Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasai Thee Valarthen
Aasai Thee Valarthen
Aasai Thee Valarthen
Ebook108 pages48 minutes

Aasai Thee Valarthen

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105702920
Aasai Thee Valarthen

Read more from Vidya Subramaniam

Related to Aasai Thee Valarthen

Related ebooks

Reviews for Aasai Thee Valarthen

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aasai Thee Valarthen - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    ஆசைத் தீ வளர்த்தேன்

    Aasai Thee Valarthen

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    அத்தனை சாமான்களும் மூட்டை கட்டி கூடம் முழுக்க வைத்தாயிற்று. புத்தகங்களே நாலு மூட்டை தேறும். பாத்திரங்கள் தனியே மூன்று மூட்டை . துணி, மணி இதர சாமான்கள் என்று பிரித்து பிரித்து மேல் அப்பாவும் சந்துருவும் கட்டி வைத்தார்கள். யமுனா வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள். அம்மா அடுக்களையில் அழுது சிவந்த கண்களோடு ஸ்வாமி படங்கள், பூஜை சாமான்களைத் தனிப் பெட்டியில் பத்திரமாய் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். யமுனாவைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    யாருமே யமுனாவோடு சரியாகப் பேசவில்லை. யமுனா கொல்லைப்புறக் கதவைத் திறந்து கொண்டு பின்பக்கம் வந்தாள். கதவு திறக்கும்போதே காற்று முகத்தில் மோதியது. அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த கொல்லைத் தாழ்வாரத்தில்தான் தாத்தாவும், தாத்தாவுக்குப் பிறகு அப்பாவும் கயிற்றுக் கட்டிலில் படுக்கை விரித்து ஓய்வெடுப்பார்கள். அம்மா மூங்கில் தட்டு நிறைய அரிசியோ, கோதுமையோ வைத்துக் கொண்டு கல்லும் களிமண்ணும் பொறுக்கி புடைத்து சுத்தப்படுத்தியபடி பாட்டியோடு ஊர்க்கதையெல்லாம் பேசிக் கொண்டிருப்பாள்.

    வாசல்பக்கத்து அறையில் சந்துரு அண்ணன் தன் சிநேகிதர்களோடு அமர்ந்து படிப்பான். சமையக்கட்டுக்கும், வாசல் அறைக்குமாக யமுனாதான் டிபனும் காப்பியும் நொறுக்குத் தீனிகளும் சுமந்து சென்று அல்லாடுவாள். வாசல் அறையில் கிரிக்கெட் கமெண்ட்ரி அதிரும் என்றால் பின் கட்டில் அதற்கு நேர்மாறாக சாமிபாட்டு கேட்கும். நடு ஹாலில் படிக்க உட்காரும் யமுனாவுக்கு இரண்டு வித சத்தமும் கலவையாய் விழுந்து காது வலிக்கும்.

    அடடாடா.. மாத்தி மாத்தி என்ன சத்தம் இது. நா சாரதியாத்துக்குப் போய் அவனோட படிச்சுக்கறேன். யமுனா தன் புத்தகங்களோடு ரெண்டு வீடு தள்ளியிருக்கும் சாரதியின் வீட்டுக்குப் போய் விடுவாள். சாரதிக்கும் அவளுக்கும் ஒரு வயது வித்யாசம். பத்தாவது பரீட்சையின் போது அவனுக்கு டைபாய்டு காய்ச்சலால் பரீட்சை எழுத முடியாமல் போக ஒரு வருடம் வீணாகிவிட்டது. பால்ய வயது முதல் விளையாட்டுத் தோழன் என்பதால் அதற்குப் பிறகு படிப்புக்கும் அவனே தோழனானான். ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ இரண்டு வருடமும் இருவரும் சேர்ந்துதான் படித்தார்கள்.

    சேர்ந்து வளர்ந்து, சேர்ந்து படித்து சேர்ந்து விளையாடி சேர்ந்தே எப்போதும் இருந்ததுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணமாயிற்று. மூன்று தலைமுறைகளாய் வாழும் வீட்டைவிட்டு சொந்த மண்ணை விட்டுப்போவது என்று அப்பாவும் அண்ணாவும் முடிவெடுத்ததற்கு காரணம் அவளும் சாரதியும்தான். ஊரைவிட்டுக் கிளம்ப அம்மாவுக்கு சுத்தமாய் இஷ்டமில்லை.

    வாசலிலிருந்து கொல்லை வரை மூன்று கட்டுகளுடன் ஒரு சின்னத் தெருவே அடங்கும் அளவு நீண்ட வீட்டையும், கொல்லையையும், மனிதர்களையும் மண்வாசத்தையும் விட்டு வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள். அப்பாவும், அண்ணாவும் அதைவிட அதிகமாகப் போயே தீரவேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க வேறு வழியின்றி பணிந்தாள் அவள். எல்லாம் உன்னால்தானே என்று யமுனாவிடம் கோபப்பட்டாள். யமுனா எது குறித்தும் கவலைப்படவில்லை. யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளவும் விரும்பவில்லை. தான் எடுத்த முடிவில் எந்தத் தவறுமில்லை என்று நம்பினாள்.

    தென்னை மரங்களுக்கிடையில் கட்டியிருந்த ஜூலா அவிழ்க்கப்படாமலிருந்தது. சாரதி அவளுக்காக வாங்கிவந்து கட்டியது. யமுனா மரஸ்டூலை எடுத்து வந்து மரத்தினருகில் போட்டு ஏறி ஜுலாவை அவிழ்க்க முயன்றாள். சாரதி போட்டிருந்த முடிச்சை அவன்தான் அவிழ்க்க வேண்டும் போலிருந்தது. அப்படி இறுகிப் போயிருந்தது. யமுனா ஸ்டூலைவிட்டு இறங்கினான். கொல்லை வாசலில் நின்றவாறு சும்மா அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    முடிச்சு இறுகிடுத்து அவுக்க முடியல. யமுனா, அம்மா எதுவும் கேட்காமலே சொன்னாள்.

    ஏன் அவுக்க முடியாட்டா என்ன ? உனக்குதான் அறுத்தெறியத் தெரியுமே. அம்மா வெடுக்கென்று சொல்ல யமுனா முகத்தை சாதாரணமாக வைத்துக் கொள்ளப் பெரிதும் பிரயத்தனப்பட்டான்...

    நா போய் சாரதியையே வந்து அவுத்துத் தரச் சொல்றேன்.

    வெக்கமால்ல உனக்கு?

    'ஜூலாவை அவுத்துத் தரச் சொல்றதுக்கு எதுக்கு வெக்கப்படணும்?"

    இவ்ளோ ஆனதுக்கப்பறமும் அவனைக் கூப்பிடறேன், பேசறேங்கறயே.

    யமுனா அம்மாவை முறைத்துப் பார்த்தாள். வா நாம்

    இப்ப என்ன ஆச்சுன்னு நீங்கள்ளாம், இந்தப் பாடு படுத்தறேள் என்னை ?

    கேக்க மாட்ட..? உனக்கென்ன ஊரே பத்தியெறிஞ்சாலும் உம்பாட்டுக்கு போய்டுவ. உன்னால் எங்களுக்கில்ல அவமானமும், அவதியும்.

    சாரதியை நா கல்யாணம் பண்ணிக்க விரும்பலன்னு சொன்னதுல உங்களுக்கென்ன அவமானம்னுதான் புரியல.

    விரும்பாமதான் அவங்ககூட ஊர் முழுக்க சுத்தினயான்னு....... நாங்கேக்கல. ஊரெல்லாம் கேட்டு காறித்துப்பறது. தலநிமிர்ந்து நடமாடிண்ருந்த உங்கப்பாவை வீட்டுக்குள்ளயே முடக்கிப் போட்டுது. இப்ப இந்த ஊரே வேணாம்னு, தலமுறை தலைமுறையா வாழ்ந்த வீட்டைவிட்டு நாங்க கிளம்பறதுக்கு காரணம் நீ. இவ்ளோத்துக்கப்பறமும் அவனைக் கூட்டிண்டு வரேன்னு சர்வசாதாரணமா சொல்றன்னா உனக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருக்கணும்டி?

    அம்மா பொருமினாள்.

    எனக்கு நெஞ்சழுத்தமில்லம்மா உங்களுக்குதான் பிடிவாதம் என்னைப் புரிஞ்சுக்கப்படாதுன்னு யமுனா ஜூலாவை அவிழ்க்கும் எண்ணத்தை விட்டுவிட்டு அம்மாவைக் கடந்து உள்ளே போனாள். அம்மாவின் பார்வை அவள் முதுகைத் துளைத்தது.

    மச்சுப்படிகள் சப்திக்க மாடியறைக்கு வந்தாள்.

    இது மாடியறையில்லை. யமுனா என்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1