Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bakthi Thamizh Part 4
Bakthi Thamizh Part 4
Bakthi Thamizh Part 4
Ebook282 pages1 hour

Bakthi Thamizh Part 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Nagasubramanian Chokkanathan (born January 17) better known by his pen name N.Chokkan is a Tamil Writer who has written two novels and nearly 100 short stories. His works has been translated into other Indian languages. Apart from this, he has written columns in several Tamil magazines. His interest for writing came from his blind aunt for whom he used to read a lot of books. His love for Books then made him to write few detective stories,which are not yet published.His first short story was published in 1997. His entry into Non-fiction area was kick started by a publishing house approaching him to write Biography of Sachin Tendulkar.He then wrote Biographies of famous Businessmen,Politicians and people who shaped the world.The list includes Narayana murthy, Azim Premji, Dhirubhai Ambani, Walt Disney, Charlie Chaplin,to mention a few.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580105002493
Bakthi Thamizh Part 4

Read more from N. Chokkan

Related to Bakthi Thamizh Part 4

Related ebooks

Reviews for Bakthi Thamizh Part 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bakthi Thamizh Part 4 - N. Chokkan

    http://www.pustaka.co.in

    பக்தித் தமிழ் பாகம் - 4

    Bakthi Thamizh - Part 4

    Author:

    என். சொக்கன்

    N. Chokkan
    For more books

    http://www.pustaka.co.in/home/author/n-chokkan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    அத்தியாயம் 87

    அத்தியாயம் 88

    அத்தியாயம் 89

    அத்தியாயம் 90

    அத்தியாயம் 91

    அத்தியாயம் 92

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 94

    அத்தியாயம் 95

    அத்தியாயம் 96

    அத்தியாயம் 97

    அத்தியாயம் 98

    அத்தியாயம் 99

    அத்தியாயம் 100

    அத்தியாயம் 101

    76

    எந்நேரமும் கண்ணனையே நினைத்துக்கொண்டிருக்கிறாள் அவள்.

    அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்கு அவளுடைய பக்தி புரியவில்லை. கேலி செய்கிறார்கள்.

    தன் மகளை எல்லாரும் இப்படிப் பேசுவதால், அவளுடைய தாய்க்கு வேதனை. ‘அந்தப் பெருமான்தான் இவளை நல்லபடியாகக் காக்கவேண்டும்’ என்று வேண்டிக்கொள்கிறாள்.

    ஒருநாள், அந்த மகளைக் காணவில்லை, கண்ணனைத்தேடிச் சென்றுவிட்டாள்.

    இதைக் கேள்விப்பட்ட அந்தத் தாய் துடிக்கிறாள், தன் மகள் இப்போது எங்கே இருக்கிறாளோ, என்ன செய்கிறாளோ என்று பலவிதமாகச் சிந்தித்து வருந்துகிறாள்.

    நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் திருக்கோளூர் திருத்தலத்தைப்பற்றிய பாடல்களில் இடம்பெறுகிற காட்சி இது. தாய்மையின் குரலில் கண்ணன்மீது அடியவர்கள் வைக்கும் நேசத்தை அழகுற வெளிக்காட்டுகிறார் ஆழ்வார்.

    ‘உண்ணும்சோறு, பருகுநீர், தின்னும் வெற்றிலையும்எல்லாம்

    கண்ணன், எம்பெருமான் என்றுஎன்றே கண்கள் நீர்மல்கி

    மண்ணினுள் அவன் சீர், வளம்மிக்கவன் ஊர்வினவித்

    திண்ணம் என் இளமான் புகும்ஊர் திருக்கோளூரே.’

    இளமான்போன்ற என் மகளுக்கு எல்லாமே கண்ணன்தான். சாப்பாடு போட்டால் அதில் கண்ணனைக் காண்பாள், பருக நீர்கொடுத்தால் கண்ணன் என்பாள், தின்னும் வெற்றிலையிலும் கண்ணனையே கண்டாள், எதைப்பார்த்தாலும் ‘எம்பெருமான்’ என்று நெகிழ்ந்தாள், கண்களில் நீர் மல்கநின்றாள்,

    இப்போது, அவள் இங்கே இல்லை, எங்கே சென்றிருப்பாள்?

    இந்தப் பூமியில் அவனே சிறந்தவன், அவனது சிறப்புகளைக் கேட்டுக்கொண்டு அவள் நடப்பாள், வளம்நிறைந்த அவனுடைய ஊரைப்பற்றி விசாரிப்பாள், நிச்சயமாகத் திருக்கோளூர் என்கிற திருத்தலத்துக்கு அவள் சென்றுவிடுவாள், சந்தேகமில்லை!

    இப்படி உறுதியாகச் சொல்லும் தாய்க்கு, திடீரென்று ஒரு குழப்பம் வருகிறது, நாகணவாய்ப்பறவைகளிடம் அதைக் கேட்கிறாள்:

    ‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய

    பேரும் தார்களுமே பிதற்ற, கற்பு வான் இடறிச்

    சேரும் நல்வளம்சேர் பழனத் திருக்கோளூர்க்கே?

    போரும்கொல்? உரையீர், கொடியேன் கொடி, பூவைகளே!’

    கொடியவளான எனக்குப்பிறந்த கொடிபோன்றவள் அவள்,

    இங்கே இருந்தபோது, அவள்மட்டும் கண்ணனை எண்ணிப் பிதற்றவில்லை, இந்த ஊரும் நாடும் உலகமுமே அவன் பெயரைச் சொல்லும்படி செய்தாள், அவன் அணிந்திருக்கும் திருமாலைகளை எண்ணிப் புலம்பச்செய்தாள்,

    இப்போது அவள் திருக்கோளூரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறாள், நல்ல வளம் நிறைந்த வயல்களைக்கொண்ட அந்தத் திருத்தலத்துக்கு அவள் சென்றுசேர்ந்துவிடுவாளா? அல்லது, திரும்பிவந்துவிடுவாளா? பறவைகளே, சொல்லுங்கள்.

    இவ்வாறு பேசிக்கொண்டு நடந்த தாய் சில பொம்மைகளைப் பார்க்கிறாள், பக்கத்தில் கிளிகள், பந்து, சிறிய மரப்பானை, பூக்கூடை ஆகியவை இருக்கின்றன. அவற்றைக் கண்டதும், அவளுக்கு மறுபடி தன் மகளின் நினைவு வருகிறது:

    ‘பூவை, பைங்கிளிகள், பந்து, தூதை, பூம்புட்டில்கள்

    யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும்என்

    பாவைபோய் இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே

    கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யும்கொலோ?’

    இதுபோல் பொம்மைகளை வைத்து விளையாடும் வயது என் மகளுக்கு, ஆனால், ‘இவையெல்லாம் எனக்கு வேண்டாம், திருமால் திருநாமங்களே எனக்கு வேண்டும்’ என்பாள் அவள்,

    இப்போது அவள் குளிர்ந்த வயல்களைக்கொண்ட திருக்கோளூருக்குச் செல்கிறாள், அங்கே கோவைக்கனியைப்போன்ற தன்னுடைய உதடுகள் துடிக்கும்படி, கண்களில் நீர் வழியும்படி அவள் நிற்கிறாளோ? என்னசெய்கிறாளோ, நான் அறியேன்!

    வீட்டின் கதவைத்திறந்து பார்க்கிறாள் தாய், வெளியே சிலர் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களைப் பார்த்ததும், அவளுக்கு அடுத்த கேள்வி வருகிறது, ‘இன்னும் சிறிதுநேரத்தில் என் மகளைக் காணவில்லை என்கிற விவரம் இவர்களுக்கெல்லாம் தெரிந்துவிடுமே!’

    இந்தப் பெண்களெல்லாம் சாதாரணமானவர்கள் இல்லை, எதுநடந்தாலும் அதைப்பற்றிப் பலவிதமாகப் பேசுகிறவர்கள், இந்தப் பேச்செல்லாம் உள்ளூரில்மட்டுமல்ல, வெளியூருக்கும் செல்லலாம், அவர்களும் என் மகளைப்பற்றி ஏதாவது பேசக்கூடும்!

    இவர்களெல்லாம் என்ன பேசுவார்கள்?

    ஒருவேளை, அவள் வரம்புமீறி நடந்துவிட்டாள் என்பார்களோ? அல்லது, எம்பெருமானைத் தேடிச்சென்றிருப்பதால், குணம்மிகுந்தவள் என்று பாராட்டுவார்களோ!

    இளமான்போன்ற என் மகள், மெலிதான இடை அசையும்படி திருக்கோளூரை நோக்கிச் சென்றிருக்கிறாள், அங்கே செல்வ வளத்தோடு கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்கிற எம்பெருமானைக் காணவிருக்கிறாள், இதைப்பற்றி இந்த ஊர் என்ன பேசுமோ, தெரியவில்லையே!

    ‘கொல்லை என்பார்கொலோ? குணம்மிக்கனள் என்பார்கொலோ?

    சில்லைவாய்ப் பெண்கள், அயற்சேரி உள்ளாரும் எல்லே!

    செல்வம்மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே

    மெல்இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.’

    அங்கே ஒருபக்கமாகச் சில பெண்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களைக்கண்டதும் தாய்க்குத் தன் மகளின் நினைவு வருகிறது.

    எம்பெருமானை எண்ணியதும், என் மகளுக்கு இதுபோன்ற விளையாட்டுகளில் ஆர்வமில்லை. எந்நேரமும் அவனையே எண்ணி நைந்துகிடந்தாள்.

    இப்போது, அவள் திருக்கோளூருக்குச் செல்கிறாள், அங்கே பூக்கள் நிறைந்த சோலைகள், நீர்நிலைகள், அவனுடைய கோயில் ஆகியவற்றைக் காண்பாள், அவளுடைய உள்ளம் குளிரும், மகிழ்ச்சியுடன் இருப்பாள்!

    ‘மேவி நைந்துநைந்து விளையாடல்உறாள் என்சிறுத்

    தேவிபோய் இனித்தன் திருமால் திருக்கோளூரில்

    பூஇயல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு

    ஆவி உள்குளிர எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?’

    சமையலறைக்குள் நுழைகிறாள் தாய், அங்குள்ள பாத்திரங்களைக்கண்டதும் அவளுக்கு மீண்டும் தன் மகளின் நினைவு வருகிறது, காரணம், தாய் சமைக்கும்போது, தன்னாலியன்ற உதவிகளைச் செய்வாள் அவள்,

    ‘இளமான்போன்ற என் மகள், இத்தனைநாளாக நான் எதைச்செய்தாலும் எனக்கு உதவியாக இருந்தாள், ஆனால் இன்றைக்கு, தெற்குத்திசைக்குத் திலகம்போல் திகழ்கிற திருக்கோளூருக்குச் சென்றுவிட்டாள்’ என்கிறாள் தாய்.

    அங்கே அவள் திருமாலின் திருக்கண்களையும் சிவந்த வாயையும் கண்டு நெகிழ்வாள், அவளுடைய பெரிய கண்களிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வழியும், உள்ளம் அவனைக்கண்ட ஆனந்தத்தில் நோகும்!

    ‘இன்றுஎனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்

    தென்திசைத் திலதம்அனைய திருக்கோளூர்க்கே

    சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு

    நின்றுநின்று நையும் நெடும்கண்கள் பனிமல்கவே.’

    ‘ஆனால், திருக்கோளூர் நம் ஊருக்குப் பக்கத்தில் இல்லையே! நெடுந்தொலைவு நடக்கவேண்டுமே!’ என்று திகைக்கிறாள் தாய், ‘என் மகளால் அவ்வளவுதூரம் நடக்கமுடியுமா?’

    ஒருவர் சாதாரணமாக நடந்துசென்றாலே திருக்கோளூர்வரை செல்வது சிரமம். ஆனால் என் மகளோ கண்களில் நீர் பெருக, மயங்கிய மனத்துடன் நடப்பாள், இரவிலும் பகலிலும் ‘நெடுமால்’ என்று அவன் பெயரைச் சொல்லிக்கொண்டே செல்வாள், அவளுடைய உடலெல்லாம் தளர்ந்திருக்குமே, நிறைந்த செல்வத்துடன் எம்பெருமான் கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்கிற திருக்கோளூருக்கு அவள் சென்றுசேர்வது எப்போது?

    ‘மல்குநீர்க் கண்ணொடு மையல்உற்ற மனத்தினளாய்

    அல்லும் நன்பகலும் நெடுமால் என்றுஅழைத்து இனிப்போய்ச்

    செல்வம்மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே

    ஒல்கிஒல்கி நடந்து எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே.’

    நடந்துநடந்து அவளுடைய இடை துவளுமோ! இடுப்பில் கையை வைத்துக்கொண்டு வலியோடு நிற்பாளோ! கண்ணனை எண்ணி அவள் நெஞ்சம் கசியுமோ! கண்களில் நீர் துளிக்குமோ!

    ஒளிநிறைந்த மலரிலே வாழ்பவளான திருமகளின் கணவன் எம்பெருமான், அவனுடைய திருக்கோளூரை நோக்கிக் கசிந்த மனத்துடன் செல்கிறாள் என் மகள், என்னைவிட்டுப் பிரிந்து செல்கிறாள்!

    ‘ஒசிந்த நுண்இடைமேல் கையை வைத்து நொந்துநொந்து

    கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லும்கொல்?

    ஒசிந்த ஒண்மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே

    கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.’

    சமையலறையின் ஒரு மூலையில் பழக்கூடை. அதில் சிறந்த பழங்கள்மட்டும் தனியே எடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன.

    காரணம், சிறந்த பழங்களைமட்டுமே இறைவனுக்குப் படைக்கவேண்டும் என்பது அந்த மகளின் விருப்பம். பழங்கள் என்றில்லை, எதில் சிறந்ததைக்கண்டாலும், ‘இது கண்ணனுக்கே’ என்று அவள் சொல்வதை நினைக்கிறாள் தாய். ‘அவளுக்குதான் எம்பெருமான்மீது எத்துணை அன்பு!’

    ஆனால், அவள் அப்படிக் கவனித்து எடுத்துவைத்த பொருள்களெல்லாம் இப்போது இங்கேயே கிடக்கின்றன, அவள்மட்டும் திருக்கோளூருக்குச் சென்றுவிட்டாள். எங்களைப்பற்றி ஏதும் நினைக்காமல் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.

    இதனைக் கேள்விப்பட்டால் ஊரில் உள்ளவர்கள் பலவிதமான பழிச்சொற்களைச் சொல்லுவார்களே, இதை அவள் சிறிதும் நினைக்கவில்லையே, எம்பெருமான்மேலுள்ள அன்புதான் அவளை இப்படிச் செய்ததோ!

    ‘காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்குஎன்று

    ஈரியாய்இருப்பாள், இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்

    சேரி பல்பழி தூஉய் இறைப்பத் திருக்கோளூர்க்கே

    நேரிழை நடந்தாள், எம்மைஒன்றும் நினைத்திலளே.’

    தெய்வங்களே, இப்படி என் மகள் கிளம்பிச்சென்றதால் அடுத்து என்ன நடக்குமோ என்று என்னால் நினைத்துப்பார்க்கவும் இயலவில்லை, தவிக்கிறேன்.

    ஆனால், நீண்ட கண்களைக்கொண்ட இளமான்போன்ற என் மகளோ, இதனால் தன் குடும்பத்துக்கு வரக்கூடிய பழியைக்கூடப் பொருட்படுத்தவில்லை. அனைத்து உலகங்களையும் தன் அடிமையாகக் கொண்ட அரவிந்தலோசனன், எம்பெருமானையே எண்ணினாள், அவன் அருள்செய்யும் திருக்கோளூருக்கே சென்று, சிறுபொழுதும் அவனைவிட்டு நீங்காதபடி பக்திசெய்கிறாள்.

    ‘நினைக்கிலேன் தெய்வங்காள், நெடும்கண் இளமான் இனிப்போய்

    அனைத்துஉலகும்உடைய அரவிந்தலோசனனை

    தினைத்தனையும் விடாள், அவன்சேர் திருக்கோளூர்க்கே

    மனைக்கு வான்பழியும் நினையாள், செல்லவைத்தனளே.’

    நிறைவாக, இந்தப் பாடல்களால் கிடைக்கும் பலனைச்சொல்லிப் பூர்த்திசெய்கிறார் நம்மாழ்வார்:

    ‘வைத்த மாநிதியாம் மதுசூதனனையே அலற்றி

    கொத்துஅலர்பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன

    பத்துநூறுள் இப்பத்து அவன்சேர் திருக்கோளூர்க்கே

    சித்தம்வைத்து உரைப்பார், திகழ்பொன்உலகு ஆள்வரே.’

    கொத்தாகப் பூக்கள் மலரும் சோலைகள் சூழ்ந்த குருகூரின் சடகோபன்(நம்மாழ்வார்), சேமித்துவைத்த சிறந்தநிதிபோன்ற மதுசூதனனை எண்ணிச் சொன்ன பாடல்கள் ஆயிரம், அவற்றில் இந்தப் பத்தையும், எம்பெருமான் சேர்ந்திருக்கும் திருக்கோளூரைச் சிந்தித்துச் சொல்பவர்கள் சிறந்த பொன்னுலகத்தை ஆள்வார்கள்.

    இங்கே இறைவனை ‘வைத்த மாநிதி’ என்று சொல்வது ஏன்?

    குபேரன் இழந்த செல்வத்தைத் திருமால் மீண்டும் அருளிய திருத்தலம் எனத் திருக்கோளூரைக் குறிப்பிடுவார்கள். ஆகவே, இன்றைக்கும் பல பக்தர்கள் தாங்கள் இழந்ததை மீண்டும் பெறுவதற்காக இங்கே வந்து பெருமானை வணங்குவதுண்டு.

    ஆனால், அந்தச் செல்வங்களையெல்லாம்விடப் பெரிய செல்வம் பெருமானின் அருள்தானே, ஆகவே, அவரை ‘வைத்த மாநிதிப்பெருமாள்’ என்பது மிகப்பொருத்தம்.

    காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் இதற்கு இன்னும் அழகான விளக்கம் தருகிறார்:

    1. நிதியை நிலத்தில் புதைத்துவைத்து ஆள்வார்கள், எம்பெருமானை நெஞ்சில் புதைத்துவைத்து ஆளலாம்

    2. நிதியை வைத்திருப்பவர்கள் இரவுபகலாகத் தூங்கமாட்டார்கள், அதைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள், எம்பெருமானை எண்ணியவர்களுக்கும் இராப்பகலாக அவன் நினைவுதான்

    3. நிதி எல்லாருக்கும் கிடைத்துவிடாது, அதற்குப் பாக்கியம் செய்திருக்கவேண்டும், எம்பெருமானும் பாக்கியமுள்ளவர்களுக்கே கிடைப்பான்

    4. நிதியைக் கொண்டிருப்பவன் கர்வத்தோடு இருப்பான், எம்பெருமானை வணங்குவோரும் அவன் அருள்கிடைத்த செருக்கில் இருப்பார்கள்

    5. நிதி கொண்டவனை உலகமே பின்பற்றும், எம்பெருமானை வணங்கியவர்களைப் பார்த்துப் பிறரும் அவனுக்கு அடிமையாவார்கள்

    6. நிதியை இழந்தவன் கதறி அழுவான், எம்பெருமானின் அருளை இழந்தவர்களும் அவ்வாறே அழுவார்கள்

    7. நிதி வைத்திருப்பவனுக்கு எதிரிகள் பலர் வருவார்கள், அதுபோல, எம்பெருமானுக்கும் எதிரிகள் உண்டு, அவர்களை அவர் அழித்துப் பக்தர்களை காப்பார்.

    என். சொக்கன்...

    29 06 2016

    ***

    77

    இறைவனைப்பற்றிய பாடல்களையெல்லாம் யார் எழுதுகிறார்கள்?

    பக்தர்களும் புலவர்களும் கவிஞர்களும் அறிஞர்களும் பாமரர்களும் இறைவனைப்போற்றிப் பல பாடல்களை எழுதியுள்ளார்கள். ஆனால், அவர்களிடம் இந்தக் கேள்வியைக்கேட்டால், பணிவோடு வரும் பதில், ‘அவனருளாலே அவன் தாளில் பணிகிறோம். அதனால் எங்கள் (வெள்ளைத்)தாளில் கவிதைகள் பொழிகின்றன.’

    இறைப்பாடல்களில் பாடும்பொருளும் அவனே, பாடப்படும் சொற்களும் அவன் தந்தவையே, அவற்றைச் சந்தத்தோடு அமைக்கின்ற இலக்கணத்தைத் தந்தவனும் அவனே, பாடும் இசையையும் அவனே தந்தருளியிருக்கிறான். எழுதும் கை, பாடும் குரல், அதைச் சிந்திக்கும் மனம் எல்லாமே அவனது கொடை. ஆக, இந்தப் பாடல்கள் அனைத்தும் அவனே நம்மூலமாக எழுதிக்கொண்டவை என்பதில் சந்தேகமேது?

    இந்தத் தத்துவத்தை விளக்குவதற்காகவோ என்னவோ, நமது பக்திப்பாடல் மரபில் இறைவனே அடியெடுத்துத்தந்த பாடல்கள் எனப் பல உண்டு. ‘என்னால் எழுத இயலுமா?’ என்று திகைத்துநின்ற அடியவர்களுக்கு அவனே அடி(முதலடி)தந்தான், அவற்றை வைத்துப் பாடியவர்களுக்கும், அவற்றை வாசித்து, உணர்ந்து வணங்கியவர்களுக்கும் அவனே அடி(தனது திருவடி) தந்தான்.

    இதனால், மற்ற பாடல்களைவிட, இப்பாடல்களில் இறையுணர்வு மிகுதி. அவற்றைப் பாடும்போதும், அவை எழுதப்பட்ட சூழல்களைக் கேட்கும்போதும் நமக்குள் பரவசம் பரவும். இறைவனே சொன்ன சொற்களை நாமும் சொல்கிறோமே என்றெண்ணி நெகிழ்வோம்.

    திருநாவலூர் என்றோர் ஊர். அங்கே நம்பி ஆரூரர் என்பவருக்குத் திருமணம்.

    அந்த நேரத்தில், அங்கே ஓர் அந்தணர் வருகிறார். ‘கல்யாணத்தை நிறுத்துங்கள்’ என்கிறார்.

    ‘ஏன் நிறுத்தவேண்டும்?’

    ‘இந்த நம்பி ஆரூரன் என்னுடைய அடிமை’ என்கிறார் அவர்.

    அதன்பிறகு என்ன நடந்தது? அதனைச் சேக்கிழார்பெருமான் அழகாக விவரிக்கிறார்.

    குற்றம் இல்லாத மரபில் தோன்றிய வள்ளல் நம்பி ஆரூரர். அந்த அந்தணரைப் பார்த்து அவருக்குச் சிரிப்புதான் வந்தது. ‘நான் இவருக்கு அடிமையா? என்ன பேசுகிறார் இவர்?’ என்று எண்ணிக்கொண்டார்.

    ஆனால், முற்பிறவியில் சிவனுக்குப் பெரும்தொண்டு செய்து வாழ்ந்தவர் அவர். ஆகவே, அந்தணர் வேடத்தில் வந்திருப்பது சிவன்தான் என்பது எப்படியோ சிந்தனையில் தோன்றியிருக்கவேண்டும். அந்த நேசத்தால், வந்தவரைக் கேலி

    Enjoying the preview?
    Page 1 of 1