Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaira Pommai
Vaira Pommai
Vaira Pommai
Ebook114 pages47 minutes

Vaira Pommai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703007
Vaira Pommai

Read more from Indira Soundarajan

Related to Vaira Pommai

Related ebooks

Related categories

Reviews for Vaira Pommai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaira Pommai - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    வைர பொம்மை

    Vaira Pommai

    Author :

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    வைரம் என்கிற ஒரு சொல்லுக்கு உண்மையான, சரியான பொருள் என்ன தெரியுமா?

    'விலை மதிப்பற்ற, காலங்களை வென்ற, புதைந்தும் அழிந்துவிடாத, மகா சிரஞ்சீவியான, நிகரில்லாத சக்தி படைத்த ஒரு பொருள்...' என்பதே ஆகும்! விலை மதிப்பற்றது அது என்பது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிட்டால் ஒரு சென்ட் வைரமெல்லாம் ஐயாயிரம், பத்தாயிரம் என்று விற்குமா?

    காலங்களை வென்ற, புதைந்தும் அழிந்து விடாத... என்று தொடர்கின்ற மற்ற விஷயங்கள்தான் பலரும் அறிந்திருக்காத ஒன்றாகும்!

    விமான நிலையம்! மும்பையில் இருந்து பறந்து வந்திருந்த அந்த விமானம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத் தரையை முத்தமிட்டு ஓடத் தொடங்கியிருந்தது. ஆவலாக, அதன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதரன்

    பைஜாமா, குர்தா என்கிற வட இந்திய உடை, நெற்றியில் விபூதிப் பந்தல், கழுத்தில் ஸ்படிக மாலை. காலில் துளியும் அழுக்கில்லாதபடி ஸ்லிப்பர் செருப்பு... மொத்தத்தில் ஏதோ ஒரு ஆஸ்ரமத்தில், ஒரு பெரிய ஸ்வாமிஜிக்கு சிஷ்யனாக இருப்பது போல ஒரு தோற்றம்.

    அவன் முகத்தில் ஒரு மெல்லிய பரபரப்பு நிலவிக் கொண்டே இருந்தது.

    அடிக்கடி பயணிகள் வெளியேறி வரும் பகுதியின்மேல் ஒரு பார்வையும் சுற்றுமுற்றும் ஒரு பார்வையுமாகவே இருந்தான். யார் யாரோ வந்தார்கள்.

    உலகில் எத்தனை விதமான சூட்கேஸ்கள் உள்ளன, எத்தனை விதமான ப்ரீஃப் கேஸ்கள் உள்ளன என்பதை, அங்கே கொஞ்ச நேரம் நின்றால், பார்த்தே தெரிந்து கொண்டு விடலாம்.

    உருண்டையாக ரோலர் போலவெல்லாம் பயணப் பெட்டிகள். நாயை சங்கிலிகட்டி இழுத்துப் போவது போல இழுத்தபடி ஒரு ஆப்பிரிக்காகாரன் வந்து கொண்டிருந்தான். காத்திருப்பவர்களின் தரப்பில் பலவித உணர்வுகள்... அது அவரவர் முகங்களில் நன்றாகவே எதிரொலித்தது.

    உலகில் மனிதனாய்ப் பிறந்து கண்டம் விட்டுக் கண்டம் போய்ப் பிழைப்பது ஒரு விதம் என்றால், அப்படி பிழைத்து விட்டுத் திரும்பி தாய் மண்ணுக்கு வருவது இன்னொரு விதம். அப்போது காத்திருக்கும் உறவுகளைப் பார்ப்பதும், அவர்களோடு கலப்பதும் காலம் காலத்துக்கும் மனதில் நின்றுவிடப் போகும் ஒரு விஷயமாகும்.

    அம்மட்டில் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டைவிட ஏர்போர்ட் மிகவே மாறுபட்ட ஒரு இடமாகும். இங்கேதான் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தும், வருடக்கணக்கான பிரிவை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தும் இறங்குபவர்கள் அதிகம்.

    ஸ்ரீதரன் அப்படி யாருக்காக காத்திருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் அவனிடமும் அந்த மாதிரி ஒரு தவிப்பு. அவன் கையில் ஒரு சந்தன மாலை கூட இருந்தது. அப்படியானால் நிச்சயம் அவன் மரியாதைக்குரிய ஒருவருக்கு அதை அணிவிக்கப் போகிறான் என்பதுபோல் தோன்றியது. உறவுகளுக்கு எதற்கு மாலை? அவர்களைப் பார்க்கும்போது ஏற்படும் நெகிழ்வும், கன்னத்தில் புரண்டு விழும் கண்ணீரும்தான் பெரிய மாலை.

    ஸ்ரீதரன் பயணிகளையும், வரவேற்க வந்தவர்களையும் ரசித்தபடியே பயணிகள் வரும் டொமஸ்டிக் தடத்தைப் பார்த்தபடியே இருந்தான். சட்டென அவன் முகத்தில் ஒரு மாற்றம். ஒரு பரபரப்பு. அவன் யாருக்காக காத்திருந்தானோ, அவர் வந்து கொண்டிருந்தார். பட்டு பஞ்சக்கச்சம், மேலே ஷெர்வாணி கோட், தலையில் எம்ஜியார் தொப்பி... கைவிரல்களில் நவரத்னங்கள் மின்னும் மோதிரம், கழுத்தில் கூட பெரிய சங்கிலி, அதில் மரகதப் பதக்கம். நெற்றியில் கோபி சந்தனம்.

    அச்சு அசல் ஒரு குஜராத்தி சேட்டின் தோற்றம்! அவர் ஸ்ரீதரனைச் சமீபிக்கவும், ஸ்ரீதரன் வேகமாய் அவர்முன் வந்தான்.

    ஜீ...

    "வா ஸ்ரீதரா... வந்து ரொம்ப நேரமாச்சா? அவர் கேட்கும்போதே அவர் கழுத்தில் சந்தன மாலையைப் போட்டு அப்படியே அந்த இடத்திலேயே அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவரும் அவன் தோளைத் தொட்டு பாசமாக பக்கவாட்டில் அணைத்தார். அப்படியே இருவரும் நடந்தனர். வழவழப்பான மார்பிள் தரையில் அவரது வீல் சூட்கேஸ் அவர் பின்னால் ஒரு சேவகன் போல தொடர்ந்தது.

    எப்படி இருக்கே?

    நல்லா இருக்கேன் ஜீ... என்ன ஜீ இப்படி திடீர்னு புறப்பட்டு வந்திருக்கீங்க...?

    காரணமாத்தான்... ஆமா, நீ ஃப்ரீயாதானே இருக்கே?

    "ஆமாம் ஜீ! நீங்க வரப்போறீங்க, ஒரு வாரம் ஆபீசுக்கும் லீவு போடுங்கன்னு மும்பையில் இருந்து விட்டல் ஃபோன் பண்ணிச் சொன்னார். அதுவும் ஒரு இரண்டு மணி நேரத்துக்கு முன்னாலதான்.

    நானே இன்னிக்கு காலைலதான் சென்னை கிளம்பணும்னு முடிவு செய்தேன். அதனாலதான் யாருக்கும் தகவல் தரமுடியல. உன்னைத் தவிர, யாருக்கும் நான் இப்ப சென்னை வந்திருக்கறது தெரியாது. தெரியவும் கூடாது. அவர் அப்படிச் சொன்னது ஸ்ரீதரன் முகத்தில் ஒருவித ஆச்சரிய அதிர்வாய்ப் பரவியது.

    ஏன் ஜீ... நீங்க வந்திருக்கிறது தெரிஞ்சா, எவ்வளவு கூட்டம் ஏர்போர்ட்டுக்கு வந்திருக்கும் தெரியுமா?

    நான் ஒரு முக்கியமான வேலையாக வந்திருக்கேன் ஸ்ரீதர். இந்த மாணிக்லால் எப்பவும் எதையும் திட்டம் போட்டுதான் செய்வான்கறது உனக்குத் தெரியாதா?

    அவர் கேட்டபடியே, ஊர்ந்து வந்து நின்ற டாக்சியில் ஏறினார். ஸ்ரீதரனும் உடன் ஏறிக்கொண்டான். டிரைவர் சூட்கேஸை வாங்கி பின்னால் வைத்து விட்டு வந்து காரைக் கிளப்பினான்.

    காரும் சீற ஆரம்பித்தது.

    அவர்களுக்குள்ளும் பரிமாற்றங்கள். "ஜீ உங்களை இப்படி சாதாரண சந்தன மாலையோடு வரவேற்றதுலே எனக்கு உடன்பாடே இல்லை. கொஞ்சம் முன்னால தெரிஞ்சிருந்தாலும் நல்லா ஏற்பாடு செய்திருப்பேன்.

    நல்ல ஏற்பாடுன்னா எப்படி ஸ்ரீதரா?

    "என்ன ஜீ அப்படிச் சொல்லிட்டீங்க.... இன்னிக்கெல்லாம் இந்த இந்தியாவுல உங்க அளவு ரத்னக் கற்கள். பற்றித் தெரிஞ்சவங்க யார் இருக்கா? ரத்னங்கள் பற்றி மட்டும் இல்லாம, நவக்கிரகங்கள், யந்திரங்கள், மந்திரங்கள்னு உங்களுக்குத் தெரியாத விஷயமே இல்லையே.

    எத்தனை பேர் வாழ்க்கையைத் தலைகீழா மாத்தியிருக்கீங்க! பல பேருக்கு இங்க நீங்கதானே கடவுள்.... அப்படிப்பட்ட உங்களை பூப்பல்லாக்குலையே வெச்சிக் கூட தூக்கிட்டுப் போகலாமே... தப்பில்லையே?"

    நீ என் மேல இருக்கிற அன்பினால இப்படி எல்லாம் பேசறே. உன் அன்பு போதும் ஸ்ரீதரா, எனக்கு... எதுக்கு பூப்பல்லாக்கு எல்லாம்?

    நான் என் ஆசையைச் சொன்னேன் ஜீ

    அதுசரி... இப்ப உன் மகன் எப்படி இருக்கான்?

    Enjoying the preview?
    Page 1 of 1