Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veliyilla Velladugal
Veliyilla Velladugal
Veliyilla Velladugal
Ebook110 pages45 minutes

Veliyilla Velladugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114202220
Veliyilla Velladugal

Read more from Hamsa Dhanagopal

Related to Veliyilla Velladugal

Related ebooks

Reviews for Veliyilla Velladugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veliyilla Velladugal - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    வேலியில்லா வெள்ளாடுகள்

    Veliyilla Velladugal

    Author:

    ஹம்ஸா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author//hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    கண்ணாடி பார்க்கிறாள் வசந்தி. பளிச்சென்று மூன்று வெள்ளி இழைகள் வகிட்டில், இந்த வயதிற்கு இது மிகவும் குறைவுதான். அவளின் முதல் இரண்டு தமக்கைகளுக்கு இன்னும் இளமையிலேயே நரை அதிகம். சேலையைச் சரிப்படுத்துகையில் இந்த தனிமைத் தீ என்று தீர்ந்து போகும் என்கிற எண்ணம். அதைத் தொடர்ந்து நெடிய பெருமூச்சு.

    மணி பத்தாகிறது. பத்து நிமிடங்கள் வேகமாய் ஓடும் சுவர் கடிகாரம். இவள்தான் அப்படி வைத்திருக்கிறாள். கடிகாரத்தை மாற்றி அமைக்க அவளால் முடிகிறது. காலத்தையும் இப்படி மாற்ற முடிந்தால்…

    சேலையும் சோளியும் பாந்தமாய் அமைந்திருக்கிறது அவள் ஒடிசல் தேகத்திற்கு. நாற்பதைத் தொடப்போகிறது அவள் பெண்மை என்று சொன்னால், மற்றவர் நம்புவது கடினம். இன்னமும் இளமையின் மிச்ச மிதிகள் அவள் தேகத்தில் ஒட்டிக் கொண்டு அவளை அழகியாகவே காட்ட முனைந்து கொண்டிருக்கிறது.

    டீ வசு டிபன்பாக்ஸ் வச்சிருக்கிகேன். எடுத்துண்டு போ. மறந்திராதே ஞாபகமா சாப்பிட்டுரு பட்டினிக் கெடந்தா ஒடம்பு என்னத்துக்காகும். சமையல் உள்ளிலிருந்து பாத்திரங்களின் சத்தத்தோடு சேர்ந்து சித்தியின் குரலும் வந்து அவளைத் தொட்டுப் போகிறது.

    ‘ஒடம்பு என்னத்துக்காகும். 'இந்த உடல் எப்படிப் போனால்தான் என்ன இதனால் இவளுக்கு என்ன உபயோகம். ஒரே மாதிரியான இந்த வாழ்க்கை எத்தனைச் சலிப்பு அலுவலகம் விதி தொலைக்காட்சி பத்திரிகைகள் இதைத் தவிர அவள் வாழ்வில் வேறு என்ன இருக்கிறது. வெறுமை... வெறுமை… இதைத் தவிர வேறு என்ன கொட்டிக் கிடக்கிறது.

    அவள் தோழிகள் அனைவரும் இல்லறத்தில் கணவன், குழந்தைகள், வீடு வாசல் என்று பெருகிப் போனார்கள். வீட்டைக் கட்டுவோமா ப்ளாட் வாக்குவோமா பெண்ணின் திருமணத்திற்காக இப்போதே சேமிப்போமா என்று திட்டம் வகுக்கிறார்கள். கணவனின் குறை நிறை அலசவே அவர்களுக்கு நேரமில்லை. மிதி நேரத்தில் பாத்திரங்கள், சேலைகள்... இருக்கவே இருக்கிறது. சினிமா. இதைப் பற்றி பேசவே நேரம் காணாத போது அவர்களின் ஒரு காலத்திய தோழியான இந்த வசுவைப் பற்றி யாருக்கு என்ன கவலை?

    உம்... சொந்த அவளின் மூன்று அண்ணாக்களுக்கும் கூட அவளைப் பற்றி எந்த எண்ணமும் இதுவரை இருந்ததில்லை. இரண்டு அக்காக்களுக்குகூட அவளைப் பற்றி எந்த எண்ணமும் இதுவரை இருந்ததில்லை. எல்லாருக்கும் மூத்த அக்கா சாந்தி மட்டும் அவ்வப்போது கடிதம் எழுதுவான். உருகி… உருகி... இவளைப் பற்றி படிக்கையில் கண்கள் பனிக்கும். அவர்களின் தாய் உயிருடன் இருந்தால் இப்படி நிராதரவாய் நிற்போமா என்கிற புலம்பல் தெறிக்கும்.

    அம்மா வயிற்றில் ஜனித்திருந்த சிசு இந்த உலகைக் காண மறந்து உயிர்விட்டுவிட அதே சாக்கில் அம்மாவும் இவர்களை மறந்து போனாள். ஏழாவது பிள்ளைப்பேறில் யாரேனும் போய் விடுவதுண்டோ அவர்கள் அம்மா போய்விட்டாள்.

    அப்போது வசந்திக்கு மூன்று வயது. தாயின் முகம் நெஞ்சில் தங்கியிருக்கவில்லை. மங்கிப்போன புகைப்படத்தில் தாய் கண் நிறைந்தவனாய் இருக்கிறான். நித்தம் மலர் குட்டி கண்ணில் நீர் தளும்ப கை கூப்புகிறாள் வசு.

    வசு கொழந்தே நேரமாச்சமா இன்னும் என்ன செய்துண்டிருக்கே.

    அப்பா அவரின் சாய்வு நாற்காலியிலிருந்து குரல் உயர்த்துகிறார். தோல் சுருங்கி முதுகு சற்று வனைந்து… கண்கள் இடுங்கி அவரின் உயரமே கொஞ்சம் வளைந்து விட்டிருக்கிறது. தலையில் கருமையின் சுவடே இல்லை.

    எண்பது வயதிற்கு மேல் அவளின் தந்தை ஆரோக்கிய மாகவே இருக்கிறார். நண்டும் சிண்டுமாய் இருக்கும் ஆறு குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் அம்மா போனபின்னர் அவர் சிரமப்பட்டாராம். அவரின் தாயும் தமக்கையும் சேர்ந்து சொர்ணத்தை அவருக்கு இரண்டாந்தாரமாய் அழைத்து வந்து விட்டனர்.

    வசுவைப் பொறுத்தவரை எல்லாமே அவனின் சித்தி சொர்ணம் தான். அவனின் மடியில்தான் தூங்கி எழுந்திருக்கிறான். சோறூட்ட சாப்பிட்டிருக்கிறாள். கதை கேட்டு ரசித்திருக்கிறாள். அம்மா என்று இவன் மட்டுமே வாய் நிறைய அழைப்பாள்.

    அவளின் மற்ற சகோதர சகோதரிகள் இன்னமும் பாகுபாட்டை விடவில்லை. சித்தி என்றோ அம்மா என்றோ அழைக்காமலே மூன்றாம் நபர்களுடன் பேசுவது போலவே பேசுவார்கள். அவர்களால் அவளைத் தாயாய் ஏற்க முடியவில்லை. தற்போது இவளும் சித்தி என்கிறாள்.

    கொழந்தே ஆபீஸ் போகலையா. நான் வேணா பக்கத்தாத்துல போய் போன் செய்து சொல்லிரட்டுமா. பரிவுடன் தந்தையின் குரல். அதில் நடுக்கமோ வயோதிகமோ தெரியவில்லை. குரலின் இன்னுமும் இளமை

    சமையல் உள்ளிருந்து சித்தி சேலைத் தலைப்பை தோளில் இழுந்துவிட்டபடி வருகிறாள். மஞ்சள் பூசின முகத்தில் பளீரென்று குங்குமம். கூந்தல் முடிச்சில் மல்லிகைச் சரம் கழுத்தில் கனத்தச் சங்கலி. கைகளில் தங்க வளையல்கள். காலில் வெள்ளி கொலுசு சலங்கை மட்டும் மிஸ்ஸிங்.

    பரவாயில்லை. அவள் வயதானவருக்கு இரண்டாம்தாரமாய் வாழ்க்கைப் பட்டாலும் இருபத்தைந்து ஆண்டுகள் அவருடன் வாழ்ந்துவிட்டாள் இதுவரை. இருபத்தைந்தாம் மணநாளை அப்பா கொஞ்சம் அதிகப்படியாகத்தான் கொண்டாடினார். இவன் மட்டுமே இவள் சிநேகித சிநேகிகளை அழைக்கவில்லை.

    சித்தி கல்யாணப் பெண்போல அலங்கரித்துக் கொண்டிருந்தாள். நல்ல காலம் அவளுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளும் மூச்சவிட மறந்துவிட்டன. இல்லாவிடில் வீட்டின் ஜனத்தொகை அதிகமாகியிருக்கும்.

    சொர்ணம் மெல்லிய மெட்டி ஒலியுடன் அவள் கைப்பையில் அந்த சின்ன டிபன் பாக்ஸை வைக்கிறான்.

    நேரமாச்சு வசு. இன்னும் என்ன நின்னுண்டிருக்கே படுத்துதா வந்து சில்லிட்ட கரத்தை அவள் நெற்றியில் வைக்கிறாள்.

    ஏண்டி லேசா சடறது. போல இருக்கே ஆத்துல இருந்துடு. உங்க தேரப்பனார் லீவ் சொல்லிரட்டுமே.

    சொர்ணம் அருகில் வரும்போதே மஞ்சள் மல்லிகை குங்குமம் பவுடர் என பல மணங்கள் தூக்குகிறது. என்பது வயதுக்கும் மேலாக கணவரின் மனைவிக்கு இந்த அலங்காரம் அதிகப்படியோ.

    நான் வரேன். அவள் பொதுவாய் சொல்லிவிட்டு படி இறங்குகிறாள். கூடவே வரும் சொர்ணம் மெல்லிய

    Enjoying the preview?
    Page 1 of 1