Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthi Munai Kutram
Puthi Munai Kutram
Puthi Munai Kutram
Ebook85 pages32 minutes

Puthi Munai Kutram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'புத்திமுனைக் குற்றம்' என்கிற இந்த நாவலை எழுதிமுடித்துவிட்டு வாசித்துப் பார்த்த போது, இந்தக்கதையை சுவாரசியமாகத் தொடர்வதற்கான வாய்ப்புகள் தென்பட்டன. இதன் தொடர்ச்சியாக இதே கதாபாத்திரங்களோடு 'புத்தி முனை வித்தை' என்ற தலைப்புடன் கூடிய நாவலை எழுதி முடித்தேன்.

இதே கதையை மூன்றாம் பாகமாக "புத்தி முனை திருப்பம்" என்கிற தலைப்பில் தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் தெரிந்தாலும்... பிடிவாதமாக இந்தக் கதை முற்றுமே முற்றும்!

அனிதா அவனைச் சமாளித்தாளா இல்லை யுவராஜ் மாட்டிக் கொண்டானா போன்ற கேள்விகளுக்கான விடைகளை அவரவர் மனத் திரையில் காண்க...

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351081
Puthi Munai Kutram

Read more from Pattukottai Prabakar

Related to Puthi Munai Kutram

Related ebooks

Related categories

Reviews for Puthi Munai Kutram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthi Munai Kutram - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    புத்தி முனைக் குற்றம்

    Puthi Munai Kutram

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2 - ஒரு…

    அத்தியாயம் 3 - குற்றம்

    அத்தியாயம் 4 - செய்யப்…

    அத்தியாயம் 5 - போகிறேன்…

    அத்தியாயம் 6 - போலீஸ்….

    அத்தியாயம் 7 - என்னைப்….

    அத்தியாயம் 8 - பிடிக்குமா…

    அத்தியாயம் 9 - இல்லை!

    அத்தியாயம் 10 - பிடிக்காதா?...

    என்னுரை

    அன்புள்ள உங்களுக்கு…

    வணக்கம். புத்திமுனைக் குற்றம் என்கிற இந்த நாவலை எழுதிமுடித்துவிட்டு வாசித்துப் பார்த்த போது, இந்தக்கதையை சுவாரசியமாகத் தொடர்வதற்கான வாய்ப்புகள் தென்பட்டன. இதன் தொடர்ச்சியாக இதே கதாபாத்திரங்களோடு புத்தி முனை வித்தை என்ற தலைப்புடன் கூடிய நாவலை எழுதி முடித்தேன்

    இதே கதையை மூன்றாம் பாகமாக புத்தி முனை திருப்பம் என்கிற தலைப்பில் தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் தெரிந்தாலும்… பிடிவாதமாக இந்தக் கதை முற்றுமே முற்றும்!அனிதா அவளை சமாளித்தாளா இல்லை யுவராஜ் மாட்டிக் கொண்டானா போன்ற கேள்விகளுக்கான விடைகளை அவரவர் மனத் திரையில் காண்க!

    பிரியங்களுடன்

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    1

    த்து அத்தியாயங்களைக் கொண்ட இந்தக் கதையின் சுருக்கம்:

    நான் ஒரு குற்றம் செய்யப் போகிறேன். போலீஸ் என்னைப் பிடிக்குமா? இல்லை பிடிக்காதா?

    இனி விரிவான கதை:

    நான் யுவராஜ்.

    பாண்டியணுக்கு ராஜ்.

    அனிதாவுக்கு யுவா.

    பாண்டியன், அனிதா இவர்கள் சற்றுத் தள்ளி வருவார்கள்.

    எனக்கு தொழில் தூரிகை. மூன்று வருடங்களாக, ஜனரஞ்சகப் பத்திரிகைகளின் வாசகர்களில் அதிக ஆர்வமுள்ளவர்களுக்கு என்னை தெரியும். சில தடவை என் புகைப்படம் வெளிவந்திருக்கிறது.

    தொடர்கதைகளுக்கும், சிறுகதைகளுக்கும் ‘யுவராஜ்’ என்றுக் கையெழுத்திட்டு ஓவியங்கள் நிறைய வரைந்திருக்கிறேன். வரைந்து வருகிறேன். இந்த நாளில் மேஜை மேல் ஏழு கதைகள் காத்திருக்கின்றன.

    இன்றைக்குப் பத்திரிகைகளில் வரையும் பிஸியான ஓவியர்களில் நானும் ஒருவன். விரல்களில் சொடக் கெடுக்கக் கூட நேரமில்லாமல் வரைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இரவு தூங்கப் போவது 3 யு.ஆ.

    இதில் நடுவில் நேரம் ஒதுக்கி எப்படிக் காதல் செய்கிறேன் என்பது எனக்கே புதிர். அவள் பெயர் தான் மூன்றாவது வரியில்.

    தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் போகின்ற பஸ் ரூட்டில் வலங்கைமான் என்றொரு ஊர். நீங்கள் ஒரு தும்மல் போட்டு நிமிர்வதற்குள் சடுதியில் கடந்து விடும்.

    அதுதான் யாம் பிறந்த மண். அப்பா கும்பகோணம் துளிர் வெற்றிலையை வேட்டியில் துடைத்து அழகாக காம்பு கிள்ளி, நடுவில் தொட்டு சுண்ணாம்பு தடவி மடித்து சீவல் மெல்லும் சிவப்பு வாய்க்குள் போட்டுக் கொள்வது – ஒரு ரசிக்கக் கூடிய காட்சிதான்.

    ஆனால் தூங்கும் நேரம் போக திண்ணையில் உட்கார்ந்து சதா சர்வ காலமும் துப்பித் துப்பி வீதியையே சிவப்பாக்கிக் கொண்டு, கூட இரண்டு பேரை வைத்துக் கொண்டு, "கோணார் வீட்ல நிச்சயம் பண்ண வந்தவங்க துப்பிட்டுப் போய்ட்டாங்களாம், தெரியுமா? டைப் இன்ஸ்ட்யூட் வெச்சு நடத்துதே கோகிலா அவ புருஷன் உசுரோடதான் இருக்கானாம். ஆனா தாலியைக் கழட்டி வீசிட்டாளம்ப்பா’ என்று சென்சேஷனல் செய்திகளைப் (பல சமயம் கற்பனையில் உருவாக்கி) பேசிக் கொண்டிருந்தால்… அது ரசிக்க முடியாத காட்சி.

    குத்தகைக்கு விட்ட நிலத்தில் இருந்து சாப்பாட்டிற்கு நெல் வந்து விடும். மற்ற தேவைகளுக்கு அம்மா எலிமெண்ட்டரி பள்ளியில் ‘அணில், ஆடு, இலை, ஈக்கள்’ என்று பாடம் நடத்தி பிரைவேட் மேனேஜ்மெண்டில் இருந்து சொற்பத் தொகை வாங்கி வருவாள். கொண்டை போட்ட டீச்சர்.

    நீயாவது நல்லாப் படிச்சி பெரிய ஆளா வரணும் யுவராஜ் என்பாள் என் அம்மா அடிக்கடி. குறிப்பாக நான் சாப்பிடும் போதெல்லாம்.

    ப்ளஸ் டூ வரைக்கும் படித்தேன். மேலே படிக்க எக்கனாமிக்ஸ் சிக்கல். வலங்கைமானிலேயே வீட்டு வாசலில் ஒரு போர்டு மாட்டினேன்.

    இவ்விடம் விளம்பர போர்டுகள், ஸ்லைடுகள் எழுதப்படும்.

    யாரிடமும் டிரைனிங் கிடையாது. பள்ளி நாட்களிலேயே நோட்டுப் புத்தகங்களில் பாடங்களை விட படங்கள்தான் அதிகம் போட்டு வைத்திருப்பேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1