Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thulla Mudiyatha Pulliman
Thulla Mudiyatha Pulliman
Thulla Mudiyatha Pulliman
Ebook167 pages1 hour

Thulla Mudiyatha Pulliman

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 30, 2017
Thulla Mudiyatha Pulliman

Read more from Sivasankari

Related to Thulla Mudiyatha Pulliman

Related ebooks

Reviews for Thulla Mudiyatha Pulliman

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thulla Mudiyatha Pulliman - Sivasankari

    http://www.pustaka.co.in

    துள்ள முடியாத புள்ளிமான்

    Thulla Mudiyatha Pulliman

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    புஷ்பாவுக்கு மனசு கிளுகிளுத்தது. இத்தனைக்கும், அவன் ரொம்ப கிட்டத்தில் அமர்ந்து அவளைத் தொட்டு-கிட்டு, அணைக்க-கிணைக்க முயற்சிகூடச் செய்யவில்லை. அறையின் மூலையிலிருந்த பெஞ்சில் உட்கார்ந்து, அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்… அவ்வளவுதான்.

    ஏய், புஷ்பா… என்ன சும்மா இருக்கே? பேச மாட்டியா?

    என்னவென்று பேசுவாள்? நாலு பேர்கள் நடுவில் இருக்கும்போதாவது ஓரிரண்டு வார்த்தைகள் பேசவைக்கும் தைரியம், இப்போது சுத்தமாய் அவளை விட்டு ஓடிவிட்டதால், உள்ளத்தின் பரவசத்தையும் மீறிக்கொண்டு நெற்றியில் வியர்த்தது.

    இப்ப நீ பேசப்போறியா, இல்ல உன் கிட்டத்துல வந்து உன்னைப் பேச வெக்கட்டுமா?

    சொன்னதைச் செய்வது மாதிரி ரமணி எழுந்திருக்க முயன்றதும், புஷ்பா பதறிக்கொண்டு வாயைத் திறந்தாள். ஐயோ… வேணாங்க… நா பேசறேன்… என்ன பேசணும்?

    ரமணி புன்சிரிப்போடு மீண்டும் அமர்ந்துகொண்டான்.

    நல்லாயிருக்கு போ! இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதான்னு நா தவிச்சுகிட்டு வந்திருக்கேன்… மெதுவா என்ன பேசட்டும்னு கேக்கறியே!

    எனக்குப் பயமா இருக்குங்க… யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்களே…

    யாரும் பாக்க மாட்டாங்க… சும்மா தவிக்காதே! இப்ப இந்த வீட்டுல உன்னையும் என்னையும் தவிர, யாருமில்ல… பின்கட்டு பாட்டியம்மா தட்டுத் தடுமாறிக்கிட்டு இங்க எங்க வரப்போறாங்க? ஏய், புஷ்பா… இங்க வாயேன்… இப்படி உக்காரேன்…

    ரமணி பொய் சொல்லவில்லை என்பது புஷ்பாவுக்குத் தெரியும்.

    அந்தச் சின்ன வீட்டில் கீழே இரண்டு குடித்தனங்கள் உண்டு. ஒன்று, இவர்கள்… இன்னொன்று, பின்கட்டில் இருக்கும் ரங்கசாமி குடும்பத்தினர். மாடியில், வீட்டுக்குச் சொந்தக்காரர்கள். அவர்களின் ஒரே செல்லப் பையன்தான் ரமணி.

    தெருக்கோடியில் இருக்கும் கோவிலில் ராமாயணப் பிரவசனம் முடிந்து பட்டாபிஷேகம் நடக்கிறது என்று, ஒட்டுமொத்தமாய் அனைவரும் ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

    இரண்டு நாள்களாய் புஷ்பாவுக்குக் காய்ச்சல். கூட்டத்தில் வந்து இடிபட விரும்பாதவளாய், கோவிலுக்கு நா வரல… என்று அவள் மட்டும் வீட்டிலேயே தங்கிவிட்டாள். இது ஒரு காரணம்தான் என்றாலும், உன்னைத் தனியா சந்திச்சு ரெண்டு வார்த்தை பேச முடியமாட்டேங்குது… என்று கிடைத்த அவகாசத்தில் ரமணி அவளிடத்தில் முணுமுணுப்பது ஞாபகத்தில் இருந்தது, முக்கியமான இன்னொரு காரணம்.

    புஷ்பா, வீட்டுக்குக் காவல். பின்கட்டு ரங்கசாமியின் கண்பார்வை மங்கிப்போன தாயார், பெயரளவில் இவளுக்குக் காவல்.

    பரிட்சை நெருங்குது… நா நண்பன் வீட்டுல படிக்கப் போறேன்… என்று சொல்லிப் போன ரமணி, பெரியவர்களின் தலைமறைந்த கால்மணிக்கெல்லாம் மெல்ல வந்து வாசல்கதவைத் தட்டினான்.

    ரமணியாகத்தான் இருக்குமென்று எதிர்பார்த்துக்கொண்டே கதவைத் திறந்த புஷ்பாவுக்கு, பாதி சந்தோஷம், பாதி பயம்.

    உள்ளே நுழைந்து கதவைத் தாளிடாமல் சாத்திவிட்டு, பெஞ்சில் உட்கார்ந்தான் ரமணி.

    சில மாசங்களுக்கு முன் வரை, இந்த ரமணி யாரோ, புஷ்பா யாரோ.

    தனியார் நிறுவனம் ஒன்றில் கிளார்க்காக வேலைபார்க்கும் சாம்பசிவத்தின் மூத்த மகள் புஷ்பா. அவளுக்கு நாலு வயசாகும்போது பிறந்தவள் மாலதி. இந்த இரண்டு பெண்களுக்குப் பிறகு மனைவி மீனாட்சிக்கு பிள்ளை ஒன்று எட்டாம் மாசத்தில் செத்துப் பிறந்தபோது, வம்சத்தை விளங்கவைக்க பிறந்த பிள்ளை இப்படிக் குறையாய்ப் போய்விட்டதே என்று சாம்பசிவத்துக்கு ஏக வருத்தம்.

    இந்தக் குறையை நிவர்த்தி செய்கிற மாதிரி, திரும்ப மீனாட்சி கருவுற்றதும், பிள்ளைக் குழந்தைதான் வேண்டுமென்று அவர் தவியாய்த் தவித்தார். அவர் எதிர்பார்ப்புகளை முழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு பிறந்தவள் சுலோசனா.

    வரிசையாய் மூன்றும் பெண்களாய்ப் பிறந்த பின்பு, தன் சம்பளத்தில் மூன்று பெண்களை ஆளாக்குவதிலுள்ள கஷ்டங்கள் மனசில் உறைக்க, ஒருவித ஏக்கத்துடனே பிள்ளை ஆசையை மூட்டைகட்டி வைத்தார் சாம்பசிவம்.

    பெண்கள் சின்னவர்களாய் இருக்கும்போது தெரியாத சிரமம், அவர்கள் வளர்ந்து தாவணி போடத் தொடங்கியதும் நன்றாகவே புரிந்தது.

    முதல் பெண் மேலுள்ள அளவுகடந்த பாசத்தால், புஷ்பாவை தன் சக்திக்கும் மீறி கல்லூரியில் சேர்த்தாலும், அவள் பி.யூ.சி. முடிக்கும் முன்னர் மாலதியும் பெரியவளாகிவிடவே, சடங்குச் செலவு, புதுத் துணிச் செலவு என்று எல்லாம் விழிகளைப் பிதுக்கின ஒரு நாளில், இனி புஷ்பாவுக்கு மேற்கொண்டு படிப்பு தேவையில்லை என்ற தீர்மானத்துக்கு சாம்பசிவம் வந்தார்.

    பி.யூ.சி.யை இரண்டாம் வகுப்பில் பாஸ் செய்திருந்தும், மேலே படிக்க வேண்டுமென்று ஆர்வம் நெஞ்சில் நிறைந்திருந்தும், என்னத்துக்கும்மா பி.ஏ.யும் பி.எஸ்.சி.யும்? வீண் செலவு! அந்தப் பணத்தை வெச்சுகிட்டு காலாகாலத்துல உன்னை நல்ல எடத்துல மாப்பிள்ளை பாத்து கட்டிவெச்சாலும் உண்டு! என்னத்துக்கு பெண்பிள்ளைங்களுக்குப் படிப்பு? என்று அப்பாவும் அம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவை, புஷ்பா கத்தி குதித்து ஆர்ப்பாட்டம் பண்ணாமல் ஏற்றுக் கொண்டாள்.

    பெற்றவர்களுக்குத் தெரியாததா? எத்தனையோ கஷ்டத்தில் பெற்று வளர்த்து ஆளாக்கிவரும் பெற்றவர்களுக்குத் தெரியாததா என்ற அடக்கத்துடன் அமைதியாய் இருந்துவிட்டாள்.

    புஷ்பா வீட்டில் உட்கார்ந்து குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டத் தொடங்கிய போது, அவளுக்கு வயசு பதினேழுகூடப் பூர்த்தியாகாததால், இன்னும் இரண்டு வருஷம் போய் கையில் நாலு காசு சேர்த்து, பின் திருமணம் செய்தால் போகிறது, இப்போது என்ன அப்படித் தலைபோகிற அவசரம், வயசு ஆகவில்லையே என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு சாம்பசிவம் மாப்பிள்ளை வேட்டையில் தீவிரமாய் இறங்கவில்லை.

    ஒரு வருஷம் ஓடியது.

    ஓரளவுக்கு நிம்மதியாய் இருந்த வாழ்க்கையில் சின்னக் குழப்பம்… கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களாய் இவர்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு, பிள்ளைக்குக் கல்யாணமானதும் பிள்ளை-மருமகள் தனியாய் புழங்க அறைகள் வேண்டுமென்று தோன்றியதால், இவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துக் கிளப்பினார்.

    சாம்பசிவம் நாய் அலைச்சல் அலைந்தார். எந்த இடத்தைப் பார்த்தாலும், இருநூறு கொண்டா முன்னூறு கொண்டா என்றார்களே தவிரவும், இவர் பட்ஜெட்டுக்கு ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை.

    வாங்கும் சம்பளமே மொத்தம் நானூற்றிப் பத்து… இதில் இருநூறையும் முன்னூறையும் வீட்டு வாடகை என்று கொடுத்துவிட்டால், பாக்கிக்கு? சாப்பிட, பெண்கள் மானமாய் உடுத்திக்கொள்ள, ஏதோ நாலில் இரண்டில் வெளியில் போக வர, பண்டிகைகள் கொண்டாட… இதற்கெல்லாம்?

    தவித்துப்பறந்த சாம்பசிவத்துக்கு அபயம் தருகிற மாதிரி, அந்த நங்கநல்லூர் வீடு கிடைத்தது.

    அரை கிரவுண்டில் சின்னதாய் மாடி வீடு கட்டிக்கொண்டிருந்த பசுபதி, சாம்பசிவத்தின் சொந்த ஊர்க்காரர். மூக்கைச் சுற்றித் தொட்டால் உறவுக்காரர் என்றுகூடச் சொல்லலாம். மாடியில் தான், தன் மனைவி சரஸ்வதி, ஒரே பிள்ளை ரமணியோடு இருந்துகொண்டு, கீழ்ப் போர்ஷனை இரண்டாகப் பிரித்து, பெரியதை சாம்பசிவத்துக்கு தொண்ணூறு ரூபாய்க்கும், சின்னதை ரங்கசாமிக்கு எழுபத்தைந்துக்கும் வாடகைக்கு விட்டார்.

    சாம்பசிவத்தின் வருவாய்க்கு தொண்ணூறே அதிகம்தான்… என்ன செய்வது! காலம் இருக்கும் இருப்பில் மூன்று பெண்களை வைத்துக்கொண்டு மரத்தடியில் தங்க முடியுமா, இல்லை சேரி குப்பத்தில் ஒதுங்க முடியுமா?

    சும்மா சொல்லக்கூடாது… பசுபதி வீட்டை சௌகர்யமாய் கட்டியிருந்தார். ஒரு பெரிய அறை, உள்ளே சாப்பாடு சமையல் அறை, பின்னால் தனி குளியலறை. கழிப்பறைதான் இரண்டு வீட்டுக்கும் பொது. சமையல்கட்டில் குழாய், பாத்ரூமில் குழாய். வேறென்ன வேண்டும்? இதைவிடச் சின்ன பொந்து போன்ற வீட்டை வைத்துக்கொண்டு, நூற்றியைம்பது, இருநூறு என்று நகரின் மற்ற பகுதிக்காரர்கள் பிடுங்குவதை நினைத்தால், தனக்கு இந்த வீடு கிடைத்ததே அதிர்ஷ்டம்தான் என்ற சந்தோஷத்தோடு சாம்பசிவம் புது வீட்டுக்குக் குடிபோனார்.

    நங்கநல்லூரில் எதற்கும் குறைச்சலில்லை… நாலு எட்டில் மின்வண்டி நிலையம், பஸ் ஸ்டாப். இந்தப் பக்கம் பஜார் கடைகண்ணிகள், அந்தப் பக்கம் ராஜராஜேஸ்வரி கோவில்…

    பசுபதியும் சரஸ்வதியும் நல்ல மனிதர்கள். அனாவசிய வம்பு, தும்பு, சண்டை? ம்ஹூம், ஒன்றும் கிடையாது.

    பின்கட்டு ரங்கசாமியும், வாயில்லா மனிதர். அவரும் சரி, அவர் மனைவியும் சரி… தாங்கள் உண்டு, தங்கள் ஜோலி உண்டு என்று ஒதுங்கி இருப்பவர்கள்.

    புஷ்பாவுக்கு, புது வீட்டை, வந்த நாளிலிருந்தே ரொம்பப் பிடித்தது. அதுவும், சொந்தக்காரரின் மகன் தன்னைச் சுற்றிவருகிறான் என்பது புரிந்ததிலிருந்து, ரொம்பரொம்பப் பிடித்தது.

    பி.ஏ. படித்து முடித்தவன், ஜெயின் கல்லூரியில் எம்.ஏ. படிக்கிறானாம். அடர்த்தியான நீண்ட தலைமுடி, மேலுதட்டில் வழிந்த மீசை, நல்ல உயரம், அதற்கேற்ற பருமன் என்று ஆள் ஷோக்காக இருந்தான்.

    இரண்டு மூன்று வாரங்கள் ஆவதற்குள், அவன் பார்வை தன்மேல் தனியான விதத்தில் விழுவதாகவே புஷ்பா உணர்ந்தாள்.

    அவள்

    Enjoying the preview?
    Page 1 of 1