Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veesum Thendraley Veesu
Veesum Thendraley Veesu
Veesum Thendraley Veesu
Ebook119 pages51 minutes

Veesum Thendraley Veesu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Arunaa Nandhini is a Tamil novelist. Her 1st short story Madhumati was published in the magazine Devi and her 1st novel was Nazhai Vaanilla published in Rani Muthu. She has written nearly 50 short stories that have been published in Amuthasurabi, Mangai Malar, Rani, Devi, Savi and Nandhini. She has been awarded the Kurunovel Award by 'Kalai Magal and the Mini Thodar Award by the publisher Devi. One of her short stories was accepted and included in the Singapore Syllabus during the 1990s. Arunaa Nandhini's novels are published by Arunodhayam and Arivalayam Publications. Her novels cover family subjects, romance, reality, with some humor added for the readers to enjoy at their leisure. Most of her novels convey good messages for her readers.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352853298
Veesum Thendraley Veesu

Read more from Arunaa Nandhini

Related authors

Related to Veesum Thendraley Veesu

Related ebooks

Reviews for Veesum Thendraley Veesu

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veesum Thendraley Veesu - Arunaa Nandhini

    http://www.pustaka.co.in

    வீசும் தென்றலே வீசு

    Veesum Thendraley Veesu

    Author:

    அருணா நந்தினி

    Arunaa Nandhini

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    உள்ளே வரட்டுமா? என்று கேட்டுக் கொண்டு ஜன்னல் வழியே நுழைந்த கதிரவனின் கதிர்கள் உரிமை யுடன் வீடு முழுக்க படர்ந்து... ஒளிர்ந்தன.

    வழியும் வியர்வையைத் துடைத்தவாறே மிக்சியில் தேங்காய் சட்னியை அரைத்துக் கொண்டிருந்த பாரதியின் கண்கள் அவ்வப்போது மகளின் அறைப் பக்கம் தாவி, மீண்டன.

    இன்னும் அவள் எழுந்திருக்கவில்லையே... சீக்கிரம் கல்லூரிக்குப் புறப்பட வேண்டும்... அவள் மட்டுமா? நானும்தான்.

    முந்தியெல்லாம் சீக்கிரமே எழுந்திருந்து, ஓடிவந்து "அம்மா... குட்மார்னிங் என்று கழுத்தைக் கட்டிக்கொள் வாள்.

    "இன்னிக்கு என்னம்மா டிபன்? என்று கண்களை விரித்து, ஆர்வத்துடன் கேட்கும் மகளுக்கு இன்ன சிற்றுண்டி என்று சொன்னதும்...

    "வாவ். ஒரு பிடிபிடிக்கப் போகிறேன்ம்மா... இதோ... குளித்துவிட்டு வருகிறேன் என்று ஒடுவாள்.

    எல்லாம் மாறியாகிவிட்டது. இப்போது பழைய திவ்யா இல்லை.

    தாயின் முகம் கண்டதும், கடுப்பாகிவிடும் புது திவ்யா... பெற்றவளிடம் சிடுசிடுக்கும் சிடுமூஞ்சி திவ்யா...

    என் இனிய மகளை... அவளது வேடிக்கைப் பேச்சை... அவளது கலகலப்பான சுபாவத்தை இழந்து விட்டேனே என்று ஏங்கியது தாயுள்ளம்,

    பழைய திவ்யாவாக இருந்திருந்தால் இந்நேரம் சும்மா இருந்திருப்பாளா?

    பூனைக்குட்டியாய் தாயைச் சுற்றிச் சுற்றி வருவாளே.

    அம்மா... நீங்க மத்த வேலையை கவனியுங்க... நான் மிக்சியை கவனிக்கிறேன் என்று அம்மாவை விரட்டி விட்டு, அந்த வேலையைச் செய்வாள்.

    அம்மா... நீங்க தயாராகுங்க... நான் டிபனை எடுத்து வைக்கிறேன் என்று உதவுவாள். ப்ச்சு.. எல்லாம் மாறி விட்டது. மணியைப் பார்த்தாள், பாரதி எட்டு!

    வியர்வை தீர குளிக்க வேண்டும்... நேரமாகிவிட்டது. உடைகளை வாரிக்கொண்டு, குளியல் அறைக்குச் சென்றாள்.

    சந்தன சோப்பு மணம் கமழ அவள் வெளிவந்தபோது... மகள் அவளது அறையிலிருந்து வெளிப்படுவது தெரிந்தது.

    திவ்யா... காப்பி தருகிறேன்... போய் முகம் கழுவி வா என்று சொன்னதும்...

    "உங்க வேலையை நீங்க கவனியுங்க... என் வேலையை நான் பார்த்துக்கிறேன் என்று வெடுக்கென்று சொல்லி விட்டு,

    குளியல் அறையை நோக்கி சென்றாள்.

    துக்கம் நெஞ்சை கவ்வியது. கடவுளே... எனக்கென்று இருந்த ஒரே துணை என் அருமை மகள்... அவளையும் என்னிடமிருந்து பிரித்து வைக்கப் பார்க்கிறாயே? என் மீது உனக்கு கருணை இல்லையா? எப்படி இருந்த என் மகள், இப்போது எப்படி மாறிப்போய் இருக்கிறாள்? எந்த மகளாவது பெற்ற தாயை வெறுப்பாளா... என் மகள் என்னை வெறுக்கிறாளே? வேதனையில் இதயம் வலித்தது. சாப்பாட்டு மேஜையில் மகளுக்காக மல்லிகைப்பூ போன்ற இட்லியையும், தேங்காய் சட்னியையும் எடுத்து வைத்தாள். அவளுக்கு, நல்லெண்ணெய் பிடிக்கும். அதையும் எடுத்து வைத்திருந்தாள். ம்ம்... அம்மா... இட்லி மேல் நல்லெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு... இப்படி சின்னச் சின்ன விள்ளல்களாய் எடுத்து சட்னியைத் தொட்டு வாயில் போட்டுக் கொண் டால் ஆகா... யம்மி... யம்மி..." என்பாள்.

    "அதென்னடீ... யம்மி... யம்மி?

    அப்படின்னா... ருசியோ ருசின்னு அர்த்தம்மா.

    அதென்ன பாஷை யோ... யம்மி... அம்மின்னு... இன்னும் இரண்டு இட்லி வைக்கட்டுமா? சொல்லு.

    அய்யோ... இன்னும் சாப்பிட்டா குண்டாயிடுவேன். அப்புறம், இந்த குண்டம்மா யாரு? உங்க அக்காவா?ன்னு கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. இப்பவே என்னோட அம் மான்னா நம்ப மாட்டேன் என்கிறாங்க. அதெப்படிம்மா... இன்னும் சிக்குன்னு சின்னப் பொண்ணு மாதிரி இருக்கீங்க? எனக்கும் பொறாமையா இருக்கும்மா...

    அம்மாவைப் பார்த்து என்னடீ பொறாமை? உனக்கு என்ன குறை? சொல்லு.

    "சொல்லட்டுமா? நான் உங்களை மாதிரி அழகில்லைங் கிற குறைதான். என் தோழிகள் எல்லாம் உங்க அம்மா ரொம்ப அழகுடீ. சினிமா கதாநாயகி மாதிரி அம்சமா இருக்காங்கன்னு சொல்றப்போ எனக்கு எத்தனைப் பெருமை யாக இருக்கும் தெரியுமா? அதே நேரம் நான் உங்களை மாதிரி இல்லையேங்கிற ஏக்கமும் வரும். ஏம்மா... நான் என்ன நம்ம அப்பா மாதிரியா?’

    அம்மாவின் முகம் இருண்டு போனதைக் கண்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள், திவ்யா.

    ‘அடடா... அவசரத்தில் தப்பு பண்ணிட்டேனே... யாரைப் பற்றிக் கேட்டால் அம்மா வேதனையால் சுருண்டு கொள்வாளோ... அவரைப் பற்றியல்லவா கேட்டு விட் டேன்...’

    ‘சாரிம்மா... நினைவில்லாமல் கேட்டுவிட்டேன்... இனி அந்த மாதிரி கேட்க மாட்டேன்ம்மா..." என்று தாய் பாரதியின் இடுப்பைக் கட்டிக் கொண்டு கெஞ்சியவளை, எப்படி மன்னிக்காமல் இருக்க முடியும்?

    தாயின் புன்னகையைக் கண்டதும் என் செல்ல அம்மா என்று கன்னத்தில் முத்தமிட்டு, குதித்தோடியவளை வாஞ்சை யுடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குப் பெருமிதமாக இருந்தது.

    எனது முக வாட்டத்தைக் கண்டு தவிக்கிறாளே என் மகள்... என் மீது அத்தனை பாசம்? அது அன்று...

    இன்று அந்தப் பாசம் வறண்டு விட்டது. தாயின் இதயம் துடிக்க... வார்த்தையால் வாட்டும் மகளைப் பார்த்து நெஞ்சம் புண்ணாகிப் போனது.

    ஏன் இப்படி மாறிப் போனாள்?

    எதனால் வந்த மாற்றம்... தெரியவில்லை!

    இந்த எட்டு மாதங்களாய்தான் இப்படி நஞ்சில் தோய்த்த வார்த்தைகளால் நெஞ்சை அறுக்கிறாள்.

    காரணத்தையும் சொல்லாமல் வதைக்கிறாளே...

    பொங்கிய கண்ணிரை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு... கண்ணாடியில் முக ஒப்பனையை சரி செய்து கொண்டாள். முன்னுச்சியில் இரண்டு வெள்ளை முடி எட்டிப் பார்த்தது.

    ‘அம்மா... வெள்ளை முடிக்கு சாயம் பூசி விடுங்கள். என் அம்மா எப்போதும் இளமையாக இருக்க வேண்டும். அதுதான் எனக்குப் பெருமை என்பாள், திவ்யா.

    இப்போதெல்லாம் அவளே அந்தந்த வயசுக்கு ஏத்த மாதிரிநடந்துக்கணும். வயசு வந்த பொண்ணை வச்சிருந்தும்... இன்னும் நான்சின்னப் பொண்ணுதான்னு காட்டிக்கிறதில்... ச்சீ... அசிங்கம்... கண்றாவியா தெரிகிறது. யாருக்காக இப்படி, இளமையாக் காண்பிக்கனுமோ தெரியலே..." என்று வார்த்தைகளைத் தீப்பொறிகளாய் கக்குகிறாள்.

    அவள் மனதை எந்தப் பேய் பிடித்து ஆட்டுகிறதோ தெரியவில்லையே...

    Enjoying the preview?
    Page 1 of 1