Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ippadai Vellum
Ippadai Vellum
Ippadai Vellum
Ebook186 pages1 hour

Ippadai Vellum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351050
Ippadai Vellum

Read more from Pattukottai Prabakar

Related to Ippadai Vellum

Related ebooks

Related categories

Reviews for Ippadai Vellum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ippadai Vellum - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    இப்படை வெல்லும்

    Ippadai Vellum

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    கதை சுருக்கம்:

    கோபால்தாஸ் டெல்லியில் மத்திய சர்க்காரின் பாதுகாப்புத் துறையின்... கம்யூனிகேஷன் பிரிவில் டைப்பிஸ்ட் உத்தியோகம் பார்ப்பவர். அவருடைய மனைவி பார்கவி. மூன்று பிள்ளைகள். அரசாங்கத்தின் அதிமுக்கிய ரகசியங்கள், கோபால்தாஸ் மூலமாகத்தான் அனுப்பப்படுகிறது. கோபால்தாஸின் மேல் சி.ஐ.டி பேனர்ஜி சந்தேகப்பட்டு... பிரைவேட் டிடெக்டிவ் சில்வெஸ்டரிடம், கோபால்தாஸ் பற்றிய விவரங்களை சேகரிக்கும்படியாக சொல்கிறார். சில்வெஸ்டர், டோனி இருவரும் கோபால்தாஸ் பற்றிய விவரங்களை கண்டுபிடிக்கிறார்களா? இந்த சதி செயலுக்கு பின்னால் இருப்பது யார்?

    1

    கொள்கை அளவில் மத சார்பற்ற ஆனால், மதக் கலவரங்கள் வெடிக்கின்ற, அமைதி விரும்புகின்ற, ஆனால், காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி தேசத் தலைவர்களை ஜீரணம் செய்த பின்பும்… வன்முறை அரக்கனுக்கு பசியடங்காமல் தலை விரித்தாடுகின்ற, உலகம் முழுவதற்கும் கணிதத்திற்கு அடிப்படையான ஜீரோவை கண்டுபிடித்த, ஆனால், கணக்கு வழக்கில்லாமல் ஊழல்கள் நடக்கின்ற, ஜாதி பேதம் பார்க்காத, ஆனால், ஜாதியை வைத்து அரசியல் பண்ணுகிற, நாடெங்கும் ஆயிரம் நதிகளுக்கும் தேவையான மழையும் கொண்ட, ஆனால், அந்தத் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள துப்பில்லாமல் வறட்சி நிவாரணம் வசூலிக்கிற, பொருளாதார ரீதியாக முன்னேறுகிற, ஆனால் ஒரு நாட்டையும் விட்டு வைக்காமல் கடன் வாங்குகிற, ஆயிரக்கணக்கான சிறந்த அறிவாளிகள் நிறைந்த, ஆனால் அத்தனை பேரும் வாய் மூடி மௌனிகளாக சுய முன்னேற்த்தில் கவனம் செலுத்துகிற, பத்திரிகை சுதந்திரம் முழு அளவில் உள்ள, ஆனால், பயந்து கொண்டே தலையங்கம் எழுதுகிற, பிரமாதமான விளையாட்டுத் திறமை கொண்ட வீரர்கள் நிறைந்த, ஆனால், அவர்கள் எல்லாம் தேசிய டீமின் தேர்வுக் குழுக்களால் நிராகரிக்கப்படுகிற, சிந்திக்கத் தெரிந்த நல்ல ஜனங்களை ஏராளமாகக் கொண்ட, ஆனால், தனி மனித துதி பாடி சுய சிந்தனையை தொலைக்கிற அதைவிட ஏராளமான ஜனங்களைக் கொண்ட, மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்களும் பிறந்த, பிறக்கிற, ஆனால், அவர்களில் பாதி பேர் வெளிநாடுகளில் செட்டில் ஆகி விடுகிற, ஏராளமான சுற்றுலா தளங்களைக் கொண்ட, ஆனால், சுற்றுலா பயணிகளை சுலபமாக ஏமாற்றுகிற கும்பல்களையும் கொண்ட, நம் தேசம் என்கிற ஒற்றுமை உணர்வு மிகுந்த, ஆனால், அங்கங்கே தனி மாநிலப் பிரிவினை கோரிக்கைகளுடன் போராடுகிற... இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி.

    மாலை ஆறு முப்பதுக்கு முற்றிலும் இருட்டிப் போய்... சாலைகளில் வாகனங்கள் உருட்டி விட்ட நெல்லிக்காய் மூட்டை போல எல்லா திசைகளிலும், தீயணைக்கும் அவசரத்துடன் விரைந்து கொண்டிருந்தன.

    அலங்கார கடைகளில், அவசியத்திற்கு வாங்குபவர்கள் சீக்கிரம் என்று அவசரப்பட்டார்கள். ஆடம்பரத்திற்கு வாங்குபவர்கள் நின்று நிதானமாக... நிறம், டிசைன் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    இல்லத்தரசிகளும், அலுவலகத்தில் உழைத்துக் களைத்தவர்களும்... உள் ரூமில் குழந்தைகளை ஹோம் வொர்க் செய்யச் சொல்லி அதட்டி விட்டு, டெலிவிஷனில் விளம்பரங்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

    அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில், ஏழாவது மாடி பிளாட் நம்பர் 73-ல் வசிக்கின்ற கோபால்தாஸ் உங்களுக்கு அறிமுகப்படுத்தபட வேண்டிய நபர்.

    கோபால்தாஸ் தற்சமயம் அலுவலகத்தில் இருந்து திரும்பி, தனது பஜாஜ் ஸ்கூட்டரை அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் பகுதியில் நிறுத்திப் பூட்டி, பெட்ரோல் டியூபை மூடிவிட்டு... காலையில் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற லன்ச் பேகையும், ஒரு சிறிய லெதர் பேகையும், சின்னப் பையனுக்கு வாங்கிய பெயிண்டிங் வாட்டர் கலர் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு, லிஃப்டில் மேலே வந்து, கதவு திறந்த மனைவி பார்கவிக்கு களைப்புப் புன்னகை சிந்திவிட்டு, பெரிய மகள் கல்லூரியில் இருந்து வந்து விட்டாளா என்று விசாரித்துவிட்டு, மூன்று சக்கரம் ஓட்டிய கடைசி மகனை வழி மறித்து, வாட்டர் கலர் பாக்ஸ் கொடுத்து, கன்னத்தில் முத்தம் வாங்கிக் கொண்டு, ஒன்பதாவது படிக்கிற இரண்டாவது மகன் தன் பிரண்ட் வீட்டு வரை சென்று வர கேட்ட தன் ஸ்கூட்டர் சாவியைக் கொடுத்து விட்டு, அதில் காற்று கம்மியாக இருக்கிறது என்று எச்சரித்துவிட்டு...

    தன் அறைக்கு வந்து ஷு, டை, சட்டை, பேண்ட் கழற்றி... ஜட்டியோடு பாத்ரூம் சென்று குளித்துவிட்டு, ‘பார்கவி, துண்டு!’ என்று கத்தி துடைத்துக் கொண்டு, நான்கு முழ வேட்டியும், கை இல்லாத பனியனும் அணிந்து... லிவிங் ஹாலில் அமர்ந்து, பார்கவி கொடுத்த ஸாண்ட்விச்சைக் கடித்தபடி டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    கோபால்தாஸுக்கு சொந்த மாநிலம், வள்ளுவனை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு. சொந்த ஊர் மன்னை என்று சுருக்கெழுத்தில் அழைக்கப்படுகிற மன்னார்குடி.

    கும்பகோணம் கலைக்கல்லூரியில் இவர் படித்த டிகிரி ஹிஸ்டரிக்கு... வீடு தேடி வந்து ஜில்லா கலெக்டர் உத்தியோகம் தர வேண்டுமென்று, இவர் அப்பாவின் அநியாயமான எதிர்பார்ப்பு காரணமாக (அப்பாவின் தோற்றம்: 1931 மறைவு:1989) உதவாக்கரை, வேலை இல்லாத தீவட்டி, வெட்டி ஆபீசர், கால் காசுக்கு பிரயோஜனம் உண்டா, எதுக்குதான் நீ லாயக்கு, கொஞ்சமாவது சொரணை இருக்கா, உன்னைப் பெத்ததுக்கு ஒரு மாங்கொட்டையை பெத்திருந்தாலாவது மரம் வளர்க்கலாம்... போன்ற சொற்றொடர்கள் தாங்காமல் வீட்டில் கிடைத்ததைத் திருடிக் கொண்டு, சின்ன ரயிலில் சென்னை வந்து சுற்றியலைந்து, டெல்லி போனால் நிச்சயம் பெரிய ஆளாய் வராம் என்று சகலரும் சொல்ல, பெரிய ரயிலில் டெல்லி வந்து...

    கொஞ்ச நாள் ஊதுபத்தி விற்று, கொஞ்ச நாள் புக் பைண்டிங்க் செய்து, கொஞ்ச நாள் பூச்சி மருந்து குடோனில் கிளார்க்காக இருந்து... கிடைக்கிற நேரத்தில் டைப்ரைட்டிங், ஷார்ட்ஹேண்ட், கம்ப்யூட்டர் கோர்ஸ் கற்று... ஹிந்தி கற்று... டிரைவிங் கற்று...

    மத்திய சர்க்காரின் பாதுகாப்புத் துறையின் கம்யூனிகேஷன் பிரிவில், டைப்பிஸ்ட் உத்தியோகம் கிடைத்து, கோபால்தாஸ் அரசாங்க ஊழியனானது ஆயிரத்தி தொளாயிரத்தி எழுபத்தி ஒன்றில்.

    ஒரே வருடத்தில் செய்த சாதனை... பார்கவி காதல்.

    ரகசியமாக ஓடி வந்து திருமணப் புரட்சி. குடித்தனம். அடுத்த வருடமே ஆண்மையின் நிரூபணம் - ஹேமாவதி. பிறகு சுரேந்தர். ரொம்பப் பிறகு சதீஷ்குமார்.

    நடுவில் சீனியர் டைப்பிஸ்ட்டாக பதவி உயர்வு பெற்று, டெலக்ஸ் ஆபரேட்டராகி, செக்ஷன் தலைமையாகி, இப்போது சீனியர் டெலக்ஸ் ஆபரேட்டர்.

    கம்யூனிகேஷன் பிரிவில் வேலை பார்க்கிற முப்பதுக்கும் மேற்பட்ட, டெலக்ஸ் ஆபரேட்டர்களுக்கு தலைமைப் பொறுப்பு. டெலக்ஸ் மூலமாக அனுப்பப்படுகிற, வாங்கப்படுகிற அத்தனை முக்கிய, முக்கியமில்லாத, அதிமுக்கிய ரகசிய செய்திகளும்... கோபால்தாஸின் பார்வை வரம் பெற்றேத் தீர வேண்டும்.

    கோபால்தாஸுக்கு தன் தந்தை மேல் சூப்பர் கோபம். என்னை லாயக்கற்றவன் என்றாச் சொன்னீர்கள்? நான் எவ்வளவு பெரிய ஆள். என்னால் என்னவெல்லாம் முடியும் என்று பாருங்கள் என்று ஒரு மானசீக சவால்.

    அந்த சவால் தொகுத்த ஒருமுனை லட்சியம் பணம்.

    இதுவரை நீங்கள் சந்தித்த, 120 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடத்தில்... ஆயிரம் சதுர அடி வாடகை வீட்டில் வசிக்கிற, ஸ்கூட்டரில் அலுவலகம் போய் வருகிற இந்த கோபால்தாசை... ஒரு வரியில் உங்களை விட்டு மதிக்கச் சொன்னால் நீங்கள் இப்படிச் சொல்லலாம்.

    ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அரசாங்க ஊழியன். அப்படித்தானே? ஸாரி பிரெண்ட். நீங்கள் அனுமானித்தது தப்பு.

    கோபால்தாஸின் இன்றைய தேதி சொத்து விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

    1. ஜனக்புரியில்... மூவாயிரம் சதுர அடி பரப்பில் ஒரு பங்களா.

    2. ராஜஸ்தானில்... பான்ஸ்வாரா என்னும் ஊரில் கோதுமை விளைகிற நாற்பது ஏக்கர் நிலம்.

    3. விஷவாயு புகழ் போபால் நகரத்தில்... ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்சில் உள்ள, இருபத்தி நான்கு கடைகள் கொண்ட ஒரு ஃப்ளோர்.

    4. கொடைக்கானலில் ஐந்து ஏக்கர் காபி எஸ்டேட்.

    5. டெல்லியில் பதினேழு சிறிய வங்கிகளில் லாக்கர்கள். அந்த லாக்கர்களில் தங்கம், வெள்ளி, கரன்சி, ஷேர் பத்திரங்கள்.

    ஹலோ, என்ன மயக்கம் போட்டு விழுந்து விட்டீர்களா? எழுந்து உட்காருங்கள். நான் மிச்ச கதையை சொல்லியாக வேண்டும்.

    கோபால்தாஸ் வீட்டில்... இந்த நிமிடம் நூறு பேர் கொண்ட படையை வைத்து ரெய்டு நடத்திப் பாருங்கள். அவருக்கு எதிராக ஒரு காதிதம் கூட கிடைக்காது.

    எந்த சொத்துக்களும் அவர் பெயரில் கிடையாது. எந்த லாக்கர்களும், வங்கிக் கணக்குகளும் அவர் பெயரில் இருக்காது. சுத்தம், சுத்தம், படு சுத்தம்.

    பேண்ட் பாக்கெட்டில் கை விட்டுப் பார்த்தால்... பெட்ரோல் பில்லும், நாற்பத்தி ஏழு ரூபாய் சொச்சமும் கிடைக்கலாம். வீட்டின் ஸோபாவைப் பாருங்கள். கிழிந்து உள்ளிருந்து தேங்காய் நார் எட்டிப் பார்க்கிறது. எவ்வளவு அழுக்கான திரைச்சீலைகள். பழைய ரேடியோ, அய்யோ பாவம் கோபால்தாஸின் செருப்பு இரண்டு இடங்களில் தைக்கப்பட்டிருக்கிறது.

    இத்தனை கோடி எப்படி சாத்தியம்?

    இதற்கு கோபால்தாஸின் இன்னொரு முகத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    செத்துப்போன சுதந்திரப் போராட்ட தலைவரின், வாழ்க்கை வரலாற்றின் டாகுமெண்ட்ரி நியூஸ் ரீல் போல... எல்லாவற்றையும் நானே சொல்லிக் கொண்டிருப்பது போரடிக்கவில்லை?

    ஆக்ஷன் பகுதிக்கு மாறலாம். அவரைப் போகப் போக நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

    2

    ஸாண்ட்விச் சாப்பிட்டு முடித்து... கோபால்தாஸ் வாஷ் பேசினில் கை கழுவிக் கொண்டிருக்கும்போது டெலிபோன் ஒலித்தது.

    நடந்து கொண்டே படித்துக் கொண்டிருந்த ஹேமாவதி எடுத்து, ஹலோ யார் பேசுவது?... ஹலோ... என்று வைத்து விட்டாள். கட்டாகி விட்டது என்று அவரிடம் சொல்லிவிட்டுப் படிக்க ஆரம்பித்தாள்.

    சில விநாடிகளுக்குப் பிறகு மீண்டும் ஒலித்தது. மீண்டும் அவளே எடுத்துப் பேசினாள். என்ன இது... மறுபடி கட்டாகி விட்டது? என்றபடி வைத்தாள்.

    கோபால்தாஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1