Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Virumbinen Uyire..
Unnai Virumbinen Uyire..
Unnai Virumbinen Uyire..
Ebook116 pages1 hour

Unnai Virumbinen Uyire..

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352856909
Unnai Virumbinen Uyire..

Read more from Lakshmi Praba

Related to Unnai Virumbinen Uyire..

Related ebooks

Reviews for Unnai Virumbinen Uyire..

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Virumbinen Uyire.. - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    உன்னை விரும்பினேன் உயிரே…

    Unnai Virumbinen Uyire…

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    உன்னை விரும்பினேன் உயிரே...

    லட்சுமி பிரபா

    1

    வானம் மேகமெனும் தூரிகை கொண்டு மழை என்னும் ஒயத்தை பூமியின் மீது மெல்ல வரைய ஆரம்பித்தது.

    மண் வாசனை கும்மென்று கிளம்பியது. தோட்டத்துப் பூக்கள் சந்தோஷமாய் தலையாட்டின.

    மழையின் துறலையே விழுதுகளாய் பிடித்து ஏறி வானத்தைத் தொட்டு விட வேண்டும் என்ற ஆசைகங்காவுக்குள் ஜனித்தது.

    கங்கா தூறல் வலுத்து பெரிய மழையா பொழியப் போகுது. என் னத்துக்கு தோட்டத்துல நனைஞ்சுட்டு நிக்கிறே? 

    அடுக்களை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த அம்மா ருக்மணி அன்புடன் அதட்டினாள். 

    இந்தத் தோட்டம், வீடு...எல்லாமே இன்னும் நாலே நாள்ல கை விட்டுப் பேர்குது. நாம வாடகை வீட்டுக்கு குடி போக போறோமே? தோட்டத்துப் பூக்களை ரசிச்சுப் பார்க்கிறதுக்கு இனி நமக்கு குடுப் பினை இல்லாம போயிடுமே அம்மா?

    குரல் தழுதழுக்கப் பேசினாள் கங்கா.

    அவளது அழகியிமு மழைத்துளிகள் பட்டு வழிந்தன.

    உள்ளூர சோகம் இருந்தாலும்.இயற்கையை அணுஅணுவாய் ரசிப்பதில் அவளுக்கு அலாதி சுகம் தான்!

    வாஸ்தவம் தான் கங்கா அதுக்காக கொட்டற மழையில சொட்டச் சொட்ட நனைஞ்சர். உன் உடம்பு என்னத்துக்கு ஆகும்? புதுமழை வேற.டக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கிட்டா கஷ்டம். நான் சொன்னா கேளுடா அப்பாவும் போயிட்டாரு. இந்தக் குடும்பத்த தாங் கறதுக்கு நீ ஒருத்தி தானேடா இருக்கே? நீ உடம்பு முடியாம படுத்துட் டேன்னா... 

    அம்மாவின் குரல் உடைந்து பிசிறடித்தது.

    கங்காவால் இதைத் தாங்க முடியவில்லை.

    சரி...சரிம்மா... உள்ளே வாடின்னா...வந்துட்டுப் போறேன். இதுக்கு என்னத்துக்கு கண் கலங்கறே?

    இரண்டே தாவலில் வீட்டுக்குள் ஓடி வந்தாள். 

    அடுக்களைக்குள் நுழைந்து அம்மாவின் முதுகின் பின்னால் வந்து நின்று...அம்மாவின் புஜத்தில் கை வைத்து தன் பக்கமாய் திருப்பினான்.

    அம்மா! உனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்? எந்தக் காரணத்தைக் கொண்டும், நீ அழக்கூடாதுன்னு சொன்னேனா இல் லையா? ஏற்கனவே உனக்கு ஹார்ட் ரொம்பவும் வீக்கா இருக்குன்னு டாக்டர் எச்சரிக்கை பண்ணியிருக்காருல்ல? அப்பா போயிட்டாரு. நீயும் எங்களை விட்டுட்டுப் போயிட்டா...நாங்க அனாதைகளாயிடுவோம். எங்களுக்கு நீ தானேம்மா ஆத அளவு கூட கவலைக்கு இடம் கொடுக்காதேம்மா கடவுள் மேல பாரத்தைப் போடுவோம். நடக்கறது தானேம்மா நடக்கும்?

    நீ சொல்றது சரிதான்கங்கா எனக்கு இத்தனை ஆறுதல் வார்த்தை கள் சொல்றே. ஆனா நீயே கலங்கித்தானே போறே?

    நீ தானம்மா எங்களுக்கு மூலாதாரம். மத்தபடி எது வந்தாலும் நான் கலங்க மாட்டேன் அம்மா!

    போடி பொய் சொல்றியே?

    சீச்சீ...நான் நீ பெத்தப்பொண்ணும்மா. பொய் என்னத்துக்கு சொல்லப் போறேன்? 

    தோட்டத்துப் பூக்களை ரசிக்கிறதுக்கு...இனிமே நமக்கு குடுப் பினை இல்லையேன்னு சொல்லி...நீ தானே வருத்தப்பட்டே?...

    "அதை வருத்தம்னு சொல்ல முடியாது. ஒரு வித ஏக்கம்னு சொல்லலாம்...   

    உன் குரல்லே தொணிச்ச வருத்தத்தை என்னால புரிஞ்சுக்க முடியாதுன்னு நீ நினைக்கிறியா? பூசி மெழுகற வேலையெல்லாம் என்கிட்ட நடக்காதுடா

    மகளின் பூ முகத்தை வருடியபடி பேசினாள் ருக்மணி.

    அம்மா! உன் கிட்டே பேசி என்னால ஜெயிக்க முடியாதும்மா... இன்னிக்கு உருண்டைவடைக்குழம்பு வேணும்னுதம்பிகேட்டானே? ஊற வச்ச பருப்பை வடைக்கு அரைக்கட்டுமா?"

    ஹூம் பேச்சை மாத்தறதிலே நீ கெட்டிக்காரி தான் கங்கா...! எனக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா...

    சும்மா இரும்மா...காலங்காத்தால அபசகுணம்ா பேசிட்டி ருக்கே...

    ஊற வைத்த கடலைப்பருப்பை மிக்ஸியில் போட்டு சீரகம், பச்சை மிளகாயை சேர்த்து நீர்தெளித்து அரைக்கப் போனாள் கங்கள்.

    கொஞ்சம் பொறு கங்கா நெருப்புன்னா வாய் வெந்துடாது...நான் சொல்றதைக் கேளு...

    என்னம்மா சொல்லப்போறே? உனக்கு ஒண்ணும் ஆகா தும்மா...நூறு வயசுக்கு நீ இருக்கத்தான் போறே... 

    எனக்கு மட்டும் உங்களை அம்போன்னு அநாதவரா தவிக்க விட்டு  போகணுன்னு ஆசையா? நிதர்சனத்தைப் புரிஞ்சுகுட்டு... உஷாரா நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிடறேனே?

    சரி சொல்லும்மா... 

    உன் தங்கச்சி தீபிகாவை மட்டும் நல்ல எடத்துல கரையேத்தி விட்டா போதும். தம்பி அமுதன் ஆம்பளை அவனை நீ மேலே படிக்க வைக்கக்கூட வேண்டாம். டீக்கடையில கூட வேலைக்கு சேர்ந்து...அவன் பொழைச்சிப்பான்!..."

    "அம்மா! என்னம்மா பேசறே நீ அமுதன் ரேங்க் ஹோல்டர்...அ வன் பிளஸ்2 வில நல்ல மார்க்ஸ் எடுக்கத்தான் போறான். ஒரு லட்சி யத்தோட படிச்சிட்டுருக்கான்.

    அவனைப் போய்...யாராச்சும் படிப்பை நிப்பாட்டி வேலைக்கு அனுப்புவாங்களா? அவன் எடுக்கப்போற மார்க்ஸுக்கு கண்டிப்பா... என்ஜினியரிங் காலேஜில சீட் கிடைச்சிடும். அவனுக்கொரு நல்ல எதிர்காலத்தை அமைச்சுத்தர வேண்டியது என் கடமையாச்சே? ஏன் இப்படிப் பேசறே?"

    உனக்கு பாரமா இருக்கக் கூடாதுன்னு நெனச்சு..."

    சும்மா இரும்மாதங்கச்சியை மட்டும் கட்டிக்குடுத்துட்டு தம் பியை நட்டாத்துல விட்ச் சொல்றியாக்கும்?

    பெத்தவங்க நாங்க செய்ய வேண்டியதை...நீ சுமந்துகிட்டு இருக்கியேன்னு தான்...

    தப்பும்மா...அது என் கடமையம்மா...அக்கான்னா யாரு? அம்மா ஸ்தானம் தானே? சுமையா நான் ஒருக்காலும் நினைக்க மாட்டேன். இனிமே இந்த மாதிரி பேசி...என்னை நோகடிக்காதேம்மா...

    நான் நோகடிக்கலைடா...உன்னை மென்மேலும் கஷ்டப்படுத் தக்கூடாதுன்னு தான்... 

    "எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல. நான் இந்த வீட்டுக்கு மூத்தப் பொண்ணும்மா... உரிமையா அதைப் பண்ணு இதைச்

    Enjoying the preview?
    Page 1 of 1