Iraval Sorgam
By Rajesh Kumar
()
About this ebook
ஒரு புத்தகத்தை இரவல் வாங்கலாம். ஒரு குடையை, மற்றும் வீட்டு உபயோகத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும் இரவல் வாங்கலாம். ஆனால் சொர்க்கத்தை இரவல் வாங்க முடியுமா...? முடியும் என்பதை இந்த நாவலில் சொல்லியுள்ளேன்.
ஒரு ஆணைக் காட்டிலும் ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை எதிர் கொள்கிறாள். அவள் விரும்பியோ விரும்பாமலோ வீட்டிலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும் பிரச்சினைகளும் திடீரென்று முனைந்து அவளைச் சூழ்ந்து கொள்ளும்போது அவள் திணறித்தான் போகிறாள்.. எல்லாப் பிரச்சினைகளும் ஒன்று சேர்த்து அவளை நெருக்கும்பொழுது வாழ்க்கையே அவளுக்கு நரகமாய் மாறிவிடுகிறது. அந்தப் பிரச்சனைகளை அவள் எதிர்கொண்டு தற்காலிகமாய் தீர்வு காணும் விநாடிகள்தான் இரவல் சொர்க்கம். இந்த இரவல் சொர்க்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள என்ன வழிகள் உள்ளன என்பதை இந்த நாவலில் சொல்ல முயன்றுள்ளேன். அந்த வழிகள் உங்களுக்கு பிடிபடுகிறதாவென்று படித்துப் பாருங்கள். பிடிபட்டால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
- ராஜேஷ்குமார்.
Read more from Rajesh Kumar
Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Sivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Thavarukkum Thavarana Thavaru! Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsOomai Pullanguzhalgal Rating: 5 out of 5 stars5/5Iruttile Rendu Per Rating: 4 out of 5 stars4/5Nadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5
Related to Iraval Sorgam
Related ebooks
Thurathum Thorogangal Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsWelldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsKoodavey Oru Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 2 out of 5 stars2/5India Naadu En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Puraakkal! and Vanna Vanna Thurokangal! Rating: 0 out of 5 stars0 ratingsKarpizhantha Carbon Copygal Rating: 5 out of 5 stars5/5Nagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanam Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsAvan... Aval... Avargal Rating: 0 out of 5 stars0 ratingsThendral Varum Jannal Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Maya Rating: 5 out of 5 stars5/5Oru Sanikizhamai Iravu Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsThendral Varum Jannal Rating: 0 out of 5 stars0 ratingsUyrin Oli! and Puthithaaga Oru Boogambam! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsThoorathil Theriyum Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsIni Varum Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kolluvathellaam Penmai Rating: 5 out of 5 stars5/5Ini Min Mini Rating: 5 out of 5 stars5/5Onpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsMisty Moon Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsEverest Thottuvidum Uyaramthaan Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Iraval Sorgam
0 ratings0 reviews
Book preview
Iraval Sorgam - Rajesh Kumar
http://www.pustaka.co.in
இரவல் சொர்க்கம்
Iraval Sorgam
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
1
ஆகாயம் முழுவதும் அழுக்கு மேகங்கள் நிரம்பியிருக்க அந்த இராத்திரி பதினோரு மணி வேளையில் மழை தூறிக்கொண்டிருந்தது. காற்று இல்லாத மழை. சாலையோர மரங்கள் மவுனமாய் நனைந்தன. சாக்கடைகளில் மழைத் தண்ணீர் புரண்டோட போக்குவரத்து இல்லாத சாலை – கலாட்டா நடக்காத சட்டசபை போல் அமைதியாய் இருந்தது.
சேலைத் தலைப்பை தலைக்கு போர்த்திக்கொண்டு – அந்தப்பெண் சுற்றும் முற்றும் பார்த்தபடி வேகவேகமாய் நடந்து கொண்டிருந்தாள். வயது இருபத்தைந்துக்குள் என்று சொன்னது. மழையில் நனைந்த அவள் உடம்பின் வளைவுகள். சேலை முந்தானையை இடுப்பில் சொருகியிருந்தாள். மழை நீர்பட்ட முகம் ‘சோடியம் வேபர்’ விளக்கு வெளிச்சத்தில் அழகாக இருந்தது. பெரிய கண்கள். சிறிய உதடுகள். ஒரு கைப்பிடிக்குள் அடக்கிவிடலாம் போன்ற இடுப்பு.
வேகமாய் நடந்தவள் அந்த வளைவுக்கு வந்ததும் நின்றாள். சாலை ஓரமாய் ஒரு ஆட்டோ ஒதுங்கியிருக்க – அதை நோக்கி ஓடினாள். படுதாக்களை தொங்கவிட்டுக் கொண்டு ஆட்டோவின் பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த ஓட்டுநரைப் பார்த்து குரல் கொடுத்தாள்.
டிரைவர்
………
டிரைவர்
இரண்டாவது தடவையாய் - சற்று பலமாய் குரல் கொடுத்ததும் படுதா விலகியது. ஓட்டுநரின் தூக்கக் கலக்க முகம் எட்டிப் பார்த்தது.
என்னம்மா?
ஆட்டோ வருமா…?
எங்கே போகணும்…?
எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்கு அவரை உடனே கொண்டு போகணும்.
உங்க அப்பா எங்கே…?
வீட்ல…
வீடு…?
அதோ….அந்த தெருவைத்தாண்டினா வர்ற முதல் சந்துக்குள்ளே…
ஏறி உட்காரம்மா…
மப்ளரை தலைக்கு சுற்றிக் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் முன் இருக்கைக்கு வர – அந்தப் பெண் பின் இருக்கைக்குப் போனாள். ஆட்டோ இருமிவிட்டு நகர்ந்தது.
டிரைவர் கேட்டார்.
அப்பாவோட உடம்புக்கு என்ன…?
நெஞ்சுவலி…
பக்கத்துல எந்த ஆஸ்பத்திரியும் இல்லையே பக்கம்னு பார்த்தா,‘கருணா மருத்துவமனை’தான். ஆனால், அது பணக்காரங்க போற ஆஸ்பத்திரி.
பரவாயில்லை….அந்த ஆஸ்பத்திரிக்கே போயிடலாம்…
ஆட்டோ வேகம் பிடித்து தெருவைத் தாண்டியதும் எதிர்பட்ட சந்தில் திரும்பியது.
அந்த வீடுதான்.
சந்து நிசப்தமாய் இருந்தது. வீடுகள் அவ்வளவாக இல்லை. விலகி விலகி இருந்தன.
ஓட்டு வீட்டுக்கு முன்னால் ஆட்டோ நின்றது. அந்தப் பெண் இறங்கி உள்ளே ஓடினாள். ஓட்டுனர் அரை நிமிட நேரம் காத்திருக்க ஒரு பெரியவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டே தளர் நடை போட்டுவந்தார். அவரைப் பற்றிக் கொண்டு அந்தப் பெண் கூப்பிட்டாள்.
டிரைவர்…! இவரைக் கொஞ்சம் ஆட்டோவில் உட்கார வையுங்க… நான் வீட்டைப் பூட்டிகிட்டு வந்துடறேன்.
பெய்கிற மழையைப் பொருட்படுத்தாமல் - டிரைவர் இறங்கிப் போய் பெரியவரை கைத்தாங்கலாய் அழைத்து வந்து ஆட்டோவில் உட்கார வைப்பதற்குள், அந்தப் பெண் வீட்டைப் பூட்டிக்கொண்டு வந்தாள். ஆட்டோவுக்குள் ஏறி பெரியவரை தன் தோள் மேல் சாத்திக் கொண்டதும் - ஆட்டோ புறப்பட்டது.
கொஞ்சம் வேகமா போங்க…
கருணா ஆஸ்பத்திரிக்கே போயிடலாமாம்மா?
ம்…
ஆட்டோ வேகம் எடுத்தது.
அப்பா… நெஞ்சு ரொம்பவும் வலிக்குதா…?
இன்னிக்கு கொஞ்சம் அதிகமாத்தாம்மா இருக்கு…
அப்படியே சாய்ந்து படுத்துக்கோப்பா….நான் நெஞ்சை நீவி விடறேன். பத்து நிமிஷத்துல ஆஸ்பத்திரி வந்துடும்…
ஆட்டோ இப்போது பிரதான சாலையில் மழை நீரை வாரியிறைத்துக்கொண்டு ஓடியது. புறநகர் பகுதி… அது. இருட்டின் ஆதிக்கம் தெரிந்தது. பெய்கிற மழையில் குளிர் மூர்க்கமாய் அடித்தது.
போனதும் -
மருத்துவர்கள் - ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கண் சிமிட்டிக்கொண்டார்கள்.
எப்படியிருக்கா பார்த்தியா…கோவிந்த்?
நாட்டுக்கட்டை…வாசன்…!
மழைக்கு தோதா வந்திருக்கா… வலை வீசிப் பார்க்கலாமா?
ம்…
மணி என்ன…?
பதினொண்ணே கால்…
நோயாளிகள் அசந்து தூங்கற நேரம்.
வெளியே இருமல் சத்தம் கேட்டது.
வந்துட்டாள்…
அந்தப்பெண் பெரியவரை தன் தோளில் ஆதரவாய் சாயவைத்து உள்ளே கூட்டிவந்தாள்.
மருத்துவர் கோவிந்த் சொன்னார்.
இப்படி இருக்க வையம்மா…
மேசையைக் காட்ட, அவள் படுக்க வைத்தாள். கோவிந்த் சோதித்தார்.
இவர் உனக்கு அப்பாவா?
ஆமாங்க.
வேற யாராவது துணைக்கு வந்திருக்காங்களா?
இல்லீங்க….
ஆட்டோவில் வந்ததா சொன்னீயே…? அந்த ஆட்டோ டிரைவர் உனக்குத் தெரிஞ்சவரா…?
இல்லீங்க…
உன்பேர் என்ன…?
வசந்திங்க…
அப்பா பேரு…
பெரியசாமி…
வீடு எங்கே…?"
முகவரியைச் சொன்னாள். மருத்துவர் வாசன் மழையில் நனைந்த வசந்தியின் உடம்பை மனசுக்குள் வெறித்தனமாய் ரசித்துக்கொண்டே. முகத்தில் புன்னகை தவழ கேட்டார்.
அப்பாவுக்கு அடிக்கடி இப்படி வருமா…?
வரும்ங்க…மாத்திரை சாப்பிட்டால் சரியாயிடும். ஆனால் இன்னிக்கு மாத்திரை சாப்பிட்டும் வலி நிக்கலை. அதான் கூட்டிட்டு வந்தேன்.
சரி…நீ போய் கொஞ்சம் வெளியே நில்லம்மா… உங்கப்பாவை பரிசோதனை பண்ணணும்…
வசந்தி தலையாட்டி விட்டு வெளியே போக – கோவிந்தும் வாசனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள்.
என்ன பண்ணலாம்?
முடிச்சுட வேண்டியதுதான்…
எப்படி…?
கிழவனுக்கு ஒரு பெத்தடின் ஊசி போட்டால் போதும். விடியற வரைக்கும் எந்திரிக்க மாட்டான். நீ அவளைக் கூட்டிட்டு கட்டிடத்துக்கு கடைசியில் இருக்கிற மருந்து குடோனுக்கு போயிடு. நான் கிழவனுக்கு ஊசியை போட்டுட்டு வந்துடறேன்.
அவள் சத்தம் போட்டால்..?
உங்கப்பாவை கொன்னுடுவோம்ன்னு மிரட்டு…
கொஞ்சம் உதறலாயிருக்கே…
என்ன வாசன். இவளுக்குப் போய் பயப்படறே…? இது கிராமத்துப் பொண்ணு. வசதியில்லாத குடும்பம். எது நடந்தாலும் விசயம் வெளியே போகாது… எத்தனை முரட்டுக் குதிரைகளை நீயும் நானும் அடக்கிப் பழக்கியிருக்கோம்…
சரி… கிழவனுக்கு பெத்தடின் ஊசியைப் போட்டுட்டு… உடனடியா மருந்து குடோனுக்கு வந்துசேரு… நான் அவளைக் கூட்டிட்டுப் போறேன்…
அவர்கள் பேசுவரைப் புரிந்துகொள்ள மாட்டாத பெரியசாமி நெஞ்சுவலியில் கண் மூடி படுத்திருக்க – வாசன் வெளியே வந்தார்.
வசந்தி மார்புக்குக் குறுக்காய் - கைகளைக் கட்டிக் கொண்டு குளிரில் ஒடுங்கியபடி – சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள். மருத்துவரைப் பார்த்ததும் பக்கத்தில் வந்தாள்.
அய்யா…
என் கூட கொஞ்சம்வாம்மா…உங்கப்பாவை வேற அறைக்குக் கொண்டு போக தள்ளுவண்டி வேணும். நர்ச யாரும் வேலைக்கு வராததினால… அந்த வேலையை நீயும் நானுந்தான் பண்ணணும்…வா…
வாசன் சொல்லிவிட்டு அந்த அரையிருட்டான வராந்தாவில் நடக்க வசந்தி அவரைப் பின்தொடர்ந்தாள்.
மழை இப்போது பெரிதாய் - பெய்யத் தொடங்கியிருந்தது.
அதே விநாடிகளில்-
சென்ட்ரல் ரெயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தார்கள் கண்ணனும் சாந்தமதியும். பயணக்களைப்பிலும் அழகாக இருந்தார்கள்.
ரெயில்…இன்னிக்கு எக்கச்சக்க தாமதம்.
வழி பூராவும் மழை. டிரைவர் என்ன பண்ணுவார்? மெதுவாய்த்தானே விரட்டணும்…
ரெண்டு பேரும் ஒரு வாடகைக் காரில் போயிடலாமா சாந்தா?
வேண்டாம் கண்ணன்….நீங்கள் ஒரு ஆட்டோவை பிடிச்சு உங்கள் வீட்டுக்கு போங்க… நான் அப்பாவைப் பார்த்துட்டு அப்புறம்தான் வீட்டுக்கு போகணும்.
மழை பெய்யற இந்த இராத்திரியில் தனியா போறீயா…? உன்னோட அப்பாவைப் பார்க்க நாளைக்கு காலையில் போய்க்கலாமே…?
இல்லை…இல்லை….அப்பாவைப் பார்த்துட்டு வீட்டுக்குப்போனால்தான் தூக்கம் வரும். நீங்க கிளம்புங்க கண்ணன்! நாளைக்குப் பார்க்கலாம்..
ஓகே…குட் நைட்…
கண்ணன் பெட்டியுடன் நகர்ந்து எதிர்த்திசையில் ஆட்டோ பிடிக்கப் போக – சாந்தமதி தன் தோல்பையை தோளில் சுமந்து – மழையில் நனைந்தபடி வாடகைக் கார் நிறுத்தத்தை நெருங்கினாள். நின்றிருந்த டிரைவரிடம் கேட்டாள்…
டாக்சி வருமா…?
எங்கேம்மா போகணும்?
கருணா மருத்துவமனை…
2
மருத்துவர் வாசன் அந்த மருத்துவமனையின் அரையிருட்டான வராந்தாவில் வசந்தியோடு நடந்தபடியே பார்வையால் அவளை மென்றார். மழையில் நனைந்து ஈரமாயிருந்த சேலை வசந்தியின் உடம்போடு ஒட்டி-சதையின் திரட்சிகளை துல்லியமாய் எடுத்துக்காட்டியது. மருத்துவர் உடம்பில் வெப்பம் பரவியது.
உன்பேர் என்ன சொன்னே?
வசந்திங்க.
உன் குடும்பத்துல எத்தினி பேர்?
நானும் எங்கப்பாவும் மட்டுந்தாங்க.
கூடப்பிறந்தவங்க?
யாரும் இல்லீங்க.
என்ன படிச்சிருக்கே?
பள்ளிக்கூடத்துல பத்து வரைக்கும் படிச்சிருக்கேன்.
சொந்த ஊரே இதுதானா?
இல்லீங்க. காஞ்சிபுரத்துக்கு பக்கத்துல நீலம்பூர் கிராமம் தான் எங்களுக்கு சொந்த ஊர்.
சொந்த ஊரை விட்டுட்டு எதுக்காக சென்னைக்கு வந்திருக்கே?
பொழப்பு தேடித்தாங்க.
வாசன் யோசித்துக்கொண்டே நடந்தார்
எல்லாமே சாதகமான விஷயங்கள்தான். வீட்டில் ஆண்துணைக்கு யாரும் கிடையாது. சொந்தக் கிராமத்தை விட்டு- சென்னைக்கு பிழைப்பு தேடி வந்திருக்கிறாள். மடக்குவது சுலபம் எந்த ஆதரவும் இல்லாத குடும்பம்.
டாக்டரய்யா…
அவள் மெல்லக் கூப்பிட்டாள்.
உம்…