத்யா நிறம் மட்டுன்னு சொல்லுவான், கறுப்பாயிருந்தால் வெந்நீர் அண்டா மாதிரி இருக்கான்.
போதுமா.
ஜனார்த்தனம் அப்படியே ஆமோதிப்பான்.
ரோகிணியோட ஜட்ஜ்மெண்ட் எப்பவுமே கரெக்டாத்தான் இருக்கும்
லட்சுமி சலிக்காமல் தினத்தாளில் வருகிற திருமண விளம்பரங்களுக்கும், இன்னும் தரகர்களிடம் கேட்டு வாங்கியும் பல விலாசங்களுக்கு கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டே இருப்பதாலோ - என்னமோ நம்பிக்கை தளராதவாறு ஏதோ பெண் பார்க்கும் வைபவம் மாதத்தில் ஒன்றாவது நடந்து கொண்டிருக்கிறது.
அதுவும் - தரகன் ரங்கசாமி - இன்று வரப்போகும் பிள்ளை வீட்டாரைப்பற்றி, 'ஓகோ' என்று சொல்லியிருந்தான்.
நல்ல குடும்பங்க... பெத்தவங்களுக்கு ஒரே மகன். ஒரே பொண்ணு... பிள்ளைக்கு மெட்ராஸ்ல இன்ஜினீயர் வேலை. மூவாயிரம் ரூபா சம்பளம். பையனோட சம்பளத்தை நம்பி குடும்பம் இல்லே. அப்பாக்காரர் - போலீஸ்லே பெரிய வேலையில் இருந்து ரிடையரானவர். ஆளைப்பார்க்க கெடுபிடியானவரு மாதிரி இருந்தாலும் பழகின - தங்கமான மனுசரு
அந்த அம்மா எப்படி?
"அவங்க அதிகமாப் பேச மாட்டாங்க. ஒவ்வொரு வீட்டுல மதுரை ஆட்சி. ஒவ்வொரு வீட்டுல சிதம்பரம் ஆட்சி. இங்கே சிதம்பரம் ஆட்சிதான் போல. ஆனா, அந்த பொண்ணு பேசும்...ஒரே பொண்ணு. அதுதான் மூத்தது. சின்ன வயசுலேயே புருஷனைப் பறி கொடுக்துட்டு வீட்டோடு இருக்கு...
அடப்பாவமே குழந்தைங்க இருக்கா?
எதுவுமில்லீங்க. ஆனா, அதுவும் வேலைக்குப் போறது. கொஞ்சம் வாயும் கையுமா இருக்கும். அதெல்லாம் பார்த்தா முடியாதுங்க. எல்லாமே - நாம் பழகறதுலதான் இருக்கு, இப்ப இந்த வீட்டையே எடுத் துக்குங்க. வெளியில் இருந்து பார்க்கறவங்களுக்கு ஏதுடா கல்யாணமாகாத ஒரு நாத்தனார் இருக்காளே, அண்ணிக் காரிய என்ன பாடு படுத்துவாளோன்னுதான் தோணும். உள்ளே வந்து பார்க்கறவங்களுக்குத்தானே யார், யாரைப் படுத்தறாங்கன்னு தெரியும்
ஐயோ, நீ வேறே... என் பொண்ணுக்கு இந்த வரன் முடியறதோ இல்லையோ, எனக்கும், என் மருமகளுக்கும் நடுவுல சண்டையை மூட்டி விட்டுடாதே!
லட்சுமி, பயத்துடன் குரலை இறக்கி சொல்ல - அவன் சிரித்தான்.
மாமியார், நாத்தனார் பதவி கிடைச்சாக்கூட, கடைசி மட்டும் பயந்து சாகறதுன்னு சில பேர் தலையில் எழுதியிருக்கும்!
இந்த பிள்ளை வீட்டார், சத்யாவை வந்து பெண் பார்க்கும் முன்பே ரோகிணி - முணுமுணுக்க தொடங்கி விட்டாள் என்றாலும் இம்முறை, லட்சுமி விடுவதா இல்லை!
தரகரிடம் சொல்லி, அவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்து விட்டாள்.
ஏம்பா ரங்கசாமி...மெட்ராஸ்லேயிருந்து மதுரை வந்து பொண்ணு பார்க்க ரெயில் சார்ஜ் கேட்பாங்களோ...
எதுக்கும் ஒரு வரி எழுதி கேட்டுடுங்களேன்...
லட்சுமியும் - திரு. புருசோத்தமன் அவர்களுக்கு... என்று ஆரம்பித்து, லோக க்ஷேமத்தை விசாரித்து மிக நாசூக்காக, சுற்றி வளைத்து எழுதி விட்டாள்
தாங்கள் குடும்பத்தினருடன் வந்து எங்கள் பெண்ணை பார்க்க வேண்டும். அதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்...
இதை எழுதி விட்டு - ரோகிணியிடம் ஒரு வாரத்துக்கு அர்ச்சனை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
அப்பாக்காரர், பொண்ணு கல்யாணத்துக்காக வச்சிட்டு போன பணமெல்லாம் வர்ற மாப்பிள்ளை வீட்டாருக்கு வண்டிச் சத்தம் கொடுத்தே தீர்ந்துடும் போல இருக்கு
சென்னையிலிருந்து மறு தபாலிலேயே பதிலும் வந்து விட்டது.
நாங்கள், எங்கள் குடும்பத்துக்கு தேவையானப் பெண்ணை பார்க்க வருகிறோமே தவிர உங்கள் மகளை காட்சிப் பொருளாய் பார்த்து விட்டு போவதற்கல்ல... போக்குவரத்து செலவைப் பற்றி கவலைப் பட வேண்டாம்!
- பிள்ளையின் அப்பா கைப்பட கடிதம்.
இன்று மாலை வரப்போகும் இந்த வரனிடம் அபார நம்பிக்கையை வைத்து தான் சாமிகும்பிடுகிறாள் லட்சுமி.
***
2
புருஷோத்தமன், மனைவியை அதட்டுகிற குரலில் கேட்கிறார்.
என்ன கிளம்பியாச்சா...ஒரு வாரமா நானும் சொல்லிட்டிருக்கேன். பொண்ணு பார்க்க. மதுரைக்கு வர்றேன்னு லெட்டர் எமுதி போட்டுட்டேன். வெள்ளிக்கிழமை காலையில மதுரை போய் - சாயங்காலம் பொண்ணைப் பார்க்கணும்னு.... என்னமோ, எருமை மாட்டு மேல எண்ணெய் மழை பெய்யற மாதிரி 'மசமச - ன்னு இருந்தா என்ன அர்த்தம்?
மீனாட்சி, கணவரை வெட்டி விடுவது போலப் பார்த்து விட்டு, பீரோவிலிருந்து இரண்டு பட்டுப் புடவைகளை எடுத்து - பெட்டியில் வைத்துக் கொள்கிறாள்.
ஏம்பா, இந்தப் பொண்ணைப் போய் பார்க்கறதுல இஷ்டம்தானான்னு பிரகாஷை கேட்டீங்களா? ஒருவேளை அவன், மாமா பொண்ணு நிலாவைத்தான் பண்ணிக்கணும்னு மனசுல ஏதாவது ஆசைய வளர்த்து வச்சிட்டிருந்தான்னா?
பிருந்தா சோபாவில் இருகால்களையும் மடித்துப் போட்டு அமர்ந்து அப்பாவை நேருக்கு நேர் பார்த்துக் கேட்கிறாள்.
இந்த வீட்டிலேயே அப்பாவை எதிர்த்து நின்று பேசுகிற தைரியம் பிருந்தா ஒருத்திக்கு தான் உண்டு.
புருஷோத்தமன் பிடிக்கும் பிடியும், உடம்புப் பிடியும் ஒன்றுதான் என்று அவர்களது சினேகிதர்கள் சொல்லுவார்கள்.
போலீஸ் இலாகாவில் உயர் அதிகாரியாக இருந்தவராதலால் - எந்த விஷயத்தையும் லேசில் விட மாட்டார். குடைந்து எடுத்து விடுவார்.
மீனாட்சிக்கும் அவருக்கும் கல்யாணமானதிலிருந்து இந்த நிமிஷம் வரையில், எந்தவொரு விவகாரத்திலும் ஒத்துப்போன தென்கிற சரித்திரமே கிடையாது. எதிலுமே புருஷோத்தமன் எடுக்கிற முடிவு தான் தீர்மானமானதாக இருக்கும்.
எப்பொழுதாவது மீனாட்சிக்கு சாதகமாகவும் சில விஷயங்கள் அமைந்து விடுவதுண்டு. அப்பொழுதெல்லாம் அவள் கட்சி ஜெயிக்க - பிருந்தாதான் அம்மாவின் சார்பாக அப்பாவிடம் வாதாடுவாள்.
புருஷோத்தமனுக்கும் பிருந்தாவிடம் மட்டும் வாஞ்சை அதிகம், சிறு வயசிலேருந்தே அவளுடைய புத்திசாலித்தனமும் நாவன்மையும் அவரை ஈர்த்தன.
என் பெண்ணை வக்கீலுக்குப் படிக்க வைக்கப்போறேன்.
- இப்படி தன் நண்பர்களிடமெல்லாம் சொல்லுவார்.
பேசாமல் அவளை வக்கீலுக்கே படிக்க வைத்திருக்கலாமோ என்று இப்பொழுது நினைக்கிறார்.
குறைந்த பட்சம்...நியாய அநியாயங்களாவது புரிந்திருக்குமே!
பிருந்தா புத்திசாலி மட்டுமில்லை. நல்ல அழகியும் கூட. அந்த கர்வம் எப்பொழுதுமே அவளுக்கு உண்டு.
பி. ஏ. படித்து முடித்த உடனேயே புருஷோத்தமனின் நண்பர் தன் மகனுக்கு பிருந்தாவைப் பெண்கேட்டு வந்தார். பிருந்தாவுக்கு மேற்கொண்டு படிக்க ஆசை. மணமகனோ லண்டனில் பெரிய வேலையில் இருந்தான். நல்ல குணம். புருஷோத்தமனுக்கு அந்த வரனை விடுவதில் விருப்பமில்லை.
கல்யாணத்தை முடிச்சிட்டு, உனக்கு லண்டன் போக விருப்பமிருந்தா அங்கே போய் படி... இல்லையா - மாப்பிள்ளை ஒரு வருஷம் பொறுத்து உன்னை அழைச்சுக்கறாராம். நீ இங்கேயே தங்கி மேல் படிப்பு எதையாவது தேர்ந்தெடுத்து படிக்கலாம்...
ஒரு வருஷம் எப்படி போதும்?
அம்மா பிருந்தா...ஒருத்தன், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்கறதுக்காகவா லண்டன்லேயிருந்து இங்கே வர்றான்...ஒரு வருஷம் படி. லீவுக்கு லண்டன் போய் இருந்துட்டு மறுபடி வா...அடுத்து ஆறு மாசத்துல ஒரு சின்ன விஸ்ட் அடி....அதுக்கு அடுத்த ஆறு மாசத்துல படிப்பை முடிச்சதும் பர்மனண்ட்டா லண்டன் வாசி ஆயிடுவியாம். என்ன?
பிருந்தாவுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. படிப்புக்கு படிப்பையும் தொடரலாம் மேல் நாட்டிலும் போய் வாழ்க்கையைத் துவங்கலாம்.
அவள் சம்மதித்த இரண்டாவது மாதத்தில் திருமணம். கணவனுடன் சில நாட்கள் லண்டனில் ஹனி மூன் கொண்டாடி விட்டு வந்தாள், பிருந்தா... இரண்டு வருடங்களில் இது போல் மூன்று முறை போய் வந்தாள், நாலாவது முறை - அவனே லண்டனிலிருந்து இந்தியா வந்து அவளை அழைத்துப் போவதாக சொல்லியிருந்தான். சொன்ன தேதியில் புறப்படவும் தவறவில்லை, ஆனால் வந்துதான் சேரவில்லை.
விமான விபத்து - தன் மகளின் வாழ்க்கையையே சூறையாடும் என்று புருஷோத்தமன் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.
இடிந்து போய் விட்டார் மனிதர்.
மகளே, தன்னை குற்றப் பார்வை பார்ப்பது போலக் கூசிக் குறுகிப் போய் விட்டார்.
மீனாட்சி. அடிபட்ட பாம்பு போலச் சீறினாள். அழுது புரண்டாள். அந்த நேரத்தில்தான் தன் கணவரை நேருக்கு நேர் நின்று திட்டினாள்.
பேசாம, குழந்தையை கல்யாணம் பண்ணாம வீட்டோட வச்சே படிக்க வச்சிட்டிருப்பேன். இப்படி சொப்பளம் போல் ஒரு வாழ்க்கை அமையறதுக்கா நான் பொண்ணைப் பெத்தேன்?
எனக்கு மாத்திரம் இப்படியெல்லாம் ஆகும்னு தெரியுமா மீனாட்சி? என் மகளை, நல்ல இடத்துல கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்தப் பையனும் நான் எதிர்பார்த்தமாதிரிதானே இருந்தான். இப்படி விதி, அவங்களைப் பிரிக்கும்னு நான், கனவுகூட காணலையே!
பிருந்தா தன் துக்கத்தை ஆற்றிக் கொள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள். என்னதான அப்பா, பிரியத்தைக் கொட்டினாலும் அவளுக்கு அம்மாவிடம் தான் ஒட்டுதல் அதிகம்...
மீனாட்சியும், ஆரம்ப முதலே - தனது உள்ள எரிச்சலையெல்லாம் மகளிடம்தான் கொட்டுவாள். அதுவும் மகன் பிரகாஷ் திருமணமாவது தன் இஷ்டப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
அதுவும் தன் அண்ணன் மகள் நிலாவை பிரகாசுக்கு மண முடிக்க வேண்டும் என்பது அவளது நெடு நாளைய ஆசை.
நிலா பிறந்தவுடனேயே அண்ணன், அண்ணியிடம் மிகத் தீர்மானமாக அவள் சொல்லி விட்டாள்.
அண்ணா, எனக்கு மருமக இவதான்.
இதை, அடிக்கடி - பேச்சு வாக்கில், கணவன் காது படவும் சொல்லிக் கொண்டுதானிருந்தாள் அவள்.
ஆனால், புருஷோத்தமன் ஒரே வார்த்தையினால் அவளது விருப்பத்தில் மண்ணைப் போட்டுக் கொண்டே இருந்தார்.
"இத பாரு உறவுல கல்யாணம் செய்யறதுங்கறது விஞ்ஞான ரீதியா பார்த்தா சரியில்லே. நம்ம டாக்டர்கள் இதை ஒத்துக்கறதில்லே..!
டாக்டருங்களா குடித்தனம் செய்யப் போறாங்க. நம்ம குழந்தைங்கதானே?
"அடி பைத்தியம்! டாக்டருங்களும் நம்ம குழந்தைங்களுக்காகத்தான் சொல்றாங்க. மாமா பொண்ணு, அத்தை மகன்