Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellam Nanmaikey
Ellam Nanmaikey
Ellam Nanmaikey
Ebook96 pages30 minutes

Ellam Nanmaikey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386583567
Ellam Nanmaikey

Read more from Rajesh Kumar

Related to Ellam Nanmaikey

Related ebooks

Reviews for Ellam Nanmaikey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellam Nanmaikey - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    எல்லாம் நன்மைக்கே!

    Ellam Nanmaikkey!

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ராஜசிம்மய்யர் பூஜையறையிலிருந்து வெளிப்படும் போதே, தன்னுடைய பி. ஏ. சந்தானம் தனக்காக வெளியே காத்திருப்பதை உணர்ந்து நின்றார்.

    அபார உயரம். அறுபது வயது. ஒரு அமெரிக்கனின் நிறம். ப்ளீச் செய்யப்பட்ட தினுசில் பின் மண்டையில் வெள்ளை ரோமம். அதைவிட அதிகமாய் மார்பில் பத்து பவுன் தங்கச் சங்கிலியில் புலி நகம் கோக்கப்பட்டு-நடக்கும்போது அசைந்து. பார்வையாலேயே கேட்டார்.

    என்ன சந்தானம்…?

    ஐயா…!உங்களைப் பர்சனாலாப் பார்த்துப் பேறதுக்காக செல்வகிருஷ்ணன் வந்திருக்கார்….

    "எந்த செல்வகிருஷ்ணன்…?

    ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டில் டைரக்டராய் இருந்தாரே…?

    ஓ… அந்த ஆளா…?என்ன விஷயம்னு கேட்டியா…?

    கேட்டேங்கய்யா. . உங்க கிட்டதான் பேசணும்ணு சொல்லிட்டார்.

    சில விநாடிகள் வரை நெற்றியை யோசிப்பாய்த் தேய்த்த ராஜசிம்மய்யர் பின் சந்தானத்தை ஏறிட்டார்.

    இன்னிக்கு எத்தனை பேர் என்னைப் பார்க்க வந்து இருக்காங்க…?

    ஒரு இருபது பேர் இருப்பாங்கய்யா….

    அதுல முக்கியமானவங்க யார். . ?

    மதுரை டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் கருணாகரன், திண்டுக்கல் எக்ஸ். எம். பி. பொன்ராஜ் தேவர், ரிடையர்ட் ஐ. ஜி. டேவிட் அருள்பிரகாசம். ஸ்கூல் எஜூகேஷன் டைரக்டர் இன்பமணி, அந்தோணியார் சர்ச் ஃபாதர் அடைக்கலசாமி, லக்ஃப் போர்டு தலைவர் ஜபரூல்லாஹான், அப்புறம் அருள்மிகு விஸ்வநாத ஸ்வாமிகோயில் தர்மகர்த்தா விஸ்வேஸ்வரன்….

    ‘போதும்’ என்ற பாணியில் தன் இடது கையை உயர்த்தினார் ராஜசிம்மய்யர். பின் மெல்லிய குரலில் சொன்னார்.

    மொதல்ல கலெக்டர் கருணாகரனை மட்டும் உள்ளே அனுப்பு… ரெண்டாவதா அந்த ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் செல்வகிருஷண்னை அனுப்பு… அவங்களை உள்ளே அனுப்பறதுக்கு முந்தி அஞ்சு நிமிஷத்துக்கு மேலே யாரும் என்கிட்டே பேசிட்டிருக்கக் கூடாதுக்னு சொல்லி அனுப்பணும்….

    சரிங்கய்யா… பி. ஏ. சந்தானம் தலையை பவ்யமாய் அசைத்து விட்டு அறையினின்றும் வெளியேற, ராஜசிம்மய்யர் தன்னுடைய அறைக்குள் நுழைந்தார். ஏ. ஸி. யின் ஜில்லிப்பில் அறை உறைந்து போயிருந்தது. கண்ணாடி மேஜைக்குப் பின்னால் இருந்த சுழல் நாற்காலிக்குப் போய்ச் சாய்ந்தவர் இன்ட்டர்காம் ரிஸீவரை எடுத்தார். பட்டனைத் தட்டிவிட்டுப் பேசினார்.

    மஞ்சரி…

    ஐயா…

    அந்த தைல பாட்டிலைக் கொண்டு வாம்மா…

    சரிங்கய்யா….

    அப்படியே ஒத்தடம் கொடுக்கிற வெந்நீர்ப் பையையும் கொண்டாந்துடும்மா…. ராஜசிம்மய்ய்ர் பேசிவிட்டு ரிஸீவரை வைத்த விநாடி அறையின்கதவு தயங்கித் தயங்கித் திறந்தது.

    கலெக்டர் கருணாகரன் பவ்யமாய் ஏதோ ஒரு கோயிலின் கர்ப்பகிருகத்தில் நுழைவது போன்று காலடி எடுத்து வைத்தார். ஃபுல் சூட்டில் இருந்தார். காதோரக் கிருதாக்களையும், மீசையையும் டையில் குளிப்பாட்டியிருந்தார். கையில் புதிதாய் ஒரு வெள்ளித் தட்டு அதில் கல்யாணப் பத்திரிகை.

    ராஜசிம்மய்யர் தன் அடர்த்தியான மீசைகளுக்கு கீழே மெல்லச் சிரித்தார்.

    வா… கருணாகரா… எப்படி யிருக்கே…. ?

    உங்க புண்ணியத்துல எனக்கு என்னங்யய்யா குறைச்சல்!குடும்பத்தோடு சந்தோஷமா யிருக்கேன்.

    என்ன கையில வெள்ளத்தட்டு… அதுல ஒரு கல்யாணப் பத்திரிகை… கல்யாணம் யார்க்கு…?

    என் பொண்ணு சௌபாக்யாவுக்கய்யா…"

    அட… பரவாயில்லையே… கல்யாணம் பண்ற வயசுல உனக்கு ஒரு பொண்ணு வேற இருக்காளா…?

    ஆமாங்கய்யா… பொண்ணு பி. ஈ. கம்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு டாட்டா கன்ஸல்டன்ஸியில் வேலை பார்த்துட்டிருக்கா…

    கல்யாணம் என்னிக்கு…?"

    வர்ற மாசம் பதினாலாம் தேதி புதன்கிழமை ராணி சீதை ஹால்ல கல்யாணம்…! உங்களுக்குத்தான்யா முதல் பத்திரிகை…கருணாகரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அறைக் கதவைத் திறந்துகொண்டு ராஜசிம்மய்யரின் பெண் உதவியாளர் மஞ்சரி மஞ்சள் நிற எண்ணெய் பாட்டியோடு உள்ளே வந்தாள்.

    "வாம்மா… மஞ்சரி…! காலையிலிருந்தே கழுத்துப் பிடிப்பு. இடது பக்கம் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் மண்டைக் குள்ளே சுளீர்ன்னு ஒரு வலி. கொஞ்சம் தைலத்தைப் போட்டு ரெண்டு நிமிஷம் தேங்ச்சு விட்டுட்டு வெந்நீர்ப்

    Enjoying the preview?
    Page 1 of 1