Kavithai Muran
By A. Selvaraju
()
About this ebook
Read more from A. Selvaraju
Sanga Ilakkiyathil Paazh Nila Payanam Rating: 0 out of 5 stars0 ratingsAan Alumaiyil Pen Karppu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kavithai Muran
Related ebooks
Noyyalin Kanneer Rating: 0 out of 5 stars0 ratingsYaathumaagiye… Rating: 0 out of 5 stars0 ratingsGangaiyai Maariya Kinaru Rating: 0 out of 5 stars0 ratingsVerai Thedi Vantha Vizhuthugal Rating: 0 out of 5 stars0 ratingsManam Enum Vanam Rating: 0 out of 5 stars0 ratingsKaaladheethathin Suzhal Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsNoyyalin Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsKaiyoppam Rating: 4 out of 5 stars4/5Naragathin Uppu Kaattru Rating: 0 out of 5 stars0 ratingsVerin Vizhuthugal Rating: 0 out of 5 stars0 ratingsThazhthapatta Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Kambarin Kaatchi, Viliyin Maatchi, Sanga Pulavargalin Aatchi! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivin Aazhiyil Alaiyum Kayalkal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Nizhaladum Magizhampoo Marathadi Rating: 0 out of 5 stars0 ratingsImai Nadanam Rating: 0 out of 5 stars0 ratingsMoongilisai Rating: 0 out of 5 stars0 ratingsPeyar Theriya Poovin Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsPenn Kavikkuralgal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsMeengal Urangum Kulam Rating: 0 out of 5 stars0 ratingsThaala Parantha Vimanam Rating: 0 out of 5 stars0 ratingsKaalam Ennum Kaattaru Rating: 0 out of 5 stars0 ratingsOru Naalum Ovvoru Naalum Rating: 0 out of 5 stars0 ratingsValaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsThappu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Varudum Vizhuthu... Rating: 0 out of 5 stars0 ratingsManaiviyanen Magaley! Rating: 0 out of 5 stars0 ratingsKattu Nerinji Rating: 0 out of 5 stars0 ratingsVazhum Varalaru Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kavithai Muran
0 ratings0 reviews
Book preview
Kavithai Muran - A. Selvaraju
http://www.pustaka.co.in
கவிதை முரண்
Kavithai Muran
Author:
அ. செல்வராசு
A. Selvaraju
For more books
http://www.pustaka.co.in/home/author/a-selvaraju
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
கவிதை முரண்
The task of criticism is the
Reconstruction of the Creative Process
-Richard Wollheim
என் அருமை மாணாக்கர்களுக்கு
வாசிக்க வாங்க…
இரவும் பகலும் ஓயாமல் வந்து கொண்டே இருப்பது போல ஒவ்வொரு நாளும் கவிதை நூல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கவிதைகளாகச் சில. கவிதை வடிவங்களாகச் சில. முறிக்கப்பட்ட சொற்றொடர்களாகச் சில. முறிக்கப்பட்ட சொற்றொடர்களின் ஓசைகளாகச் சில. ஆனால், கவிதை பற்றிய திறனாய்வு நூல்கள் ஒரு சிலவே வந்துள்ளன. வெளிவரும் திறனாய்வுகளும் தனிமனித தாக்குதல்களாக இருக்கின்றன. இதற்குக் கவிதைகளும் ஒருவகையில் காரணமாகின்றன. இந்த நூலின் முற்பகுதியில் மேற்கோள் காட்டப்பெறும் கவிதைகளின் ஆசிரியர் பெயர் சுட்டப் பெறவில்லை. அந்தக் கவிதை இடம் பெற்றிருக்கும் தொகுப்பின் பெயரோ, கவிதை வெளி வந்த இதழ்களின் பெயரோதான் சுட்டப் பெற்றுள்ளது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று தனி மனித தாக்குதலையோ, பாராட்டையோ தவிர்ப்பதற்கு, மற்றொன்று தேடலை உருவாக்குவதற்கு.
இந்நூலில் எது கவிதை என்று அடையாளம் காட்டப் பெற்றுள்ளதே அன்றி, எது நல்ல கவிதை, எது மோசமான கவிதை என்றெல்லாம் அடையாளம் காட்டப் பெறவில்லை. அதை வாசிப்போரே தீர்மானித்துக் கொள்ளலாம். அதே போலச் சான்று காட்டப்பெற்றுள்ள கவிதைகள் முழுமையாக எடுத்தாளப் பெற்றுள்ளன. காரணம் ஒரு கவிதைப் படைப்பில் எல்லா அடிகளும் கவிதையில்லை. ஏதோ ஒரு சொல்லோ, சொற்றொடரோதான் கவிதையாக இருக்கும் என்பதற்காக.
திரையிசைப் பாடல்கள் எழுதுவோர்தான் சிறந்த கவிஞர்கள் என்றொரு பார்வை பெரும்பாலோருக்கு உண்டு. எனினும் அவர்களைவிடச் சிறப்பாக எழுதுவோர் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறார்கள். இவர்கள் ஒருசில வார, மாத இதழ்களோடு மட்டுமே தொடர்புடையவர்கள். அவர்களின் படைப்புகளையும் இனங்காணும் பொருட்டு இதழ்களில் வெளிவந்த கவிதைகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பெற்றுள்ளன.
இந்நூல் தோற்றத்திற்குக் காரணம் என் மாணாக்கர்களே. என் வகுப்பு நேரத்தை நான் மூன்று பகுதியாகப் பகுத்துக் கொள்ளுதல் உண்டு. வகுப்பின் தொடக்கத்தில் அன்றைக்கு நடந்த உலகளாவிய நிகழ்வுகள் பற்றிய விளக்கம். பிறகு பாடம். வகுப்பின் நிறைவில் ஒரு கவிதை. சில நேரங்களில் கவிதையைச் சொல்லி முடித்ததும் ஐயா, இன்று கவிதை சொல்லவில்லையே என்பார்கள். இப்படி மாணவ வாசகர்களின் பேச்சிலும், முகத்திலும் வெளிப்படும் எதிர் விளைவுகளின் பதிவுதான் இந்நூல். எனவே இந்நூலை என் மாணாக்கர்களுக்குப் படையலாக்குவதில் வபருமை கொள்கிறேன்.
மற்றொரு வகையில் நூல் உருவாக்கத்திற்குக் காரணமானவர் பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழாய்வுத் துறைப் பேராசிரியர் இரா. அறவேந்தன் அவர்கள். சந்திக்கும் பொழுதெல்லாம் நூல் உருவாக்கச் சிந்தனையைத் தூண்டியவர்.
வழக்கம்போல் நூல் அச்சாக்கம் செய்தவர் ஸ்ரீநிதி ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு.பொ.செந்தாமரைக்கண்ணன்.
உணர்விருக்கும் வரை இவர்களது உதவியும் உள்ளத்தில்.
- அ. செல்வராசு
அகத்தில்
1. கவிதை பற்றிய புரிதல்
2. இன்றைய கவிதைப் போக்கு
3. பெண் கவிஞர்களும் கவிப்பொருள் தேர்வும்
4. அயலகத் தமிழ்க் கவிதைகள்: சேரன், ஆழியாள் கவிதைகளை முன்வைத்து
5. பொருளடைவு
1
கவிதை பற்றிய புரிதல்
புதினம், சிறுகதை, நாடகம், கவிதை என இலக்கிய வடிவங்கள் பற்பல. இவற்றில் பிற வடிவங்களைக் காட்டிலும் கவிதை வடிவம் கவன ஈர்ப்பைப் பெறுகிறது. பெரும்பாலோர் கையாளும் வடிவமாகவும் கவிதை வடிவம் உள்ளது. புதினம், சிறுகதை, நாடகம் என்ற வடிவங்களுக்கான வரையறை போன்று கவிதை என்பதற்கான வரையறை முழுமையாக வடித்தெடுக்கப் பெறவில்லை எனலாம். ஒரு சில வரையறைகளும் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளன. எனவே கவிதை என்பதைத் தேடிப்போய் அதனை வரையறுக்க சிரமப்படுவதை விட, அதனை விளங்கிக்கொள்ள - அதனைப் புரிந்து கொள்ள - முயல்வது நல்லது என்பர் தி.சு. நடராசன் (2002; 12).
எனினும் ஒரு சில கவிஞர்கள் எது கவிதை என்று விவரிக்க முற்பட்டுள்ளனர். கட்டுக்கடங்காத உணர்ச்சிகள், அமைதியான வேறொரு சூழலில் வீரியத்தோடு வெளிப்படுவது கவிதை என்கிறார் வேட்ஸ் வொர்த்[57] (poetry is the spontaneous overflow of powerful feelings and emotions recollected in tranquility). இந்த வரையரை முரண்பாட்டைத் தோற்றுவிப்பதாக இருக்கிறது. உள்ளத்து உள்ளது கவிதை இன்ப ஊற்றெடுப்பது கவிதை என்கிறார் கவிமணி. உள்ளத்து உள்ளது கவிதை மட்டும் அல்ல, சிறுகதையும் தான், நாவலும் தான். இன்ப ஊற்றெடுப்பது கவிதை என்பதும் ஒருபக்க வரையறையாகவே இருக்கிறது. எப்பொழுதும் அல்ல, எப்பொழுதாவது எழுதுவது கவிதை நினைக்கும் பொழுது அல்ல, மனது கணக்கும் பொழுது எழுதுவது கவிதை என்கிறார் வலம்புரிஜான்[50](1998 ; 41). இதனைக் கவிதை எழுதுவதற்கான துழல் என்று கொள்ளலாமேயன்றிக் கவிதை என்பதற்கான வரையறையாகக் கொள்வதற்கில்லை . வார்த்தைகள் நடந்து வந்தால் உரைநடை, நடனமாடிவந்தால் கவிதை என்ற அலங்கார வரையறையும் பொருந்தவில்லை. நடனமாடி வருவன அனைத்தும் கவிதை இல்லை.
இவ்வரையறைகளைக் காணும்