Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoda Thoda Thodarum
Thoda Thoda Thodarum
Thoda Thoda Thodarum
Ebook236 pages2 hours

Thoda Thoda Thodarum

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002981
Thoda Thoda Thodarum

Read more from Anuradha Ramanan

Related to Thoda Thoda Thodarum

Related ebooks

Reviews for Thoda Thoda Thodarum

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoda Thoda Thodarum - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    தொடத் தொடத் தொடரும்

    Thoda Thoda Thodarum

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    இந்த நாவல் பற்றி.....

    நிறைய கடிதங்கள்; பாராட்டும் வசவுகளுமாய். இதில் வேடிக்கை என்னவென்றால் மிகவும் ஆச்சாரம், அனுஷ்டானமான பழைய சம்பிரதாயங்களில் ஊறிய தம்பதியரிடமிருந்து இந்தக் கதைக்கான திட்டுகளை வாங்கிக் கொள்ள நான் கையேந்தித் தயாராக நின்ற போது- அவர்களோ கதாநாயகிக்காகக் கண்ணீர் வடித்தனர். பரத்ராம் போன்ற மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டனர். இதையும்விட ஒரு படி மேலே போய் அவர்களுக்குத் தெரிந்த இடங்களில் எல்லாம் நடந்த கொடுமைகளைப் பற்றிக் கதை கதையாய்க் கூறினார்கள். அந்தக் கதைகள்- இந்தக் கதையை விட அதிர்ச்சி தரும் சம்பவங்களைக் கொண்டிருந்தன.

    ஒன்று சொல்வேன். கதையில் எனது கற்பனை வக்ரமான திசையில் ஓடியது என்பவர்களுக்கு ஒன்று சொல்வேன்.

    கதையில் வரும் கதாபாத்திரங்கள் நிஜம். நிஜத்தைத் தவிர வேறில்லை. இதில் வரும் ரேணுகா இன்னமும் இருக்கிறாள். வயது 55க்கு மேல் ஆகிறது. எப்போதும் இடுப்பில் அல்லது மேல் புடவையில் தட்டையான பாட்டிலில் உள் நாட்டு மலிவுச் சரக்கை வைத்துக் கொண்டு... இன்றைக்கும் இவளை மயிலாப்பூரிலும், மந்தைவெளியிலும், அண்ணாமலை புரத்திலும் பார்க்கலாம். என்னைப் பார்த்தால் சோழிப் பற்கள் தெரிய சிரிப்பாள். ஒரு காலத்தில் மல்லிகைப் பூச்சிரிப்பும், மாம்பழ நிறமும்மாய் இருந்தவள் தான். இப்பொழுது கன்னம் தேய்ந்து, இளைத்து, மெலிந்து சோகை பிடித்த வெளுப்புமாய்ச் சருமம் மாறி, முன் தலை கேசம் கொட்டி, அந்த உடம்புக்குக் கொஞ்சமும் பொருந்தாத ஏழு மாசப் பிள்ளைதாச்சி போன்ற குடுக்கை வயிறுடன்... -

    பரத்ராம் இன்றைக்கும் தனது ராஜாங்கத்தை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் ஒரு விஷயம். இந்த மனைவியால் இனிமேல் இவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. அவரைப் பொறுத்த வரையில் இவள் கடித்துத்துப்பிய கரும்புச் சக்கை; எரிந்து முடிந்த மெழுகுவர்த்தி; சமையலில் உபயோகப்படுத்திய கருவேப்பிலை. மொத்தத்தில் இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரையில் இவள் ஒரு நடமாடும் பிணம்.

    பிள்ளையோ, பெண்ணோ, யாருமே இவளை லட்சியம் செய்வது இல்லை. 'செத்து ஒழியேன்' என்று பெற்ற பெண் சொல்கிறாள். மகனோ- இந்தப் பிரச்சினையே வேண்டாம் என்று அமெரிக்காவில் போய்க் குடியேறிவிட்டான். கழுத்தை நெறித்துக் கொன்றால் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கூண்டில் ஏற வேண்டி வரும் என்கிற ஒரே பயத்தினால் தாலி கட்டியவன் கையைக் கட்டிக் கொண்டு வளைய வருகிறான்.

    இவள் இறப்பதற்கு முன்னாலாவது மற்றவர்கள், இவளைப் புரிந்து கொள்வார்களா என்கிற ஆதங்கம் என்னுள் கசியும் போதெல்லாம், இவளுக்காக ஒரு கதை எழுதிவிட வேண்டும் என்று நினைப்பேன்.

    இன்னொரு விஷயம், பரத்ராம்- நிஜ பரத் ராம் வீட்டுக்குள் மிகவும் கண்டிப்பையும், நேர்மையையும் கடைப்பிடிப்பவர். சாதாரண பத்திரிகைகளையோ, வாராந்தரிகளையோ, மாத நாவல்களையோ நுழைய விடமாட்டார். சசி .- அதாவது ரேணுகாவின் தங்கை படிப்பது கலைமகள், மஞ்சரி; தினசரியில் இந்துவும், தினமணியும்தான்..

    இப்பொழுது புரிந்திருக்கும் நான் ஏன் கலைமகளில் எழுதினேன் என்று. - நிஜமான ரேணுகாவிற்கு என் கதையின் முடிவு வந்து விடக்கூடாது என்பது தான். என் பிரார்த்தனை.

    'எங்கோ உள்ள ஓரிரு மேல்மட்டப் பெண்கள் எப்படியெல்லாமோ நடந்து கொண்டால், அதைப் பெரிசு படுத்துவது அவசியம்தானா?' என்றும் சில வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள். ‘பரத்ராம் போன்ற மனிதர்கள் கூட உலகத்தில் இருப்பார்களா?' என்றும் சிலரின் ஆக்ரோஷமான கேள்விகள்...

    இவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இது தான். எங்கோ இருக்கிற இரண்டு சதவீத அவலங்களையும், நாம் ஊன்றிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. சகோதரி... அப்படிப் பார்க்கும்போது, நாம் நம்மளவில் எத்தனை சந்தோஷமாக இருக்கிறோம் என்பதும், நமது வாழ்க்கை எத்தனை சுலபமாக இருக்கிறது என்பதும் நமக்குப் புரிகிறதல்லவா?

    பல இடங்களில் பணம் இருப்பதினாலேயே ஆயிரம் சிக்கல்கள். அதைவிட பணம் இல்லாத வாழ்க்கை நிம்மதியாக இருக்கிறது - மனத்தளவில் பல இடங்களில் லட்சம் லட்சமாகச் சௌக்கியமாகச் சம்பாதித்துக்கொண்டு, உள்ளுக்குள் சண்டையும் சச்சரவுமாய் இருக்கும் குடும்பங்களைப் பார்க்கையில் நாளைய செலவுக்குப் பணம் இல்லாவிட்டாலும், குழந்தைகளுடன் - கொஞ்சி விளையாடி, பெண்டாட்டியைச் சிரிக்க வைத்து மகிழும் கணவன் எத்தனையோ மேல் என்று தோன்றும்.

    என் வரையில் ரேணுகாவின் கதையை உங்கள் முன் மிகவும் விளக்கமாய், விஸ்தாரமாய்த் தரவில்லை. கொடுத்ததே அதிகம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனாலும், இந்தக் கதையை எழுதியதால் நான் நிம்மதியாக இருக்கிறேன். எனக்குள் இருந்த தவிப்பு, இக்கதையை எழுதியதன் மூலம் ஓரளவுக்கு அடங்கியுள்ளது. காரணம் - இது எங்கே, யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ, அங்கே அவர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.

    ஒரு பெண்ணின் சொந்த சோகங்களை வெளியிட்டு அந்தச் சோகத்துக்கு ஓரளவுக்கு நல்ல மாற்றமும் கண்ட நான் என்றென்றும் 'கலைமகளுக்கு' நன்றி கூறக் கடமைப்பட்டவபாகிறேன். கடைசியாக- பரத்ராம் போன்றவர்களுக்கு ஒரு சில வார்த்தை...

    பணம் ஒன்றே முழு வாழ்க்கையாகிவிடாது. நரகம் என்பது அடுத்த பிறவியில் இல்லை. நமது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ற தீர்ப்பை கடவுள் இங்கேயே, இப்போதே, இந்தப் பிறவியிலேயே கொடுத்துவிடுகிறார். இதைப் புரிந்து கொண்டால் போதும்.

    அனுராதா ரமணன்

    1

    இதோட நாலாவது பிளேட் குலோப் ஜாமுன்...

    செல்வா, அபிநயாவின் தோள் பட்டையில் இடிக்க, அவளோ கண்டு கொள்ளாமல் தட்டில் இருப்பதைக் காலி செய்வதிலேயே குறியாக இருக்கிறாள்.

    ஏய்... ஏதோ பார்ட்டிக்கு வந்தோமா... நாசூக்கா ஸ்வீட் காரத்தை டேஸ்ட் பண்ணினோமான்னு இல்லாம- இப்படியா முழுங்கறது...

    இந்தப் பக்கம் சரோஜினி, அபிநயாவின் காதோடு கிசுகிசுக்கிறாள்.

    சும்மாயிருடீ.... பார்ட்டி... அதுவும் வீட்லெ வச்சு... அடடா... நீ என்ன தான் சொல்லு..... ஸ்வீட்டோ, காரமோ... வீட்டுல அம்மா கையாலே செஞ்சு போட்டு சாப்பிடறதுனாலே தனி ருசிதாம்பா... ஆன்ட்டீ.... குலோப் ஜாமுன் எப்படி செஞ்சீங்க... ரெடிமேட் மிக்சரா... கோவா கிளறியா...

    கோவா கிளறித்தான்.... உன் சினேகிதிக்கு ரெடிமேட் எதுவுமே... எல்லாம் முறைப்படி.... அதுவும் ஆயிரம் பேர் இருந்தாலும்- நான்தான் செய்யணும்."

    அந்த நடுத்தர வயது மாது - முகமெல்லாம் பூ பூத்தபடி சொல்ல

    அபிநயா - அந்த அதிருஷ்டக்கார சினேகிதி நின்ற பக்கம் திரும்பிப் பார்க்கிறாள்.

    நீண்ட பெருமூச்சொன்று அடிவயிற்றிலிருந்து...

    அம்மா இருந்து, கவனித்துக் கொண்டால் அதன் சுகமே அலாதிதான். செல்வா... உங்கம்மா நல்லாச் சமைப்பாங்களா?

    ஓ... எங்கம்மா சுறாப்புட்டு செஞ்சா - இன்னிக்கு முழுக்க சாப்பிடலாம். ஆமா... நான் கேட்கணும்னு இருந்தேன்... அபி, நீ வெஜ்ஜா- நான் வெஜ்ஜா..."

    இப்ப என்ன அதைப் பத்தி?

    இல்லே.... எங்கம்மா - நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்னா- அவங்க சமைச்சுப் போடறதை ஆகா - ஓகோன்னு பாராட்டிட்டே சாப்பிடணும்...

    செல்வா, கண் சிமிட்டுகிறான்.

    இதற்குள் ஹாலின் அந்தக் கோடியில்- அன்று பிறந்த நாள் கொண்டாடும் காயத்ரி இரைந்து கூவுகிறாள் -

    அபி... நம்ம குரூப்'லே அடுத்த 'பெர்த்டே' உன்னோடது....

    தெரியும்... சவேராவுல பார்ட்டி.... எங்க அப்பா சொல்லிட்டாரு.

    ஹுய்!!

    அத்தனை இளசுகளும் சேர்ந்து கைகளைத் தட்டசெல்வா, அந்த இரைச்சலையும் மீறி கத்துகிறான்...

    நோ... நோ... நான் இதை ஆட்சேபிக்கிறேன்...

    அவன் வேகமாய் ஓடிப்போய் கூட்டத்தின் நடுவில் நின்று "படபட'வெனப் பொரிந்து தள்ளுகிறான்.

    அது என்ன... நாம எல்லாரும் அவங்கவங்க வீட்டுல விருந்து கொடுக்க வேண்டியது; அபிநயா ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லேயே தன் எல்லா பார்ட்டியையும் வச்சுக்கறது...

    அவ அப்பா பெரிய மனுஷர்பா... பொண்ணு கேக்கறப்ப எல்லாம் ரூபாய் நோட்டை அள்ளி வீசுவார்.

    ஆமா. அவளோடப் பொறந்த நாள் விழாவுக்காக -ஹோட்டலுக்கு செலவழிக்க மாத்திரம் பத்தாயிரம் ரூபா கொடுப்பாரு அப்பா.... ஸிம்ப்ளி டென் தவுஸன்ட் ருபீஸ்..... நம்ம வீடுங்கள்லே நாலு மாசம் மளிகை, பால் செலவு.

    அட, பார்ட்டி குடுக்கற தெய்வம் குடுக்குது. நீ ஏம்பா தடுக்கறே...

    தலைக்குத் தலை கூச்சல்... கலாட்டா... அபிநயா, ஆத்திரத்துடன் செல்வாவையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள்.

    விருந்தை எங்கே கொடுத்தால் என்ன... இவன் ஏன் - இல்லாத பொல்லாத பிரச்னைகளை எல்லாம் கிளப்பி விடுகிறான்.

    'இரு... உன்னை கவனிச்சுக்கறேன்...'

    அவள் உள்ளூரக் கறுவுகிறாள்....

    செல்வா அவள் பக்கம் திரும்பாமலேயே நண்பர்களிடம் பேசுகிறான்.

    இங்கே பாருங்க... நாம எல்லாருமே காலேஜ் ஸ்டூடன்ஸ்தான். ஆனாலும் நமக்குள்ள சில விதி முறைங்களை எல்லாம் வச்சிருக்கோம். அதை ஒழுங்கா கடைப் பிடிக்கவும் செய்யறோம்கறதை- காலேஜ் மாணவர் தலைவன்கற முறையில் உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்...

    ஆரம்பிச்சிட்டான்டி...

    சீச்சி... நல்லதைத்தானே சொல்றான்... சொல்லட்டும்.... விடுங்க.

    மாணவிகளிடையே செல்வாவுக்கு என்றுமே வரவேற்பு உண்டு.

    இன்றல்ல... அந்த 'கோ எட்' காலேஜ்ஜில் செல்வா மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறான் என்றால் எல்லாம் மாணவிகளின் மனசில் இடம் பிடித்ததினால்தான்.

    அப்போதே- தான் தலைவனாக வந்தால் - கல்லூரியின் ஒழுக்கத்தையும், நல்ல பெயரையும் எப்படியெல்லாம் காப்பாற்றுவது என்பது பற்றி ஒரு பட்டியல் போட்டே அறிவித்திருந்தான்...

    மாணவர்களே.... நான் தலைவனாக வந்தால் உங்களின் ஜொள்ளு, சைட், லைட் போடுதல், கடலை வறுத்தல் போன்ற எந்தவொரு பொழுதுபோக்கு அம்சத்துக்கும் தடை விதிக்கமாட்டேன். ஆனால் இதையே நாசூக்காய், கலையம்சத்தோடு செய்வது எப்படி என்பதற்கு ஸ்பெஷல் கிளாஸ் வைத்து நடத்து வேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்...

    மாணவிகளே, மழைக் காலங்களில் உங்களுக்கு முழுப் பாதுகாப்பு அளித்து, வீட்டுக்கு கொண்டு விடுவது மட்டுமின்றி - தேவைப்பட்டால் வகுப்பில் உங்களுக்குப் புரியாத பாடத்தையும் சொல்லித் தரத் தயாராக இருக்கிறோம்...

    பெற்றோர்களே... உங்கள் செல்வக் கண்மணிகளிடம் எடுத்துச் சொல்லுங்கள் - நான் மட்டும் மாணவர் தலைவனாக வந்தால் உங்கள் பிள்ளைகள் சிகரெட் பிடிக்காமல், தண்ணியடிக்காமல் நல்ல பிள்ளைகளாகப் படித்து பட்டம் பெற பாடுபடுவேன்...., விருந்துகளுக்காக ஓட்டலைத் தேடி ஓடும் மாணவர்களைத் திருத்தி வீட்டிலேயே கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளச் செய்வேன். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பரஸ்பரம் ஒற்றுமை வளர சிறந்த வழிகளைச் சொல்வேன்...

    பேராசிரியர்களே.... விரிவுரையாளர்களே... உங்களுக்கெல்லாம் விடிவு காலம் பிறக்கப் போகிறது. நாங்கள் உங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பதாகத் தீர்மானித்து விட்டோம். நான், மாணவர் தலைவனாகப் பொறுப்பேற்கும் பட்சத்தில் - ஆசிரியர் - மாணவர் உறவு எந்தவித வில்லங்கமும் இல்லாமல்...

    எலக்ஷனுக்காக அள்ளிக் கொடுத்த வாக்குறுதிகள் இல்லை... எல்லாமே, அவன் சொன்னபடி நடந்த போது - ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் செல்வாவின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்தனர்.

    செல்வா... நீயே சொல்லுப்பா... இப்பத்தான் இவன் அக்காவோட கல்யாணம் நிச்சயமாகியிருக்கு. வர்ற ஆறாம் தேதி நிச்சயதார்த்தம். ஏழாம் தேதி இவனோடப் பொறந்த நாள்... முதல் நாள் அத்தனை செலவு செஞ்சு ஊரையெல்லாம் கூட்டி விருந்து வச்சிட்டு, அடுத்த நாள் தனியா கோழி பிரியாணி கொத்துக்கறின்னு.... நடக்கக்கூடிய காரியமா... இதை ஏன் முதல் நாளே வச்சுக்கக்கூடாது. ஒரே விருந்து.... ஒரே செலவாப் போயிடுமில்லே.... இதுல என்ன கெளரவக் குறைச்சல்?

    ஷயூர்... இதுல ஒண்ணும் குறைஞ்சுப் போயிடப் போறதில்லையே... அஃப்கோர்ஸ் – நிச்சயதார்த்தம் நடக்கறப்பவே நாங்க எல்லாரும் வந்திருந்து ஓடியாடி வேலை செய்யணும் அங்கிள். நம்ம முத்துவோட அக்கா-எங்களுக்கும் அக்காதானே... நீங்க கவலையே படாதீங்க. விஷயத்தை எங்கிட்ட சொல்லிட்டீங்க இல்லே.... இனிமே நான் பார்த்துக்கறேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை ஸ்பெஷலா கவனிச்சு, சாப்பாடு பரிமாறி.... எல்லாம் எங்க பொறுப்பு...

    தங்கமான பையன்பா நீ... உன்னைப் பெத்த வங்க கொடுத்து வச்சவங்க... -

    அவர் அந்தண்டை போனதும் அவன், அபிநயாவைப் பார்த்து கண் சிமிட்டுவான்.

    பெத்தவங்க மட்டும்தான் கொடுத்து வச்சவங்களா அபீ... என்னைக் கட்டிக்கப் போறவளும் அதிருஷ்டசாலிதானே... நீ என்ன சொல்றே.... பார்த்துட்டேயிரு... என் கல்யாணத்துல - பொண்ணைப் பெத்தவங்களுக்கு செலவே வைக்கமாட்டேன்... எண்ணி முப்பதே ரூபாய்லே கல்யாணம்... ரெண்டு மாலை... ஒரு முழம் மஞ்சள் கயிறு... சரி, உங்க அம்மாவை எப்பப் பார்க்கலாம்...

    எதுக்கு?

    தாயைப் பார்த்துப் பொண்ணை எடுன்னு பெரிய வங்க சொல்லுவாங்க... ஆனா நான் பொண்ணைப் பார்த்தாச்சு. ஒரு சம்பிரதாயத்துக்காகவாவது அம்மாவைப் பார்க்க வேண்டாமா...

    …………….

    சரி. இப்ப அவசரமில்லையின்னா வேண்டாம் - அம்மாவைப் பார்த்துட்டுப் பொண்ணை செலக்ட் செய்யறது எதுக்காகத் தெரியுமோ... இருபது வயசுல கொடியா- ரதிதேவி மாதிரி இருக்கற பொண்ணு - நாப்பது வயசுல எப்படியிருப்பாள்னு ஒரு ஐடியா தெரிஞ்சுக்கத்தான்...

    பூசி மழுப்பினாலும் செல்வாவுக்கும் ஓரளவுக்கு அபிநயாவின் குடும்ப நிலைமை தெரிந்துதான் இருந்தது.

    ஓரிரு முறை அவனே

    Enjoying the preview?
    Page 1 of 1