Moga Mazhai
5/5
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsAnna Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Ulley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsPuthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Vettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsSonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Koondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Kaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Salanam Rating: 0 out of 5 stars0 ratingsVera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Mundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Uravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Karkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsNila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Nadippu Suthesikal... Rating: 5 out of 5 stars5/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsMegathile Methaidu Rating: 0 out of 5 stars0 ratingsUthama Thirudi Rating: 5 out of 5 stars5/5
Related to Moga Mazhai
Related ebooks
Thoda Thoda Thodarum Rating: 5 out of 5 stars5/5Gangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Neeyedhaan En Manaivi Rating: 5 out of 5 stars5/5Vaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsVelli Kanavu Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Nadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Uthama Thirudi Rating: 5 out of 5 stars5/5Kannadi Thirai Rating: 4 out of 5 stars4/5En Ullam Kavarndha Devadhai Rating: 5 out of 5 stars5/5Thottil Sugam Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Arali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratingsSarayu Kaathirukkiraal Rating: 5 out of 5 stars5/5Ithayathil Nee Rating: 2 out of 5 stars2/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsIduppu Siruthavale Rating: 5 out of 5 stars5/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Aanandamadi Aanandhi! Rating: 0 out of 5 stars0 ratingsThevai Oru Devathai... Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Kanne Undhan Nizhalavean Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Arai Millimeteril Oru Abathu Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Kaadhal Neram Rating: 5 out of 5 stars5/5Idhaya Koyil Rating: 4 out of 5 stars4/5Ullamellam Thalladuthey! Rating: 0 out of 5 stars0 ratingsMandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Vettai Maan Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Moga Mazhai
1 rating0 reviews
Book preview
Moga Mazhai - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
மோக மழை
Moga Mazhai
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
1
இரண்டு மாடி ஏறி, வலதுப் பக்கம் திரும்பினால் ஆனந்த்தின் அறை... ஆனால் அந்தக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழையும்போதே-பாட்டுச் சத்தம் காதைத் துளைத்ததென்றால், அதற்குக் காரணம் - இரண்டாவது மாடியில் அறுபத்தி ஆறாம் எண் அறையிலுள்ள ஆனந்த் தான் காரணம்.
சாதாரணமாகவே சனி ஞாயிறில் அந்தக் கட்டிடம் இவனது சங்கீதத்தில் கிடுகிடுக்கும்... நேற்றுதான் அனைத்துக் கல்லூரி இசை விழா நடந்து முடிந்திருக்கிறது…. வழக்கம் போல் இந்த முறையும் இவன்தான் போட்டியின் முடிசூடா மன்னன்.
அப்படி இருக்கையில் இன்றைக்கு இந்த விடுதியையே அவன் தலைகீழாகக் கவிழ்த்திருக்க வேண்டாமோ...
'என்ன இப்படி அவனவனுக முகத்தை ஒரு முழம் நீளத்துக்கு நட்டுகிட்டுப் போறானுவ..'
சுந்தருக்கு வியப்பில் தலை சுற்றியது. முதல் நாள் போட்டியில் ஆனந்த்துக்கு முதல் பரிசு என்று அறிவித்தவுடன் தோள்மீது தூக்கி வைத்துக்கொண்டு குதித்தவன் இதோ... இந்த சுந்தர்.
தலைவா… நீ யாருன்னு நின்னு காட்டிட்டே..
டேய் மாப்ளே. அந்த எஸ்.ஐ.இ.டி. பொண்ணை ஓரங்கட்டிட்டே கில்லாடிபா நீ..
பாட்டுன்னா சும்மாவா... அதுவும் எஸ்.பி.பி., ஹரிஹரன் மாதிரி பாடறதுன்னா... என்னாங்கடீ... விளையாட்டா நினைச்சிட்டிருக்கீங்களா... பார்த்தீங்க இல்லே எங்க இசை அரசன்... ஏழிசை வல்லபன்… சங்கீத சக்ரவர்த்தி... மியூசிக் மன்னன் குரலை... பாட வந்துட்டாளுங்க..
''ஆனந்தா... இந்த சந்தோஷத்தை இப்பவே கொண்டாடிடணும்டா... பாடிப் பாடி உனக்குத் தொண்டை வறண்டு போயிடுச்சில்லே... ஸ்டிராங்கா ஒரு பியர் அடிக்கிறியாடா... நம்ம வரது மாமா - இதையெல்லாம் உத்தேசித்துதான் ஏற்பாட்டோட வந்திருக்கான்.."
ச்சீய் அல்பம்… ஸ்காட்ச் சாப்பிடவேண்டியவன்டா அவன்... ரோலிங் ஷீல்டைப் பார்த்தே இல்லே..
''நண்பர்களின் கூச்சல் குழப்பங்களையும் மீறி ஆனந்தும் சுந்தரும் கண்களை சிமிட்டி சிரித்துக் கொண்டார்கள்.
டேய், எனக்கென்னமோ பசங்க உன்னை ஹோட்டலுக்கு இழுத்தடிக்காம விடமாட்டாங்கன்னு தோணுது... ஓ.கே... நாளைக்கு காலையில் பார்க்கலாம்.
விழா நடந்த கல்லூரி மைதானத்திலிருந்து சுந்தர் வெளியே வர... அவன் பின்னாலேயே ஓடி வந்த ஆனந்த் சுற்றும் முற்றும் யாரையோ தேடினான்
என்னடா…. ஜொள்ளா..
மோட்டார் பைக்கைக் கிளப்பியபடி சுந்தர் கேட்க, ஆனந்த்தின் மூக்கு நுனி, காது மடல் எல்லாமே சிவந்தது.
ச்சீய்... அதெல்லாம் ஒண்ணுமில்லே... அந்த எஸ்.ஐ. இடி. பொண்ணு நல்லாவே பாடிச்சு இல்லே... அவளைப் பார்த்து... பாவம்டா... அவ பாடறச்சே நம்ம பசங்க வேப்பிலை எடுத்துட்டு ஆடி அத்தனை கலாட்டா பண்ணியிருக்கக்கூடாது...
தம்பீ... இது பேரு ஜொள்ளு இல்லாம வேற என்னவாம்?
மடையா. இதுக்குப் பேரு ஜொள்ளு இல்லே. பரிவு…
அப்படியா... சரிதான்... பரிவு பெருகி சட்டையை எல்லாம் நனைக்குது பாரு... துடைச்சிக்க. நாளைக்குப் பார்க்கலாம்."
முதல் நாள் ஆயிரக்கணக்கான மாணவிகளிடையே; மூக்குக் கண்ணாடியை அடிக்கடி கழற்றி, சட்டை நுனியில் துடைத்து மாட்டிக் கொண்டு-மூன்றே நிமிடங்கள் மேடையில் தோன்றி-அவளது அம்மா காலத்துப் பாடலான 'நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா நிலா...' என்று பாடிவிட்டு, கூட்டத்தோடு கலந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டு நின்ற-ஆனந்தை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.
அவன் நாலு கால் பாய்ச்சலில் மாடி ஏறினான்.
மாநிலக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே இப்படியொரு கிண்டல் கூட உண்டு...
"பற்களை விளக்க - கோல்கேட்டும் பிரஷ்ஷும்…
நட்பை விளக்க - சுந்தரும் ஆனந்த்தும்."
"சேர்ந்தே இருப்பது கடலும் அலையும்...
சேர்ந்தே சுற்றுவது சுந்தரும் ஆனந்த்தும்.."
இந்த வார்த்தைகளில் கேலி இருந்தாலும் உண்மை என்னவோ அதுதான்.
கல்லூரியில் சேர்ந்த நாளில் இருந்து - இன்று வரையில் இந்த 'இருவர்' கல்லூரி முழுவதும் பிரசித்தமாகி விட்டார்கள்.
எடுத்த எடுப்பில்-கல்லூரியில் சேருவதற்கு பணம் கட்ட எடுத்து வந்து - அதை வழியிலேயே தாரை வார்த்து விட்டு 'அம்போ' என்று நின்றவனுக்கு, தன்னுடன் சேர்த்து சம்பளம் கட்டியவன் இந்த சுந்தர்தான்.
ஸாரி பிரதர். இந்தப் பணத்தை என்னால் உடனே திருப்பித்தர முடியாது. எங்கம்மா சேலத்துல இருக்காங்க... இந்தப் பணமே அம்மா வேலை செய்யற இடத்துல, முன் பணமாக் கேட்டு - ஆனா, எனக்கு அரசு உதவித் தொகை கிடைச்சிடும். கூடிய சீக்கிரம்... அது வரைக்கும் தான்.
நான் உன்னைக் கேட்டேனா... பேசாம இரு... இனிமே இதைப்பத்திப் பேசவே கூடாது-ஆமா.
அவ்வளவுதான்... கல்லூரியில் இளங்கலை முடிந்து - இப்போது முதுகலைப் பட்டப் படிப்பு - இரண்டாம் வருடம்...
சுந்தருக்கு ஆனந்த்துடன் விடுதியிலேயே தங்கி விடத்தான் விருப்பம். ஆனால் பெற்றவள் விடமாட்டாள். அழுதே ஊரைக் கூட்டி விடுவாள். பெற்றவரோ - மகனிடம் உயிரையே வைத்திருக்கிறார்.
உன் சினேகிதனா சுந்தர்?
"ஆமாப்பா. நான் சொல்லலை. ரொம்ப நல்லாப் படிப்பான், பிரமாதமாப் பாடுவான்...''
''ஓ... ஆமாமா. பேசாம அவனையும் நம்ம வீட்டோடத் தங்கிடச் சொல்லேன். உனக்கும் வசதியா இருக்கும். எதுக்கு சொல்றேன்னா... ஃபிரண்டைப் பார்க்கப் போறேன்னு போயிட்டு, நீ பாட்டுக்கு ராத்திரி நேரம் கெட்ட நேரத்துல வந்து என்னோட பிளட் பிரஷரை ஏத்த வேண்டாம் பாரு."
இல்லேப்பா... நம்ம அம்மாவோட கேரக்டருக்கு அதெல்லாம் ஒத்து வராது..
அப்படீங்கறியா... அதுவும் சரிதான்... என்னை இத்தனை நாள் வீட்டோடத் தங்கறத்துக்கு உங்கம்மா அனுமதிச்சதே பெரிய சமாச்சாரம்தான்...
ஆனந்த்தே பல முறை கேட்டிருக்கிறான்:
இப்படி அப்பாவியான அப்பாவுக்கும், கையில் சூலமில்லாத பத்ரகாளியான அம்மாவுக்கும் நீ எப்படிடா பிள்ளையாப் பிறந்தே...
த்ச்... அதப் பத்தியெல்லாம் சின்னப் பசங்களான நாம பேசப்படாது. ஆனாலும் சொல்றேன், காதல் காதல்னு சொல்றாங்களே... அதோட மகத்துவம் இதுதான்... வாயாடிப் பொண்ணையும் வாய்மூடிச் சாமியையும் இந்தக் காதல் ஒண்ணா சேர்த்துவைக்கும்... மகா மேதையையும், பட்டிக்காட்டுல புளியம் பழம் பொறுக்கிட்டிருக்கற ஒண்ணுந் தெரியாப் பொண்ணையும் சேர்த்து வைக்கும்... சாந்துக் கறுப்பையும் - சந்தன நிறத்தையும் கல்யாணப் பந்தல்லே உட்கார்த்தி வச்சு 'லாலி சுப லாலி' பாடும்..
எங்க வீட்டுல எங்கம்மாவும் சாது…., அப்பாவும் சாது. அப்பா உயிரோட இருந்தப்ப-தன் கூடப் பேசின வார்த்தைகளையே விரல் விட்டு எண்ணிடலாம்னு எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க...
அதனாலத்தான் நீ இப்படி இத்தனை மென்மையா இருக்கே... ஆனாலும் ஒண்ணு சொல்றேன்... கேட்டுக்க... எப்படி பாட்டரியில ஒரு நெகடிவ் ஒயரையும், ஒரு பாசிடிவ் ஒயரையும் இணைச்சு சக்திய உண்டு பண்றாங்களோ - அப்படித்தான் வாழ்க்கையிலேயும் இருக்கணும்... பணக்காரப் பையன் - ஒரு ஏழைப் பொண்ணைக் கட்டிக்கணும். பணம் பணத்தோட சேர்ந்து எல்லாப் பணமும் இரும்புப் பெட்டியில் துருப் பிடிக்கறதும் நல்லதில்லே... ஏழை... இன்னொரு ஏழைய மணந்து - இன்னும் ரெண்டு பரம ஏழையை உண்டு பண்றதும் சரியில்லே...
அதெல்லாம்... பேச நல்லாயிருக்கும். இத்தனை பேசற நீயே-உன் வாழ்க்கையில என்ன முடிவெடுக்கறேயின்னு பார்க்கத்தானே போறேன்... ஏற்கனவே உனக்குன்னு ஒரு அத்தை பொண்ணு கோயமுத்தூர்லே படிச்சிட்டிருக்கறதாக் கேள்வி..
யாரு சொன்னாங்க.
எல்லாம் உங்கம்மாதான்... பிளஸ் டூ முடிச்சதும் காலேஜ் படிப்பு இங்கேதானாமே.
அட போப்பா நீ வேற... அத்தை இருக்காளே... ஒருத்தரோட ஒரு வார்த்தை பேசணும்னா - முதல்லே அந்த ஆளோட ஆஸ்தி, பாஸ்தி, சொத்து விவரம் எல்லாம் வேணும்னு கேட்கிற டைப்... அவ பெத்த பொண்ணு எப்படி இருப்பான்னு சொல்லணுமா... நம்ம கதையே வேற... பார்க்கத்தானே போறே.
சுந்தர் சொல்லும்போதெல்லாம், ஆனந்த் - அவனது விலாவில் குத்திச் சிரிப்பான்.
அத்தை பொண்ணு வந்தா- உங்க வீட்டுலதானே தங்கிப் படிப்பா..
தேவையா... எங்க வீட்டுலே இருந்து நாலாவது பங்களா... ஒரு முரட்டு பங்களா இருக்கே... அது அத்தையோட மாமனார் வீடு… கல் கோட்டை... அவங்க எப்பவர்றாங்க... எப்ப திரும்பிப் போறாங்கன்னு யாருக்கும் தெரியாது... நேரே பார்த்தா 'என்ன மாப்பிள்ளையின்னு அன்பா விசாரிப்பா. எனக்கு ஜன்னி கண்டுறும்..
'ஓ'... வெனச் சிரிப்பலைத் தொடரும்....
அறைக்குள் நுழைந்தவனை 'வா'வெனத் தலையசைத்து வரவேற்றான் ஆனந்த்.
என்னடா ஆச்சு. பார்ட்டி அது இதுன்னு பசங்க ஒரேயடியா - பாலாடையில வச்சுப் புகட்டாதக் குறையாப் புகட்டிட்டானுங்களா.
சுந்தரின் கேள்விக்கு ஆனந்த் பதிலளிக்கவில்லை. அருகிலிருந்த பல்லி நாராயணன்தான் பேசினான்... (வகுப்பிலானாலும் அறையிலானாலும் இந்த நாராயணன் சுவரோடு ஒட்டிக்கொண்டுதான் உட்காருவான், படுப்பான்… அதனால் சக மாணவர்கள் சூட்டிய செல்லப் பெயர் இது... இவனை மாதிரி விஸ்கி விஜயன், அரியர்ஸ் பத்மநாபன், சோடா புட்டி மகேசு, குண்டு சீனி, ஒல்லி சீனி இப்படி நிறைய உண்டு.)
சுந்தர்-உன் ஆத்ம சினேகிதன் நேத்து அந்த எஸ்.ஐ.இடி. யோடப் பேசப் போனான்.
யாருடா அது?
''அதான்டா... நாளை இந்த வேளை பார்த்து நிலாவை வரச் சொன்னாளே… அவளை… அவ பேரு என்ன…. மறந்து போச்சு..."
அகிலா.
ஆனந்த் என்னவோ உதட்டில் தடவப் பட்டத்தேனை - நாவினால் சுவைத்துப் பார்ப்பது போல - ஒவ்வொரு எழுத்தாகச் சொன்னான்.
சுந்தர் முகம் பிரகாசிக்க - நண்பனைப் பார்த்தான்.
பேசிட்டே இல்லே? அப்புறமும் ஏன் மூஞ்சியத்தூக்கி வச்சிட்டிருக்கே?
எங்கே பேசறது... காருக்குள்ளே அவ அம்மா... நான் இவகிட்ட வந்து, 'நிஜமாவே ரொம்ப நல்லாப் பாடினீங்க'ன்னு சொல்லி முடிக்கலே... அந்தம்மா புசுபுசுன்னு இறங்கி வந்து, என் மக பாடறப்ப வேப்பிலை எடுத்துட்டு ஆடச் சொல்லிப் பசங்கள ஏவி விட்டுட்டு, இப்ப என்னடா பேச்சு வேண்டி கிடக்கு. நான் நினைச்சா - உன்னைக் கொண்டுபோய் 'லாக்- அப்லே' வைக்க முடியும்னு என்னென்னவோ சொல்லிக்கத்தறாங்க... 'அம்மா, இது காலேஜ்லே நடத்தற போட்டி... இப்படித்தான் இருக்கும். இதுக்குத்தான் உன்னை வராதேயின்னு சொன்னேன்'னு அந்தப் பொண்ணு எவ்வளவோ சொல்லிப் பார்த்தா... அந்தம்மா கேட்கற வழியா இல்லே...
அப்புறம்?
அந்தப் பொண்ணே, அம்மாவை காருக்குள்ளே தள்ளி, தானும் ஏறிட்டு வண்டியக் கிளப்பிடுச்சு..
அவ பேரு அகிலான்னு எப்படி தெரியும்?
அதான் அவ அம்மா... ஓட்ட வாய்... என் மக அகிலாவை மிஞ்சறதுக்கு இன்னொருத்தன் பொறந்துதான் வரணும், பார்த்துட்டே இருடா... அடுத்த மேடையில எங்க அகிலா உன் மூக்கை அறுக்கப் போறா... வேப்பிலை அடிச்சு ஆடுனீங்க இல்லே. என் மக அகிலா உடுக்கை சத்தத்துக்குகூடப் பாடுவாடா... ன்னு மூச்சுக்கு முன்னூறு அகிலா சொல்லிச்சே.
-இது கேண்ட்டீன் கிருபா.
பாவம்... வயசான காலத்துல வீட்டோட இல்லாம இந்தப் பெருசு எல்லாம் எதுக்கு இங்கே வர்றதுங்க..
சுந்தர், ஆனந்தை பலவந்தமாய் எழுப்பி உட்கார வைத்தான். இன்னமும் அவன் முகம் சுண்டித்தானிருந்தது...
இப்ப என்னங்கறே... அந்த அகிலாவைப் பார்த்துப் பேசணுமா?
எங்கே... அதெல்லாம் நடக்கற காரியமா..
ஆனந்த், தன் பக்கத்தில் மடித்து வைக்கப்பட்டிருந்த சட்டைத் துணி மணிகளை அவன் பக்கம் நகர்த்தினான்.
இந்தா… உன் பேண்ட், சட்டை, பெல்ட், செருப்புகூட உன்னுதுதான். அது என்னமோ - பரிட்சையானாலும் சரி, போட்டியானலும் சரி... உன் கிட்ட இரவல் வாங்கிப் போட்டுட்டுப் போனாத்தான் காரியம் என் பக்கமா. முடியுது...
அப்ப ஒண்ணு செய்யேன்.
சுந்தர், நண்பனைப் பார்த்து, கண்களைச் சிமிட்டினான்:
பேப்பரும் பேனாவும் இரவல் தர்றேன்... அந்த அகிலாவுக்கு இந்த மாதிரி, உன் பாட்டும் ரொம்ப நல்லா இருந்தது. இப்படிப்பட்ட அம்மாவை எப்படிச் சமாளிக்கறே’-யின்னு கேட்டு ரெண்டு வரி லெட்டர் எழுதேன்...
அய்யோ... லவ் லெட்டரா.
ஆனந்த் அலற-சுந்தர் இடியிடியெனச் சிரித்தான்...
"டேய், நான் லெட்டர்னுதானே சொன்னேன்? லவ்லெட்டர்னு நீயா ஏண்டா மாத்திக்கறே... ஒரு பையன்-இன்னொரு பொண்ணோடத் திறமையப் பாராட்டி லெட்டர் கொடுக்கக்