Vetrik Kudhirai
()
About this ebook
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Read more from Pattukottai Prabakar
Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsIni... Iniya... Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsNarukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Ner Meley Nila Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vetrik Kudhirai
Related ebooks
Raathiri Varum Rating: 5 out of 5 stars5/5Mutham, Nizhal Mutham Rating: 5 out of 5 stars5/5Rendu Idly, Oru Vadai Rating: 0 out of 5 stars0 ratingsAarambaththil Appadiththaan Rating: 5 out of 5 stars5/5Thuduppillatha Padagugal Rating: 0 out of 5 stars0 ratingsLadies And Ladies Rating: 0 out of 5 stars0 ratingsPuthir Thottam Rating: 5 out of 5 stars5/5Ini Poruppathillai Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Sathuranga Rani Rating: 5 out of 5 stars5/5Imaikatha Iravu Rating: 5 out of 5 stars5/5Panthaya Paavai Rating: 5 out of 5 stars5/5Ithu Puthu Sugam Rating: 5 out of 5 stars5/5Suttuvidu Suseela Rating: 0 out of 5 stars0 ratingsItho... En Ilavarasi! Rating: 5 out of 5 stars5/5Oru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsHappy Bharath Day! Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mattean Malini Rating: 0 out of 5 stars0 ratingsSollathey Sei! Rating: 5 out of 5 stars5/5Oru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsKekkathey - Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsThotravan Theerpu Rating: 5 out of 5 stars5/5Enakku Mattum Theriyum Rating: 0 out of 5 stars0 ratingsAzhaikathey Varamattal Rating: 0 out of 5 stars0 ratingsThoda Mudiyatha Thoduvanam Rating: 5 out of 5 stars5/5Manasu Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Athiyaayam Rating: 0 out of 5 stars0 ratingsNee Rating: 5 out of 5 stars5/5Moondravathu Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Vetrik Kudhirai
0 ratings0 reviews
Book preview
Vetrik Kudhirai - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
வெற்றிக் குதிரை
Vettri Kudhirai
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
1
காலை பத்தரை மணிக்கு அந்தப் பூங்காவில் அவன் மட்டும் கிட்டத்தட்ட தனியாக இருந்தான். புல்வெளிக்கு ஹோஸ் பிடித்து தண்ணீர் இரைத்தபடி நடுநடுவே பீடி புகைத்துக் கொண்டான் காக்கி டிராயர். தூரத்து மூலையில் சிமெண்ட் பெஞ்சில் அந்த இளைஞனும், இளம் பெண்ணும் மடியில் புத்தகங்களுடன் சிரிப்பது இங்கே கேட்டது.
குருபிரசாத் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிலும் காய்ந்து போன பறவை எச்சங்கள். மரத்தில் தற்போதைக்கு சத்தமும் இல்லை. சலனமும் இல்லை. ஹோஸ் தண்ணீரின் சப்தம். தூரத்து மூலையிலிருந்து சிரிப்புச் சத்தம். வெளி சாலையில் வாகனங்களின் சீறல்கள். அவற்றின் ஹாரன்கள்.
‘வேதநாயகம் வீட்டுக்குப் போய் அவரிடம் இந்தக் கவரைக் கொடுத்துவிடு. அவர் வீட்டில் இல்லை என்றால் எத்தனை நேரமானாலும் சரி, காத்திருந்து கொடுத்து விட்டு வா’ என்பது சித்தப்பா இன்றைக்கு கொடுத்திருக்கும் வேலை.
பஸ் பிடித்து ராஜா அண்ணாமலைபுரம் வந்து, தெரு விசாரித்து, வீடு கண்டுபிடித்து, நாய் குரைப்புக்குத் தயங்கி, வாட்ச்மேனின் அலட்சிய புருவ விசாரணைக்கு பதில் சொல்லி...
இல்லை, வெளியே போயிருக்கார்.
எப்ப வருவார்?
பனிரெண்டு மணிக்கு வருவார்.
"நான் வரலட்சுமி என்ஜினியரிங் வொர்க்ஸ்லேர்ந்து வர்றேன். அதோட ஓனர் வரதராஜன் என்னோட சித்தப்பா. வேதநாயகம் சார் வர்ற வரைக்கும் காத்திருந்து இந்தக் கவரை கொடுத்துட்டு வரச் சொன்னார் என் சித்தப்பா.
கொடுங்க, நான் கொடுத்துடறேன்.
இல்லை, இதில் ஏதோ கணக்கு விபரம் இருக்கு. முக்கியமான விஷயம். நானே நேர்ல பார்த்து...
அப்ப பனிரெண்டு மணிக்கு வாங்க.
கேட்டைத் திறக்காமலேயே இத்தனை உரையாடல்கள். அந்த வாட்ச்மேன் உள்ளே அழைத்துச் சென்று வரவேற்பறையில் உட்கார வைக்கப் போவதாகத் தெரியவில்லை.
இந்த வெயிலில் ஒன்றரை மணி நேரத்திற்கு எங்கே அலைவது? உள்ளே உட்கார அனுமதித்தால் பரவாயில்லை. கைப்பைக்குள் லெண்டிங் லைப்ரரியில் எடுத்த ஆர்தர் ஹெய்லியின் நாவல் இருக்கிறது. வேதநாயகம் வரும்போது வரட்டும் என்று நிம்மதியாக விட்ட இடத்தில் இருந்து படித்துக் கொண்டிருக்கலாம்.
நான் உள்ளே உட்கார்ந்து வெய்ட் பண்ணலாமா?
லேடீஸ் எல்லாம் இருக்காங்க. நீங்க போய்ட்டு பனிரெண்டு மணிக்கு வந்துடுங்களேன்.
தலையாட்டிவிட்டு நடந்து இந்த பூங்காவைப் பார்த்ததும் உள்ளே வந்து உட்கார்ந்து விட்டான் குருபிரசாத்.
வாட்ச்மேன் சொன்னது வலித்தது. ‘நான் என்ன கற்பழிக்கவா வந்திருக்கேன்?’ என்று அவனோடு தன்மானச் சண்டை போட முடியாது. அவன் வாட்ச்மேன். அவன் கடமை பாதுகாத்தல். தன் எஜமானனுக்கு விசுவாசமாக அவன் சொல்லி விட்டான்.
இப்படி அவனிடம் இருந்து கேட்டுக் கொள்கிற நிலைமைக்காகத்தான் நொந்து கொண்டாக வேண்டும்.
ஒரு சாதாரண வியாபார கணக்கு விபரங்கள் கொண்ட காகிதங்களை ஏதோ இராணுவ ரகசியம் போல காத்திருந்து கொடுத்து விட்டு வரச் சொல்ல வேண்டியதே இல்லை. வாட்ச்மேனிடம் கொடுக்கலாம். அல்லது வீட்டில் இருக்கிற லேடீஸிடம் விவரம் சொல்லி ஒப்படைத்து விட்டு வரலாம்.
சித்தப்பாவின் பிடிவாதத்திற்கு அர்த்தமே இருப்பதில்லை.
அவர் இல்லைன்னா வீட்ல சொல்லி கொடுத்துட்டு வந்துடறேனே...
குருபிரசாத் வொர்க் ஷாப்பில் இருந்து புறப்படும்போதே சித்தப்பாவிடம் கேட்டு விட்டான்.
இங்க வந்து என்ன வேலை வெட்டி முறிக்கப் போறே? நான் சொன்னபடி செய்.
சித்தப்பாவை எதிர்த்து அதற்கு மேல் பேச முடியாது. ஊரில் இருந்து மெட்ராசுக்கு அழைத்து வந்து இரண்டு வருடங்களாக வீட்டில் தங்க வைத்து சோறு போடுகிறார். மாதம் இருநூறு ரூபாய் தருகிறார். தீபாவளிக்கு சட்டை, பேண்ட் எடுத்துத் தருகிறார்.
ஊரில் அப்பாவிடம் அவர் பேசியபோது சென்னையில் அவர் வீட்டில் தங்கும் வாழ்க்கை என்பது மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், லட்சியங்கள் கொண்டதாகவும்தான் தெரிந்தன.
அண்ணா, குரு படிச்சி முடிச்சிட்டு ரெண்டு வருஷமா வேலை கிடைக்காம அலையறதா சொல்றீங்க. இந்தப் பக்கம் யாரு? என் அண்ணன் பையன். அவன் மேல எனக்கு அக்கறை இருக்காதா? ஒண்ணு செய்ங்க. அவனை என்னோட அனுப்பி வைங்க. நம்ம வீட்டிலயே தங்கிக்கட்டும். நம்ம வொர்க் ஷாப்புக்கு கூட்டிட்டுப் போறேன். ஒரு தொழில் கத்துக்கிட்ட மாதிரி இருக்கும். கொஞ்ச நாள் கழிச்சு வேலை கிடைச்சி வேலைக்குப் போறதுன்னாலும் போகட்டும். இல்லை தொழில் பிடிச்சிருக்குன்னு சொல்றானா, நானே இடம் பிடிச்சிக் கொடுக்கறேன். கடன் தர்றேன். பேங்க் லோன் போட்டு மெஷினரிங் வாங்கித் தர்றேன். ஒரு வொர்க் ஷாப் தனியா நடத்தட்டும். எனக்கு வர்ற ஆர்டர் எல்லாத்தையும் எடுத்துக்க முடியாம எத்தனை பேருக்கு நானே ஆர்டர் மாத்திக் கொடுத்துருக்கேன் தெரியுமா? அந்த மாதரி அவனுக்குன்னு ரெகுலரா பத்து பார்ட்டி பிடிச்சிக் கொடுக்குறேன். அவனை ஆளாக்க வேண்டியது என் பொறுப்பு. நேத்து பார்க்கறேன். நோட்புக்குல என்னமோ எழுதிக்கிட்டிருக்கான். என்னடான்னா கவிதை எழுதறேன்றான். கவிதையும், கட்டுரையும் எழுதிகிட்டு உட்கார்ந்திருந்தா இவன் எப்ப வாழ்க்கையில செட்டில் ஆகறது? என்ன நான் சொல்றது?
அப்பா குருபிரசாத்தை கேட்டார்.
என்னப்பா, சித்தப்பாவோட மெட்ராஸ் போறியா?
குருபிரசாத் உடனே தலையசைத்தான். வந்தாயிற்று.
சித்தப்பாவுக்கு மூன்று குழந்தைகள். பெரியவன் விஜய். ஊட்டி கான்வென்டில் படிக்கிறான். அடுத்தது ஸ்வப்னா. அடையாறு சிஷ்யாவில் ஐந்தாம் வகுப்பு. மூன்றாவது பையன் பரணிக்கு வயது ஏழு. சற்றே மூளை வளர்ச்சி குறைவு. வாரம் ஒரு முறை டாக்டரிடம் போய் வந்து கொண்டு வீட்டிலேயே இருக்கிறான்.
சித்திக்கு மூன்று பெண்களுக்கு இருக்க வேண்டிய உடம்பு, ஐந்து மீட்டர் சேலை பற்றாமல் உள் பக்கம் துணி இணைத்துக் கொள்கிறாள். வயது என்னவோ முப்பத்தாறுதான். பிளட் பிரஷர், சுகர் இன்னும் பல உபாதைகள் கட்டிலைச் சுற்றி எந்த கப்போர்டு திறந்தாலும் மாத்திரைப் பட்டைகள், ஷேவிங் பண்ணிக் கொள்ள துண்டுக் காகிதம் பொறுக்கினால் அது பழைய டாக்டர் சீட்டாகத்தான் இருக்கும்.
சித்தப்பாவுக்கு கோட்டூர்புரத்தில் வீடு, சொந்த வீடு. தனி வீடு. ஒரு அம்பாஸிடர் கார். ஒரு பியட் கார். பஜாஜ் ஸ்கூட்டர் கிண்டியில் வொர்க் ஷாப். முக்கிய தொழில் ஃபேப்ரிகேஷன், கிரில், கேட், கைப்பிடி என்று கட்டிடத்திற்குத் தேவையான அத்தனை இரும்பு ஃபேப்ரிகேஷன் வேலைகளும் செய்கிறார். பெரிய பெரிய பில்டர்களை பிடித்து வைத்திருக்கிறார். கவர்ன்மெண்ட் ஆர்டரும் அலைந்து வாங்குகிறார். இரண்டு ஷிஃப்டுகளில் வேலை, முப்பத்தி எட்டு பேர் வேலை பார்க்கிறார்கள்.
அந்த வொர்க் ஷாப்புக்கு குருபிரசாத் ப்ளஸ் டூ படிக்கும் போது ஒரு விடுமுறையில் வந்து பார்த்து பிரமித்திருக்கிறான்.
சித்தப்பா சென்னைக்கு அழைத்து வந்து தன் தொழிலை கற்றுத் தந்து, எதிர்காலத்தில் தொழிலையும் அமைத்துத் தருவாதாகச் சொன்னதும் குருபிரசாத் தன் கனவுகளை கலைத்துவிட்டு உடனே சரி என்றுதான் புறப்பட்டான்.
அவன் கலைத்த கனவுகளில் சில:
1. பத்திரிகை துறையில் ஒரு நல்ல ஜர்னலிஸ்ட்டாக வரவேண்டும்.
2. லட்சியங்களுகாக பத்திரிகை நடத்த வேண்டும்.
3. அகில உலகமும் போற்றும்படி ஒரே ஒரு படைப்பையாவது உருவாக்க வேண்டும்.
4. குருபிரசாத்தை காந்தி போல எல்லோரும் அறிந்திருக்கும்படி சாதனைகள் மூலம் புகழடைய வேண்டும்.
இந்த லட்சியங்களைத் தள்ளி வைத்துவிட்டு முதலில் வீட்டிற்குப் பாரமாக இருக்காமாலிருக்கவும், ஒரு அடிப்படை வருமானம் ஏற்படுத்திக் கொள்ள வழி அமைக்கவும் சித்தப்பாவின் அழைப்பு கை கொடுக்கும் என்று நம்பி தான் சென்னைக்கு வந்தான்.
ஆனால்...
குரு, உனக்கு டிரைவிங் தெரியுமின்னு சொன்னியில்லே, அதனால டிரைவரை நிறுத்திட்டேன். எதுக்கு அனாவசியமா அவனுக்குச் சம்பளம். எனக்கு டிரைவிங் தெரியும். நான் அம்பாஸிடர் எடுதுட்டு வொர்க் ஷாப் போறேன் வர்றேன். குழந்தைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வந்து திரும்ப போய் கூட்டிட்டு வர்றதுக்கு மட்டும்தான் பியட் வாங்கினேன். அதுக்காக எதுக்கு டிரைவர்? நீ செஞ்சிட மாட்டே?
செஞ்சிடறேன் சித்தப்பா.
குருபிரசாத் யூனிஃபார்ம் போடாத டிரைவரனான்.
பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வொர்க்ஷாப் வருவான். பத்து நிமிடங்களில் வீட்டிலிருந்து போன் வரும்.
குரு, சித்திக்கு ஏதோ பிளட் டெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லிருக்காராம். போய்ட்டு வந்துடறியா?
சரி சித்தப்பா.
கார் டிரைவராக இருந்த நேரம் போக மிச்ச நேரத்தில் வொர்க் ஷாப்பில் இவனை உட்காரவே விடுவதில்லை. இவனுக்கென்று தனி மேஜையோ, நாற்காலியோ கிடையாது.
குரு, ஒரு அட்ரஸ் தர்றேன். அங்கே போ. ஸ்பேர் பார்ட்ஸ் கடைய கொடுத்து மூணு மாசம் ஆச்சி. என்னன்னு கேளு. நாளைக்கு வரச் சொல்றானா? நாளைக்கும் போ. தொடர்ந்து நாலஞ்சு தடவை போய் நச்சரிச்சிக்கிட்டே இருந்தா பண்ணிக் கொடுத்துடுவான். நம்ம அட்வான்ஸ் அவன்கிட்ட இருக்குதுப்பா. பக்குவமாதான் காரியத்தை சாதிச்சுக்கணும்.
சரி சித்தப்பா.
"இதுக்கெல்லாம் கார் எடுத்துக்கிட்டோ, ஸ்கூட்டர் எடுத்துக்கிட்டோ போகாதே. பஸ்சுல போ. பெட்ரோலும்