Vasantha Kaalam
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsShimla Ramya Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Mudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Oomai Pullanguzhalgal Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5
Related to Vasantha Kaalam
Related ebooks
Onpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsIndia Naadu En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsThoondilil Oru Thimingalam Rating: 2 out of 5 stars2/5Karuppu Vaanvavil Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsYaaro Paarkirargal Rating: 5 out of 5 stars5/5Athikalai Nila Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Vaanavil Kutram Rating: 0 out of 5 stars0 ratingsArai Vinaadi Aniyaayam Rating: 0 out of 5 stars0 ratingsAthikaalai Nila and Nilavu Thoora Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 2 out of 5 stars2/5Poomaalai Neeye Rating: 0 out of 5 stars0 ratingsMiss. Preethi, 545, Beach Road, Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vaa! Theerpai Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsThattungal Thirakkaathu Rating: 0 out of 5 stars0 ratingsNishaa… Nishaa Odi Vaa…! Rating: 4 out of 5 stars4/5Thaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsThendral Varum Jannal Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi kattalai Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Thorogangal Rating: 0 out of 5 stars0 ratingsThappu Sei... Thappi Chel! Rating: 0 out of 5 stars0 ratingsIni Min Mini Rating: 5 out of 5 stars5/5Thapu Thappai Oru Thappu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Maya Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kolluvathellaam Penmai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Vasantha Kaalam
0 ratings0 reviews
Book preview
Vasantha Kaalam - Rajesh Kumar
http://www.pustaka.co.in
வசந்த காலம்
Vasantha Kaalam
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
நீங்கள் இதை எதிர்பார்த்தீர்களா?
உங்கள் மனநிலை இப்போது எப்படியிருக்கிறது?
இது உங்கள் உழைப்புக்குக் கை கொடுத்ததா?
இந்த நேரத்தில் நீங்கள் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?
பத்திரிகை ரிப்போர்ட்டர்களும் டி.வி.நிருபர்களும் நீட்டிய மைக்குகளோடு கேள்விகளை சரமாரியாய்க் கேட்க, அந்த இருபத்தைந்து வயது அழகான செந்தில் முருகன் தன் ஒழுங்கான பல் வரிசையைக் காட்டிச் சிரித்தான். பிறகு இரண்டு கைகளாலும் தன்னுடைய அடர்த்தியான சுருண்ட கேசத்தைக் கோதிக் கொண்டே பேச ஆரம்பித்தான்.
"இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்று கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளுக்கும் ஐந்து ஒரு நாள் போட்டிகளுக்கும் நான் ஓபனிங் பேட்ஸ் மேனாகத் தேர்ந்து எடுக்கப்பட்டது. உண்மையிலே எனக்குப் பெருமையாகவம், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இது முழுக்க முழுக்க என் உழைப்புக்கும், கடினமான பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி.
ரஞ்சி டிராபியில் நான் குவித்த ரன்களும் பிடித்த ‘கேட்ச்’களும் கிரிக்கெட் போர்டுக்கு என் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம். இந்த நேரத்தில் நான் மூன்று பேருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். முதலாவது நபர் என்னுடைய அம்மா. நான் படிப்பில் கோட்டை விட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் என் மனதில் உள்ள ஆசையைப் புரிந்து கொண்டு அப்பாவுக்குத் தெரியாமல் என் கிரிக்கெட் பயிற்சிக்கு பச்சைக் கொடியைக் காட்டியது.
இரண்டாவது நபர் என்னுடைய அப்பா. "உள்ளூர் அணியிலேயே உன்னைச் சேர்த்துக்க மாட்டாங்க… இந்திய அணியில் சேர்றதைப் பத்தி கனவு கூடக் காணாதே. பேட்டை உடைச்சு குப்பைத் தொட்டியில் போட்டுட்டு ஒழுங்கா எம்.சி.ஏ.வைப் படிச்சு பாஸ் பண்ணு’ என்று அன்பாய்க் கடிந்து கொண்ட என் அப்பாவின் வார்த்தைகள் என் லட்சிய வேள்வியில் எண்ணெய்த் துளிகளாய் விழுந்தது.
மூன்றாவது நபர் என்னுடைய உயிர் நண்பன் பிரசன்னா. நான் தெருவோர கிரிக்கெட் விளையாடியதிலிருந்து நேற்று சேப்பாக்க ஸ்டேடியத்தில் நெட் ப்ராக்டீஸ் செய்த நாள் வரைக்கும் எனக்கு உற்சாகமும் ஒத்துழைப்பும் கொடுத்தவன். பொருளாதாரம் என்னும் பிராணவாயு இல்லாமல் நான் திணறிய போதெல்லாம் எனக்கு ஆக்சிஜன் சிலிண்டராய் மாறியவன்" சொன்ன செந்தில்முருகன்பின்னால் திரும்பிப் பார்த்துக் குரல் கொடுத்தான்.
டேய்… பிரசன்னா… இப்படி முன்னாடி வாடா…
ஒரு நாற்காலியில் உட்கார்ந்து டி.வி.யை மானிட்டரிங் செய்து கொண்டிருந்த அந்த பிரசன்னா எழுந்து வந்தான். மீசையில்லாத முகம் கண்களில் வட்டம் தெரிந்தது. அணிந்திருந்த டீ ஷர்ட் பனியனில் ‘ஒன் டே பாரடைஸ்’ என்ற வாசகம் தெரிந்தது. டி.வி. காமிரா அவனை நோக்கித் திரும்பியது. ஒரே விநாடியில் பத்துக்கும் மேற்பட்ட மைக்குகள் நீட்டப்பட்டன.
உங்க நண்பர் செந்தில்முருகனைப் பத்தி ஏதாவது சொல்லுங்க மிஸ்டர் பிரசன்னா…?
பிரசன்னா சிரித்தான். முயன்றால் எதையும் முடிக்கலாம்
என்கிற வாசகத்துக்கு என்னுடைய நண்பன் செந்தில்முருகன் ஒரு நூறு பர்சன்ட் அக்மார்க் உதாரணம். இந்திய கிரிக்கெட் அணியில் செந்தில்முருகன் சேர்க்கப்பட்டது அவனுக்குப் பெருமையான விஷயம் இல்லை. இந்தியாவுக்குத்தான் பெருமையான விஷயம்…."
செந்தில்முருகன் அவனுடைய தலையில் தட்டினான். டேய்… இது ரொம்பவும் ஓவர்… அணியிலிருந்து என்னைக் கழட்டிடப் போறாங்க.. பார்த்துப் பேசு…
எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கும்போதே வீட்டு வாசலில் அந்த பாசி நிற ‘ஃபோர்ட் ஐகான்’ கார் வந்து நின்றது. பிரசன்னா செந்தில்முருகனின் காதைக் கடித்தான்.
டேய்… செந்தில்….! உன்னோட ஆள் அப்சரா வர்றா. கையில் எவ்வளவு பெரிய பொக்கே பார்த்தியா… ஒரு மினி ரோஜாத் தோட்டமே வருது…
பொக்கையோடு இறங்கி வந்த இருபத்தியோரு வயது அப்சராவுக்கு உண்மையிலேயே பொன்னிறம். அக்கறைஎடுத்து செதுக்கிய சிற்பம் போல் ஒரு உடம்புவாகு. இடது பக்க மூக்கில் ஒரு வைர மூக்குத்தி இடம் பிடித்துக் கொண்டு வீடியோ காமிரா வெளிச்சத்தில் ஒற்றை நட்சத்திரமாய் ஜொலித்தது. அவளுடைய அப்பா அருண் பிரசாத் பெங்களுரில் இருக்கும் ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனிக்கு சீஃப் டைரக்டர் என்பதால் அப்சராவின் உடம்பில் பண வாசனை அடித்தது.
ஹாய்… செந்து…! மை ஹார்ட்டி கங்கிராட்ஸ். மூணு டெஸ்ட் மேட்ச்சையும், அஞ்சு ஒரு நாள் மேட்ச்சையும் நீ கலக்கணும். செஞ்சுரியெல்லாம் எனக்குப் போதாது டபுள் செஞ்சுரி எனக்கு வேணும். நீ இங்கே போடற போடலில் ஆஸ்திரேலியாவுக்கு அஸ்தியில ஜுரம் வரணும். நியூஸிலாந்துக்கு நிமோனியா வரணும்…
-அப்சரா ஆர்ப்பாட்டமாய் ஆர்ப்பரித்துக் கொண்டே பொக்கேவை நீட்ட, செந்தில்முருகன் வாங்கிக் கொண்டான்.
தாங்க்ஸ் அப்சரா…
வெறும் தாங்க்ஸ் மட்டும்தானா? எவ்வளவு பெரிய பொக்கே கொடுத்திருக்கேன்…?
சரி… உனக்கு என்ன வேணும்?
11,9,19,19.
புரியலை….!
உன்னோட மூளையில் இருக்கிற கிரிக்கெட் நியூரான்களைக் கொஞ்ச நேரத்துக்குத் தள்ளி வெச்சுட்டு யோசனை பண்ணு. புரியும்….
சிரிப்பும், கிண்டலும், கேலியுமாய் விநாடிகள் சந்தோஷமாய்க் கரைந்து கொண்டிருக்க-
பிரசன்னாவின் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பினான். ஒரு பத்திரிகை நிருபர். இளைஞன். புன்னகைத்தான்.
சார்….! ‘இந்தியா ஸ்போர்ட்ஸ்’ பத்திரிகையிலிருந்து வர்றேன்…
சொல்லுங்க.
தனிப்பட்ட முறையில் உங்க பேட்டி ஒண்ணு வேணும் சார்…
அட…! என்னோட பேட்டி எதுக்கு?
சார்! உங்க நண்பர் செந்தில்முருகனின் வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம்னு அவரே சொல்லியிருக்கார். எந்த வகையில் அவருக்கு நீங்க உதவியாய் இருந்தீங்கன்னு சொன்னா மத்த கிரிக்கெட் வீரர்களுக்கும் அது உதவியாய் இருக்குமே….
ஓ…! நீங்க அந்தக் கோணத்துல பார்க்கறீங்களா? சரி…அப்படி ஓரமா வாங்க… உட்கார்ந்து பேசலாம்! பட் பேட்டியை ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ள முடிச்சுக்கணும். நானும் செந்தில்முருகனும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி கோயிலுக்குப் போகணும். அங்கே ஒருவிசேஷ பூஜைக்கு ஏற்பாடாகியிருக்கு.
பிரசன்னா அந்த நிருபரைக் கூட்டிக் கொண்டு வாசலுக்கு வந்து, காலியாய் இறைந்து கிடந்த இரண்டு பாலி வினைல் நாற்காலிகளில் சாய்ந்தார்கள்.
சில விநாடி அமைதிக்குப் பின் பிரசன்னா சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நிருபரிடம் குரலைத் தாழ்த்தினான்.
என்ன… பூபதிராஜ்… ஆளைப் பார்த்துக்கிட்டியா?
பார்த்துகிட்டேன் சார்.
முதல் டெஸ்ட் மேட்ச் அடுத்த வாரம் சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தொடங்குது. அதுக்கு முன்னாடி செந்தில்முருகன் உயிரோடு இருக்கக் கூடாது. அவன் போட்டோவுக்கு முன்னாடி ஊதுவத்தி புகையணும்.
அந்த பூபதிராஜ் பேட்டி எடுப்பது போல் பாவ்லா செய்து கொண்டே புகையும் சார்
என்றான்.
யாரம்மா… சின்னக்குயிலி கேட்டது?
டவுன் பஸ் வேகம் குறைந்து கொண்டிருக்க கண்டக்டர் கேட்டார்.
பஸ்ஸின் மையத்தில் உட்கார்ந்திருந்த சங்கரி எழுந்து நின்றாள். கால்களுக்குக் கீழே வைத்திருந்த சூட்கேசையும் எடுத்துக் கொண்டாள்.
காற்றில் செம்மன் புழுதி பறக்க பஸ் நின்றது. கண்டக்டர் கத்தினார். சீக்கிரம்…வாம்மா…! யோவ்! கீழே இறங்கற பொண்ணுக்கு வழியை விடுங்கய்யா… இப்படி மதில் சுவர் மாதிரி அடைச்சுக்கிட்டு நின்னா அந்தப் பொண்ணு எப்படிய்யா இறங்கும்? யோவ் பெரிசு… உண்ற காலுக்கு ‘ரிவிட்’டா அடிச்சு வெச்சிருக்கு? நகரய்யா….! ஃபுட் போர்ட்ல நிக்கிற வீர மைந்தர்களே…! கொஞ்சம் உள்ளே வாங்கய்யா….! அங்கே என்ன நவரத்தினமா கொட்டிக் கிடக்கு. இப்படி விடாப்பிடியா நின்னுட்டிருக்கீங்களே.
-கண்டக்டர் கரடியாய்க் கத்தியதால் கிடைத்த வழியில் யார் மீதும் இடித்துக் கொள்ளாமல் கீழே இறங்கினாள் சங்கரி. வெயில் தணிந்து இருந்த சின்னக்குயிலி கிராமத்தில் கோவைக்கே உரித்தான ஐஸ் காற்று வீசிக் கொண்டிருந்தது. மேற்கு மலைத் தொடர்ச்சி நீலச் சாயத்தில் முக்கி எடுத்த தினுசில் தெரிய, தென்னந்தோப்புகள் கோஷ்டி கோஷ்டியாய் பார்வைக்குக் கிடைத்தன. அரைக் கிலோ மீட்டர் தூரம் செம்மண் பாதையில் நடந்து, எதிர்ப்பட்ட கொய்யாத் தோப்பைக் கடந்தாள். கருப்பராயன் கோயில் எதிர்ப்பட்டது. சலசலத்து நீர் பாய்ந்து கொண்டிருந்த வாய்க்கால் கரை ஓரமாய் நடந்து, ஊர் தெருவுக்குள் காலடி எடுத்து வைத்தாள். தெருவின் ஆரம்பத்திலேயே ஒரு டீக்கடை தெரிய கடைக்கு முன்னால் போட்டிருந்த பெஞ்சில் நான்கைந்து பேர் டீ டம்ளர்களோடு உட்கார்ந்திருந்தார்கள்.
சங்கரி அவர்கள் அருகே போய் தயங்கி நின்றாள். மெல்லிய குரலில் கேட்டாள்.
"இந்த ஊர்ல நாடி ஜோசியம் பார்க்கிற ராஜலிங்க சுவாமிகளோட ஆஸ்ரமம் எங்கே இருக்குன்னு