Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thulli Varukuthu Vel
Thulli Varukuthu Vel
Thulli Varukuthu Vel
Ebook118 pages1 hour

Thulli Varukuthu Vel

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100702709
Thulli Varukuthu Vel

Read more from Indira Soundarajan

Related to Thulli Varukuthu Vel

Related ebooks

Related categories

Reviews for Thulli Varukuthu Vel

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thulli Varukuthu Vel - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    துள்ளி வருகுது வேல்

    Thulli Varukuthu Vel

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    என்னுரை

    இந்தப் புத்தகத்தில் வெளியாகியுள்ள இரண்டு நாவல்களுமே வாசகர்களை வெகுவாக கவர்ந்தவை. அதிலும் 'துள்ளி வருகுது வேல்’ பல வாசகர்களை துள்ளி எழச் செய்த நாவல்! திருச்செந்தூரில் குடிகொண்டிருந்த அந்த செந்திலாண்டவனின் பரம கருணையைக் கூறிடும் நாவல்.

    எனது படைப்புகளில் எப்பொழுதும் கேள்விகள் மிகுதியாக இருக்கும்... அதற்கான விடைகளும் தேங்காய் உடைத்த மாதிரி இருக்கும். இந்த நாவல்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை.

    சமுதாயக் கதைகளில் மனிதப்பாத்திரங்கள் கதாநாயகன் கதாநாயகியாக அமைவார்கள். காலத்தால் அவர்களுக்கு தீர்வுகள் ஏற்படும். ஆனால் ஆன்மிகத்தையும். ஒரு குறிப்பிட்ட இறைவடிவையும் மனத்தில் கொண்டு எழுதப்படும் நாவல்களில் அந்த இறைவடிவம் தான் எல்லாமாய் இருக்கும்… அதுவே தீர்வையும் தருவதாக உள்ளது.

    திருச்செந்தூருக்கு நான் பலமுறை பாதயாத்திரையாக சென்றவன். எனக்கு அதன் வழித்தடங்கள் மிக பரிச்சயமானவை. இயன்ற போதெல்லாம் திருச்செந்தூர் சென்று வணங்கி விட்டு வருவேன். கடலும் வெளியுமாய் உள்ள அந்த ஸ்தலம் அங்கு இருக்கும் போதுவிட அங்கிருந்து வந்தபின்தான் மனத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும்.

    பாதயாத்திரை செல்லும் தருணங்களில் உடன் வரும் அன்பர்கள் எவ்வளவோ அனுபவங்களைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அப்படி நான் கேட்டவைகளை அசைபோட்டு இந்த நாவலைச் செய்துள்ளேன்.

    திருச்செந்திலாதிபதியின் சக்தியை இதன் மூலம் ஓரளவுதான் நான் கூறியிருக்கிறேன். அந்தக் கடலும் வானும் போலவே அவன் சக்தி அளவிடற்கரியது.

    அடுத்த நாவலான 'யந்த்ரா மந்த்ரா தந்த்ரா’ ஒரு காதல் கதை. ஒரு ஜோடிக்கு நடுவில் நுழையும் ஒரு யந்திரம் அந்த காதலுக்கு எந்த அளவிற்கு உதவுகிறது அல்லது உதவாத ஒரு ஜடப் பொருளாக இருக்கிறது என்பதைப் பற்றிய சிந்தனை.

    நமது நாட்டில் இன்று யந்திரங்கள் மிக மலிந்துவிட்டன. ரூபாய்க்கு பத்து பொருட்களை வாங்குவது போல கூட வாங்கமுடிந்த அளவிற்கு அவை மலிவாகி விட்டன. இதனால் அதன் இறையாண்மை கூட கேலிக்குரியதாகி வருகிறது. ஆனால் யந்திரம் என்பது உண்மையில் ஒரு பெரிய கணக்கையும் தத்துவத்தையும் மறைமுகமாய் தன்னுள் கொண்டிருக்கும் ஒன்றாகும். இந்த உலகின் எல்லா மொழிகளையும் வென்று பொதுமையான ஒன்றாக மனித மூளையின் உச்சபட்ச சக்திக்குச் சான்றாகத் திகழ்வதாகும்.

    இந்த நாவலில் யந்திரம் மந்தரம் தந்திரம் என்னும் மூன்று நிலைகள் பற்றி ஓரளவு சிந்தனை செய்துள்ளேன். ஒரு காதல் கதைக்குள் எதற்கு இந்த சிந்தனைகள் என்று சிலர் கேட்கலாம்.

    இன்றைய தினம் நாம் வாழும் இந்தக் காலக்கட்டம் எப்படிப்பட்டது என்பதை முதலில் அனைவரும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். மீடியா எனப்படும் தொடர்புசாதனங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. அண்டார்ட்டிகாவில் ஒரு பெங்குவின்முட்டை இடுவதை நம் வீட்டு ஹாலில் உள்ள டி.வி.யில் வெகு சாதாரணமாக காணமுடியும். உலகம் சுருங்கிவிட்டது. தூரம் ஒரு தடையில்லை. படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியங்களின்றி பார்த்தே அனைத்தையும் நொடியில் உணர்ந்துகொள்ளும் ஒரு காலமாக இந்தக் காலக்கட்டம் உள்ளது. எனவே படிப்பவர்கள் குறைந்து வருகின்றனர். குறைவாக உள்ள அவர்கள் படிக்கவோ ஏராளமான நாவல்கள் நிறைந்து கிடக்கின்றன. நிறைய எழுத்தாளர்கள். நிறைய நாவல்கள்…! கிட்டத்தட்ட லட்சம் நாவல்கள் இன்று தமிழ் வாசகர்கள் படிக்கத் தயாராக உள்ளன. லட்சம் நாவல்களும் லட்சம் வாழ்க்கை முறையைச் சொல்பவைதான். இதில் வேறுபட வேண்டும். புதிதாக எதையாவது கூறவேண்டும். இல்லாவிட்டால் பத்தோடு பதினொன்றாகிவிடுவோம். எனவே தான் நான் மாறுபட்டு முயல்கிறேன். வாசக உலகமும் வரவேற்றபடி உள்ளது. இந்த இரு நாவல்களையும் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்.

    அன்புடன்,

    இந்திரா செளந்தர்ராஜன்

    15.07.05

    மதுரை-3

    ***

    1

    அந்த ஓலையில் யாருமறியாத பல ரகசியச் செய்திகள் இருந்தன. அதில் ஒன்று... திருச்செந்தூர் என்னும் திருச்சீரலைவாய் பற்றியது.

    முருகனின் ஆலயம் ஒன்றுதான் பக்தர்கள் வரும்...தஞ்சமடையும் வீடாகவும் கருதப்படுகிறது. அதில் செந்தூருக்குத் தனிச்சிறப்பு உண்டு. பஞ்சபூதங்கள் மிகுந்த பலத்துடன் உள்ள நெல்லை சீமையில் அமைந்த ஸ்தலம் அது. உலகிலேயே நெல்லை மாவட்டம் மட்டும்தான் முல்லை, மருதம், நெய்தல், பாலை, குறிஞ்சி என ஐவகைநிலங்களையும் தன்னகத்தே உடைய ஒரு சீமையாகும்.

    அருவி, கடல், மலை, மணல்வெளி ஜீவநதி, கரிசல் பூமி என சகலமும் ஒரு மாவட்டத்தில் இருக்கிறதென்றால் அது நெல்லையில் மட்டும் தான், அதேபோல சைவம், வைணவம், கெளமாரம், சாக்தம், காணாபத்யம் என்னும் இந்து சமயத்தின் ஐவகை வழிபாட்டுமுறைக்கும் நெல்லை, சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம், செந்தூர், கன்யாகுமரி என்றுதன்னைச்சுற்றியே ஸ்தலங்கள் உடைய ஒரே மண்ணும் நெல்லைதான்.

    இந்த நெல்லையில் உள்ள செந்தூர்தான் ஓர் அதிசயமான தலம். இது அளவிடற்கரிய நீர் சூழ்ந்த ஆழிக்கு அருகில் கந்தமான பர்வதம் எனும் குறுமலை மேல், பாலையாகிய நீண்ட மணல் வெளிமுன், விரிந்த தடையற்ற ஆகாயத்துக்குக் கீழ் அமைந்துள்ள ஒரு படைவீடாகும்.

    இங்குள்ள ஆழியில் மூழ்கி, நாழியில் ஒழுகி தூண்டிகை நாயகனை முதலாய்த் தொழுது பின் செந்திலாதிபதியை நாடிச் செல்வோர்க்கு அவரது கரும வினை எல்லாம் ஓடிச் செல்லும் என்றது அந்த ஓலை.

    அதில் சீரலைவாய் பற்றிப் பலப்பல செய்திகள்.

    ஒவ்வொன்றுமே சிந்திக்க வைப்பவை. சிலிர்க்கவும் வைப்பவை!

    அது ஒரு கொடுமையான தருணம்!

    ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் எப்பொழுதாவது இப்படி ஒரு தருணம் வரும். இம்மாதிரி தருணங்களில் உதவி செய்வதற்கு ஒருவர்கூட முன்வரமாட்டார்கள். நமது செளகர்யத்துக்காக நாம் காசு கொடுத்து வாங்கிய கால் செருப்புக்கூட இதுதான் சமயம் என்று தொலைந்து போய் வெயிலில் நடக்கவைத்துவிடும்.

    அன்றைய தினம்தான் வெயிலும் அதிகபட்சமாய் இருக்கும். தெரியாத்தனமாக யார் மீதாவது உரச நேர்ந்தாலும் அவர்கள் சாதாரணமாக வருத்தப்படாமல் பெரிய வார்த்தை சொல்லி சபித்துவிட்டுப் போவார்கள்!

    தண்டபாணி செட்டியாருக்கும் அப்படித்தான் இருந்தது. முற்றிலுமாக உலகம் ஒதுக்கி விட்டதுபோல் உணர்ந்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1