Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Vizhithathu Mella!
Manam Vizhithathu Mella!
Manam Vizhithathu Mella!
Ebook145 pages1 hour

Manam Vizhithathu Mella!

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.

She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118502415
Manam Vizhithathu Mella!

Read more from Uma Balakumar

Related to Manam Vizhithathu Mella!

Related ebooks

Reviews for Manam Vizhithathu Mella!

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Vizhithathu Mella! - Uma Balakumar

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மனம் விழித்தது மெல்ல!

    Manam Vizhithathu Mella!

    Author:

    உமா பாலகுமார்

    Uma Balakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-balakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அந்தி வானம், வானவில்லை மாலையாகச் சூடியபடி, புது மணப்பெண்ணின் குங்குமக் கன்னம் போலச் சிவந்திருந்தது.

    யாரோ துரத்துவது போல், மேகங்கள் நகர்ந்து கொண்டிருக்க, மலர்கள் வாடிய முகத்துடன், சூரியக் காதலனுக்குப் பிரியாவிடை அளித்தபடி, ஒற்றைக்காலில் நின்றிருந்தன.

    அந்த அலுவலகத்தில் எம்.டி. அறையிலிருந்து கௌசிக், அப்போதுதான் தன் வேலைகளை முடித்துவிட்டு எழுந்து சோம்பல் முறித்தபடி ஜன்னலருகில் சென்று பார்த்தபோது, மாலை மணி ஆறாகி இருந்தது.

    வெளியே தெரிந்த தோட்டம், காற்றின் சுவாசச் சீறலும், தென்றலின் வருடலும் இல்லாததால், அசைவின்றி ஒரு கை தேர்ந்த ஓவியனின் படைப்பைப் போலிருந்தது.

    அப்போதுதான், திடீரென்று அந்த சப்தம் பெரிதாய் அவன் காதுகளில் கேட்டது.

    முதலில் என்னவென்று புரியாவிட்டாலும், ஏதோ வெடி வெடித்து ஓய்ந்தது போலிருந்தது அவனுக்கு!

    தொழிற்சாலை முடிந்து ஊழியர்கள் அனைவரும் சென்றுவிட, ஆஃபீஸில் மட்டுமே சிலர் மீதமிருந்தனர்.

    கௌசிக் பதட்டத்துடன் வெளியே வந்தபோது, எதிரில் ப்யூன் ஓடிவந்தான்.

    என்னாச்சு கோபால்… என்ன சத்தம் அது? கேள்வியாய் எழுந்தது குரல்.

    சார்! நம்ம ஃபேக்டரிக்குப் பின்னாடி இருக்கிற ரயில் பாதையில, ஒரு ட்ரெயின் ஆக்சிடெண்ட் ஆயிடுச்சி சார்! எல்லாரும் ஓடி இருக்காங்க என்றபோது, அவனும் ரூமைப் பூட்டிவிட்டு, பின்புறம் சென்றான்.

    அங்கு நான்கைந்து ரயில் பெட்டிகள், பூமியை முத்தமிட்டபடிக் கவிழ்ந்து கிடந்தன. எங்கும், மனதைக் காயப்படுத்தும் தீனமான சப்தங்கள்!

    அந்தக் காட்சியைக் காணவே கொடுமையாய் இருக்க, கௌசிக்கும் அலுவலகத்தில் வேலை செய்தவர்களும் ஓடிச் சென்று தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆரம்பித்தனர்.

    இரவும் பகலும் கை குலுக்கிக் கொண்டதில், பொழுது மெதுவாகக் கருமையை விரிக்க ஆரம்பித்தது.

    அவன், தன் ஃபேக்டரியிலிருந்து இரண்டு பெரிய ஃப்ளாஷ் லைட்டை எடுத்து வரச் செய்து, அங்கிருந்த மீட்புப் பணியினருக்கு உதவினான்.

    அப்போது அவனுடைய ‘செல்’ இசையாய் அழைக்க, எடுத்துப் பார்த்தால் அவன் அம்மா பாகீரதிதான் பேசினார்.

    அவரிடம், அம்மா… நம்ம ஃபேக்டரிக்குப் பின்னாடி இருக்கிற ரயில் பாதையில, ஒரு ட்ரெயின் ஆக்சிடெண்ட் ஆயிடுச்சிம்மா. நாங்க எல்லாரும் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கோம் நான் வர லேட்டாகும். நீங்க சாப்பிட்டுடுங்க! என்று கூறி வைத்தான்.

    ரயில்வே போலீஸும், மீட்புப் பணியினரும் வேகமாக வந்ததில், நிறையப் பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

    வலியிலும் வேதனையிலும் இருந்தவர்கள், உடனே ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குச் சென்றனர்.

    ஆனாலும், நிறைய உயிர்ச்சேதம் இருந்தது. இறந்தவர்களையும் ஆம்புலன்ஸில் ஏற்றி பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து முடித்துவிட்டுத் திரும்பி வரும்போதுதான், ஒரு புதர் அருகே யாரோ முனகுவது போல் சப்தம் கேட்டது.

    டார்ச் அடித்துப் பார்த்தால், ஒரு இளம் வயதுப் பெண் அங்கு மயங்கிக்கிடப்பது தெரிந்தது.

    அந்தப் பெண்ணைத் தூக்கிக் காரில் ஏற்றிக் கொண்டு உடனே தங்கள் குடும்ப டாக்டரின் மருத்துவமனைக்குச் சென்றான் கௌசிக்.

    அந்தப் பெண்ணுக்கு மயக்கம் தெளியவில்லை. டாக்டர் முரளியிடம் அவளை ஒப்படைத்துவிட்டு, வெளியில் காத்திருந்தான் அவன்.

    சிறிதுநேரம் கழித்து வெளியில் வந்த முரளி அந்தப் பெண்ணுக்குத் தலையில அடிபட்டிருக்கு கௌசிக்… ட்ரீட் பண்ணியிருக்கேன். அப்சர்வேஷன்லே ஒரு நாள் இருக்கட்டும். இன்னும் நினைவு வரலை. நீங்க போலீசுக்கு சொல்லிடுங்க என்றார்.

    சரி என்று தலையசைத்தவன், அந்தப் பெண்ணைத் தேடி யாராவது வந்தா, எனக்கு ஒரு கால் பண்ணுங்க முரளி! என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.

    வீட்டிற்குச் செல்லும் வழியில், ஏனோ மனம் அந்தப் பெண்ணைச் சுற்றியே ஓடியது.

    அவளைக் கையில் ஏந்தியபோது, அப்போதுதான் புதிதாய் மலர்ந்த ஒரு மலரைப் போல் இருந்த அவள் முகமும், அதில் தெரிந்த அமைதியும் ஆச்சர்யமூட்டுவதாய்!

    யார் வீட்டுப் பெண்ணோ பாவம் என்று மனம் இரங்கிய மறுகணமே, இந்த அழகு யாருடைய நிம்மதியை அழிக்கப் பிறந்திருக்கிறதோ என்ற விரக்தியும், உடனே வந்தது.

    போர்டிகோவில் சென்று கார் நின்றதும், வாசலிலேயே அவனுக்காகக் காத்திருந்த பாகீரதி ஓடிவந்தார்.

    என்னாச்சுப்பா. யாருக்கும் ஒண்ணும் ஆகலையே… ஏன் இப்படி? என்று கவலைப்பட்டார்.

    அவரைச் சமாதானப்படுத்தி விபரம் கூறி உள்ளே அழைத்துச் சென்றவன், முரளியின் ஹாஸ்பிடலில் தான் அட்மிட் செய்திருக்கும் பெண்ணைப் பற்றிக் கூறினான்.

    ஆர்வத்துடன் கேட்டவர், நாளைக்கு நீ அந்தப் பெண்ணைப் பார்க்கப் போறப்ப நானும் வரேன் கௌசிக் என்றார்.

    வேண்டாம்மா. நீங்க எதுக்கு வீணா அலையணும்? எப்படியும், போலீஸில சொன்னப்புறம், அவங்க வீட்டிலேயிருந்து, வந்து அழைச்சிட்டுப் போயிடப் போறாங்க… அவ்வளவுதானே! நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடறேன்… நீங்க படுத்துக்கங்க என்று கூறிவிட்டு, அலுப்புடன் சென்றவனையே, யோசனையுடன் பார்த்தார் பாகீரதி.

    அவனுடைய அப்பா வேதாசலம் இறந்தபிறகு, மூன்று வருடங்களாக கௌசிக்தான் தொழிலை ஏற்று நடத்துகிறான். பி.இ. முடித்திருக்கிறான்… இன்னும் திருமணமாகவில்லை!

    ஒரு கசப்பான அனுபவத்திற்குப்பிறகு, திருமணம் என்ற வார்த்தையே கசப்பாய்… அவனுக்கு வெறுப்பைத் தருகின்ற விஷயமாய்!

    பாகீரதி, கல்யாணத்தைப் பற்றி ஆரம்பித்தாலே வேண்டாம் என்று மறுப்பவன், இன்னும் தன் மனதுக்குப் பிடித்த மாதிரி ஒரு பெண்ணைச் சந்திக்கவில்லை என்பான்.

    ஒரு பெருமூச்சுடன் டிபன் எடுத்து வைத்தவர், அவன் சாப்பிட்ட பிறகே, படுப்பதற்குச் சென்றார்.

    பிறகு, ரயில்வே போலீஸுக்கும், அந்த ஏரியா போலீஸுக்கும் கௌசிக் விபரத்தைக் கூறினான்.

    அங்கு ட்யூட்டியில் இருந்த இன்ஸ்பெக்டர், காலையில் மருத்துவமனைக்கு சென்று, அந்தப் பெண்ணைப் பார்ப்பதாகக் கூறினார்.

    மறுநாள் காலையில் சீக்கிரமே கிளம்பி, மருத்துவமனைக்குச் சென்றால், அப்போதும் அந்தப் பெண் கண்விழித்திருக்கவில்லை.

    அங்கு காத்திருந்த இன்ஸ்பெக்டர், அவனிடம் விசாரித்துவிட்டு, அந்தப் பெண்ணுக்கு நினைவு வந்ததும் தகவல் கொடுக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றார்.

    கௌசிக்கிற்கு, அன்று முழுவதும் வேலை சரியாக இருந்தது.

    அன்று மாலை, டாக்டர் முரளியின் அழைப்பு அவனைக் கலைத்தது.

    கௌசிக்… அந்தப் பெண்ணுக்கு நினைவு வந்துடுச்சி… நீங்க உடனே வரமுடியுமா? என்று கேட்டார்.

    உடனே கிளம்பிச் சென்றபோது, முரளி அவனைத் தனியே அழைத்துப் பேசினார்.

    ஸாரி கௌசிக்… அந்தப் பெண்ணுக்கு தன்னைப்பத்தின எதுவுமே நினைவு இல்லை. தலையில பலமா அடிபட்டதுல, தான் யாருங்கறதையே மறந்துட்டா! எதுவுமே ஞாபகம் வரலைன்னு சொல்றா. இது ஒரு வகையான அம்னிஷியா! எந்த நேரத்திலயும் பழைய நினைவு வரலாம்… ஆனா எப்பன்னுதான் சொல்ல முடியாது

    Enjoying the preview?
    Page 1 of 1