Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kappal Paravai
Kappal Paravai
Kappal Paravai
Ebook276 pages2 hours

Kappal Paravai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateDec 8, 2017
Kappal Paravai

Read more from Sivasankari

Related to Kappal Paravai

Related ebooks

Reviews for Kappal Paravai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kappal Paravai - Sivasankari

    http://www.pustaka.co.in

    கப்பல் பறவை

    Kappal Paravai

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    பதிப்புரை

    சுஜா…

    சிவசங்கரியின் பேனா முனையில் சிலிர்த்தெழுந்து, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய், புரட்சிப் பாவையாய் இக்கப்பலில் உலா வரும் கதாநாயகி.

    அவள் இந்தத் தேசத்தை நேசிப்பவள். சமுதாயத்தின் சீரழிவுகளைக் கண்டு சினம் கொள்ளுவாள்! அரசியல்வாதிகளின் சதிராட்டங்களைச் சாடுவாள்! ஆட்சியாளர்களுக்கு ஆலோசனையும் கூறுவாள்!

    சுஜாவின் சிந்தனைச் சிதறல்களில் ஒன்று நம்மைச் சிந்திக்கவைக்கிறது.

    குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்குக் கோடிக்கணக்கான ரூபாய்களை விளம்பரத்துக்காகவே செலவிடும் அரசாங்கம், அப்பணத்தைக் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்பவர்களுக்குப் பரிசாக, வேட்டி சேலையுடன் ஐம்பது அறுபது ரூபாய் கொடுப்பதற்குப் பதிலாக ஐயாயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுத்தால், ஏழை எளியவர்கள் மட்டுமல்ல, மத்தியதர, மேல்மட்டத்தவர்களும் ஐயாயிரத்திற்கு ஆசைப்பட்டு ஏராளமான பேர் முன்வருவார்கள் என்று கூறும் சுஜா, இன்னும் இது சம்பந்தமான விரிவான விளக்கமும் பொருளாதாரப் பிரச்சினையையும் இக்கதையினுள் விளக்குகிறாள்.

    பட்டப்படிப்பு முடித்து, ஆர்க்கிடெக்டாக – கட்டடக் கலை நிபுணராக – பயிற்சி பெற்று, இந்தத் தேசத்தில் பல அழகான மாளிகைகளையும், திரையரங்குகளையும், சூப்பர் மார்க்கெட்டுகளையும் நிர்மாணித்துத் தந்திருக்கிறாள் சுஜா.

    நாட்டைப் பற்றியும், அதன் பலவீனங்களைப் பற்றியும் வெகுவாக விமர்சித்துவிட்டு, வெறும் வாய்ச் சவடாலோடு நின்று காரியத்தில் ஒன்றும் செய்யாமல் இருக்கும் பெண்ணல்ல சுஜா.

    விஸ்ராந்தி என்ற முதியோர் இல்லத்தின் ‘அட்சயப்பாத்திர’ நிதிக்குக் கணிசமான நிதி கொடுத்து, அதன் வட்டியில் பாட்டிகளைப் பராமரிக்கும் ஒரு நாள் செலவை ஏற்றுக்கொண்டிருப்பவள் சுஜா!

    கணவனால் கைவிடப்பட்ட ஒரு மனநோயாளிப் பெண்ணுக்கு, மாதம் ஐம்பது ரூபாய் சிகிச்சைக்காக டாக்டருக்குக் கொடுக்கிறாள் சுஜா!

    பார்வை இழந்தவர்களுக்குப் படிப்பு சொல்லித்தர, பரிட்சை எழுத, வாரத்தில் சில மணி நேரத்தை ஒரு மாணவனுக்காக ஒதுக்குகிறாள் சுஜா!

    இவை தவிர, மாதம் ஒருமுறை கட்டாயமாக ரத்ததானம் செய்வதோடு, இறந்த பிறகு கண்தானமும் செய்ய எழுதிக் கொடுத்திருக்கிறாள்.

    பாரதி மாதவம் செய்தவன். அவன் நூற்றாண்டில் பாவலர் பலர் ‘ப(பா)ட்’டாடைகளும், நூலோர் பலர் ‘நூலா’டைகளும் படைத்து பாரதிக்குக் காணிக்கையாக்கினார்கள். ஆனால், கதாசிரியை சிவசங்கரியோ, ஒரு புதுமைப் பாவையையே பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

    அவள்தான் சுஜா!

    அவள் தன் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் அனுபவங்கள், அனுசரணைகள், இவற்றையெல்லாம் சுஜா எப்படிச் சமாளிக்கிறாள் என்பதையெல்லாம் அறிய, கப்பலில் ஏறுங்கள்… கண்டுகொள்ளுங்கள்.

    கங்கை புத்தக நிலையத்தார்.

    1

    "சுஜா…"

    ……………

    ஹேய்… சுஜ்…ஜா…

    குனிந்துகொண்டு பேப்பரில் ஒரு சதுரம் வரைந்து, அதை மிஸ்டர் குமாரஸ்வாமியின் வரவேற்பறையாகக் கற்பனை பண்ணி, எப்படி சிங்காரிக்கலாம், எந்த இடத்தில் எதை அமைக்கலாம் என்ற வேலையில் லயித்திருந்த சுஜா, தலையை நிமிர்த்தாமலேயே, ம்? என்றாள்.

    கூப்பிடறது காதுல விழலியா?

    ‘ம்’னு கேட்டேனே, உனக்குக் காதுல விழலியா?

    விழலை! நிமிரு… என்னைப் பாரு…

    சுஜா பார்வையை மட்டும் உயர்த்தினாள்.

    ஓ.கே, பாத்திட்டேன்… யூ ஆர் வெரி ஹாண்ட்ஸம்! போதுமா? இப்ப, என்னைக் கொஞ்சம் வேலை செய்ய விடறியா?

    மணி ஆறு… பார்ட்டிக்கு நாழியாகலியா? வீட்டுக்குப் போய் குளிச்சுத் தயாராகறதா உத்தேசம் இருக்கா, இல்லே, இங்கேயிருந்தே… இப்படியே…

    சுஜா புருவங்களை நெரித்தாள். என்ன பார்ட்டி?

    சங்கர் சிரித்தான்.

    யார் யாருக்கோ என்னென்னமோ பட்டம் குடுக்கறாங்க… உனக்கு முதல்ல ஞாபகமறதிக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுக்கணும்! நம்ம பாஸ் மிஸ்டர் வர்மா வீட்டுல இன்னிக்குப் பார்ட்டி, நம்மையும் கூப்பிட்டிருக்கார்… புது க்ளையண்ட்ஸ் மிஸ்டர் தேவதாஸ், மிஸ்டர் வாசுதேவனை அறிமுகப்படுத்த! விவரம் போதுமா? இல்லே, நீ யாரு, நா யாருங்கற அடிப்படை விளக்கத்துலே ஆரம்பிக்கணுமா?

    சுஜா அலுப்புடன் பென்சிலைக் கீழே போட்டாள்.

    ஓ, போர்… சுவாரஸ்யமா வேலை பண்றப்போ இந்த மாதிரி தொந்தரவு இருந்தா, எனக்குப் பிடிக்கறதேயில்லே, சங்கர்…

    பார்ட்டிக்குப் போறது தொந்தரவா? குழந்தைகிட்ட சொன்னாக்கூட சிரிக்கும்!

    அருமையான ஐடியா உண்டாகி, அதை உடனே நோட் பண்ணி வரைஞ்சு பாத்துடணும்னு நினைக்கறப்ப, பார்ட்டிகூட தொந்தரவுதான்.

    வர்மா நம்ம பாஸ், சுஜா…

    இருக்கட்டுமே! வேலைல நா ஈடுபாட்டோட இருக்கறதுக்கு அவர் சந்தோஷப்படறதுதானே நியாயம்? பார்ட்டிய விடு, சங்கர்… மிசஸ் வர்மா, அவங்களோட மூணு நாலு மணி நேரம்… கடவுளே! நா என்ன பண்ணுவேன்!

    நிஜமான பரிதாபத்துடன் சுஜா முகத்தைச் சுருக்கிக்கொள்ள, சங்கர் திரும்ப சிரித்தான்.

    அவங்க உன்னை என்ன பண்ணாங்க, இத்தனை சலிச்சுக்க?

    என்ன பண்ணாங்களா? ஓயாமப் பேசறாங்களே, அதான் தண்டனையா இருக்கு… பக்கறப்பல்லாம், அவங்க லேட்டஸ்டா வாங்கின புடவை, செஞ்சுகிட்ட நகை, குடுத்த பார்ட்டி, வந்த பெரிய மனுஷங்க வீட்டுப் பொம்பளைங்களோட டிரெஸ், பக்கத்துவீட்டுப் பொம்பளையோட மட்டமான சமையல், அவங்க வீட்டு வேலைக்காரங்க பிரச்சினை… மை காட்! பேசறதுக்கு இதைத் தவிர வேற விஷயங்களே இல்லியா, சங்கர்?

    அதுக்கு என்ன செய்றது? அவங்க உன்னை மாதிரி ஆர்க்கிடெக்சர் படிச்ச பொம்பளை இல்லே… சாதாரண குடும்பத் தலைவி. அவங்களுக்குத் தெரிஞ்சதைத்தானே அவங்க பேச முடியும்?

    சுஜா கோபத்துடன் மேஜையில் ஓங்கித் தட்டினாள்.

    ஸ்டாப் தட் நான்சென்ஸ், சங்கர்… இந்த மாதிரி சப்பைக்கட்டு கட்டி, பொம்பளைங்களை அடக்கிவெச்சு அடக்கிவெச்சுதான், முக்கால்வாசிப் பேரை திறமை இருந்தும் ஞானசூன்யமா ஆக்கிட்டீங்க! மிசஸ் வர்மா என்ன படிச்சிருக்காங்க, தெரியுமா? எம்.எஸ்.சி.! ஒரு வருஷம் காலேஜ்ல லெக்சரரா இருந்ததா அவங்களே சொல்லியிருக்காங்க. அப்படிப்பட்டவங்ககூட, புடவை, நகை, சமையல் பத்திதான் பேசணுமா? அதைத் தாண்டி வேற சப்ஜெக்டே இல்லியா? அரசியல் பிடிக்கலேன்னா, பேச வேணாம்… வாட் அபௌட் ஆர்ட்ஸ்? சரி, அதுவும் வேணாம்… சமுதாயத்துல எத்தனை பிரச்சினை இருக்கு? அதையெல்லாம் நினைக்கக்கூடாதா? பேசி அலசக்கூடாதா? என்னடா பண்ணுவோம்னு துடிக்கக்கூடாதா?

    ஸோ… சமுதாயப் பிரச்சினை அல்லது கலை பத்திப் பேசினாத்தான் ஒருத்தர் புத்திசாலின்னு ஒத்துப்பே!

    நீ இந்தக் கேள்வி கேட்டா எனக்குக் கோவம் வர்றது, சங்கர்… நீ கூடவா? என்னை உனக்குத் தெரியாது? அத்தனை குறுகின மனசா எனக்கு? சிந்தனை, பேச்சு, செயல் எல்லாத்துலயும் ஆணுக்குச் சமமா பெண்ணுக்கும் உரிமை இருக்கணும்ங்கறதுதானே என் கருத்து?

    சரி, சரி… ஒத்துக்கறேன். எம்.எஸ்.சி. படிச்ச மிசஸ் வர்மா, சாதாரண விஷயங்களைப் பத்தித்தான் பேசி சிந்திப்பேன்னு பிடிவாதமா… நீ என்ன சொன்னே? அ, ஞானசூன்யமா இருந்தா, அதுக்கு வர்மாவைக் குறை சொல்றது என்ன நியாயம்? ஆண் அடக்கிவெச்சதாலதான் பெண் ஞானசூன்யமாப் போயிட்டான்னு சொல்றது தப்பில்லியா?

    கமான், சங்கர்… ஒண்ணும் தெரியாத சின்னக்குழந்தை மாதிரி பேசாதே! வர்மாவை எனக்குத் தெரிஞ்சதைவிட அதிகமாவே உனக்குத் தெரியும்! ஆபீஸ்ல எனக்கு முழு சுதந்திரம், மரியாதை குடுக்கறார்னா, அதுல அவருக்கு ஆதாயம் இருக்கு… என்னைத் தட்டிக்குடுத்து வேலைவாங்கற புத்திசாலித்தனம் அது! ஆனா, வீட்டுல அப்படி இல்ல… மனைவி தன்னைவிட புத்திசாலியா, கெட்டிக்காரியா, நாலும் தெரிஞ்சவளா இருக்கறதை ஏத்துக்க முடியாத பல ஆண்கள்ல வர்மாவும் ஒருத்தர்… யூ நோ தட்! தாலி கட்டிட்டார் இல்ல? அதனால, அடக்க முடியுது!

    அப்ப… மிசஸ் வர்மா மாதிரி நிறைய பெண்கள் கிணத்துத் தவளையா இருக்கறதுக்கு, ஹஸ்பெண்ட்ஸ்தான் காரணம்னு முடிவு பண்ணிட்டே?

    ஒட்டுமொத்தமா எல்லாரையும் ஒரே வட்டத்துல அடைக்க மாட்டேன். சிலபேரு, திறமை இருந்தும் புருஷனுக்குப் பிடிக்கலைன்னு அடங்கி வாயைத் திறக்கறதில்ல… சிலபேருக்கு, புடவை, நகை, சமையல்தான் இயற்கையிலேயே உலகமா இருக்கு. இதுல மிசஸ் வர்மா என்ன ஜாதின்னு எனக்குத் தெரியாது… ஆராயச்சி பண்றதாவும் உத்தேசமில்ல! ஆனா, இந்த மாதிரி பொம்பளைங்ககிட்ட மாட்டிக்கறப்போ, என் பாடுதான் பெரிய அவஸ்தையாப் போயிடுது… திருப்பித் திருப்பி சொன்னதையே சொல்லிக்கிட்டு, கொஞ்சம்கூடப் பொது அறிவை வளத்துக்க முயற்சி பண்ணாம, தங்க கண்ணோட்டத்துலயே உலகத்தை எடை போட்டுகிட்டு இருக்கறவங்ககிட்ட, என்னால ரெண்டு நிமிஷம்கூடப் பேச முடியறதில்ல.

    முடியலேன்னா, பேசாம எழுந்து வந்திடறது…

    அப்படித்தானே நா செய்றேன்! அன்னிக்கு மிசஸ் காமேஷ்கூட கேலியா சொன்னாங்க… ‘சுஜாவுக்கு நாட்டமெல்லாம் ஆம்பளைங்க பக்கம்தான்’னு…

    அதைக் கேட்டுட்டு சும்மாவா வந்தே?

    சுஜா தலையைப் பின்னுக்குச் சாய்த்து சிரித்தாள்.

    வருவேனா? கேச் மீ டூயிங் இட்! ‘ஆமா, மிசஸ் காமேஷ், நீங்க சொல்றது ரொம்ப சரி… ஆண்களோட புத்திசாலித்தனமா பல விஷயங்களப்பத்தி பேசற மாதிரி, உங்களோட என்னால பேச முடியறதில்ல… அதான் நாட்டமெல்லாம் ஆண்கள் பக்கமே இருக்கு!’ன்னு சொன்னேன்!

    மிசஸ் காமேஷின் முகத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்து சிரித்தவன், ச்சே, பாவம்! என்றான்.

    என்ன பாவம்? அவங்க மட்டும் அப்படிப் பண்பில்லாம பேசலாமா? இதே மாதிரிதான் முன்ன ஒருதரம்… ஆரம்பித்த சுஜா சட்டென்று நிறுத்தினாள். இன்னிக்கு இதோட இந்தப் பேச்சு போதும், சங்கர்… பேச உக்காந்தா, அனுமார் வால் மாதிரி நீண்டுகிட்டே போகும். நாழியாச்சு… கிளம்பலாம்.

    மேஜை மேல் இருந்தவற்றை டிராயரில் தள்ளிப் பூட்டிய பிறகு, இருவரும் கிளம்பினார்கள்.

    மாடிப்படியில் இறங்கும்போதும், வண்டியில் பயணிக்கும்போதும் சுஜா மௌனமாய் இருக்க, சங்கர் சீண்டினான்.

    என்ன யோசனை? மிஸ்டர் குமாரஸ்வாமி வீட்டு அலங்காரமா, இல்லே மிசஸ் வர்மாவோட புடவை, நகைப் பேச்சா?

    சுஜா அவன் பக்கம் திரும்பாமல் சின்னக் குரலில் பேசினாள்.

    யூ நோ, சங்கர்… இப்படிக் குறுகிய கண்ணோட்டத்தோட பேசி வாழறவங்களோட நா அதிகம் பழகாம ஒதுங்கறதால, என்னை சரியா புரிஞ்சுக்க முடியாம, அவங்க ‘இவ பொம்பளையே இல்லே, ஆம்பளையா பிறந்திருக்க வேண்டியவ, தவறிப் பிறந்துட்டா’ன்னு பேசறாங்க. அவங்க அபிப்ராயம் என்னை நிஜமா பாதிக்கல. ஆனாலும், இந்த ‘ஸோ-கால்ட்’ பெண்மை நிறைஞ்ச பெண் எவளையும் என்னால சுலபமா சேலஞ்ச் பண்ண முடியும்! என் வீட்டை நீ பாத்திருக்கே, என் சமையலை ருசிச்சிருக்கே… மத்தபடி, இவங்க செய்றதா சொல்ற அத்தனையும் கச்சிதமா செஞ்சு முடிக்க எனக்கு ஒரு நாளைக்கு மூணுலேந்து நாலு மணிநேரம்தான் தேவைப்படுது! தூங்க எட்டு மணி, அதை விட்டுடலாம்… எட்டு ப்ளஸ் நாலு, பன்னெண்டு. பாக்கி பண்னெண்டு மணி நேரத்துல எத்தனை கத்துக்கலாம், நம்மை எத்தனை வளத்துக்கலாம், உபயோகமா உழைக்கலாம்? அத்தனையும் விட்டுட்டு, வெட்டியா பொழுதைப் போக்கறதுமில்லாம, மத்தவங்களப்பத்தி வம்பும் பேசறாங்களே… இவங்களை என்ன பண்ணாத் தேவலை? ம்? காட்… ஐ’ம் ஃபெட் அப்!

    அவளுடைய இந்த இருப்புக்கொள்ளாமை, பரபரப்பு, அழுத்தமான பேச்சு எல்லாம் ஏற்கனவே அத்துப்படியான விஷயம் என்பதால், பதில் சொல்லாமல் சங்கர் சின்னதாகப் புன்னகைத்தான்.

    ***

    சுஜா சொல்வதில் தப்பொன்றும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை.

    அவள் தனக்கென்று வைத்திருக்கும் குட்டியூண்டு ஒற்றைப் படுக்கையறை ஃபிளாட், எப்போதுமே நெறுவிசாகத்தான் இருக்கும். அதது அதனதன் இடத்தில் சுத்தமாய்… அழகாய்… கலையுணர்வை உண்டுபண்ணக்கூடியதாய்…

    சுஜா சமையலிலும் படு கெட்டிக்காரி. எந்த வகை சமையல் வேண்டும்? சைவம்? அசைவம்? எந்த நாட்டு ரகம்? எதுவானாலும் அரைமணியில் ரெடி. சமைத்து முடித்து வெளியில் வந்தால், உடம்பில் ஓர் அழுக்கு, வியர்வை, அலங்கோலம்…? ம்ஹூம், இருக்காது.

    பாட்டு கேட்பாள், சினிமா பார்ப்பாள், நிறைய படிப்பாள், ஓவியக் காட்சிக்குப் போய் ரசித்துவிட்டு வருவாள்…

    பாடத் தெரியுமா, ஆட வருமா, ஓவியம் வரைவாயா என்றால், கண்களை இடுக்கிக்கொண்டு, ஆத்மார்த்தமாக ரசிக்கத் தெரியும்… அது போதாதா? என்பாள்.

    இத்தனையோடு, ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் போல ஆபீஸிலும் வேலைபார்ப்பது போதாதென்று, அறிவை வளர்க்க வேண்டும், இன்னும், இன்னும் என்று பறப்பவளுக்கு… சதா வீட்டில் உட்கார்ந்து, சாப்பிட்டு, தூங்கி, வம்புப்பேச்சை மட்டும் பேசிப் பொழுதைக் கழிப்பவர்கள் எரிச்சலைத் தருவதில் ஆச்சர்யமென்ன!

    தலையைச் சற்றே திருப்பி, சங்கர் அவளை ஒரு நொடி பார்த்தான். தீர்க்கமான மூக்கு, நீளமான கழுத்து, இறுக அழுத்தின உதடுகள், அசிரத்தையுடன் ரப்பர்பேண்ட் போட்டுக் கட்டப்பட்ட முடி, மிளகு சைஸில் தங்கத் தோடு, ஸ்லீவ்லெஸ் ரவிக்கை, கோட்டா நூல் புடவை.

    சுஜா, நல்ல உயரம்… பருமனில்லாத உருவிவிட்ட உடம்பு, அதைக் கூட்டியே காட்டும்.

    ஆனாலும், இந்த உயரமோ எடுப்பான உடம்போ, அவளை அறிந்தவர்களுக்கு அத்தனை முக்கியமில்லை என்பதும், உணர்ச்சிபூர்வமாக புத்திசாலித்தனத்துடன் அவள் பேசும் பேச்சும், அந்தச் சிரிப்பும், லேசாகத் தலையைப் பின்னுக்குத் தள்ளி, தோளோடு நிற்கும் முடி கழுத்தில் பம்மென்று இறங்க, சிரிக்கும் சிரிப்புமே அவளின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்டுகள் என்பதும் சங்கரின் அபிப்ராயங்கள்.

    சுஜா, அத்தனை நிறம் இல்லை… மாநிறம். சின்ன கண்கள். பல், முத்து மாதிரி வரிசையாக இருக்காது… சரியாகச் சொல்லவேண்டுமென்றால், ப்ரீ மோலாரில் ஒன்று தெற்றுப்பல்கூட. ஆனாலும், தலையைப் பின்னால் சாய்த்து, நெஞ்சில் உற்பத்தியாகும் சிரிப்பை அலாதி தினுசில் அவள் வெளியிடும்போது, கண்கள் இரண்டும் விளக்கேற்றிக்கொண்டு பளபளப்பதும், தெற்றுப்பல் இதழோரத்தில் எட்டிப்பார்த்து ஒருவித போதையைத் தருவதும் நிஜம்.

    அப்புறம்… அந்த புத்திசாலித்தனம்.

    பேச ஆரம்பித்த இரண்டாம் நிமிஷத்துக்குள், ‘என்னை அடையாளம் தெரிகிறதா?’ என்று

    Enjoying the preview?
    Page 1 of 1