Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Unnodu
Uyir Unnodu
Uyir Unnodu
Ebook304 pages1 hour

Uyir Unnodu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351234
Uyir Unnodu

Read more from Devibala

Related to Uyir Unnodu

Related ebooks

Reviews for Uyir Unnodu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Unnodu - Devibala

    http://www.pustaka.co.in

    உயிர் உன்னோடு

    Uyir Unnodu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    "எ

    ழுந்திரு ஜானு!"

    நல்ல உறக்கத்தில் இருந்த ஜானகியைப் பிடித்துக் குலுக்கினாள் கீதா.

    கண்களைத் திறக்க மாட்டாமல் திறந்தாள் ஜானகி.

    டயம் என்னா கீதா?

    மூணரை!

    இன்னும் விடிஞ்சுகூட இருக்காது. என்னைக் கொஞ்சம் தூங்கவிடேன்!

    எழுந்திரும்மா… நான் ராத்திரியே வந்து எதுக்காக உனக்குத் துணைக்குப் படுத்துக்கிட்டேன். மறந்து போயிட்டியா? நீ இப்பக் குளிச்சாத்தான் ஏழு மணிக்குள்ள வேலை செய்ய முடியும் சீக்கிரமா!

    ஜானகி எழுந்து உட்கார்ந்தாள்.

    கீதாவின் முகத்தில் விழித்தாள்.

    குட்மார்னிங்!

    இன்னிக்கு என் முகத்துல முழிச்சிருக்கே! எல்லாம் நல்லபடியா முடியணும்!

    ஜானகி ஒருமாதிரி கேலியாகச் சிரித்தாள்.

    ஏண்டீ சிரிக்கிற

    இந்தச் சிரிப்புக்கு விளக்கம் சொல்லணும்னா பன்னண்டு வருஷம் பின்னால போகணும். இந்த விடிகாலை வேளைல கதை பேச நேரமில்லை.

    எழுந்து போய் பல்லைத் தேய்த்து, முகம் கழுவிக் கொண்டு வந்தாள் ஜானகி.

    இந்தா, காபியைக் குடி முதல்ல.

    நீ ஏன் கீதா எனக்காக இத்தனை கஷ்டப்படறே!

    ஷ்! ஒரு கஷ்டமும் இல்லை. இதைப் பிடி! ஜானகியின் கையில் இரண்டு ஷாம்பூ பாக்கெட்களைத் திணித்தாள். அழுக்கு போகக் குளி! நான் வந்து தலையை அலசி விடணுமா?

    தலைல உள்ள அழுக்கை ஷாம்பூவால அலசிரலாம். மனசுல உள்ள அழுக்கை அலம்பிவிட எங்கே இருக்கு ஷாம்பூ?

    தத்துவமா?

    இல்லை. அனுபவம்!

    ஜானகி பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

    வென்னீர் வச்சிருக்கேன் ஜானு

    பத்தே நிமிடங்களில் ஜானகி குளித்து விட்டு வந்தாள்.

    நல்லா தலையைத் துவட்டிக்கோ, பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு ஹேர் ட்ரையர் போட்டு காய வச்சிரலாம். ஈரமில்லாம சுத்தமா காயணும்!

    கீதா…

    சொல்லு ஜானு.

    அரைநாள் ஆபீசுக்குப் போயிட்டு வரட்டுமா?

    விளையாடறியா நீ? உனக்கு லீவு நிறைய இருக்கில்லையா?

    இருக்கு! அவசியமில்லாம முழுநாள் சி.எல்.லை வேஸ்ட் பண்ணனுமானு யோசிச்சேன்!

    வீணாப் போறது லீவு மட்டும் தானா?

    அதை மட்டும் தான் செலவு பண்ணாம என்னால் பாதுகாக்க முடியும் கீதா!

    பதினைந்து நிமிடங்களில் மின்சார இணைப்பு தந்து ட்ரையரைக் கையில் எடுத்துக் கொண்டாள் கீதா. ‘உய்ய்ங்’ என்று ஓசையிட்டபடி ஜானகியின் கூந்தலைச் சுற்றி அது ஊர்வலம் வரத் தொடங்கியது.

    ரொம்ப சூடா இருக்கா ஜானு?

    எனக்குத்தான் சூடு-சொரணையே இல்லையே… நீ பாட்டுக்குப் போடு.

    அதை முடித்தபின் அவள் கூந்தலைத் தொட்டுப் பார்த்தாள் கீதா. ஓரளவு காய்ந்திருந்தது.

    வா…வந்து உட்காரு.

    ஜானகி ட்ரஸ்ஸிங் டேபிள் எதிரே வந்து உட்கார்ந்தாள். முழு ஜானகியும் கண்ணாடிக்குள்.

    கூந்தலில் பெரும்பகுதியை வெள்ளை முடி ஆக்கிரமித்திருந்தது.

    ஜானகி திடீரெனச் சிரித்தாள்.

    ஏன் ஜானு?

    மேக்கப் இல்லாத நடிகைகள் இப்படிதான் இருப்பாங்களா கீதா? ஒரு மாறுதலா ஒனிடா டி.வி. விளம்பரத்துக்கு என்னைப் போடலாம் இனி!

    ஷ்… போதுமே!

    கீதா கோத்ரேஜ் ஹேர்டையை எடுத்து மேஜை மேல் வைத்தாள். ஒரு பீங்கான் கிண்ணத்தில் அந்தப் பொடியை மூடியில் நிரப்பி தலைதட்டிப்போட்டாள். இளம் சூடான நீரை அதில் ஊற்றி கலக்கத் தொடங்கினாள் ஒன்றாகக் கலந்ததும்.

    ரெடியா?

    ம்…

    கையில் கையுறை, கழுத்தில் ஏப்ரான் என்று சகலமும் மாட்டிக் கொண்டு அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் போல கீதா தயாராகி விட்டாள், தலைக்கு சாயம் பூச.

    கீதா, நான் ஒண்ணு சொல்லட்டுமா?

    இப்ப நீ எதுவும் பேச வேண்டாம். எனக்குக் கொஞ்சம் ஒத்துழைப்பு குடு. தோல்பகுதில பட்டா கொஞ்சம் எரியலாம். சொல்லு எனக்கு.

    எனக்கு எருமைத் தோல். உணர்ச்சி போய் ரொம்ப வருஷங்களாச்சு!

    ஷ்… திரும்பு!

    "கூந்தல் கறுப்பானா, முத்திப் போன மூஞ்சில இளமை வந்துருமா கீதா? ஏன் இந்த வேஷம்?

    வகிட்டுலதான் நிறைய நரை உனக்கு. வலது பக்கம் சாச்சுக்கோ முகத்தை!

    "அடுத்த மாசம் என்ன வயது தெரியுமா எனக்கு?’

    இதைப் போட்டு உன் தலை கறுப்பான, பழைய படி பாவாடை, தாவணி போட்டுட்டு நடக்கலாம் நீ!

    முகச்சுருக்கமும் போயிட்டா, கவுன் போட்டுக்கலாமா?

    கீதா கலீரெனச் சிரித்து விட்டாள்.

    உன்னை நினைச்சா சிலசமயம் ஆச்சரியமா இருக்கு ஜானு எனக்கு. எந்த சந்தர்ப்பத்துலேயும் நகைச்சுவை உன்னை விட்டுப் போறதில்லை!

    அதுக்குக் காரணம் ரெண்டு.

    என்னா?

    என் வாழ்க்கையைக் கூட ஒரு பார்வையாளரா நின்று நானே ரசிக்கிறேன். அனுபவத்தைவிட சுவையானது என்ன இருக்கு மனுஷனுக்கு?

    ரெண்டாவது காரணம்?

    சிரிப்பை நான் மறக்கறதே இல்லை. ஏன்னா, சிரிப்பா சிரிச்சவளாச்சே நான்!

    கீதாவின் முகம் மாறியது.

    ஸாரி ஜானு!

    எதுக்கு? இதைச் சொல்றது விரக்தில இல்லை.

    உனக்கு விடியப் போகுது ஜானு…

    எனக்கு விடியுதோ இல்லையோ, வெளிய வெளிச்சம் வரத் தொடங்கியாச்சு. பொய் வேஷம் போடும்போது உலகத்துக்குப் பயந்து இருட்டுல போட வேண்டியிருக்கு பாரு!

    அடி இல்லைடி! தலைச்சாயம் யாருதான் அடிச்சுக்கறதில்லை இப்ப? இதெல்லாம் அவசியமாத்தான் இருக்கு மனுஷ வாழ்க்கைல.

    உனக்காகத்தான் இதுக்கெல்லாம் நான் சம்மதிக்கறேன் கீதா. முப்பத்தாறு வயசுல பெண் பார்க்கற படலம் தேவை தானா? வரப்போற ஆளுக்கு என்ன வயசு?நாப்பதா?இந்த வயசுல ஒரு கல்யாணம் அவசியம் தானா?இன்னும் கொஞ்சநாள் போனா, அறுபதாம் கல்யாணத்தையும் சேர்த்தே நடத்திரலாம்!

    நீ பேசாம இருக்க மாட்டே?

    அவன் வந்ததும் நான் வெக்கப்படணுமா? தேவையில்லை. இத்தனை வயசுக்கு மேல ‘டை’ அடிச்ச பொண்ணைப் பார்க்க வந்த அரைக்கிழவன் அவமானத்தால வெட்கப்படுவான்!

    உனக்கு வாய் ஜாஸ்தி! இப்பல்லாம் லேட் மாரேஜ் தான் அதிகம்.

    லேட் போட வேண்டிய வயசுல மாரேஜ்தான் பாக்கி, வேடிக்கையா இல்லை?

    கண்ணாடில பாரு! ஆளே மாறிப்போயிட்டே நீ…!

    ஜானகி பார்த்தாள்.

    ஒரு நரை முடிகூட இல்லாமல் சுத்தமாகக் கறுப்பாக்கியிருந்தாள் கீதா.

    இது எத்தனை நாளைக்குத் தாங்கும் கீதா?

    நிச்சயமா ரெண்டு மாசத்துக்கு!

    இந்தக் கல்யாணம் நிச்சயமாகுதுன்னு வச்சுக்கோ இது நடக்க ரெண்டு மாசம் ஆகாது?

    ம்…

    மணமேடைல நான்போய் உட்காரும்போது பழையபடி கறுப்பெல்லாம் போய் வெளுப்பாயிடும்.பையன் மிரண்டு போயிருவான்.பேத்தியைப் பெண் பார்க்க விட்டுட்டு, பாட்டி தாலி கட்டிக்க வந்திருக்கான்னு! தாத்தாவுக்கு பாட்டிதான் கிடைப்பான்னு நானும் பதில் சொல்ல வேண்டியதுதான்!

    ஒருமணி நேரம் இப்படியே இரு.அப்புறம் ஷாம்பூ போட்டு அலசு, நான் போய் குளிச்சிட்டு வந்திர்றன்.

    படியிறங்கிக் கீழே போனாள் கீதா.

    பாவம் கீதா! எனக்காக எத்தனை சிரமப்படுகிறாள்.ஏன் இந்த விபரீத ஆசைகள் இவளுக்கு? எனக்கு இனிமேல் திருமணம் நடந்து, நான் குடித்தனம் நடத்தி இதெல்லாம் ஆகக்கூடிய காரியமா? உன் முயற்சிகள் அத்தனையும் வீணா? திரும்பவும் நீ மனம் நொந்து போவாய் கீதா.

    கீதா வந்துவிட்டாள்.

    ஒரு மணி நேரம் ஓடிவிட்டது.

    நீ குளிச்சிட்டு வாஜானு. நிறைய வேலை இருக்கு.

    ஷாப்பிங் போகணுமா?

    அதெல்லாம் இல்லை.நேரத்திக்கே வாங்கி வச்சாச்சு எல்லாம்.குலாப்ஜாமுன், ரவா இட்லி, வெஜிடபிள் போண்டா பண்ணி, கொத்துமல்லிச் சட்னியும் அரைச்சிரலாம்!

    இது பெண் பாக்கற படலமா? இல்லை, கல்யாணமா? வர்றவனுக்கு என்னைப் பிடிக்கலைனாலும் உன்னோட ரவா இட்லி நிச்சயமா பிடிக்கும்!

    சரி, போய்க் குளி.

    ஜானகி குளித்துவிட்டு வந்தாள்.

    உன்னை ஒருத்தன் பெண் பார்க்கவர்றான்.அவன் யாரு, என்ன பேரு, உத்தியோகம் என்ன, குடும்பப் பின்னணி எது? இப்படி எந்தக் கேள்வியும் என்னை நீ கேக்கலை ஜானு.

    "இது ஒரு கேலிக்கூத்து கீதா.இனிமே கல்யாணம்னு ஒண்ணு எனக்கு அவசியமேயில்லை.

    அப்படி சொல்லாதே ஜானு! நல்ல ஒரு கணவனா அமைஞ்சா, உனக்கு ஒரு எதிர்கால நம்பிக்கை உண்டாகும் இல்லையா? உனக்கு வாழ்க்கைல ஒரு பிடிப்பு வேண்டாமா?

    அதெல்லாம் போய் ரொம்ப நாளாச்சு. உன் திருப்திக்காக இன்னிக்கு வேஷம்போட சம்மதிக்கிறேன் ரிசல்ட் எதுவானாலும் என்னை பாதிக்காது!

    அம்மா!

    கீதாவின் பத்து வயசு மகள் ஓடிவந்தாள்.

    போய் ஹோம்வொர்க் பண்ணு! அப்பா எழுந்தாச்சா?

    ம்… யோகா பண்றார்.

    தம்பியை எழுப்பி பல் தேய்க்கச் சொல்லு.நான் இப்ப வர்றேன்.

    உன்சேமிப்புல என்ன இருக்கு ஜானு?

    ஒரு லட்சம் வரைக்கும் இருக்கு. ஏன் கீதா?

    வரப் போறவர் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்னு தரகர் சொன்னார்.எதுவும் அதிகமா எதிர்பார்ப்பு இருக்காதுன்னு நினைக்கிறேன்…

    ஏன் நாப்பதாகியும் கல்யாணம் செஞ்சுக்கலையாம்?

    நான் கேக்கலை.தரகர் சொல்லலை.நேர்ல வந்தா விவரம் தெரியுது.

    கீதா…

    என்ன ஜானு?

    இது அமையும்னு நான் நம்பலை.இது அமையாம போனா, இந்த நாடகத்தோட கடைசி காட்சியா இது இருக்கட்டும்.நீ எனக்கு ஸ்நேகிதி இல்லை, சகோதரி போல, உன் குடும்பத்தை என் குடும்பமா நினைச்சுத் தான் நான் வாழறேன்.மீதி நாட்களை இந்த நிம்மதில நான் கழிச்சிருவேன்!

    ஷ்! பேசாம இரு. உனக்கும் நல்ல காலம் வந்தாச்சு.

    கீதாவின் கணவர் முரளி வந்தார்.

    என்னம்மா, ரெடியா?

    ம்…,

    அழகா இருக்கே இப்ப! நான் அரை நாள் ஆபீவுசுக்குப் போயிட்டு வந்திர்றன்.

    வாங்க, உங்களுக்கு சாப்பாடு போடறேன் கீதா எழுந்தாள்.

    நீ எப்ப சமைச்சே கீதா?

    பழைய சாதமும், தயிரும். என்னிக்கு சூடா சமைச்சுப் போட்டிருக்கா அவ?

    இது ஆரோக்கியம்பா. அதனாலதான்.

    பட்டினிகூட ஆரோக்கியம்னு சொல்லுவாங்க. இதுக்கு அதுவே தேவலை. ஊறுகாயாவது இருக்கா வீட்ல?

    கீதா சிரித்தபடி அவருடன் நடந்தாள்.

    மூன்று மணிக்கு வாசலில் அந்த பத்மினி பிரிமியர் வந்து நின்றது. முரளியும், கீதாவும் வாசலுக்கு வந்தார்கள்.

    ஒரு வயதான அம்மாள், ஒரு இளம் பெண், இரண்டு குழந்தைகள் அதிலிருந்து இறங்கினார்கள்.

    ஆண்கள் யாரும் இல்லை!

    அவர்கள் நுழைந்தார்கள்.

    அவர்களை பாய் விரித்து உட்கார வைத்தாள் கீதா. டிரைவர் வெளியில் இருந்தான்.

    இன்னும் யாராவது வர்றாங்களா பின்னால?

    இல்லை. நாங்க மட்டும்தான் வந்தோம்.

    நீங்க யாருன்னு இன்னும் அறிமுகப்படுத்திக்கலை.

    நான்தான் ரமணனோட அம்மா, இவ தங்கை!

    ஓ…நீங்க பார்த்து திருப்திப்பட்ட பின்னால, அவர் வந்து பாக்கறதா ஏற்பாடா? கீதா சின்னக் குரலில் கேட்டாள்.

    நாங்க பாக்கறதுகூட முக்கியமில்லை அவனுக்கு.

    பின்ன?

    இந்த ரெண்டு குழந்தைகளும் பாக்கணும்!

    ஓ… தங்கை குழந்தைகளா? மாமாவுக்கு மாமியை செலக்ட் பண்ண வந்துட்டாங்களா?

    இல்லைம்மா! அவனோட குழந்தைகள்தான் ரெண்டு பேரும். அப்பாவுக்காக பெண் பார்க்க வந்திருக்காங்க. இவங்க சம்மதிச்சிட்டா அவன் பார்க்கணும்னு கூட இல்லை.

    கீதா அதிர்ந்துபோய் முரளியைப் பார்த்தாள்.

    2

    "ம

    ன்னிக்கணும்! உங்க பிள்ளை கல்யாணம் ஆனவர்னு தரகர் எங்ககிட்ட சொல்லவேயில்லையே."

    என்னது? அந்தம்மாள் அதிர்ந்து போனார்!

    அதைச்சொல்லி, பெண் பார்க்கும்படியாகத்தானே நாங்க சொன்னம். எங்க ரமணனுக்குக் கல்யாண விருப்பமே இல்லை. இந்த ரெண்டு குழந்தைகளும் தாயில்லாம ஏங்கற கண்றாவியைக் காண எங்களுக்குச் சகிக்கலை. அதனாலதான் நாங்கள்ளாம் ரொம்ப வற்புறுத்தி மறுவிவாகரத்துக்குச் சம்மதிச்சிருக்கான். அதுவும் புதுசா ஒரு அம்மா வந்தா ஏத்துப்பீங்களானு இவங்க ரெண்டு பேரையும் கேட்டு, அவங்க அரை குறையா தலையாட்டின பின்னாலதான் தரகரை அனுமதிச்சான்.

    முரளியைப் பார்த்தாள் கீதா.

    முரளியின் முகத்தில் சன்னமான கோபம் ஏறியிருந்தது.

    இந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தர்மசங்கடமாக உணர்ந்தாள் கீதா.

    தரகர் பேச்சைக் கேட்டு ரெண்டு பேரும் தப்பான முடிவுக்கு வந்துட்டம். நாங்க புறப்படறம்!

    ஒரு நிமிஷம் இருங்கம்மா என்னங்க, கொஞ்சம் உள்ளே வாங்க!

    என்ன கீதா?

    கேட்டபடி அவனைப் பின் தொடர்ந்தான் முரளி.

    உள் அறையில் நின்று கொண்டு சகலமும் கேட்டுக் கொண்டிருந்தாள் ஜானகி.

    உனக்கு இந்த வரன் வேண்டாம் ஜானு! போயும் போயும் ரெண்டாந்தாரமா வாழ்க்கைப் படற அளவுக்கு என்ன தலையெழுத்து உனக்கு?

    என்னை எதுக்கு உள்ளே கூட்டிட்டு வந்தே?

    உங்க மாமா பொண்ணு வனஜாவுக்கு இந்த வரனை சிபாரிசு பண்ணலாமா? ரெண்டாந்தாரமா இருந்தாக்கூட தேவலைனு மாமா சொல்லலை?

    சரி கீதா…. இவங்க சம்மதிக்கணுமே!

    கீதா.

    என்ன ஜானு?

    அவங்களை வெளியே உட்கார வச்சிட்டு, உள்ளே நாம விவாதம் நடத்தறது அநாகரிகம்!

    அதனால?

    இரு வர்றேன்! ஜானகி வெளியே வந்தாள்.

    வணக்கம்…

    அவர்கள் நிமிர்ந்தார்கள்.

    நான் ஜானகி. நீங்க பார்க்க வந்தது என்னைத் தான். அம்மா எழுந்து வந்தாள்.

    அவள்கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

    மன்னிச்சிடும்மா! தரகர் பண்ணின தப்பு, இப்படி ஏடாகூடமா முடிஞ்சு போச்சு. நாங்க புறப்படறம்.

    இருங்க! அவசரப்பட வேண்டாம். இல்லைனு எந்த முடிவுக்கும் நீங்க வர வேண்டாம். கல்யாணமே வேண்டாம்னு நான் இருந்தேன். என் ஸ்நேகிதி கீதாவோட வற்புறத்தலாலதான் இன்னிக்குச் சம்மதிச்சேன். இயல்பா கல்யாணமாகாத ஒருத்தர் பெண் பார்க்க வர்றதுதான் வழக்கம். மனைவி வேணும்னு வரன் தேடி வருவாங்க. தாயைத் தேடி நீங்க வந்திருக்கீங்க. நான் கொஞ்சம் யோசிக்கணும். அது வரைக்கும் காத்திருக்க முடியுமா உங்களால?

    சரின்னு சொல்லும்மா. ரமணனின் தங்கை அவசரப்படுத்தினாள்.

    சரிம்மா. இந்தச் சம்பவத்தைச் சொன்னா, என் பிள்ளை என்ன சொல்லுவானோ தெரியலை. உன் பதில் எங்களுக்கு எப்பம்மா கிடைக்கும்?

    இந்த வாரக் கடைசில.

    சந்தோசம்மா! நாங்க புறப்படறம்.

    இருங்க. டிபன் சாப்டுட்டுப் போகலாம்.

    மனசு ஒப்பலைம்மா!

    நட்பு முறைல அது தப்பில்லை குழந்தைங்க வெறுமனே திரும்பிப் போக வேண்டாம். கீதா, உள்ள வா!

    தட்டுகளில் சகலமும் எடுத்து வைத்து குழந்தைகளிடம் நீட்டினாள்.

    பெரியவர்களும்சாப்பிட்டார்கள்.

    உன் பேரென்னப்பா?

    ஏழு வயது ராகுல் பதில் சொன்னான். மூன்று வயது கோகுல் பேந்தப் பேந்த விழித்தது. ரவா இட்லியை வாய் கொள்ளாமல் அடைத்துக் கொண்டது.

    நான் ஊட்டி விடட்டுமா?

    கோகுல் ஸ்நேகமாகச் சிரித்தது.

    அவர்கள் புறப்பட்டார்கள்.

    கீதா வெற்றிலை பாக்கு தந்து உபசரித்தாள். வாசல் வரை வந்து, கார் வரை ஏற்றி விட்டார்கள்.

    கார் புள்ளியானது.

    என்ன ஜானு உன் மனசுல எண்ணம்?

    யோசிக்கணும்….

    நீ யோசிக்கிறது இருக்கட்டும். அவங்க மனசுல கொஞ்சம் சலனத்தை நீ ஏற்படுத்தியாச்சு. அந்தப் பெரியம்மா பார்த்த பார்வைல எதிர்பார்ப்பு நிறைய இருந்தது.

    எதிர்பார்ப்புனா?

    உன்னை மருமகளாக்கிக்கற ஆசை! வேண்டாம் ஜானகி! மாசமாசா பிடித்தம் போக மூவாயிரம் ரூபா சம்பளம் வாங்கறே! உனக்கு ஏம்மா ரெண்டாந்தாரமா வாழ்க்கைப் படற அவலம்?

    முரளியை ஏறிட்டாள்.

    எனக்கு முப்பத்தாறு வயது முரளி.

    அதனால?

    "நாப்பது வயசுக்காரன்தான் எனக்குப் புருஷனாக முடியும். அத்தனை வருஷங்கள் ஒரு ஆண் கல்யாணம் செஞ்சுக்காம இருக்கணும்னா. கனமான காரணம் இருக்கணும். அவன் ஊனமா, அதிகம் சம்பாதிக்காத சரியான படிப்பில்லாத, முறையான சமூக அந்தஸ்து இல்லாத… இப்படி நெகடிவ்கள் நிச்சயம் இருக்கும்.. அல்லது குடும்ப பாரம் சுமந்து கரையேற முடியாத நபரா இருக்கும். அப்படிப்பட்ட ஒருத்தருக்குக் கல்யாண வாழ்க்கைல என்ன உற்சாகம் இருக்க முடியும்?’

    ஜானு, புரியலை உன் போக்கு…

    "இந்த ரமணனை சந்திக்கணும் நான். பேசணும் கொஞ்சம். அப்புறமா ஒரு முடிவுக்கு வரலாம்னு

    Enjoying the preview?
    Page 1 of 1