Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mullodu Oru Roja
Mullodu Oru Roja
Mullodu Oru Roja
Ebook247 pages2 hours

Mullodu Oru Roja

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110003033
Mullodu Oru Roja

Read more from Anuradha Ramanan

Related to Mullodu Oru Roja

Related ebooks

Reviews for Mullodu Oru Roja

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mullodu Oru Roja - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    முள்ளோடு ஒரு ரோஜா

    மினிதொடர்

    Mullodu Oru Roja

    Minithodar
    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    திரும்பி வா தீபா

    இந்த முறை மட்டும்...

    சம்சாரக் கோவில்

    அம்மா பிள்ளை

    முள்ளோடு ஒரு ரோஜா

    வைரம் கலைமகள்

    ***

    திரும்பி வா தீபா

    1

    கை வலித்தது தீபாவுக்கு...

    ஒருத்தி, ஒரே மாதிரியான கடிதத்தை எத்தனை முறைதான் எழுதுவாள்?

    'அன்புள்ள வாசுவுக்கு…'

    அவள் இப்படி ஆரம்பித்த போதே - அவள் அம்மா 'த்சூ' என்று மிரட்டினாள்...

    இதான்... இப்படி தலையில அடிக்கறாப்பல புருஷன் பேரை எழுதறதுனாலத்தான் மாமியார், மாமனார் கிட்ட வாங்கிக் கட்டிக்கிறே… அவருக்கும் உன் மேல் எரிச்சல் வருது…

    தீபாவின் தாய், 'அவர்' என்று மரியாதை ததும்ப அழைத்தது மாப்பிள்ளை வாசுவைத்தான்...

    அம்மா, இப்ப அதுவா முக்கியம்? நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறேனோ... அதை, இப்படிப் பேரைச் சொல்லிக் கூப்பிட்டு எழுதினாத்தான் - சுதந்திரமாச் சொல்ல முடியும். அவரும், அமெரிக்காவுல இருந்தப்ப எல்லாம் இதைப் பத்தி ஒண்ணுமே சொன்னதில்லே... அஃப் கோர்ஸ், வேற எத்தனையோ விஷயங்களுக்காக எல்லாம் சண்டை போட்டிருக்கோம்...

    அம்மா, பெண்ணின் வாதத்தை ஏற்றுக் கொள்வதாகவே இல்லை.

    இதெல்லாம்தான் சைக்கலாஜிகலா ஒரு மனுஷனை அட்டாக் பண்ணும். அமெரிக்காவுல இருந்தா என்ன - ஆஸ்திரேலியாவுல இருந்தா என்ன... சராசரி இந்தியக் கணவனோட ரத்தத்துலேயே ஊறிப் போன எதிர் பார்ப்புகள்லே இதுவும் ஒண்ணு.

    தீபா, ஆரம்பித்த கடிதத்தைத் தொடராமலேயே கசக்கி எறிந்தாள். அப்பா, அவளைப் பரிதாபமாய்ப் பார்த்தார்.

    எல்லாத் தகப்பன்களையும் போல ராமநாதனும் மகளின் மீது பாசத்தை மலை போலக் குவித்து வைத்திருக்கிறார்தான்.

    விமலாவுக்கும் பெண்ணிடம் பிரியம் இல்லாமல் இல்லை. அதை விடவும் பயம் - எங்கே, பெண்ணை, மாப்பிள்ளையும் அவனைச் சேர்ந்தவர்களும் வேண்டவே வேண்டாமென்று ஒதுக்கியே வைத்து விடுவார்களோ என்கிற பயம் - இதுதான் அதிகமாக இருந்தது...

    குட்டக் குட்டக் குனிய வேண்டும் என்று மகளுக்குப் பாடம் புகட்டினாள் விமலா.

    குனியக் குனியக் குட்டுவதே அவர்களது வழக்கமாகி விட்டது என்று புலம்பினாள் தீபா.

    பொண்ணை 'ஓஹோ'ன்னு படிக்க வச்சே... இப்ப அது ஆகாசத்துல ஏறி உட்கார்ந்துண்டு அதட்டறது...

    - இது அப்பாவைப் பெற்ற பாட்டி.

    மாமியார், மாமனாரை அனுசரிச்சு வாழத் தெரியாத பொண்ணுங்க எல்லாம், என்னத்தைப் படிச்சு... என்னத்தைக் கிழிச்சு...

    - இது அத்தை. அவளுக்கு, தான் வலிய வந்து கேட்டும், தன் பிள்ளைக்குப் பெண்ணைத் தராமல்–அமெரிக்க மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டு தம்பி போனதில் கழுத்து மட்டும் குறை...

    நல்லதாப் போச்சுன்னு நினைச்சுக்கோ... இந்த மாதிரி, கூறுகெட்டு இவ, பிறந்த வீட்டோட வந்து உட்கார்ந்தா - நம்ம பையன் பாவம்… என்ன பண்ணுவான்? கன்னத்துல அறையற மாதிரி இங்கிலிஷ்லே பேசறா பாரு... இதுல ஒரு வார்த்தை தாங்குவானா நம்ம பிள்ளையாண்டான்?

    - இது அத்தை புருஷன்.

    ஆக மொத்தம் அந்தக் குடும்பமே - தீபா இனிமேல் என்ன செய்யப் போகிறாள் என்று, மத்தியான நேரத்து 'மெகா' சீரியல்களைத் தொடர்ந்து பார்த்து, குழம்பிப் போன பெண்கள் மாதிரி சிண்டைப் பிய்த்துக் கொள்ள...

    இத்தனை பேர் வாய்க்கும் பெரியதொரு பூட்டாகப் போட வேண்டும் என்பதற்காகவே - விமலா, மகளைத் திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருந்தாள்.

    அவளுக்குள்ளும் வாசுவின் மீது வருத்தம் இல்லாமல் இல்லை...

    உலகத்தில் எத்தனையோ 'அம்மா கோண்டு’க்களைப் பார்த்திருக்கிறாள் அவள். அவ்வளவு ஏன்... பெண்டாட்டியின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாத ராமநாதனே - இன்னமும் அம்மா குரலை உயர்த்தினால் ஒரே தாவலாக அந்தப் பக்கம் தாவி விடுவார்.

    அதையும் விமலா, வெட்கத்தை விட்டு, மகளிடம் எடுத்துச் சொல்லாமல் இல்லை.

    புருஷாளோட வீறாப்பெல்லாம் ராத்திரி வரைக்கும் தான்டீ... இப்ப உங்க அப்பாவையே எடுத்துக்க... அவரோட அம்மா தலையைக் காண்ற வரைக்கும் 'விமல் விமல்'னு என் புடவைத் தலையைப் பிடிச்சிட்டே சுத்துவார். அம்மாவைப் பார்த்துட்டாப் போதும்... மனோகரா சிவாஜிதான். 'ஆகா'ன்னு பொங்கி எழுந்துருவார்... ஏதோ... அம்மா - அப்பாவோட ஒரு மாசம்... மீதி பதினோரு மாசமும் உங்க ராஜ்ஜியம்தானே...

    அதெல்லாம் இல்லேம்மா… வாசுவோட அம்மா - சந்திர மண்டலத்துல இருந்தாலும் பிள்ளைய ரிமோட் கண்ட்ரோல்லே ஆட வைப்பா... உனக்குத் தெரியாது...

    முதல் தடவை தீபா சொன்னபோது - விமலாவுக்கு பெற்ற வயிறு கொதித்ததுதான்.

    கல்யாணத்திலேயே சம்பந்தி மனிதர்களின் சுயரூபம் தெரிந்து விட்டது... வாசுவின் பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளை... ஆரம்பத்தில் - 'எங்களுக்கு என்ன வேண்டும்... பையனுக்குப் பெண்ணைப் பிடித்திருந்தால் - உங்கள் வீட்டுக் கூடத்தில் வைத்து கல்யாணத்தைச் செய்தாலும் சரி, என்றுதான் சொன்னார்கள்.

    முகூர்த்தம் முடிவதற்குள் அல்ப விஷயங்களுக்கெல்லாம் சண்டை. உயரத் தூக்கிப் போடப் பட்ட கொண்டையும், லிப்ஸ்டிக்குமாய் படுமாடர்னாய் இருந்த சம்பந்தியம்மாள் - போயும் போயும் முகூர்த்தத்துக்காக வாங்கிய பட்டுப் பாயில் புது மணத் தம்பதியின் பெயரைப் போடவே இல்லை என்று ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தாள். அடிக்கொரு தரம், மண மேடையிலிருந்து நகர்ந்து போய் ரோடு இன்ஜின்கணக்காக ஊதித் தள்ளிவிட்டு வந்த வாசுவின் தந்தை - கல்யாணச் சீர் வரிசையில் வைத்திருந்த 'ஆஃப்டர் ஷேவ் லோஷனை' அலட்சியத்துடன் எடுத்துப் பார்த்து, 'பிளடி ஃபூல்ஸ். ஒரு ஃபாரின் லோஷன் வாங்கி வைக்கத் தெரியவில்லையா' என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார்.

    கல்யாணம் என்றால் இதெல்லாம் சகஜம்... ஆனால் மாப்பிள்ளையாகப் பட்ட வாசுதேவன் மட்டும் 'கம்'மென்று சூயிங்கம் மென்றபடி முகூர்த்த வேட்டியும், மாலையுமாக நின்று கொண்டிருந்தான்.

    நல்ல சிவப்புதான். 'கழுக் மொழுக்’கென அமுல்பேபி போன்ற முகம்தான். அணிந்திருந்த ரிம்லெஸ் மூக்குக்கண்ணாடி - அவனை மேலும் அறிவு ஜீவியாகக் காட்டியது தான்...

    தீபாவும் நல்ல திறம். தொட்டால் கன்றிப் போகும் மென்மை. களையான முகம்... இந்த நாளையப் பெண்கள் போல - கொடியிடையாய் இருந்தால்தான் அழகு என்கிற அசட்டுத் தனமான எண்ணத்தில் - பஞ்சத்தில் அடிபட்டாற் போல மெலிந்து வைக்காமல் அவனுக்கேற்றாற் போல - சற்றே பூசினாற் போல - 'பளிச்’சென இருந்தாள்...

    ஜோடிப் பொருத்தமே திருஷ்டி படறாப்பல இருக்கு... சுத்திப் போடுடி விமலா...

    இப்படி ஒருத்தரைப் போல அத்தனைப் பேரும் தான் சொன்னார்கள்.

    பிரச்னையே பூதாகாரமாய் விசுவரூபமெடுத்தது - மாலை வரவேற்பு முடிந்து, சாப்பிடப் போகும் போதுதான் -

    வாசுவின் அப்பா ஜனார்த்தனம்தான் ஆரம்பித்து வைத்தார்.

    ஆமா, நாங்க இறங்கியிருக்கற மாடியில ஒரு ரூம்லே படுக்கை அலங்காரம் எல்லாம் ஜரூரா நடந்துட்டிருக்கே... யாருக்கு?

    அதிர்ந்து போய் விட்டார்கள் ராமநாதனும் விமலாவும்.

    என்ன இப்படியொரு சந்தேகம்.. நம்ம குழந்தைகளுக்குத்தான்...

    ஜனார்த்தனம், மனைவி பக்கம் திரும்பினார் -

    நீலா... இவங்க என்னமோ சொல்றாங்க... என்னன்னு கேளு...

    ***

    2

    காலையில் நடந்த சண்டையின் தொடர்ச்சிதான் இரவு - சாந்தி முகூர்த்தத்தில் வெடிக்கிறது என்று நினைத்த தீபாவுக்கும், அவளது பெற்றோருக்கும் - 'இல்லையில்லை... இது வேற மாதிரியான ரகளை' என்பது புரிய கொஞ்சம் நேரமாயிற்று.

    எதுக்குய்யா இத்தனை செலவு பண்ணி, ரூமை டெகரேட் பண்ணிட்டிருக்கீர்? எந்த காலத்துல இருக்கீர்? இப்படி, இத்தனைப் பேர் நடுவுல - ரூமுக்குள்ளப் போய் கதவைச் சாத்திக்கறதாவது… சேச் சேச் சே... என் பையனுக்குத் தெரிஞ்சா உம்மை உண்டு - - இல்லையின்னு பண்ணிடுவான்...

    "அப்ப...''

    தீபா எப்படியும் நாளைக்கு எங்க வீட்டுக்குத் தானே வரப்போறா? இன்னும் பத்து நாள்தான் ரெண்டு பேரும் இங்கே இருக்கப் போறது... அதுக்குள்ள திருப்பதி, சுவாமிமலை, திருமணஞ்சேரி... இப்படி ஏகப்பட்ட பிரார்த்தனை இருக்கு... எல்லாம் அமெரிக்கா போய் - இதை எப்படி கொண்டாடணுமோ, அப்படி கொண்டாடிப்பாங்க. அதுக்கு நீரும், நானும் ஏன் இப்படி வியர்த்து விறுவிறுக்கணும்?

    தீபாவுக்கு மாமனாரின் பேச்சு மிகமிக நியாயமாகவே பட்டது. பின்னே என்ன... பெண் பார்த்து, நிச்சயம் செய்து, பத்தே நாளில் பத்திரிகை வைத்து, பதினைந்தாம் நாளில் திருமதி வாசுதேவ் ஜனார்த்தன் ஆகிவிட்டாள்... மனசுக்குள் இன்னும் கூட, 'இவர்தான் இனிமேல் நம் கூடவே இருக்கப் போகிறவர்' என்கிற எண்ணம் ஏற்படவில்லை... ஓரோரு சமயம் அந்த 'கழுக் மொழுக்' முகம் குழந்தைத் தனமாகவும், வேறு சில சமயங்களில் அறிவுக் களையையும் மீறி - - ஏதோ ஒரு வித மக்குத்தனம் தெரிவது போலவும் பிரமை தட்டுகிறது அவளுக்கு.

    ஒருத்தருக்கொருத்தர் சேர்ந்தாற் போல நாலு வார்த்தை பேசிக் கொள்ளாமல், எப்படி ஒன்றாக, ஒரே கட்டிலில் படுப்பது?

    அவள், அம்மாவைத் தனியே அழைத்துப் போய் எரிந்து விழுந்தாள்:

    ஏம்மா இப்படி யாரையும் கேட்காம, இதையெல்லாம் செஞ்சீங்க... ச்சீ... இந்தக் காலத்துலப் போய்… அய்யோ... முதல்லே அந்த ரூமை இழுத்துப் பூட்டிட்டு வா... அசிங்கம்!

    மகா முற்போக்குவாதி சம்பந்தியின் எதிரில், இப்படி பழம் பஞ்சாங்கமாய் நின்றதில் ராமநாதனுக்கு வருத்தம் தான்.

    பத்து நாட்களும், பஸ்ஸிலும், டூரிஸ்ட் வேனிலும் ஊர் ஊராய் அலைந்து விட்டு, வாடிப் போன மல்லிகைச் சரமாய் தீபா - கணவருடன் அமெரிக்காவுக்குக் கிளம்பியபோது, ஆற்றாமை தாளாமல், விமலா - மகளைத் தனியே அழைத்துப் போய் கேட்டாள்:

    மாப்பிள்ளை... எப்படிடி?

    எப்படீயின்னா?

    உன் கிட்ட பிரியமாப் பேசறாரா... சிரிச்சு, கிரிச்சு...

    "அம்மா பக்கத்துல உட்கார்ந்து, அம்மா மடியில படுத்துத் தூங்கிண்டே வந்தார்... அம்மாவுக்கு பிளட் பிரஷர்... நிறைய வேலை செய்ய முடியாது... அம்மா - சின்ன வயசுல மாமியார் கிட்ட நிறைய கொடுமை அனுபவிச்சிருக்கா... அம்மா

    சமைச்சா - இன்னிக்கு முழுக்கச் சாப்பிடலாம். எங்க அம்மா கிட்ட கேட்டு, குடும்ப நிர்வாகம்னா என்னன்னு தெரிச்சுக்கணும். நிறைய ஃபிரண்ட்ஸ் அவளுக்கு. என் ஃபிரண்ட்ஸுக்குக் கூட அம்மா கிட்டப் பேசத்தான் பிடிக்கும். அம்மாவோட இங்கிலீஷ் பிரமாதமா இருக்கும்... இதெல்லாம்தான் பேசினார்..."

    விமலாவுக்கு மகளின் பதில் ஏமாற்றமாக இருந்தாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல், சிரித்து மழுப்பி - ஆமா, போ... உங்க அப்பா கூட இப்படித்தான் ஆரம்பத்துல சொல்லிட்டே இருந்தார். அது ஒரு மாதிரியான குற்றவுணர்வு. எங்கே, அம்மா - பெண்டாட்டி வந்ததும், பிள்ளை தன்னை ஒதுக்கிடுவானோன்னு நினைக்கப் போறாளேங்கற கில்டி கான்ஷியஸ்...

    விமலா எப்போதுமே இப்படித்தான். தன்னால் பதில் சொல்ல முடியாத சமாச்சாரங்களுக்கு எல்லாம் - மனோ தத்துவ ரீதிப்படி இப்படித்தான் இருக்கும் என்று ஒரு தீர்வு சொல்லி விடுவாள்.

    அந்தக் கணத்தில் தீபாவும் அப்படித்தான் நினைத்தாள். புத்தம் புதிதாக - 'வேன் ஹுஸைன் ரெடிமேட் ஷர்ட்' போல இருந்த கணவனைப் பற்றி - வேறு எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை அவளால்...

    இப்பொழுதோ -

    திருமணமான எட்டே மாதங்களில், 'என்னால் அம்மா, அப்பாவை விட்டுப் பிரிந்து இருக்க முடியாது... மும்பையில் நல்ல வேலை கிடைக்கிறது... இந்தியாவுக்கே திரும்பிவிடப் போகிறேன் என்று வாசு, மனைவியுடன் வந்து விட்டான்.

    அமெரிக்க மாப்பிள்ளை என்று விழுந்து விழுந்து சீர் செய்து விட்டு, இன்று அவன் ஊரோடு வந்து உட்கார்ந்ததில் தீபாவின் அத்தை குடும்பத்துக்குப் பரம சந்தோஷம்.

    விமலாவுக்கும், ராமநாதனுக்கும் வருத்தம் தான். ஆனாலும் அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல், மலர்ந்த முகத்துடன் 'ஏர் போர்ட்' போய் பெண்ணையும், மாப்பிள்ளையையும் வரவேற்றனர்.

    அங்கேயே பிரச்னை ஆரம்பித்து விட்டது.

    அப்பா... அவர் - அவரோட அப்பா, அம்மாவோடப் போகட்டும்... நாம், நம்ம வீட்டுக்குப் போகலாம். ஒரு டாக்சி பிடிங்க...

    என்னடீது?

    விமலா, தணிந்த குரலில் அதட்டினாள். ஆனால், தீபா விறைப்பாக நின்றாள்.

    வாசுவோ, அம்மாவைக் கண்ட மாத்திரத்தில், அவளது புடவைத் தலைப்பில் ஒளிந்து கொண்டான்.

    சரி, சரி... வந்ததும் வராததுமா - நாலு பேர் எதிருலே 'ஸீன் க்ரியேட்' பண்ண வேண்டாம். எதுவானாலும், முதல்லே நம்ம வீட்டுக்கு வா... உட்கார்ந்துப் பேசுவோம். அப்புறம், உன்னிஷ்டப்படி என்ன வேணுமானாலும் செய்...

    - இது நீலா. ஜனார்தனம், விமான நிலையத்தின் மேல் கூறையைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

    நீ வாம்மா... முதல்லே நம்ம வீடு. எனக்கு மூச்சு முட்டறது. கொஞ்சமாவது ரெஸ்ட் வேணும்...

    வேறு வழியில்லாமல் அந்த முறை தீபாவை, தங்களுடன் அழைத்து வந்தனர் விமலாவும், ராமநாதனும்.

    பெண்ணிடம், வந்ததும் வராததுமாய் - இது பற்றி, எப்படி கேட்பது என்று, அவர்களிருவரும்தான் தயங்கினார்களே தவிர - ராமநாதனின் தாய் - தீபாவின் பாட்டி, 'நறுக்'கெனக் கேட்டாள்:

    அதென்னது - அகமுடையானை விட்டுட்டு நீ மட்டும் தனியா வந்து நிக்கறே?

    அவன் - அவனோட வீட்டுக்குப் போயிருக்கான். நான், எங்க வீட்டுக்கு வந்திருக்கேன்...

    கிழவி மட்டுமல்ல... விமலாவுமே திடுக்கிட்டாள்.

    மகளை செல்லம் கொடுத்து வளர்த்திருக்கிறாள்தான். ஆனால், தாலி கட்டிய கணவனை 'அவன் - இவன்' என்று அழைக்கிறதாவது...

    ஏண்டீ, அமெரிக்காவுக்குப் போய் இதுதான் கத்துட்டு வந்தியா...

    தீபா ஒன்றுமே சொல்லவில்லை. காபியை ஆற்றிக் குடித்தாள். என்னமோ இங்கிருந்து போனது முதல் - இந்த ஆறு மாதங்களாகத் தூங்காமலேயே இருந்தது போல - நாலைந்து நாட்கள் சாப்பிட்ட நேரம் போக - மிச்ச நேரமெல்லாம் மல்லாந்து மாய்ந்து தூங்கினாள். சினேகிதிகளுக்கெல்லாம் போன் செய்து அரட்டை அடித்தாள்.

    நடுவில் ஒருமுறை - வாசுவின் தாய் போன் செய்தாள்.

    "அவன் மும்பை வேலைய

    Enjoying the preview?
    Page 1 of 1