Kanavu Kanavan
3/5
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Ulley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsPournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Anna Rating: 5 out of 5 stars5/5Puthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsSonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Iruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsVera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Koondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsSalanam Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Kaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsNila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Kaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsUravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Arali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratingsPoisugam Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsNadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Megathile Methaidu Rating: 0 out of 5 stars0 ratingsSumai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanavu Kanavan
Related ebooks
Samathiley Naan Varava Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsUthama Thirudi Rating: 5 out of 5 stars5/5Gangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Kanne Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalil Nee Oru Kaviyam Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Vettai Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal... Kanavugaley...! Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Poo Rating: 3 out of 5 stars3/5Mullodu Oru Roja and Oru Mutrupulli ‘kama’ vagerathu Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire... Rating: 5 out of 5 stars5/5Nee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5En Vazhkai Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsThoda Thoda Thodarum Rating: 5 out of 5 stars5/5Oviyam Rating: 5 out of 5 stars5/5Kaadhal Neram Rating: 5 out of 5 stars5/5Thottil Sugam Rating: 5 out of 5 stars5/5Plum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsUnnaruge Ullaval Rating: 0 out of 5 stars0 ratingsDhanam Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Rating: 0 out of 5 stars0 ratingsMom From India Rating: 0 out of 5 stars0 ratingsArali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanavu Kanavan
2 ratings0 reviews
Book preview
Kanavu Kanavan - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
கனவுக் கணவன்
Kanavu Kanavan
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
அந்தக் காலத்தில் அவரைச் சேர்ந்தவர்கள் ‘போயும் போயும்’ அந்தக் கோணவாய்ப் பெண்ணையா கட்டிக் கொள்ளப் போகிறாய்’ என்றதற்கு, ‘எனக்கும் ஓரக் கண்தானே?’ என்று பதில் சொன்னாராம். ஆண் பிள்ளை மாதிரி வளர்ந்த அம்பிகை அதைக் கேள்விப்பட்ட போது பெண்மையில் கனிந்தாள். முகமறியாமலேயே, முன்னர் அவர் நாமம் கேட்காமலேயே அவருக்கு முழுவதும் ஆட்பட்டாள் அம்பிகை.
-‘இந்த நேரத்தில் இவள்...’
-ஜெயகாந்தன்
அம்மாவின் இரண்டாவது குரலுக்கும் பதிலளிக்காது அழுத்தமாய் உட்கார்ந்திருந்தாள் வருணா.
போஸ்ட் மேன் வந்துட்டுப் போயாச்சான்னு வாதிராஜ ராவ் வீட்டு மாமியைக் கேளேன்... இப்படியே சுவரோடு சாய்ஞ்சு உட்கார்ந்து எந்தக் கோட்டையைப் பிடிக்கறதா உத்தேசம்?
தபால் இருந்தால் அவர்களே கூப்பிட்டுக் கொடுக்க மாட்டார்களா?
பார்க்கப் போனால், அம்மாவின் குரலே வாசற் பக்க குடித்தனக்காரர்களுக்கு எட்டியிருக்கும்.
அதற்கு இவள் நீள நெடுக அங்கே போய் நிற்க வேண்டுமா?
வெறுமே ஒரு கேள்விக்கு ஒரு பதிலோடு வாசல் பக்க வீட்டுக்காரம்மாள் விட்டு விடுவாளா?
என்ன வருணா, தபால்காரரை ரொம்ப மும்முரமா எதிர்பார்க்கறே... போன வாரம் பெண் பாத்திட்டுப் போன பிள்ளயைாண்டான் கிட்டயிருந்து நோ ரிப்ளையா?
நீ என்ன சொல்லு, இன்னும் இந்த ஆம்பிளைங்களுக்கு சொந்தமா சிந்திக்கிற புத்தியே வரல்லேடி... அம்மா, அப்பா, அத்தை, சித்தப்பான்னு இத்தனைப் பேரையும் கேட்டுட்டா ஒருத்தன் பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு எழுதிப் போடுவான்?
இதெல்லாம் பணம் படுத்தற பாடு... அவ்வளவுதான் நான் சொல்லுவேன். இதுவே நீ ஒரு ‘சீஃப் குக்’ கோட பொண்ணா இல்லாம- ‘சீஃப் இன்ஜினீய’ரோட பொண்ணா இருந்தா- வர்றவன் உன்னை அள்ளிண்டு போயிட மாட்டானா?
பேசாம எவனையாவது லவ் பண்ணிடேன். வருணா... இந்த காலத்துல லவ் மாரேஜ்ஜுக்குதான் மதிப்பு. நேத்து பேப்பரைப் பார்த்தியோ... எஸ்.பி.பி.யோடப் பொண்ணு அமெரிக்காவுல போய் லவ் பண்ணி-இங்கே நிச்சயதார்த்தம் நடந்ததாம். நமக்கு அமெரிக்கா – ஆஸ்திரேலியா எல்லாம் சாத்தியப் படாது... இதே மைலாப்பூர்லே - ஒரு கிளர்க்கோ-அக்கவுண்டன்ட்டோ கிடைக்கமாட்டானா-வளைச்சுப்போடு...
எங்க மன்னி சொன்னா... காளாஸ்திரிக்குப் போய், ராகுகேதுவுக்கு பூஜை பண்ணிட்டு வந்தா கல்யாணம் கூடி வரும்னு... ஒரு நடை போயிட்டு வந்திடேன்...
இத்தனையையும் கேட்டுக் கொண்டு – ஜடம் மாதிரி- சுவரில் ஈஷிய பல்லி மாதிரி நின்று கொண்டிருக்க வருணாவினால் இப்பொழுதெல்லாம் முடியவில்லை.
வாசற்பக்க வாதிராஜ ராவ் வீட்டு மாமிக்கு பிள்ளை குட்டி கிடையாது, யார் வீட்டுக்கு தபால்காரர் வருகிறார் என்பதிலிருந்து – யார் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் வருகிறது; யார் வீட்டுக்கு பெண் பார்க்க வந்தார்கள், யார் வீட்டுக்கு கடன்காரன் வந்து கத்திவிட்டுப் போனான் என்பது வரையில் அத்தனையும் அத்துபடி.
வருணாவிற்கு - இந்த வைகாசியோடு இருபத்தி நாலு வயசு முடியப் போகிறது.
பெண்ணுக்கு ஏற்ற திருமண வயது 21’- என்று ஆட்டோ ரிக்ஷாக்களில் எழுதியவர்களை எல்லாம் பிடித்து வந்து நிறுத்தி கேட்க வேண்டும்.
சரிதான்யா... என் வீட்டுல இருபத்தியொண்ணு முடிஞ்சு மூணு வருஷம் ஆனப் பொண்ணு இருக்கு... கட்டிக்கிறயா...
வருணா, அடிக்கடி இப்படி நினைத்துக் கொள்வாள்.
வாதிராஜ ராவ் சம்சாரம் சொல்வது போல தன்னைப் போன்ற இரண்டுங் கெட்டான்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆவது கேள்விக்குரிய விஷயம் தான்...
வருணாவிற்கு அப்பாவை நினைக்கையில் ஒரு பக்கம் கோபமாகவும் - இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது.
கோபத்துக்கு காரணம்- தன் பெண்ணை மணக்க, ஒரு ஐ.ஏ.எஸ் கலெக்டரோ-டாக்டரோ வருவான் என்று கனாக் கண்டு கொண்டிருப்பது...
விரலுக்குத் தகுந்த வீக்கம்தான் வீங்க வேண்டும் என்பது – இந்த அப்பாவுக்கு ஏன் தெரியவில்லை?
வருணாவின் தந்தை ஜெகதீசன் நளபாக சக்ரவர்த்தியாக இருக்கலாம். பிரபல வக்கீல்கள், டாக்டர்கள் வீட்டின் திருமணங்களுக்கு இவர்தான் சீஃப் குக்காக இருக்கலாம்... ஆனால் தனக்கும் அந்தப் பெருமைகள் உள்ள மாப்பிள்ளையே வரவேண்டும் என்றால் எப்படி?
ஜெகதீசனின் காதுபட யாரும்- ’என் பிள்ளை ஹவுஸ் சர்ஜனா இருக்கான்’ என்றோ -’இந்த வருஷம்தான் ஐ.ஏ.எஸ் முடிச்சான் என்றோ சொல்லி விடக் கூடாது. உடனேயே ஓடுவார்... அவர்களுடன் பேசிப் பேசி-காலிப் பெருங்காய டப்பாவாய் எப்பொழுதோ- தங்களது வம்சத்தினர் சீரும் சிறப்புமாய் இருந்த கதையெல்லாம் கூறி...
அதுல ஒரு விசேஷம் பாருங்கோ... எங்க அம்மாவோடப் பாட்டி தாத்தா எல்லாரும் சோழ தேசத்து வடமாள். என் சம்சாரத்தோடப் பொறந்தகம் மதுரை... பாண்டிய தேசத்து பண்டிதர்கள் பரம்பரை... என் மாமனாரோட அப்பா, காசி ராஜாவோட சபையில தர்க்க சாஸ்திர பண்டிதரா இருந்து... ஹி... ஹி... ஹி... இன்றும் கூட எங்க குடும்பத்துல அவர் பூஜை பண்ணின விக்கிரகங்கள் எல்லாம் இருக்கு...
எதிராளிகளுக்கு இந்த சம்பந்தத்தில் எந்த அளவுக்கு நாட்டம் இருக்கும் என்பதையே அறிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டே போவார்
ஏதோ ஒரு சிலர்- தாட்சண்யத்துக்காக வருணாவின் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு தங்கள் பிள்ளையின் ஜாதகத்தைத் தந்தாலும் –பொருத்தம் என்று வரும் போது - ‘எங்கள் ஜோசியர் பொருந்தவில்லை என்கிறாரே’ என்று சொல்லி விடுவார்கள்
என்னோட ஜோசியர் பொருத்தமாயிருக்குன்னு சொன்னாரே... அது எப்படி அவங்க வீட்டுலப் பொருந்தலையின்னு சொல்லுவாங்க...
இப்படி பார்க்கிறவர்களிடமெல்லாம் அரற்றிக் கொண்டிருந்தவரை- அவரது ஒரே மகன் சிவசு தான் வார்த்தையால் அடித்து, கண்களைத் திறந்து வைத்தான்:
அப்பா, பெரிய மனுஷங்க வீட்டு சமையற்கட்டு வரைக்கும் போக உங்களுக்கு உரிமை இருங்குங்கறதுனால – அவங்களோட சம்பந்தம் பேச நினைக்கிறது முட்டாள்தனம்.
அடேய்... அப்படி இல்லேடா... நமக்கு என்ன குறைச்சல்? போன மகாநாட்டுல எனக்கு நௗசக்ரவர்த்தி விருது- நம்ம சி.எம். கையாலே கிடைக்கலையா... நானும் என் பொண்ணுக்கு இருபத்தஞ்சு பவுன் போடறேன். கல்யாணத்தைப் பிரமாதமா செய்யறேன். கச்சேரிக்கு மான்டலின் சீனிவாஸ்ஸை வாசிக்கச் சொல்றேன். நான் கூப்பிட்டா- அந்தப் பிள்ளை வர மாட்டேன்னு சொல்ல மாட்டான்டா... என் மேல அவ்வளவு பாசம்...
சரிப்பா, கல்யாணம்கறது அந்த ஒரு நாள் அமர்களத்தோட முடிஞ்சு போற விஷயமில்லையே... நீங்க வேணுமானா-பெருமையா, ‘என் சம்பந்தி ஒரு வி.ஐ.பி.யின்னு சொல்லலாம்... அவங்க - எப்படிச் சொல்லிக்க முடியும்... யோசிச்சுப் பாருங்க...
"எனக்கென்னடா...’
த்ச். இந்தப் பேச்செல்லாம் வேண்டாம். குதர்க்கம் பேசாம யோசிச்சுப் பாருங்க..
நம்ம இந்துவை நான் நல்ல எடத்துல கொடுக்கலையாடா... உனக்கு பெரிய ஆடிட்டரோடப் பெண்கழுத்தை நீட்டலையா...
இந்த அலட்டல்தானே வேண்டாங்கறேன்? இந்துக்கு வரன் தானாத் தேடி வந்தது. எனக்கு நான் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சிட்டேன்...
அவன் இப்படி சொன்ன போது, ஜெகதீசன் தலை குனிந்து நின்றார்.
இந்து அவருடைய பெரிய பெண்... பத்தொன்பது வயசிலேயே கல்யாணம். அதுவும் எப்பேர்பட்ட வரன்... மாப்பிள்ளை, தன் தந்தையுடன் சேர்ந்து மிகப் பெரிய நிறுவனமொன்றின் டைரக்டராக இருக்கிறான். கோடீஸ்வரன்... பார்க்க ராஜ குமாரன் மாதிரி இருப்பான்... இந்துவை-அவன் சந்தித்தது கல்லூரி விழா ஒன்றில். அப்பா தலைமை தாங்கப் போக அவருடன் கூடச் சென்ற போது...
இந்து-அழகில் முதல். படிப்பில் முதல். சங்கீதத்தில் முதல்... எல்லாவற்றிலும் முதல்... விழா முடிந்த மறுநாளே-ரகுநாதன் அவன்தான் இந்துவின் கணவன்-தனது நிறுவனத்துக்கு சமையற்கார ஜெகதீசனை அழைத்துப் பேசினான்...
அப்போது ஜெகதீசனுக்கு தன்னைப் பற்றிய சுய மதிப்பு தெரிந்திருந்தது...
ஐயய்யோ... நானா... உங்களுக்கு என் பொண்ணைத் தர்றதா... உங்கப்பாவுக்குத் தெரிஞ்சா – என்னை ஆள் வச்சு அடிச்சிட்டு, காரியம் பண்ண பணமும் கொடுத்தனுப்புவார்... வேண்டாம்... விட்ருங்கோ...
இப்படி பயந்தவரை-ரகுநாதன் தன் தந்தையிடம் அழைத்துச் சென்று பேச வைத்தான்.
இதுலே எல்லாம் என்னண்ணா இருக்கு? பணம் இன்னிக்கு வரும்; நாளைக்குப் போகும். மனுஷாள்னா முக்கியம். மேலும், என் பையன் மனசு வந்து கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான்... எத்தனையோ கோடீஸ்வரன்கள் காத்துட்டிருந்தாலும் –அவனுக்கு என்னமோ இவ மேல் விருப்பம் விழுந்துடுத்து... மளமளன்னு கல்யாண காரியத்துல இறங்க வேண்டாமா...
……..
நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்... ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லே கல்யாணம்... ரிசப்ஷன் எல்லாம். எப்ப என் பிள்ளைக்குப் பொண்ணைத் தர்றீரோ அப்புறம் நீங்க வேற- நான் வேற இல்லே...
ரகுநாதனுடைய தந்தை-தனது வார்த்தைகளை மூலதனமாகப் போட்டே கோடீஸ்வரராகியிருப்பார் என்று –பின்னால் தான் நினைக்கத் தோன்றியது ஜெகதீசனுக்கு.
இந்து – திருமணமாகிப் போனவள்தான் இதுவரையில் பிறந்த வீட்டுக்கு இரண்டே இரண்டு தடவை வந்ததோடு சரி.
முதல் தடவை- ஜெகதீசன்—ஒரு பெரிய மனிதர் வீட்டில் சமைக்கும் போது, கொதிக்கும் எண்ணெய் கொப்பறை காலில் விழுந்து- ஆஸ்பத்திரியில் மரண அவஸ்தைப் பட்டு-ஆறுமாதம் போல் படுத்த படுக்கையாய் கிடந்து-வீட்டுக்கு அழைத்து வந்த பின்...
கூடை நிறைய பழங்களுடன், அப்பாவைப் பார்க்க வீடு தேடி வந்தாள்.
அப்பா பேசவில்லை. ஆனால் சங்கரி பெற்றவள்-பேசினாள்:
வாடியம்மா... வழிதெரிஞ்சுதா... அப்பா அந்த கெடைகிடந்தாரே... எத்தனை தடவை தகவல் சொல்லி அனுப்பினேன். இப்பத்தான் நேரம் கிடைச்சுதா.
இந்து, முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
அம்மா... என்னை வார்த்தையாலே குத்தாதே... அப்பாவைப் பார்க்கணும்னு நான் எப்படி துடிச்சேன் தெரியுமா... என் மாமனார்தான்... ’பிள்ளைதாச்சி பொண்ணு... ஆஸ்பிடலுக்கு எல்லாம் போனா கண்ட வியாதியும் தொத்திக்கும்... இந்த சமயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்லிட்டார்...
அப்போதுதான் அவள் ஆறுமாதம்’ கருவுற்றிந்ததே பெற்றவளுக்குத் தெரியும்...
நான் ஒரு அசடு... வயித்தைக் கூடப் பார்க்காமத் திட்டிட்டேன்...
இப்படிச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.
இதற்கு அடுத்தாற் போல அவள் வந்தது சிவசுவின் திருமணத்துக்குத்தான்... அதுவும் மாலை வரவேற்புக்கு.
கையில் எட்டு மாதக் குழந்தை... கூடவே குழந்தைக்காக ஒரு ஆயா... பட்டுப்புடவை கசங்காமல் சற்று நேரம்... ரகுநாதன் அது கூட இல்லை...
பிரசவத்துக்கே மனைவியைத் தாய் வீட்டுக்கு அனுப்பவில்லையே அவன். சங்கரிதானே ஓடினாள்...
வருணா ஒருத்திதான் இப்போது-சம்பிரதாய முறைப்படி, அப்பா பார்த்துக் கொடுக்கும் பிள்ளையை மணக்க காத்திருக்கிறாள்.
சிவசு கல்யாணமானதுமே தனியே போய் விட்டான். எப்பொழுதாவது வருவான். ஜெகதீசன், வருணாவுக்காக தான் பார்த்திருக்கும் வரன்களை எல்லாம்-’என்னமோ மகள் பார்த்து முடிவு செய்துவிடுகிற’ மாதிரி கடை பரத்துவார்...
அவன், இது ஒன்றையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல், அம்மா ஆற்றிக் கொடுக்கும் காபியை உறிஞ்சியபடி, ஈஸி சேரில் சாய்ந்து காலாட்டிக் கொண்டிருப்பான்.
வருணா... இவர்கள் கண்களில் படாமல், கூடத்துக்கும் முற்றத்துக்கும் நடுவே போடப்பட்டுள்ள மரத்தடுப்புக்கு அருகில் அமர்ந்து முழங்காலில் முகம் பதித்திருப்பாள்.
இது... நம்ம தேசிகன் கொடுத்த ஜாதகம்டா... அவனோட அக்காவும், பையனோட அம்மாவும் கிளாஸ் மேட்டாம். அவன் அக்கா சொன்னா தட்ட மாட்டாளாம்…
…
பையன் இன்ஜினீயரா இருக்கானாம்... கம்பெனியில வீடு கொடுத்திருக்காளாம்... பையனோட அப்பா ரெயில்வேயில... ஏண்டா சிவசு, கேட்கிறியா...
சொல்லு. கேட்டுண்டுதான் இருக்கேன்... பையனுக்கு சம்பளம் பத்தாயிரம்... வீடு, எலக்டிரிக் சார்ஜ் எல்லாம் ஃப்ரீ... பையனோட அப்பா ரெயில்வே மினிஸ்டருக்கு பி.ஏ... ஏம்பா கிடந்து அலையறே... ஏதாவது நடக்கற விஷயமாப் பேசு...
சரி... கோவிச்சுக்காதே... இப்ப என்ன சொல்லிட்டேன்? சிடுசிடுங்கறே? இந்துவுக்கும் உனக்கும் தலை எழுத்து - சுழி –நன்னாயிருந்தது... அதுபோல் இவளுக்கும் இருக்கக் கூடாதான்னு ஆசைப்பட்டது தப்பா... வேண்டாம்னா விடேன்... இதைப்பாரு... பையன் ஆடிட்டரா இருக்கான்... மஸ்கட்லே வேலை.. கல்யாணமான மறுவாரமே பிளேன் ஏறிட்ணும்கறான்…
கூடவே என்ன எழுதியிருக்கான் பாரு-நம்ம ஊர் குப்பன் –சுப்பன் எல்லாருமே- பொண்ணு படிச்சிருக்கணும், வேலைக்குப் போகணும்னு ஆயிரம் கண்டிஷன் போடறானுங்க... மஸ்கட் மாப்பிள்ளை என்ன கேட்கறாரு...?
ஒண்ணுமில்லே. பொண்ணும் படிச்சிருக்கணும்கறார். அங்கே டீச்சர் வேலை கிடைச்சா...
உருப்பட்டாப்பலதான்... இங்கே உன் பொண்ணு ‘பிளஸ் டூ’வுலேயே டக்கடிச்சிட்டு உட்கார்ந்துட்டாங்கற விஷயம் அவனுக்குத் தெரிஞ்சாப் போதும்...
சிவசு நிஜமாகவே தங்கைக்கு இன்னும் வரன் எதுவும் கிடைக்கவில்லையே என்கிற வருத்தத்தில் பேசுகிறானா... இல்லை -இவளுக்காவது, கல்யாணமாவதாவது‘ -என்கிற அலட்சியத்தில் பேசுகிறானா...
வருணாவுக்குத் தெரியாது... ஆனாலும் அவன் அப்படிப் பேசும் போது கண்கள் சுரக்கும்...
வெறும் அழகு மட்டும் இருந்தால் போதுமா... படிப்போ –அதிர்ஷ்டமோ வேண்டாமா?
இது புரியாத அப்பா, ஏன் இப்படி கையில் பிடிக்க முடியாத ஒன்றுக்காக அலைபாய்கிறார்...
முன்னைக்கு இப்போது பரவாயில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு-டாக்டர், வக்கீல், கலெக்டர் என்று ஓடினார். அப்புறம் இன்ஜினீயர், பாங்க் ஆபீசர், ஆடிட்டர் என்று சில நாட்கள்... இப்போதுதான் கிளார்க் அக்கவுண்டன்ட் என்று...
இப்படிப்பட்ட வரன்கள் – சமீப காலத்தில் ஒரு பத்து வரன்களாவது வருணாவை வந்து பெண் பார்த்து விட்டுப் போயிருப்பார்களா... இருக்கும்...
சென்ற முறை-மாயவரத்து பிள்ளை வீட்டார்-’பெண் பார்க்க வந்த போது சகுனம் சரியில்லை ‘என்று எழுதின கடிதத்தை சிவசு பார்த்து விட்டுக் கத்தினான்
பேசாம உன் பொண்ணை –உன் கூடவே ஓடியாடறானே... சமையல்லே உன் சிஷ்யப் பிள்ளை மாதவன்... அவனுக்கு கட்டிவை... பிரச்னை தீரும்... நீ கட்டுடா தாலியைன்னா அவன் மாட்டேன்னு சொல்லிடுவானா...
இதைக் கேட்ட வருணா மட்டுமில்லை... அந்த நேரம் பார்த்து ஜாரிணி கரண்டியைத் தோளில் சாய்த்துக் கொண்டு, ஒரு காலை சற்றே சாய்த்தபடி நடந்து வந்த மாதவன் கூட திகைத்து நின்றான்...
***
2
எவனெவனோ வந்து சட்டமாக உட்கார்ந்து கொண்டு அவளைப் பார்ப்பதும், வந்து பார்க்கும் ஒவ்வொருவனையும் தனக்குப் பிடித்திருப்பதாக ஒருத்தி சொல்வதும் கொஞ்சம் அசிங்கமானது –சங்கடம் உண்டாக்குவது என்று தோன்றியது...